காஞ்சிபுரம்

கோடை மழை -மாடியில் துணி எடுக்கச்சென்ற பெண் இடி தாக்கி பலி…

Quick Share

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காளி மேடு பகுதியைச் சேர்ந்த மோகனி மனைவி இளவரசி(32), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் பகுதியில் திடீரென்று கோடை மழை வெளுத்து வாங்கியது. அச்சமயத்தில் இளவரசி வீட்டின் மாடியில் காயபோட்ட துணிகளை எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் நிகழ்வு இடத்திலேயே இளவரசி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்த நபருக்கு வந்த பொம்மை ...

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி. மெக்கானிக்கான இவர் தனது நண்பர் சுரேஷிற்காக பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்துள்ளார். அதோடு கிரெடிட் கார்ட் மூலம் செப்20ஆம் தேதி முழு பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின் இன்று பார்சல் வந்துள்ளது. அப்போது அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மொ கார் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சிறுமி பலி!

Quick Share

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் கடந்த வெள்ளிகிழமை காலை விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூக்க கலக்கத்தில் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டு சென்ற இளம் பெண்.!!

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது. 

அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர் நகைபையை மீட்டு விசாரணை நடத்தி ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதில் 30 வயதுடைய பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், குன்றத்தூரில் 30 வயதுடைய தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல் துறையினருக்கு தெரிவித்த நிலையில், பின்னர் அவர் வீட்டிற்க்கு வந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த விபச்சார அழகி !

Quick Share

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபச்சார அழகி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து அவரது காதலனையும், புரோக்கரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன் தினம் இரவு சுமார் 25 வயது மதிப்புதக்க இளம் பெண் இறந்த நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இறந்து கிடந்த இளம்பெண் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் என்பரின் மனைவி பிரியா (25 வயது) என்பது தெரிய வந்தது. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் ஜோதி என்பருடன் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருவரும் பல இடங்களில் கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் போலீசாருக்கு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. இது குறித்து விபச்சாரம் புரோக்கர் ஜோதி, கள்ள காதலன் வெங்கடேன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜோதி என்பவர் விபச்சார புரோக்கராக செயல்பட்டு பிரியா உள்ளிட்ட பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாகவும், தனியார் விடுதி மற்றும் ஓட்டல் ஆகியவற்றில் பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அனுப்புவதாகவும் தெரியவந்ததுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே பிரியாவின் சாவின் மர்மம் தெரிய வரும் என தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-

கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய 5 மாணவிகள் சஸ்பெண்ட்!!

Quick Share

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரியில் வகுப்பறைக்குள் அமர்ந்து மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ வைரலான நிலையில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவிகள் வகுப்பறை மேஜையில் அமர்ந்து மதுவை குளிர்பானத்துடன் கலந்து குடிக்கும் வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தை வட்டமடித்தது. விசாரணையில் அந்த மாணவிகள் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் செயல்படும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர்கள் என தெரியவந்தது. 

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் விசாரணை நடத்தியதில் மாணவிகளின் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அவர்களுக்கு வெளிமாநில மதுபானத்தை வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களது பெற்றொரை அழைத்து எச்சரித்த கல்லூரி முதல்வர், சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் வகுப்பறையில் அமர்ந்து மது குடித்த மாணவிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

டீசலை உறிஞ்சிய வட மாநில வாலிபர் மூச்சு திணறி சாவு..!

Quick Share

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட் (வயது 40). இவர் கடந்த 22-ந் தேதி வேலை தேடி சென்னை வந்தார். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த அவர், வேலை காரணமாக கடந்த 25-ந் தேதி துரைப்பாக்கம் சாலை விரிவாக்கம் பகுதியில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுஜித்பாண்டே (40) என்பவரை தேடி சென்றார். 

அங்கு மோட்டாரை இயக்க 200 லிட்டர் கேனில் டீசல் வைத்திருந்தனர். அங்குள்ள ஊழியர்கள் 20 லிட்டர் கேனில் நிரப்புவதற்காக டியூப் முலம் டீசலை உறிஞ்சு எடுக்க முயன்றனர். இதற்கு சோனுசூட் உதவி செய்த நிலையில், டியூப்பில் உறியும்போது டீசல் அவரது தொண்டையில் சென்று அடைத்து மூச்சுவிட சிரமப்பட்டார்.
இதைக்கண்ட சக ஊழியர்கள் உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோனுசூட் நேற்று பலியானார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவி!வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ..

Quick Share

அரசுப் பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள், சமூக வலைளதங்களில் பரவின. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவி தாமே கழிவறையை சுத்தம் செய்தாரா அல்லது, வேறு யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா? உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் கழிவறையை சுத்தம் செய்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்

பல் துலக்கிக் கொண்டிருந்தபோது கன்னத்தை கிழித்து வெளியே வந்த பிரஸ் – அதிர்ச்சி சம்...

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பல் தேய்க்கும் பிரஸ் ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது. இதில் பல் தேய்க்கும் பிரஸ் அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது

இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் நிலைமையைக் கண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரஸ்ஸை அகற்ற முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று ரேவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது வாயிலிருந்து பிரஸ்ஸை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதை அடுத்து அவர் குணமான நிலையில் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பல் துலக்கும் போது பிரஸ் வாயில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

காதல் மனைவியை பணத்துக்காக கொடூரமாக கொன்ற கணவன்..

Quick Share

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்ராம் (33). இவருக்கும் சவுமியா (27) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சவுமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மாதம் சவுமியாவின் தந்தை ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் கணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்ராம், சவுமியாவின் அப்பாவை தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக கூறி போனை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கத்திற்கு வந்தனர்.

சவுமியாவின் இடது கையில் கத்தியால் வெட்டப்பட்ட தழும்பு இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.

இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்ற பெற்றோர், தங்கள் மகளின் சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்று புகார் கூறினர்.

இதையடுத்து பொலிசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சவுமியாவின் கணவர் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




You cannot copy content of this Website