கிரைம்

அதிர்ச்சி !!சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்

Quick Share

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த கொடூரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மே 3ஆம் தேதி 16 வயது சிறுமியை 7 பேர் கும்பல் கடத்திச் சென்றனர். பின்னர் சிறுமியை மதுபானம் குடிக்க வைத்து ஏழு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றவாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரம்

Quick Share

கணவர் உதவியுடன் மாமனார் மற்றும் மைத்துனர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகாரளித்துள்ளார். ராஜஸ்தானின் சுருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகாரளித்தார். இந்த சம்பவத்தில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 15 வருடங்களாக தனது கணவர் மயக்க மருந்து கொடுத்து வருவதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் கணவரும் மாமனாருடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அந்த பெண்ணின் புகாரில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் மாமனார் மற்றும் குடும்பத்தினர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தான் ஆட்சேபம் தெரிவித்தபோது, ​​ஒருமுறை தனது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் ஓடிவிட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர் – அதிர்ச்சி Vi...

Quick Share

பள்ளி முதல்வர் 

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவின் சீகானா கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கஞ்சன் சவுத்ரி தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கும் அந்த ஆசிரியைக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென பள்ளி முதல்வர் கஞ்சன் சவுத்ரியை தாக்கத் தொடங்கியுள்ளார்.

பரவும் வீடியோ 

அதற்கு அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்தார். அப்போது பள்ளி முதல்வர் அவரது ஆடையை பிடித்தார். பதிலுக்கு அந்த ஆசிரியையும் பள்ளி முதல்வரின் ஆடையை பிடித்தார். உடனே அருகிலிருந்த சக ஆசிரியர்கள் இருவரையும் பிரித்தனர்.

இந்த கைகலப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் “மாணவர்களுக்கு ஒழுக்கங்களை கற்றுத்தரும் ஆசிரியர்களே பள்ளியில் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்துக்கொன்ற தாய்!

Quick Share

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.

சம்பவ நாளன்று வழக்கம்போல் சிவசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் மது போதையில் வந்த சிவசாமியை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அரிசி ஆகிய பொருட்களை மகன் சிவசாமி தூக்கி வீசியு ள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் அதை தட்டிக் கேட்க, ஆத்திரமடைந்த சிவசாமி அவரை தாக்கியுள்ளார். அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாண்டியம்மாள் அருகில் இருந்த கட்டை கற்கள் ஆகியவற்றை கொண்டு அவரை தாக்கியதால் சிவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மகனை தாக்கி கொலை செய்த பாண்டியம்மாளை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனது பெயரில் வீட்டுமனை எழுதி தரவில்லை என கணவரை சங்கிலியால் கட்டி 3 நாட்கள் சித்ரவதை! வீ...

Quick Share

தெலங்கானாவில் தனது பெயரில் வீட்டுமனை எழுதி தரவில்லை என கணவரை சித்ரவதை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

இந்திய மாநிலம் தெலுங்கானாவில் உள்ள மேட்சல் பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான நபர் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நரசிம்மா என்பவர் பெயரில் உள்ள வீட்டினை தனது பெயருக்கு மாற்றி தருமாறு அவரின் மனைவி கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அடுத்து நரசிம்மா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த நரசிம்மாவை, தனது உறவினர்களின் உதவியுடன் மனைவி கண்டுபிடித்துள்ளார். 

பின்னர் தன் கணவரை சங்கிலியால் கட்டி அடித்து உதைத்துள்ளார். வீட்டினை தன் பெயருக்கு எழுதி தருமாறு அவரின் மனைவி மூன்று சித்ரவதை செய்துள்ளார்.

பக்கத்துவீட்டுக்காரர் இதனை வீடியோவாக எடுத்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு சென்று நரசிம்மாவை மீட்டனர். 

மேலும், அவரை கொடுமைப்படுத்திய மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

 

11 வயது மாணவனுடன் ஆசிரியை தகாத உறவு

Quick Share

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த மேடிசன் பெர்க்மான் (24) என்பவர் அவர் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் 5வது படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார் என குற்றசாட்டு எழுந்துள்ளது. பள்ளி வளாகத்தில் வைத்தே பல முறை மாணவனுடன் பாலியல் ரீதியாக நடந்துகொண்டுள்ளார். மாணவனின் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். மேடிசனுக்கு இன்னும் 3 மாதங்களில் திருமணமாக இருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரும் அதிர்ச்சி!! நிர்வாணமாக பெண்களை கலகக்காரர்களிடம் ஒப்படைத்த போலீசார்!!

Quick Share

கடந்த ஆண்டு மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் ஒரு முக்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தே சமூகத்தைச் சேர்ந்த கலவரக்காரர்கள் நிர்வாணமாக சாலையில் அணிவகுத்துச் சென்றனர். அதற்கு முன், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, பெண்கள் போலீசாரை அணுகியுள்ளனர். ஆனால், அந்த பெண்களை கலவரக்காரர்களிடம் போலீசார் ஒப்படைத்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை-நீதிமன்...

Quick Share

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிர்மலா தேவி வழக்கின் பின்னணி

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பின்னர், நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29 -ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். 

10 ஆண்டுகள் சிறை

பின்னர், ஏப்ரல் 29 -ம் திகதி பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அப்போது, நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும், தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதன்படி நேற்று தண்டனை விவரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார். 

அவர், நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்தார்.

அவர், ஏற்கனவே சிறையில் இருந்த ஆண்டுகளை தவிர்த்து மீதமுள்ள ஆண்டுகளில் சிறையில் இருப்பார் என்று தெரிகிறது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Quick Share

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை.

அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Quick Share

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை.

அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அரங்கேறிய கொடூரம்..! காதலர்களை கட்டிப்போட்டு இரவு முழுக்க காதலிகள் மாறி மாற...

Quick Share

நாட்டில் பெண்கள் மீதான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனை சட்டங்களை செயல்படுத்தினாலும், சில மனித மிருகங்கள் மட்டும் மாறுவது இல்லை. போலீசாரின் கண்காணிப்பு இடத்தில் நாட்டில் ஏதாவது ஒரு பெண் உடல் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள 19 வயது மற்றும் 17 வயதான சகோதரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் அப்படியே நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதற்கிடையே இவர்கள் 4 பேரும் கடந்த 30ஆம் தேதி இடையக்கோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கே மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர்.இவர்களிடம் பேசினார். யார் நீங்கள் ? எங்கிருந்து வந்துள்ளீர்கள் என பேசியுள்ளார், இவர்கள் தனியாக காதலர்களுடன் வந்துள்ளதை அறிந்த அந்த 3 நபர்கள், வேறு ஒருவருக்கு போன் போட்டுள்ளார். மேலும் இவர்களை மிரட்டியுள்ளனர். இவர்களுக்கு என்ன செய்வது என்ன தெரியாமல்  இருந்துள்ளனர். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் வேறு தாமரைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கே சென்றவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டுள்ளனர்.போனில் பேசிய அந்த ஆசாமியும் சேர்ந்து 4 கொடூரர்களும் 2 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுக்க 4 இளைஞர்களும் சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலையில் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டனர். காலையில் 4 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் பைக்கில் வந்த இளைஞர்கள் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண் குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் போனில் பேசிய ஆசாமி சுள்ளான் பிரசன்ன குமார் (25) என்பதும் தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகளும் இருப்பது தெரிய வந்தது.

மூதாட்டியை கொன்று தங்கச் செயின் பறிப்பு: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி பெரியநாயகி (வயது 60) இன்று (10/04/2024) செவ்வாய்க் கிழமை மாலை தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மேய்சலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஓட்டிவர சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் உறவினர்கள் தேடிச் சென்றபோது காட்டுப் பகுதியில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தார்.

உடனே வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சற்று தூரம் ஓடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை திருச்சி-காரைக்குடி பிரதானச் சாலையில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் ரூ.85 லட்சத்தை காரில் இருந்து திருடிய கும்பலில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வந்து கையெழுத்து போட்டு வருவதும் தெரிய வந்தது. விசாரணையில் மூதாட்டியை கொன்று சங்கிலி மற்றும் தோடுகளை அறுத்துச் சென்று ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக செல்வமணி கூறியுள்ளார்.

செல்வமணி சொன்ன இடத்திலிருந்து நகைகள் மீட்கப்பட்ட நிலையில் போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது கால் உடைந்ததாக கூறப்படுகிறது. செல்வமணி சொந்த ஊரிலேயே மூதாட்டியை கொன்று தங்க நகைகளை திருட வேறு காரணங்கள் உள்ளதா என்றும், அவருடன் வேறு யார் வந்தார்கள் என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.




You cannot copy content of this Website