லைப்ஸ்டைல்

சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?

Quick Share

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.

மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தினை தடுக்கவும், இதில் உள்ள செறிவூட்டப்பட்ட கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றது.

அதிகப்படியாக கொழுப்பு உடம்பில் சேர்ந்தால் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினையும் ஏற்படும்.

பொதுவாக தேங்காய் எண்ணெய்யினை சமையலில் பயன்படுத்துவது என்றால் அது தனி நபர்களின் விருப்பம் என்றாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிலும் இதய நோய், கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது. 

மேலும் சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!

Quick Share

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

அன்னாசிப்ழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளன. நிறைய நார்ச்சத்தும் உள்ளன. இதே குணம் இதன் பூவிற்கும் உள்ளது.

அன்னாசிப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது தொப்பையை குறைக்க சிறந்த முறையில் செயற்படும். இந்த பூவில் டீ செய்து குடித்தால் அது கெட்ட கொழுப்பை குறைக்கும்.

இதில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து அன்னாசிப்பூவை கொதிக்கவைத்து வடிகட்டி வெறுவயிற்றில் குடித்துவந்தால் தொப்பை எளிதாக குறையும்.

மற்றும் எலுமிச்சை சாறுடன் அன்னாசிப்பூவை தொதிக்க வைத்த நீரும் சேர்த்து பருகினால் கெட்ட கொழுப்பு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க!

Quick Share

வெயில் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.

காலநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் உணவு மிகவும் முக்கியமாகும். வெயில் கடுமையாக இருக்கும் கோடைகாலங்களில் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக தேவைப்படுகின்றது.

வியர்வை மற்றும் சோர்வாக இருப்பதுடன், சுறுசுறுப்பு இல்லாமல் வேலையில் தாமதம் ஏற்படும். இதனை சரிசெய்ய சில உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க தர்பூசணி உதவியாக இருக்கும். 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்த பழத்தில் லைகோபீன், ஆக்ஸிஜனேற்ற கூறுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடம்பை குளிர்ச்சியாகவும், கோடை காலத்தில் ஆரோக்கியமாக உடம்பை வைத்திருக்கும்.

95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் வெள்ளரிக்காய் கோடை காலத்திற்கு ஏற்றதாகும். இவை உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி நீரிழப்பு பிரச்சினை வராமல் தடுக்கின்றது.

கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியான உணவுகளில் தயிர் ஒன்றாகும். தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி அளிப்பதுடன், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.

அதிக அளவு நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளடக்கத்தினை கொண்ட உணவு பொருளான செலரி கோடை காலத்தில் சிறந்த உணவாகும். உடம்பில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தி வயதான தோற்றத்தை தடுக்கின்றது.

அதிகப்படியாக வெப்பம் காணப்படுகையில், குளிர்ச்சியான செயற்கை கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதே போன்று காபி அல்லது டீ மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?

Quick Share

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் இருக்கலாம் எனவும் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே தோன்றும் அறிகுறிகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறையும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது. 

தொற்று நோய்கள் மற்றும் சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் அதிகமாக காணபப்படுகின்றது. 

Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் காரணமாக சிறுசீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் அதிகரிக்கின்றது. 

சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு – கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury – AKI) பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு தொடக்கம் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரையான பாரிய பாதிப்புகள் வரை இதனுள் அடங்கும்.

பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் முதல் கட்ட அறிகுறியாக காணப்படுகின்றது.

எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகங்கள் கழிவு பொருட்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவத்தை வடிகட்ட சரியாக வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.

இந்த அறிகுறியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும்.

சிறுநீரக செயல்பாடு குறைதல், திரவம் தக்க வைக்கும் தன்மை குறைதல் போன்றவற்றின் அறிகுறியாகவே இது காணப்படுகின்றது.

உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்றும், மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீங்கள் உணர்ந்ததால், இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் போகும்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோமருலர் வடிகட்டுதல் அளவு குறைவதன் காரணமாக பசியின்மை அல்லது கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும். உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது.

தூக்கமில்லாத இரவுகள் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். எனினும், மேற் கூறிய அறிகுறிகளோடு தூக்கமின்மையும் இருந்தால் இது சிறுநீரகம் செயலிழப்புக்காக முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.

கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?

Quick Share

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.முகத்தில் வரும் முகப்பருக்களை கருஞ்சீரக எண்ணெய் போக்குகிறது. இது ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அழற்சிக்கு எதிரான பண்புகள் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனை 60 நாட்கள் முகத்தில் தடவி வந்தால் முகப்ருக்களை தழும்பு இல்லாமல் குணப்படுத்தும்.

2.சொரியாசிஸ் என்ற சரும நோய்க்கு இந்த எண்ணெய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. இதற்கு காரணம் அதில் உள்ள தைமோகுயினன் என்ற உட்பொருளாகும். உடலில் வீக்கம் ஏற்பட்டால் அந்த வீக்கத்தை இது எளிதில் குணப்படுத்தும்.

இது திசுக்களின் வளர்ச்சியை தூண்டி, காயங்களை எளிதில் குணப்படுத்துகிறது. மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், வெட்டுகாயங்கள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

3.தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்தால் இந்த எண்ணெய் பயன்படுத்தும் போது முடியின் வேர்க்காம்புகளை இது வலுவாக மாற்றும்.

எனவே தலைக்கு தடவும் மாஸ்குகள் மற்றும் ஷாம்பூக்களில் கருஞ்சீரக எண்ணெய் கொண்டு பயன்படுத்த வேண்டும். இவை தவிர இந்த எண்ணெயால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!

Quick Share

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சஹர் நேரத்தின் போதும், இப்தார் நேரத்தின் போதும் அளவுக்கு அதிகமாக உணவுகள் உட்கொள்வதை தவிர்த்து சரிவிகித சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

முட்டை, பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், கோழி, ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகள், நார்ச்சத்து- விட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகளை அவசியம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்தார் நேரத்தின் போது, பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்வது வழமையான ஒன்று தான், கோடை காலம் என்பதால் தர்பூசணி, ஆரஞ்சு, பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களையும் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி, வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டை எடுக்கலாம், கேரட், பீன்ஸ் உட்பட காய்கறிகள் அடங்கிய சூப் உங்களுக்கான ஆற்றலை வழங்கும்.

முழு கோதுமை ரொட்டியுடன் பருப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவும் நல்லது.

இதுதவிர காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கோதுமை உணவுகள், முழு முட்டை, பயறு வகைகளுடன் தயாரான மாலை உணவு, சிக்கன் யோகர்ட் போன்றவையும் சிறந்ததே.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் முருங்கைக்காய்!

Quick Share

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதற்கு சிறந்த உதாரணமாக முருங்கைக்காய் காணப்படுகின்றது. முருங்கையில் ஆன்டிவைரல், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய முருங்கைக்காய் இலை, பூ ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

குறிப்பாக இதில் இன்சுலினை அதிகரிக்கும் புரதங்களும் நிறைந்திருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு முருங்கைக்காய் சிறந்த தெரிவாக இருக்கும்.

முருங்கைக்காயில் க்ளைகோசைடுகள், கிரிப்டோ குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் 3 ஓ குளுக்கோசைடு போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்து இருப்பதால் சர்க்கரை நோயின் பாதிப்புகளை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

முருங்கைக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சலிப்புத்தன்மை தோன்றினால், முருங்கைகாய் சூப், முருங்கைக்காய் பருப்புக்கூட்டு போன்ற வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிடலாம்.

இரத்த சரக்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைகாய் பெரிதும் உதவியாக இருக்கும்.

முருங்கைக்காயை தினசரி அதிகளவில் சாப்பிடுவதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய துடிப்பைக் குறைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இது குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக தைராய்டு பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள் முருங்கைக்காய் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் கருணைக்கிழங்கு!

Quick Share

நமது உடலில் ஏற்படும் நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாமல் இருப்பதை கூட ஆரோக்கியமான உணவுகள் குணப்படுத்துகின்றன. இயற்கையில் கிடைக்கூடிய உணவுகளை நாம் தவறவிடாமல் அதை உண்பது அவசியம். அந்த வகையில் கருணைக்கிழங்கு உண்பதால் இது உடலில் என்னென்ன நோய்கள் குணமாகின்றது மற்றும் என்னென்ன பயன் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. இந்த கிழங்கை புளி சேர்த்து சமைத்தால் தான் இதிலுள்ள நமைச்சல் குணம் அற்றுப்போகும்.

புளி சேர்க்க விரும்பாதவர்கள் மோர் சேர்த்தும் சமைக்கலாம். இந்த கிழங்கை அரிசி கழுவிய நீரில் கழுவி எடுத்தால் இதில் இருக்கும் நமைச்சல் குணத்தை இல்லாமல் செய்ய முடியும்.

இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். இதில் வைட்டமின் C, ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் எனும் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிழங்கை தொடர்ந்து சாப்பட்டு வந்தால் மூலநோய் இல்லாமல் போகும். மாதவிடாய் பிரச்சினைகளுக்கு இந்த கிழங்கின் மூலம் தான் மருந்து தயாரிக்கின்றார்கள்.

எனவே மாதவிடாய் வருவதற்கு முன்னர் இந்த கிழங்கை அவித்து மசித்து ஒரு ஸ்பூன் வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் வரும் கால் வலி, இடுப்பு வலி ,வயிற்று வலி போன்ற பிரச்கனைகள் இல்லாமல் செய்யும்.

இந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவை இந்த கிழங்கு அதிகப்படுத்துகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் குடலில் நச்சுக்கள், கிருமிகள், கொழுப்புகள் சேராமல் தடுக்கப்படுகின்றன.

உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பவர்கள் இந்த கிழங்கை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?

Quick Share

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களுள் கொய்யா முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த பழத்தில் ஆப்பிள் பழத்தை விடவும் அதிகமாக வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலில் நோய்டியதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொய்யா பெரும் பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை, பழங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் இதை அளவாகவே சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு காரணமாக உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் அக்கறை செலுத்துவது கிடையாது. போதியளவு உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் பலரும் செரிமானப் பிரச்சனையால் அவதிப்பட்டுவருகின்றனர்.

அந்த வகையில் நாம் சாப்பிடும் ஒருசில பழங்களால் கூட செரிமானப் பிரச்சனை அதிகரிக்கும். கொய்யாவில் ஃபுருக்டோஸ் என்ற ஒரு வகையான சர்க்கரை அதிகமாக காணப்படுகினறது. எனவே அதிகமாக கொய்யா சாப்பிடும் பட்பத்தில் உடலில் ஃப்ருக்டோஸ் அளவு அதிகரிக்கின்றது.

இதனை ஜீரணிக்க உடல் மிகவும் சிரமப்படுகின்றது. இதன் காரணமாக வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினை அதிகரிக்கின்றது.

உடல் ஆரோக்கியத்தை பேண சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். கொய்யா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழத்தை சாப்பிடும் போது அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

பொதுவாக கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சலூட்டும் குடல் நோய் போன்ற பிரச்சிகைள் ஏற்படும். குறித்த பிரச்சிகைள் ஏற்பட கொய்யாவில் உள்ள விதைகளே காரணமாகின்றது.

அந்த விதைகள் எளிதாக எல்லோருக்கும் ஜீரணமாவது கிடையாது. அதனால் கொய்யாவை சாப்பிடும் போதும் அதன் அளவில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

கொய்யாவில் ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

இது கொய்யவில் மாத்திரம் அல்ல மண்ணில் விளையும் அனைத்து உணப்பொருட்களிலும் இருக்கக்கூடும். எனவே கொய்யா பழத்தை சாப்பிடும் போது நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

சப்போட்டா பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Quick Share

சப்போட்டா பழம் அதிக சத்துள்ளதுடன், விலை மலிவாகவும் கிடைக்கின்றது. இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சப்போட்டா, “சிக்கூ” என்றும் அழைக்கப்படும், ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் பல வைட்டமின்கள் இருக்கின்றது.

சப்போட்டாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி இருமல் தொற்றிலிருந்தும், சருமத்தை பாதுகாப்பதுடன், வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது.

இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி தேய்மானம் வராமல் பாதுகாக்கின்றது.

இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தினை சீராக்கி, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றது.

நார்ச்சத்து அதிகம் கொண்ட சப்போட்டா பழம் மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.

சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பார்வை குறைபாடுகளை தடுக்கவும் செய்கின்றது.

இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தவும் செய்கின்றது.

சப்போட்டா ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும் செய்கின்றது.

குடல் புழுவை உடனே வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்!

Quick Share

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.

மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் கசப்புத் தன்மை காணப்படும் அளவிற்கு எண்ணில் அடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. சுண்டைக்காயில் அதிகளவில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. அதனால் எலும்பு வலிமை கூடும்.

இத்தனை மருத்துவ குணம் நிறைந்த சுண்டைகாயில் சுவையாக துவையல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பொருட்கள் இளம் சுண்டைக்காய் – 1 கப்

எண்ணெய் – 2 தே.கரண்டி

தேங்காய்த்துருவல் – 3 தே.கரண்டி

உளுந்தம்பருப்பு – 2 தே.கரண்டி

வரமிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு 

பெருங்காயம் – 1/2 தே.கரண்டி

செய்முறை

கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் மீதியுள்ள 1 தே.கரண்டி எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதாக அப்படியே வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் பொடி செய்த பொருட்களுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வதக்கிய சுண்டைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைத்தெடுத்தால் மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் துவையல் தயார்.

உடல் எடையை வேகமாக குறைக்கும் புடலங்காய் ஜூஸ்!

Quick Share

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இது சிறந்த நிறைவான மருத்துவக்குணங்களை கொண்டிருக்கிறது. புடலங்காயில் பல வகை உள்ளது, பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு. புடலங்காயை பெரும்பாலானோர் சமையலில் பயன்படுத்துவது குறைவு.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய உணவை மறந்து நவீன உணவு மயப்படுத்தி பரவலாக காணப்படுவதால் ஆரோக்கியமான உணவை மறந்துவிட்டோம்.

அந்த வகையில் பாரம்பரிய உணவில் ஒன்றான புடலங்காயை ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு என்னனென்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மலச்சிக்கல் இருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் புடலங்காய் பயன்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது குடல் இயக்கத்தை சீராக்கி மலத்தின் கடினத்தை குறைத்து மென்மையாக்கி வெளியேற்றுகிறது.

உணவில் சேர்க்க விரும்பாதவர்கள் புடலங்காய்ச் சாறை இரண்டு டீஸ்பூன் அளவு குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதை உணரலாம்.

2. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த புடலங்காயை தாராளமாக உண்ணலாம். எடை குறைப்பில் இருப்பவர்கள் அதிக கலோரிகளை உண்ண கூடாது. 

அதனாலேயே புடலங்காயை எடை குறைக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் உண்ணலாம். இதில் கலோரிகள் குறைவாக தான் இருக்கும்.

உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாரத்துக்கு 3 நாட்கள் புடலங்காய் பச்சடி அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.

3. உடலில் ரத்தமானது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். புடலங்காய் ரத்த சுத்திகரிப்பில் மிகவும் சிறந்த ஒரு உணவாகும்.

இதில் இருக்கும் அதிக நீர்ச்சத்து காரணமாக உடலில் இருக்கும் அதிக உப்பு ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

பித்தப்பை கோளாறு இருந்தால் அதை சரி செய்து மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் மற்றூம் கரோட்டிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.




You cannot copy content of this Website