ஈரோடு

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்த 6 வயது சிறுவன் பலி ..கதறும் குடும்பம்

Quick Share

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ் (13) அபினேஷ் (6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். 

அபினேஷ் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்றுள்ளார். இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். 

அப்போது அருகில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனை பரிசோதனை செய்து டாக்டர் சிறுவன் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழியில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. சிறுவனின் உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டது. 

மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பதும் இறுதியாக 7அடி ஆழமுள்ள குழி அருகே அமர்ந்து கொண்டிருப்பதும் அதில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. அந்தக் குழியில் 4 அடி ஆழம் தண்ணீர் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி சிறுவன் இறந்ததும் தெரிய வந்தது.

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீ...

Quick Share

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாய்காலில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் திருமணம் ஆகாத நிலையில் தந்தையுடனே வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் இவரது மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்றும் அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 19 ம் தேதி இரவில் தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத்த கல் ஒன்றின் மீது பெரியசாமியின் தலை மோதியதில் பலந்தகாயமடைந்து உயிருக்கு போராடியபின் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து இறத்த மகனின் உடலை சாக்கு ஒன்றில் மூட்டையாக கட்டி தோளில் சுமந்து சென்று அருகே உள்ள கீழ்பவானி வாய்காலில் வீசிய பின் வீட்டிற்கு வந்து விட்டார். இச்சம்பவம் நடந்து இரண்டாவது நாளில் காளியப்பன் தனது மகன் பெரியசாமியை காணவில்லை என திங்களூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்காலில் ஆண் உடல் மிதப்பதாக திங்களூர் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது அது காணமல் போனதாக கூறப்பட்ட பெரியசாமி என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

இறந்த பெரியசாமியின் தலையில் இருந்த காயங்கள் குறித்து அவரது தந்தையிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் தன் மகன் உயிரிழப்பதற்கு நானே காரணம் என ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. இறந்த பெரியசாமியின் உடலை பிரேத பரிசோனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மகனை கொலை செய்த வழக்கில் காளியப்பனை கைது செய்த திங்களூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

திருமணத்திற்கு வரன் தேடியவரிடம்… பெண் குரலில் பேசி ரூ.3.60 லட்சம் பண மோசடி.!

Quick Share

ஈரோடு மாவட்டம், உஞ்சமரத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். தொழிலதிபரான இவர் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது. 

இந்நிலையில், இரண்டாவது திருமணத்திற்காகப் பெண் தேடி வந்துள்ளார். இதுகுறித்து திருமணம் தொடர்பான இணைய தளங்களிலும் பதிவு செய்துள்ளார். இவரின் விவரங்களைப் பார்த்த சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அப்போது “எனது தங்கை ராஜேஸ்வரியிடம் உங்களது புகைப்படத்தைக் காட்டினேன். அவருக்கு உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார். பிறகு பச்சையப்பனும் ராஜேஸ்வரியைப் பிடித்துள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரிடமும் பச்சையப்பன் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். மேலும் செந்தில் குடும்ப செலவிற்குப் பணம் தேவைப்படுகிறது என அவ்வப்போது பச்சையப்பனிடம் லட்சக்கணக்கில் பணம், நகைகளை வாங்கி வந்துள்ளார். 

இந்நிலையில் சென்னை வந்த பச்சையப்பன், செந்திலைத் தொடர்பு கொண்டு “உங்கள் தங்கையை நேரில் பார்க்க வேண்டும். அவருக்கு விலை உயர்ந்த பரிசு பொருள் வாங்கி வந்துள்ளேன். நான் தங்கியிருக்கும் விடுதிக்கு வாருங்கள்” எனக் கூறியுள்ளார். 

இதையடுத்து செந்தில் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் ராஜேஸ்வரி வரவில்லையா என கேட்டத்திற்கு “தங்கைக்கு உடல்நிலை சரியில்லை பரிசுப் பொருளை என்னிடம் கொடுங்கள்” என கூறியுள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த பச்சையப்பன், “பரிசுப்பொருளை ராஜேஸ்வரியிடம் தான் கொடுக்க முடியும்” என உறுதியாகக் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் தான் எடுத்து வந்த கத்தியைக் காட்டி மிரட்டி பச்சையப்பனிடம் இருந்து ரூ.3.60 லட்சம் மதிப்புடைய நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து பச்சையப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலிஸார் செந்திலைப் பிடித்து விசாரணை செய்ததில் அவருக்குத் தங்கையே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ராஜேஸ்வரி என ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியும், பச்சையப்பனிடம் பெண் குரலில் பேசியும் மோசடி செய்து பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை 2 முறை கற்பமாக்கிவிட்டு, மதபோதகராக மாறிய வாலிபர் !அதிர்ச்சி தகவல் ..கதறும் இளம்பெண்

Quick Share

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று வருவேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து நட்பு வளர்ந்ததால் ஒருநாள் அவர், என்னுடைய தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை அருகே இருந்து கவனிப்பீர்களா? என்று கேட்டார். உடனே நானும் கடந்த 2017-ம் ஆண்டு அவர் வீட்டுக்கு சென்று உதவியாய் இருந்தேன். அப்போது அவர் என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.

இதையடுத்து உன்னையே நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று அவர் என்னிடம் கூறி சமாதானப்படுத்தினார். இதை நானும் நம்பினேன். அதன்பின்னர் அவர் என்னை சேலம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார்.
பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால் மீண்டும் கர்ப்பமானேன். இதைத்தொடர்ந்து மறுபடியும் என்னை சேலம் அழைத்து சென்று மனைவி என்று டாக்டர்களிடம் கூறி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்தார்.
அதன்பிறகு என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தினேன். அதற்கு அவர் வேதம் படித்து வருகிறேன் என்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார். தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்துள்ளார். அவரிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன்.
அதற்கு அவர் இப்போது நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார். அதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.

1 வருடமாக தம்பி படத்தை பார்த்து தினமும் அழுத கர்ப்பிணி தற்கொலை ..

Quick Share

தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் க.ர்ப்.பி.ணி பெ.ண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மேலும் கவுசல்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கவுசல்யா வின் தம்பி நிதியரசன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

இதனால் கவுசல்யா மன வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவரது தம்பி படத்தை தினமும் பார்த்து அழுது கொண்டே இருந்தார். தொடர்ந்து பாசமாக இருந்த த.ம்.பி இ.ற.ந்து விட்டானே? என நினைத்து புலம்பி கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத் தன்று கவுசல்யா வீட்டில் திடீரென தூ.க்.கு போ.ட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை ப.ரி.சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொலிசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மகள்கள் இருப்பதை மறைத்து வாலிபருடன் திருமணம்.. முதலிரவை முடித்து விட்டு ஓட்டம்!

Quick Share

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவையில் ‘பைப் வால்வு’ தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய தரகர்கள் மூலம் பெண் பார்த்து வந்தனர். இந்த விவரம் சில தரகர்கள் மூலம் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தரகர் வேலை செய்யும் பெண்ணுக்கு தெரியவந்தது. 

அவரது ஏற்பாட்டில் பாளையங்கோட்டையை சேர்ந்த 35 வயது பெண்ணை, அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். இதையடுத்து அங்கிருந்து வாலிபர், அவரது உறவினர்கள் பாளையங்கோட்டை வந்து பெண்ணை பார்த்தனர். பின்னர் அந்த பெண்ணை கடந்த மாதம் ஈரோட்டுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கோவிலில் வைத்து அந்த பெண்ணை வாலிபர் திருமணம் செய்து கொண்டார். 

அங்கு திருமண ஏற்பாடு செய்த தரகரும் உதவிக்கு இருந்து வந்துள்ளார். ஈரோட்டில் வாலிபர் தனது புதுமனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து புதுமணம் புரிந்த பெண்ணும், தரகரும் மாயமானார்கள். இதையடுத்து வாலிபர் மற்றும் உறவினர்கள், 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து திருமணம் நடத்திக் கொடுத்த தரகரை தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த சமயத்தில் புதுமண பெண்ணும், தரகரும் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். 

அங்கு இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பெண்களையும் பிடித்து புதிய பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், இருதரப்பினரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும், முதல் கணவரை பிரிந்து விட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து வாலிபர், அந்த பெண் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனது வீட்டில் இருந்து அவர் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்தை மீட்டுத்தருமாறும் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரைவருக்கு திடீர் வலிப்பு.. சமயோசிதமாக பஸ்ஸை நிறுத்திய பயணி!

Quick Share

ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தை ஓட்டுநர் பழனிச்சாமி ஓட்டிச்சென்றுள்ளார். திண்டல் அருகே சென்றபோது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து ஓட்டுநர் பழனிச்சாமி, பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றார். ஆனாலும் அவரால் முடியாத நிலையில், அருகில் இருந்த பயணி ஒருவர் சமயோசிதமாகச் செயல்பட்டு சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி பேருந்தை நிறுத்தினார். 

இதனால் அலறிய பயணிகள், உடனடியாக ஓட்டுநர் பழனிச்சாமியை டிரைவர் சீட்டில் இருந்து இறக்கினர். அந்த வழியாகச் சென்ற வாகனங்களை மடக்கிய பயணிகள், கார் ஒன்றில் பழனிச்சாமியை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், பயணிகளை வேறொரு அரசுப் பேருந்தில் திருப்பூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்..உயிருடன் வந்த தந்தை ! பரபரப்பு…

Quick Share

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், தேடுவதை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என முடிவு செய்தார் கார்த்தி.

உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். 

இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்,இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் பரவியதால் கிராம மக்கள் மூர்த்தியை பார்த்து சென்றனர்.

இதனால் துறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் யார் என்று சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

face book மூலம் நண்பராகி ரூ.98 ஆயிரம் மோசடி!

Quick Share

ஈரோடுபெருந்துறையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் முகநூலில் (பேஸ்புக்) பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் அறிமுகமானார். அவரிடம் இருந்து உதிரிபாகங்கள் விற்பனை திட்டம் என்ற ஒரு அறிவிப்பு வந்தது. அவரிடம் பார்த்திபன் தொடர்பு கொண்டு பேசியபோது உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்துவதற்கு முன்பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் கேட்ட ரூ.98 ஆயிரத்து 600-ஐ பார்த்திபன் அந்த நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்

அதன் பிறகு தொழில் தொடங்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அந்த நபர் எடுக்காமல் இருந்தார். இதுபற்றி அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது மேலும் பணம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு அந்த நபரின் செல்போனுக்கு பார்த்திபனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பார்த்திபன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீஸ் ஏட்டு நித்தியா, போலீஸ்காரர்கள் நவீன்குமார், அப்துல் ரகுமான் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது பெங்களூருவை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.

கணவன் வீடிற்கு குடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை …

Quick Share

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (வயது 24). என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

லோகநாதன் சித்தோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை மனைவி சுவிதா கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வழக்கம்போல் லோகநாதன் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுவிதா மனமுடைந்து காணப்பட்டார். இரவில் லோகநாதன் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது சுவிதா வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுவிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


கன்னடர்கள் தமிழகத்தில் எல்லைமீறுகிறார்கள்.., சீமானின் பகிரங்க எச்சரிக்கை!

Quick Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக எல்லையில் நுழைந்து தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப்பெயர்ப்பலகைகளிலுள்ள தமிழெழுத்துக்கள் கன்னட இனவெறியர்களால்
அழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.”

எல்லைத்தாண்டி தமிழகப்பகுதிக்குள் அத்துமீறி வந்து நிகழ்த்தப்பட்ட இத்தகைய அட்டூழியங்கள் வன்மையான கண்டனத்திற்குரியது. கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்
தலைமையிலான 30 க்கும் மேற்பட்ட கன்னட இனவெறியர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்துவதையும், தமிழெழுத்துக்களை அழிப்பதையும் தமிழகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதுசெய்யாது விட்டது தமிழக அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. பெருந்தமிழர்கள் ஐயா ம.பொ.சி அவர்களின் முயற்சியால் வடக்கெல்லையும், ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் முயற்சியால் தெற்கெல்லையும் ஓரளவு மீட்டுக்
காக்கப்பட்டதென்றாலும், தமிழகம் தனது எல்லைப்பகுதிகளைச் சரிவரத் தற்காக்கத்
தவறியதன் விளைவுகளை 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தமிழர்கள் எதிர்கொண்டு
வருகிறோம்.

இவ்வாறு பெருந்தன்மையாலும், பரந்த மனப்பான்மையாலும் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்து நிற்கிற வேளையிலும், தமிழகத்தில் வாழும் பிறமொழி தேசிய இன மக்களை உறவுகளாக எண்ணி ஆரத்தழுவி நேசித்து வரும் தமிழர்களின் இன உணர்வை உரசிப்பார்ப்பது போல நிகழ்ந்தேறும் இனவெறியாட்டங்களும், அத்துமீறல் போக்குகளும் இனியும் தொடர்ந்தால் அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என
எச்சரிக்கிறேன்.

ஆகவே, இதுபோன்ற இனவெறிச்செயல்கள் தமிழ் மண்ணில் நடைபெறத் துளியளவும் அனுமதித்திடக் கூடாது எனவும், தாளவாடி மலைப்பகுதியில் தமிழெழுத்துக்களை அழித்த கன்னட அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி மோசடி.., பெண் மற்றும் சகோதரருக்கு 10 ஆண்டு சிறை

Quick Share

ஈரோடு மாவட்டம் நசியானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது சகோதரர் நந்தக்குமார். கடந்த 2012ம் ஆண்டு இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

அதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும், 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் செய்ததுபோல் முதல் மாதம் வட்டியை கொடுத்துள்ளனர்.

சுமார் 82 லட்சம் ரூபாயுடன் அக்காவும், தம்பியும் திடீரென தலைமறைவானார்கள். அண்மையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை நீதிமன்றம் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.




You cannot copy content of this Website