நாகப்பட்டினம்

முதலிரவு ரூமில் கதறிய மணப்பெண்… திடீரென அலறிய ஓடிய மாப்பிள்ளை! உள்ளே சென்றதும் அத...

Quick Share

நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலிரவில் தனிமையில் இருக்கும் போது திடீரென மணப்பெண் அலறியுள்ளார். தொடர்ந்து அலறவே குடும்பத்தினர்கள் ரூமிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

மாப்பிள்ளை ஓட்டம்

அப்போது, கதவை திறந்த மாப்பிள்ளை உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஓடும்போதே அது பெண்ண அல்ல… திருநங்கை என சத்தமிட்டு கொண்டே சென்றுள்ளார்.

உடனே குடும்பத்தினர்கள் ரூமில் சென்று பார்க்கையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மணப்பெண் மயங்கி கிடந்துள்ளார்.

பின் உடனடியாக பதறிப்போய் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டது.

கைது

இதன்பின், போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதியின்றி மிருகத்தனமாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இயற்கைக்கு மாறான உறவு

தொடர்ந்து இருதரப்பில் பல குற்றச்சாட்டுகள் எழ, மாப்பிள்ளையிடம் விசாரிக்கையில் அவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு மணப்பெண்ணை அழைத்துள்ளார்.

அவர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை மணப்பெண்ணை சரமாரியாக தாக்கி பல இடங்களில் மணப்பெண்னை கடித்து இருக்கிறார்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரும் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.  

8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் ..!!

Quick Share

நாகப்பட்டிணம் மாவட்டம், வெளிப்பாளையத்தை அடுத்த நம்பியார் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம். மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆண்டு வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுமியிடம், கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த சில ஆபாச படங்களைக் காட்டி, பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வெற்றிச்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கை விசாரித்த நாகை மாவட்ட போக்சோ நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்துக்காக வெற்றிச்செல்வத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தாக்குதல் செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 25ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சிறை தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் அபராதத் தொகைகளை கட்டத் தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனை வழங்கியும் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதைத் தொடந்து வெற்றிச்செல்வம் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறை சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா!

Quick Share

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழ்வேளூர் பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாவூர் பகுதியில் உள்ள தனது மனைவியின் அக்காள்  மகளை கடந்த 3- ம் தேதி பழனிசாமி கடத்தி சென்று தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகின்றது

இதனை அறிந்த பதறிப்போன சிறுமியின் பெற்றோர் வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியுடன் தலைமறைவான பழனிசாமியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று திருத்துறைப்பூண்டி சாலையில் வைத்து பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.அப்போது 15 வயது சிறுமியையும் பழனிசாமியிடம் இருந்து மீட்டனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
மனைவியின் அக்கா மகளை கடத்தி சென்று பழனிச்சாமி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.  பழனிசாமியை கைது செய்து சிறுமியை போலீசார் மீட்டு உள்ளனர். தற்போது அந்த சிறுமி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  இந்த சம்பவத்தில் பழனிசாமி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

மனைவி, மகள்களை கொலை செய்து ஓட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

நாகப்பட்டினத்தை சேர்ந்த  தம்பதிகள் லட்சுமணன் – புவனேஸ்வரி. இவர்களுக் 3  மகள்கள் உள்ளனர்.லட்சுமணன் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் தனலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டு தனியா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து லட்சுமணன் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு உள்ளார். பின்னர் உணவக்தை திறக்கமால் வீட்டில் வைத்தே உணவனம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் கடந்த 4 நாட்களாக லட்சுமணன் கடையை திறக்கமால் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த லட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி(45) இரண்டு மகள்கள் வினோதினி(18), அக்சயா(15) ஆகியோர்கள் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தனனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.  
இது குறித்து அறிந்த மாவட்ட சூப்பிரண்ட் ஜகவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மனைவி, மகள்களை கொலை செய்து ஓட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றதால்  லட்சுமணன் தனது மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





You cannot copy content of this Website