கிரைம்

உணவு சமைக்க லேட் ஆனதால் மனைவியை கொன்ற கணவன்

Quick Share

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம் (30) இவருடைய மனைவி பிரேமாதேவி (28). இந்நிலையில் மனைவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியில் இருந்த கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பயத்தில் அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் இருவரின் உடலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 மாதங்களாகச் சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

Quick Share

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை எல்லோகேட் பகுதியில் கடலோர காவல்படை குடியிருப்பு உள்ளது. இங்கு, கடலோர காவல்படை ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த, கடலோர காவல்படை சக ஊழியர்(30 வயது) ஒருவர், சிறுமியைத் தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, ஊழியரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு இருந்த 23 வயது ஊழியர், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து இழுத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், சிறுமியை அவர்கள் இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதில், பயந்துபோன சிறுமியை 2 மாதங்களாக இருவரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மன உளைச்சல் அடைந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில், ஊழியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் அரங்கேறிய கொடூரம்!! 2 மாதங்களாகச் சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் செய்த கொ...

Quick Share

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை எல்லோகேட் பகுதியில் கடலோர காவல்படை குடியிருப்பு உள்ளது. இங்கு, கடலோர காவல்படை ஊழியர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த, கடலோர காவல்படை சக ஊழியர்(30 வயது) ஒருவர், சிறுமியைத் தனது வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, ஊழியரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு இருந்த 23 வயது ஊழியர், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து இழுத்துச் சென்றுள்ளார். 

அதன் பின்னர், சிறுமியை அவர்கள் இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதில், பயந்துபோன சிறுமியை 2 மாதங்களாக இருவரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மன உளைச்சல் அடைந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில், ஊழியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

Quick Share

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 வயது குழந்தையை வீட்டில் விட்டு ஒருவாரம் வெகேஷன் சென்ற தாய்!!பசியால் உயிரிழந்த சோகம்..

Quick Share

அமெரிக்கா: ஓஹியோ மாகாணத்தில் 16 மாதப் பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு விடுமுறையை கொண்டாட ஒரு வாரம் வெளியூர் சென்றுள்ளார் தாய். இதனால் பசியால் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை மற்றும் குழந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தாய் கிறிஸ்டல் கேண்டலேரியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடும் பசி மற்றும் நீர்ச்சத்து குறைவே குழந்தையின் இறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது

இளம்பெண் கொடூரக் கொலை: திருமணமான பிறகும் விட மறுத்த காதலன்!

Quick Share

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவமனை சமையலர் சிவகுமார் – கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அம்மு என்ற சிவஜோதி (வயது 19). சிவகுமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும் கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார்.

இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன்(23), பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் சிவஜோதியை பார்க்க அவரது பெற்றோர், சகோதரர்கள் இருக்கும் போதே காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் பேராவூரணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தூரத்தில் இருந்தாலும் காளீஸ்வரனும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி, காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர்.

தனக்கு திருமணமானாலும் காதலியை மறக்க முடியாத நிலையில் இருந்த காளீஸ்வரன், செவ்வாய்க்கிழமை மாலை பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள சிவஜோதியை பார்ப்பதற்காக குடிபோதையில் வந்த காளீஸ்வரன், சிவஜோதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்; நீ போய் உன் மனைவியுடன் போய் வாழ்ந்துக்க என்று சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். வாய்த் தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர். காதலியை விட்டுப் போக நினைக்காத காளீஸ்வரன், புதன்கிழமை அதிகாலை மீண்டும் வந்து தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியிடம் தன்னுடன் வந்து விடுமாறு மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டுக் கதவின் பின்புறம் இருந்த கல்லை எடுத்து சிவஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.

மேலும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம்பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த காதலன் கல்லை தலையில் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

“காளீஸ்வரன் முதல் நாள் சண்டை போட்ட போதே போலீசாருக்கு தகவல் சொன்னோம். அவங்க வந்து அவனை அழைச்சுட்டு போய் இருந்தால் எங்க புள்ளை உயிர் போயிருக்காது. வந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதால் மீண்டும் போதையில் வந்து எங்க புள்ளைய கொன்னுட்டானே! எங்களுக்குன்னு கேட்க ஆள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா…” என்று உறவினர்கள் கதறிய கதறல் மருத்துவமனை வட்டாரத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்!

Quick Share

தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரை Hyderabad பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா கடத்தி சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா-வுக்கு(businesswoman Trisha Bhogireddy) திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், போகிரெட்டி திரிஷ்னா திருமண வரண் பார்க்கும் இணைய தளமான மேட்ரிமோனியல்(matrimonial website) பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

அந்த இணையதளத்தில் இருந்த தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின்(TV Anchor Pranav Sistla) தொலைபேசி எண்ணை எடுத்து போகிரெட்டி திரிஷ்னா பேசி பழகி வந்துள்ளார்.

இதற்கிடையில் தொழில் முதலீட்டிற்காக போகிரெட்டி திரிஷ்னா 40 லட்சம் ரூபாயை பிரணவ் சிஸ்ட்லாவுக்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா விசாரித்து பார்த்ததில், பிரணவ் பெயரில் மோசடி செய்தது சைத்தன்யா ரெட்டி என்பது தெரியவந்தது.

உடனே உண்மையான பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்து தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா எச்சரித்துள்ளார், மேலும் தனது காதலையும் திருமண விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரணவ் சிஸ்ட்லா தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னாவின் காதலையும், திருமண விருப்பத்தையும் ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின் காரில் காரில் ஏர்டேக் என்ற ட்ராக்கிங் சாதனத்தை பொருத்தி சில நாட்களாக அவரை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி தனது நிறுவன ஊழியர்களை கொண்டு பிரணவ் சிஸ்ட்லா கடத்தி போகிரெட்டி திரிஷ்னா சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக பெண் தொழிலதிபருடன் உறவில் இருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரணவ் சிஸ்ட்லா அளித்த புகாரின் பெயரில் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

Quick Share

சென்னை அடுத்த கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருக்கு சியமளாதேவி (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 14 மற்றும் 9 வயது என இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் அந்தப் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மளிகை கடையில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலும், நிதி பற்றாக்குறை காரணத்தினாலும் அந்த கடையை மூடும் நிலைமைக்கு சுரேஷை தள்ளியது. அதனால் அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நடத்தி வந்த மளிகை கடையை நிரந்தரமாக மூடியுள்ளார்.

இதனையடுத்து, குடும்ப செலவுகளுக்காக சுரேஷின் மனைவி சியாமளாதேவி, தனது வீட்டின் அருகே உள்ள இ – சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, சியாமளாதேவியின் நடத்தையில் சுரேஷ் சந்தேகம் அடைந்துள்ளார். இந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷ், தனது மனைவி சியாமளா தேவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல், சுரேஷுக்கும் அவருக்கு மனைவி சியாமளாதேவிக்கும் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (08-02-24) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக முற்றியது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் தனது மனைவி சியாமளாதேவியை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பிறகு சுரேஷ், சியாமளாதேவியின் உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு வீட்டை வெளியே பூட்டி தப்பித்து ஓடி உள்ளார். இதனையடுத்து, இந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது இரு மகன்களும் தனது தாய் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்புறத்தை வேகமாகத் தட்டி உள்ளனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சியாமளா தேவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவான சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதையடுத்து, சுரேஷின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாகயிருந்த சுரேஷை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் வாக்குவாதம்: 2 சிறுவர்களுடன் ஒரே அறையில் உறவுகொண்ட 38 வயது பெண் கைது!

Quick Share

அமெரிக்காவில் திருமணமான பெண்ணொருவர் இரு சிறுவர்களுடன் உறவுகொண்டதாக கைது செய்யப்பட்டார். Minnesota மாகாணத்தில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி, Allison Schardin (38) என்ற பெண் ஹொட்டல் ஒன்றில் தனது கணவருடன் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் Schardin கோபத்தில் அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதே ஹொட்டலில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களை சந்தித்த அவர் தன்னைப் பற்றியும், கணவரிடம் சண்டையிட்டது குறித்தும் அவர்களிடம் புலம்பியுள்ளார்.

அத்துடன் சிறுவர்களிடம் பாலியல் தொடர்பாகவும் பேசியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து சென்ற Schardin, சிறுவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அதில் கணவருடன் சண்டையிட்டதால் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர்களிடம் உரையாடிய Schardin, இருவருடனும் உறவு கொண்டுள்ளார். ஆனால் தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக சிறுவர்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் Schardin-ஐ கைது செய்தனர். விசாரணையில் சிறுவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் Schardin நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரது வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை!

Quick Share

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ராணுவ வீரர்: செல்போனை பார்த்து அதிர்ந்துபோன போலீசார்!

Quick Share

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை!

Quick Share

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.




You cannot copy content of this Website