கிரைம்

வீட்டுப்பாடம் எழுதாததால் அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்: மயங்கி விழுந்த மாணவன்

Quick Share

உத்திரபிரதேசம் – ரேபரேலி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவரின் வீட்டுப்பாடம் செய்துவராததால் மாணவரை தாக்கி பற்களை உடைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் குறித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை காரணமாக அநேகமான வீட்டு பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டு பாடங்களை செய்து வருவது கட்டாயமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் இனைவரும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். தொடர்ந்து அறிவியல் ஆசிரியர், வீட்டுப்பாடங்களை சரி திருத்துவதற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் வீட்டுப் பாடம் எழுத முடியவில்லை என்று மாணவர் தெரிவித்த நிலையில் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், மாணவரின் வாய் மற்றும் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவரின் பல் உடைந்த நிலையில், தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், பாடசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சக மாணவர்கள் பாடசாலை முதல்வரிடம் தெரிவிக்க மயக்கமடைந்த மாணவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்துடன் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மாணவன் வீடு திரும்பியுள்ளதாகவும் அந்நாட்டு உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரும் அதிர்ச்சி!! அமெரிக்காவில் வகுப்பறையில் மாணவருடன் உறவுகொண்ட 24 வயது ஆசிரியை!

Quick Share

அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை மாணவருடன் முறைகேடாக உறவுகொண்ட விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மின்னெசொடாயில் உள்ள பாடசாலை ஒன்றில் மாற்று ஆசிரியராக பணியாற்றியவர் கெய்ட்லின் தாவோ (24). இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் காலியான வகுப்பறையில் வலுக்கட்டாயமாக உறவுகொண்டுள்ளார்.

பின்னர் தப்பியோடிய அவருக்கு, மே மாதம் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கெய்ட்லின் மீது 4ஆம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் கெய்ட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு ஆறு மாதங்கள் வரை சிறையில் இருப்பார்.

அத்துடன் அவர் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவரது தண்டனை செப்டம்பர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட உள்ளதாக தெரிய வந்துள்ளது

சாக்லேட் தருவதாக கூறி 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 57 வயது கொடூரன்!

Quick Share

வேலூர் காட்பாடியைச் சேர்ந்த அப்துல்கனி (57) என்பவர் கடந்த ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், அப்துல்கனிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிர்ச்சி சம்பவம்! சிறுமியை நாசம் செய்த 6 இளைஞர்கள்…

Quick Share

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, ஆறு இளைஞர்களால் ஒன்று சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை அங்கையே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர், அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமைறவான மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!

Quick Share

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார். இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதில், சுனிலுக்கு திருமணத்தின் போதே வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக இன்னும் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுனிலின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வருமாறு பூஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூஜா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர், தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் தான் வரதட்சணை கேட்டு சுனில் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவதாக பெண் குழந்தை.., விரக்தியில் அடித்து கொன்று பாறையில் வீசிய தந்தை

Quick Share

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த விரக்தியில் பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையை கொன்ற தந்தை

தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். 

இவர் தனது முதல் மனைவி முனியம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

பின்னர், சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு 14 நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையை கொன்று விடலாம் என்று சின்னம்மாவிடம் மாதையன் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவிட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சின்னம்மா அவரை பின்தொடர்ந்து தேடிச் சென்றார்.

ஆனால், அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரவு 9 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது குழந்தையை மாதையன் வீசி சென்றதை சின்னம்மா கவனித்துள்ளார். 

பின்னர், அங்கு சென்று கன்னத்தில் காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

ஆனால், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனை அறிந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில், மாதையன் குழந்தையை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்தனர்.   

விஷ வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழப்பு

Quick Share

சத்தீஸ்கரின் சம்பா மாவட்டத்தின் கிகிர்டா கிராமத்தில், இன்று (ஜுலை 5) கிணற்றில் இருந்து நச்சு வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழந்தனர். முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற நான்கு பேரும் இறங்கினர். அவர்களும் உயிர் இழந்தனர். கிணற்றில் இருந்து உடல்களை வெளியே எடுக்க பேரிடர் மீட்புக்குழு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

5 மாத குழந்தை அழுதுகொண்டே இருந்ததால்.. ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற தந்தை

Quick Share

5 மாத குழந்தையின் அழுகையை ஏற்க முடியாமல் ஆத்திரத்தில் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

5 மாத குழந்தை

தமிழக மாவட்டமான நீலகிரி, ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம் (31) மற்றும் ரம்யா (21). இவர்களுக்கு ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. 

இதில், பிரேம் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வருவார். ஆனால், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

அவர் சென்று நீண்ட நேரம் ஆன பின்னரும் குழந்தையிடம் எந்தவொரு அசைவும் இல்லை. இதனால் பயந்து போன ரம்யா குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தந்தையே காரணம்

இதில் குழந்தை இறப்பில் சந்தேகம் அடைந்த ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சந்தேக வழக்கை பொலிஸார் பதிவு செய்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை பிரேமால் தாங்க முடியாததால் குழந்தையை அடித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை பிரேம், குழந்தையை அடித்ததால் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரேமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், அவருக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை கொலை செய்த மாமியார்..!

Quick Share

தெலுங்கானா மாநிலத்தில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை பர்சானா டீ போட்டு தரும்படி மருமகள் அஜ்மிரியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பர்சானா துணியால் தனது மருமகள் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவாலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜ்மிரி பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாமியார் பர்சானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாலின உறவு – மருமகளை உடலுறவுக்கு வற்புறுத்திய மாமியார்!! .ஒரு மாதமாக ஒரே அறையி...

Quick Share

தன்பாலின உறவுக்கு உடன்படாத மருமகள் மீது பிளேடு கொண்டு மாமியார் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தன்பாலின உறவு 

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் ஒரு பெண், திருமணம் முடிந்த நிலையில் இவர் தனது கணவர், மைத்துனர், மாமியார் உள்ளிட்டோருடன் புகுந்த வீட்டில் இருந்து வருகிறார்.அங்கு தன்னை அந்த குடும்பம் வன்முறைக்கு ஆளாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தியுள்ளனர். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சில நாட்களிலேயே புகுந்த வீட்டில் விசித்திர பிரச்சினைகள் வெடித்தன. 

அவற்றின் உச்சமாக மாமியார் தன்னை தன்பால் உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததில் பிளேடு கொண்டு தாக்கியதோடு, பிரச்சினையை திசை திருப்ப கணவன் – மனைவி இடையே பிரச்சனைகளை மூட்டிவிட்டதாகவும் அப்பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

நேர்ந்த கொடூரம்

மருமகளை பிளேடு கொண்டு மாமியார் தாக்கியதில், கைகளில் 5 இடங்களில் ஆழமான காயங்களுக்கு தையல் போடப்பட்டதில், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், , தனது கணவர் மற்றும் மைத்துனர் என வீட்டின் இரு ஆண்களை ஏவும் மாமியார், தன் மீது தொடர் சித்ரவதைகளை பிரயேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தைக்கு தான் தந்தையில்லை என கணவர் புதிய பிரச்சினையை கிளப்பியதில், நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் கூறினார்.இவை தொடர்பாக ஆக்ரா போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கல்: முதியவர் கைது!

Quick Share

ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் பிடித்து சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள்: ஆண்டுக்கு 32 லட்சம் பேர் உயிரிழப்பு..!

Quick Share

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். குறைந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் அதிகமான மக்கள் மதுவினால் உயிரிழக்கின்றனர். அதிக வருமானம் கிடைக்கும் நாடுகளில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.




You cannot copy content of this Website