கிருஷ்ணகிரி

தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் ..’கஞ்சா கேஸ் போட்ருவேன்..’ இளம்பெண்ணை...

Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம், பீமாண்டப்பள்ளிப் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து தாபா உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த வாரம் 4-ஆம் தேதி சூளகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் தன்னை மிரட்டி உடலுறவு வைத்ததாக ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் “சூளகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் முருகானந்தம் மற்றும் மாரியப்பன் இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கி செல்வார்கள். இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் பணம் தரவில்லை என்றால் தாபா உணவகத்தில் கர்நாடக மாநில மது பானங்களையும், கஞ்சா பொட்டலங்களை வைத்து வழக்குப்பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி இருவரும் தன்னை பலாத்காரம் செய்துவிட்டனர். எனவே என்னை மிரட்டி பலாத்காரம் செய்த இரு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பெண்ணின் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் காவலர்கள் முருகானந்தம், மாரியப்பன் இருவர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலாத்காரம் செய்தல் IPC 376(2), மிரட்டல் விடுத்தல் 506(1) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது போல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை மீது லஞ்சம், லாக்கப் டெத் மரணங்கள் தொடர்பாக பல்வேறு பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

திருந்தி வாழ நினைத்த செவிலியர் தற்கொலை ! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (36). ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி துா.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த எடப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனாதேவிக்கும் தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும் கல்பனா தேவியின் குடும்பத்தினருக்கு விவகாரம் தெரியவந்ததால் ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்துகொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதை விரும்பாத ரமேஷ், உன்னை அவ்வளவு சுலபமாக விட முடியாது என கூறி கல்பனா தேவி பணிக்கு வரும்போது அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இது குறித்து கல்பனா தேவி வெளியில் சொல்ல முடியாமல் மனமுடைந்து காணப்பட்ட நிலையில் த.ற்.கொ.லை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. கல்பனா தேவி த.ற்.கொ.லை செய்துகொண்ட தகவல் அறிந்த ரமேஷ் காவல்துறையினர் எப்படியும் என்னை கைது செய்துவிடுவார் என நினைத்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், தனிப்படை அமைத்த சிப்காட் போலீசார் 5 மாதங்களுக்குப் பிறகு ரமேஷை கைது செய்து, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏஏற்படுத்தியுள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி !

Quick Share

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியாயினர். நீச்சல் தெரியாததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதன் மகன் சிவா (வயது 21). தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சின்னராஜ் மகள் அபிநயா (18).

இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தார். அங்கு வன அலுவலகம் பின்புறம் உள்ள தடுப்பணையில் அபிநயா குளிக்க சென்றார்.

தண்ணீரில் மூழ்கி பலி

அப்போது நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக தடுப்பணைக்குள் இறங்கினார். அபிநயாவை காப்பற்ற முயன்ற சிவாவும் தண்ணீரில் மூழ்கினார்.

நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்

கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த மனைவி !

Quick Share

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

  கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சசிகலாவுடன் உள்ளனர்.

 இந்நிலையில் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நரேஷ்குமார், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அங்கு சசிகலாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு  சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கடைசியில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி ஆத்திரம் வீட்டில் இருந்த ஆயுதத்தைக் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.   

 இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதனையடுத்து, சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, மருத்துவமனையில் இருந்த சசிகலா தலைமறைவாகிவிட்டதால் அவரை பொலிசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் ..கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொட...

Quick Share

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய நபரை கைது செய்து மத்தூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த நிலையில் 
இவருடைய இரண்டு மகன்களும் வட மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர். பார்வதி சொந்த ஊரில் தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன்என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த அந்த பெண் மீது ஆத்திரமடைந்த முருகன்தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வெள்ளத்தில் கிடந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவலின் பேரில் விரைந்து வந்த மத்தூர் போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்வதியை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்தவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை வெட்டிய சம்பவம் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 பவுன் நகை… தேவையான சீர்வரிசை! திருமணம் ஆன ஒரு வருடத்தில் கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்...

Quick Share

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உயிரிழந்த நிலையில், இது திட்டமிட்ட கொலை என்று பெற்றோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.

இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகின்றனர்.

பவித்ராவின் திருமணத்தின் போது, அவரின் பெற்றோர் 40 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை பிரகாஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் தன் பெற்றோரிடம் வந்து இது பற்றி கதறி அழுதுள்ளார். மிகுந்த வேதனையில் இருந்த பவித்ரா கடந்த 22 -ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணியளவில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், திடீரென அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து விசாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இறப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, பவித்ராவின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாகக் தலைமறைவாக உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிசார் தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website