கிரைம்

தாயும் மகனும் சேர்ந்து புதுப்பெண்ணை அடித்து கொலை..!

Quick Share

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி 

கர்நாடகாவின் சிவமொக்கா, சாரதா நகரைச் சேர்ந்தவர் நமீதா (22). இவரும் ஹரிகே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடனும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நமீதாவிடம் வரதட்சணை கேட்டு சதீஷும், அவரது தாயார் கிரிஜம்மாவும் தொல்லை கொடுத்துள்ளனர். 

இதனால் விரக்தியடைந்த நமீதா விநாயகர் சதுர்த்திக்கு தனது வீட்டிற்கு சென்றபோது நடந்தவற்றை கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதனையடுத்து சதீஷ் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து நமீதா வீட்டில் மயங்கி விழுந்ததாகவும், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

கணவர், மாமியார் கைது 

பதறிப்போன நமீதாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நமீதா இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொலிஸில் புகார் அளித்துள்ளனர். 

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார், சதீஷ் தனது மனைவியை அடித்துக் கொன்றுள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக சதீஷையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் கிரிஜம்மாவையும் கைது செய்தனர்.  

இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை!

Quick Share

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம் (வயது 50), சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாதிரா (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு பணிக்கு சென்றார்.

அங்கு அவர் பணியில் இருந்த போது ரஹீம் திடீரென பெட்ரோல் கேனுடன் இ-சேவை மையத்திற்குள் புகுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நாதிரா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்து இ-சேவை மையத்தில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதே சமயத்தில் தீயின் கோரப்பிடியில் நாதிரா சிக்கி அலறி துடித்தபடி அங்குமிங்கும் ஓடினார். இந்த பரபரப்புக்கு இடையே சக ஊழியர்கள் காப்பாற்ற முயன்றும் அவர்களால் முடியவில்லை. 

சிறிது நேரத்தில் நாதிரா உடல் கருகி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவியை கொன்றதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரஹீம் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். 

சிறிது நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாரிப்பள்ளி போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நடத்தை சந்தேகத்தால் மனைவியை எரித்துக் கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஹீம் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுபோல் கடந்த மாதம் தகராறு செய்து மனைவி நாதிராவை பலமாக தாக்கினார். இதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் இ-சேவை மையத்துக்குள் புகுந்து மனைவியை எரித்து கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

கணவனை முதலை கொன்றுவிட்டதாக கூறிய மனைவி:அதிர்ச்சியில் உறைந்து போன போலீசார்..நடந்தது என்ன ?

Quick Share

அமெரிக்காவில், பள்ளிப்பருவம் முதல் நண்பர்களாக இருந்தார்கள் நான்குபேர். அவர்கள் இரண்டு தம்பதியர்களானபின் நடந்த விடயங்களைக் கேட்டால், திகில் திரைப்படம் பார்ப்பது போல் இருக்கிறது.

நான்கு நண்பர்கள்

ப்ளோரிடாவிலுள்ள Tallahassee என்னுமிடத்தைச் சேர்ந்தவர்கள் மைக், டெனிஸ் வில்லியம்ஸ், பிரையன் மற்றும் கேத்தி வின்செஸ்டர் ஆகியோர். பள்ளிப்பருவம் முதல் நண்பர்களாக இருந்த நிலையில், பட்டப்படிப்பு முடித்து மைக், டெனிசையும், பிரையன், கேத்தியையும் திருமணம் செய்துகொண்டார்கள். 

நண்பருக்காக பிரையன் செய்த செயல்

மைக் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் செல்லக்கூடியவர். அவை இரண்டுமே ஆபத்தான விடயங்கள் என்பதால் அவரது நண்பர் பிரையன், மைக் 1.75 மில்லியன் பவுண்டுகள் காப்பீடு எடுக்க அவருக்கு உதவினார். பிரையன் காப்பீட்டுத் துறையில்தான் பணியாற்றிவந்தார்.

2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ஆம் திகதி, மைக், டெனிஸ் தம்பதியரின் ஆறாவது ஆண்டு திருமண நாள். காலையிலேயே வேட்டைக்குப் புறப்பட்ட மைக், மதியத்திற்குள் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை. 

முதலை கொன்றுவிட்டதாக வெளியான தகவல் 

மைக்கை காணாததால் டெனிஸ் பொலிசில் புகாரளிக்க, பொலிசாரும் உள்ளூர் மக்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால், மைக்கின் உடல் கிடைக்கவேயில்லை. அவரை முதலை கொன்று தின்றிருக்கலாம் என கருதப்பட்டது. 

மைக் டெனிஸ் தம்பதியருக்கு ஒரு மகள் இருந்தாள். மைக்கைத் தேடும் பணி முடிவதற்குள்ளாகவே, காப்பீட்டுத்தொகைக்கு விண்ணப்பித்தார் டெனிஸ். ஆனால், மைக் இறந்தது உறுதி செய்யப்படாததால் அவருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. 

மைக் காணாமல் போய் ஆறு மாதங்கள் ஆன நிலையில், உள்ளூர் மீனவர் ஒருவருக்கு, மைக் வேட்டைக்குச் செல்லும்போது அணிந்திருந்த ஜாக்கெட், அவரது வேட்டை உரிமம் மற்றும் அவரது டார்ச் ஆகியவை கிடைத்தன. 

அதைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்யப்பட்டு டெனிஸுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 

சந்தேகத்தை உருவாக்கிய விடயங்கள் 

வேட்டையாடுதல் மற்றும் விலங்குகள் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்த மைக்கின் தாயாகிய ஷெரிலுக்கு மட்டும் தன் மகன் காணாமல் போனது குறித்து ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. 

இதற்கிடையில், மைக், டெனிஸ் தம்பதியரின் நண்பர்களான பிரையனும் கேத்தியும் விவாகரத்து செய்தார்கள். சீக்கிரமாகவே பிரையன் இறந்துபோன தன் நண்பர் மைக்கின் மனைவியாகிய டெனிஸைக் காதலிக்கத் துவங்கினார். 

2005இல் இருவரும் திருமணமும் செய்துகொள்ள, ஏற்கனவே டெனிஸ் சீக்கிரமாக காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்த விடயம் சந்தேகத்தை உருவாக்கியிருந்ததால், தம்பதியர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. 

விசாரணையின்போது, தான் மைக் இறக்கும்போது வேறெங்கோ இருண்டதாக பிரையன் கூற, அது பொய், அவர் அருகில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. 

இன்னொரு அதிர்ச்சிக்குரிய விடயமும் வெளிவந்தது. பிரையனின் மனைவியை விசாரிக்கும்போது, தன் கணவருக்கும், மைக்கின் மனைவியாகிய டெனிஸுக்கும் பல ஆண்டுகளாக தவறான உறவு இருந்ததாக டெரிவித்தார் கேத்தி. ஆனால், அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. 

வெளிவந்த உண்மை 

இப்படிப்பட்ட சூழலில், 2012ஆம் ஆண்டு, டெனிஸும் பிரையனும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். ஆனால், மீண்டும் டெனிஸுடன் இணைய விரும்பினார் பிரையன். அதற்குள் டெனிஸுக்கு காதல் காணாமல் போயிருந்தது. ஒரு நாள் டெனிஸுடைய காரில் மறைந்திருந்த பிரையன், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும், இல்லையென்றால் டெனிஸைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகவும் மிரட்ட, பொலிசுக்குச் சென்றார் டெனிஸ். 

பிரையனை பொலிசார் விசாரிக்கும்போது ஒரு பெரிய உண்மை வெளியே வந்தது. ஆம், டெனிஸும் அவரும் சேர்ந்து திட்டமிட்டு, மைக் வேட்டையாடச் சென்ற அன்றே பிரையன் சுட்டுக் கொன்றிருந்தார். 

மைக் உடல் கிடைக்க, உண்மை நிரூபணமாக, தான் தப்பி விட்டதாக எண்ணிக்கொண்டிருந்த டெனிஸை மாட்டிவிட்டார் பிரையன். 

டெனிஸுக்கு பரோலில் வர முடியாத வகையில் ஆயுள் தண்டனையும், பிரையனுக்கு 2033இல் பரோல் கிடைக்கும் வகையில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மைக்கைக் கொன்றுவிட்டு இணைந்து வாழ திட்டமிட்ட டெனிஸும் பிரையனும் தனித்தனியே சிறையில் நாட்களை செலவிட்டுவருகிறார்கள். 

 

1½ வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை….

Quick Share

மகாராஷ்டிராவில் சண்டையால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மாடியில் இருந்து 1½ வயது குழந்தையை வீசி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

குழந்தையின் மரணம்   

தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது. இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. 

இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது, இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அல்டாப் முகமது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

இருப்பினும் கோபம் அடங்காத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1½ வயது மகளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து பெற்றக் குழந்தை என்றும் பாராமல் கீழே வீசினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது பற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அல்டாப் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த தாய்!

Quick Share

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மூசாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புலந்தர் கிராமத்தில் இன்று பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை மண்ணில் புதைத்துள்ளார். தொடக்கப்பள்ளியின் இருமல் தோட்டத்தின் அருகில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற தம்பதியினர் குழந்தையை வெளியே எடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். தாயே பெற்ற குழந்தையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்தின் மீதுள்ள பேராசை-பாலில் விஷம் கலந்து 5 மாத பெண் குழந்தை கொலை! சித்தி செய்த கொடூரம்

Quick Share

கர்நாடகாவில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5மாத பெண் குழந்தையை விஷம் வைத்து கொன்ற 4 பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது, சொத்து பறிபோகும் என்பதால் குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

இரண்டு திருமணம்

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது.

ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தேவலம்மா என்பவரை சித்தப்பா 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஸ்ரீதேவி பிரிந்து சென்று தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சித்தப்பா, தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்திருந்தது. 

இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சித்தப்பா மற்றும் ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் மீண்டும் சேர்த்து வைத்திருந்தனர்.

இதையடுத்து ஒரே வீட்டில் சித்தப்பாவுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா, குழந்தைகள் வசித்து வந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஸ்ரீதேவி கர்ப்பம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. 

பாலில் குழந்தைக்கு விஷம்

இந்நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30ம் தேதி ஸ்ரீதேவியின் 5 மாத குழந்தை திடீரென்று இறந்து விட்டது. குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடகேரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷத்தை கலந்து கொடுத்ததால், பச்சிளம் குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வடகேரா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது சித்தப்பாவின் 2வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் தேவலம்மாவை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தையைக் கொலை செய்ததை தேவலம்மா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 

சொத்தின் மீதுள்ள பேராசை 

பொலிஸாரின் விசாரணையில், தனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருப்பதாலும், தற்போது ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் சித்தப்பாவின் சொத்தில் அந்த பெண் குழந்தைக்கு பங்கு கொடுக்க வேண்டும்.

இதனால் தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கும் சொத்து பறிபோகும் என்பதால் 5 மாத குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைக்கு பின்பு தேவலம்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து பறிபோகும் என்பதால் கணவரின் முதல் மனைவியின் 5 மாத குழந்தையை, 4 பிள்ளைகளின் தாய் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.       

நாடே கொந்தளிப்பு ..பள்ளி பேருந்தில் 6 வயது மாணவியை பலாத்காரம் செய்த மாணவன்..

Quick Share

டெல்லியில் பள்ளிப்பேருந்தில் 6 வயது மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள ரோகினியில் 6 வயது மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார், உடனடியாக வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தெரிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் புகாரை வாபஸ் பெறக்கூறியதுடன் மாணவியின் அடையாளத்தை பொதுவெளியில் கூறியதாக தெரிகிறது.

இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளி இளம்பெண் குக்கரால் அடித்துக் கொலை

Quick Share

பெங்களூருவில், மலையாளி இளம்பெண் ஒருவர் குக்கரால் அடித்துக் கொல்லப்பட்டார். திருவனந்தபுரம் ஆட்டிங்கல் பகுதியைச் சேர்ந்த பத்மதேவி என்ற பெண் நேற்று மாலை கொலை செய்யப்பட்டார். உடன் வசித்து வந்த கொல்லத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகில் உள்ள நிறுவனத்தில் இருவரும் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடமாக ஒரே வீட்டில் லிவிங் உறவில் வசித்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பத்மதேவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் இருப்பதாக சந்தேகித்த வைஷ்ணவ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் விஷம் விற்ற கனேடியர்!

Quick Share

பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால், தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law.

பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.

இந்நிலையில், Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அந்த ரசாயனத்தை அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Kenneth Lawவின் கைதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து அந்த ரசாயனத்தை வாங்கிய பிரித்தானியர்கள் தொடர்பில் பிரித்தானிய பொலிசார் விசாரணையைத் துவக்கினார்கள்.

விசாரணையில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆம், இரண்டு ஆண்டுகளில் 232 பிரித்தானியர்கள் Kenneth Lawவிடம் அந்த ரசாயனத்தை வாங்கியுள்ளார்கள்.

அவர்களில் 88 பேர் உயிரிழந்துள்லார்கள். ஆனாலும், அவர்களது உயிரிழப்புக்கு அந்த ரசாயனம்தான் நேரடிக் காரணம் என்பது உறுதிசெய்யப்படவில்லை. ஆகவே, இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயம் தொடர்பில் விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த கொடூரம்!

Quick Share

தமிழகத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்த சிக்கனில் துர்நாற்றம் வீசியதால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். சென்னை நொளம்பூர் பகுதியில் பிரபலமான பாண்டியன் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார்.

அவர், அங்கு சிக்கன் ரைஸ் மற்றும் சிக்கன் தந்தூரியை ஆர்டர் செய்துள்ளார். பின்னர், ஆர்டர் செய்த உணவு வந்த பிறகு வாடிக்கையாளர் சாப்பிட முயன்றுள்ளார்.

அப்போது, அந்த சிக்கன் உணவிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஹோட்டல் மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், உணவுகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர், கெட்டுப்போன உணவை உணவு ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல அசைவ உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் வழங்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின். இதனிடையே, மாணவன் சச்சினுக்கு ஆசியர்கள் இருவர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், சக மாணவர்கள் மத்தியில் சச்சினை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்வில் தோல்வியடையவைத்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. மேலும், சச்சினை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவன் சச்சின் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விசாரணையை தொடங்கிய போலீசார் மாணவனுக்கு ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளை, மாணவன் சச்சின் தற்கொலை செய்யவில்லை ஆசிரியர்கள் கொலை செய்துவிட்டதாக கூறி கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், இழப்பீடு வழங்கக்கோரியும் கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபர் விபரீதமுடிவு!

Quick Share

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன. 

போலீசார் விசாரணையில் அவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று தெரியவந்துள்ளது.

அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி பகுதியில் வசித்த அவர்கள் கடந்த 18-ந் தேதி துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். 

ஆரம்ப கட்ட விசாரணையில் நாகராஜப்பா, தனது மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

அவர்களது உடல்களை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும். அவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




You cannot copy content of this Website