லைப்ஸ்டைல்

ஆண் -பெண் யாருக்கு அதிக மன அழுத்தம்? ஆய்வில் வெளிவந்த உண்மை..

Quick Share

இந்தியாவில் அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் குறித்து “உங்கள் நண்பர்” என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. நாடு முழுவதும் பணிபுரியும் 5 ஆயிரம் பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களே, ஆண்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில், 72.2 சதவீத பெண்கள் பிரச்சனையில் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. 53 சதவீத பேர் ஆண்களாக உள்ளனர்.

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் இவ்வளவு நன்மையா?

Quick Share

காலையில் உப்பு கலந்த நீரை பருகினால் என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நமது உடம்பில் சரியான திரவ செயல்பாடு மற்றும் எலக்ரோலைட் அளவினை பராமரிப்பதற்கு சோடியம் அல்லது உப்பு கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆதலால் சிறிதளவு உப்பை கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். காலையில் உப்பு கலந்த நீரை பருகுவதால், உடல் நீரேற்றமாக இருப்பதுடன், சரியான எலக்ட்ரோலைட் சமநிலையையும் பராமரிக்க உதவுமாம்.

மிதமாக உட்கொள்ளும் செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், செரிமான திரவங்களின் சுரப்பையும் அதிகரிக்கின்றது. மேலும் இது உணவு முறிவு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவி செய்கின்றது.

இவை நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதுடன், உடம்பிலிருந்து வியர்வை மூலமும் நச்சு கலவைகளை வெளியேற்ற உதவுகின்றது.

உப்பு நீர் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை செயல்படுத்துகிறது, இது உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.

உப்பு நீரானது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. அதாவது தோலில் உப்பு நீரை தடவும் போது சருமத்தை உரிக்கவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகின்றது.

உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், சளியை உடைக்கவும், வீக்கத்தை குறைக்கவும், அசௌகரியத்தை குறைக்கவும் உதவுகின்றது.

இது ஒட்டுமொத்த நுரையீரல் மற்றும் சுவாச செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், சளி, ஒவ்வாமை மற்றும் பிற சுவாச நோய்களுக்கான சாத்தியமான வீட்டு தீர்வாக அமைகிறது.

புதுமண தம்பதிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் 5 தவறுகள்!

Quick Share

பொதுவாக திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை எப்படி கையாள வேண்டும் என்பதனை தம்பதிகள் இருவரும் புரிந்து வைத்திருக்க வேண்டும். காதல் திருமணமோ, பெற்றோர் நடத்தி வைத்த திருமணமோ இப்படி எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக நுழையும் போது இருவரின் குணங்களும் வேறுபாட்டு காணப்படும்.

இதனை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டால் மற்றவர்கள் போல் உங்கள் வாழ்க்கையும் சிறக்கும். அந்த வகையில் புதுமண தம்பதிகளிடையே பிரச்சினை வராமல் எப்படி தடுக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. திருமணம் செய்து கொண்ட பின்னர் கணவன் மனைவியை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். அதே போல் மனைவி கணவரை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக வார இறுதி நாட்களில் கணவன் – மனைவி இருவரும் தனியாக நேரத்தை கழிக்க வேண்டும்.

2 திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை சகித்துக் கொண்டு வாழப்பழகிக் கொள்ள வேண்டும். சிறுசிறு விடயங்களுக்கு கோபப்பட்டால் அது காலப்போக்கில் கணவன் – மனைவி உறவிற்குள் விரிசலை ஏற்படுத்தும்.

3. உங்கள் புதிய வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதே சமயம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முற்றிலும் மறந்து விடக் கூடாது. துணையின் அனுமதியுடன் நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். இது உங்களுக்குள் ஒரு இணக்கத்தை உருவாக்கும்.

4. ஒரே வீட்டில் இருப்பதால் டூத் பேஸ்ட்டை ஷேர் செய்து கொள்வது துவக்கம் பிரச்சினைகளை ஷேர் செய்வது வரை துணைக்கு உண்மையாக இருந்தால் பிரச்சினைகள் குறையும். இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஏற்படும். அதனை சகித்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும். வீண் வீண் விவாதங்களை முற்றிலும் குறைக்க வேண்டும்.

5. வீட்டில் தனியாக இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை அலங்கரிக்கலாம். துணையின் ரசனையை தெரிந்து கொண்டு இப்படியான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வீட்டின் நிம்மதி நிலைத்திருக்கும். சில வேளைகளில் நீங்கள் புதிய துணை வேறு இடத்தில இருக்கிறோம் என்று அசவுகரியமாக உணரலாம். இப்படியான நேரங்களில் இடத்தை நமக்கு ஏற்றால் போல் மாற்றிக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு!

Quick Share

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம். மேலும் மட்டன் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும். அதில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் மட்டன் துணைப்புரிகின்றது.

குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் மட்டன் பெரும் பங்கு வகிக்கின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட மட்டனை வைத்து மதுரை பாணியில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

மட்டன் கறி எலும்புடன் -1/2 kg

தக்காளி பெரியது -2

சின்ன வெங்காயம் – நறுக்கியது1 கப் அளவு 

கசகசா – 2 மேசைக்கரண்டி

சீரகம் -2 மேசைக்கரண்டி

குழம்பு மசாலா பொடி -2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை -சிறிது

கொத்தமல்லி -சிறிது

தேங்காய் -1/2 மூடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 மேசைக்கரண்டி

செய்முறை

முதலில் கசகசா மற்றும் சீரகத்தை அம்மியில் நன்றாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாகவே அசைவ உணவுகளை சமைக்கும் போது அம்மியில்தான் மசாலாவை அரைப்பார்கள். அம்மியில் அரைத்தால் குழம்பின் சுவை இன்னும் அதிகரிக்கும். 

பின்னர் அதனுடன் 5 சின்ன வெங்காயத்தையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து மட்டனை நன்றாகக் சுத்தம் செய்து நன்றாக கழுவி அரைத்த மசாலா , தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும். 

மட்டன் நன்றாக வெந்ததும் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றி சிறிதளவு கொதிக்க விட வேண்டும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் மதுரை பாணியில் மணமணக்கும் மட்டன் குழம்பு தயார்.

அஜீரண பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் வாழைப்பூ சட்னி!

Quick Share

வாழைப்பூ சமைப்பதற்காக பயன்படும் உரு காய்கறி வகைகளில் ஒன்றாகும். இது உடலில் பல நோய்களுக்குமருந்தாக இருக்கிறது. இந்த வாழைப்பூவை சாப்பிட விரு்பம் இல்லாதவர்கள் இன்று கொடக்கப்பட்டிருக்கும் இந்த ரெசிபில்செய்து உணவிற்கு சேர்த்து கொள்ள முடியும். இப்படி செய்வதால் அஜீரண பிரச்சனை இருக்காது. உடலில் நல்ல சக்தி கிடைக்கும். குடல் பகுதிகள் நச்சுக்கள் இன்றி சுத்தமாக்கப்படும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 வாழைப்பூ

5 வத்தல்

100 கிராம் சின்ன வெங்காயம்

2 ஸ்பூன் உளுந்து

2 ஸ்பூன் கடலை பருப்பு

15 பல் பூண்டு

1 நெல்லிக்காய் அளவு புளி

1 ஸ்பூன் மல்லி

அரை ஸ்பூன் சீரகம்

2 ஸ்பூன் கடலை எண்ணெய்

உப்பு

செய்முறை

வாழைப்பூவின் நாரை நீக்கி அதை வெட்டி தண்ணீரில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வத்தல், மல்லி, சீரகம் சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.

நிறம் மாறும் வரை வதக்கவும். இதை தனியாக எடுத்து வத்து கொள்ளவும். தொடர்ந்து மேலும் எண்ணெய் சேர்த்து வாழைப்பூ சேர்த்து கிளரவும். பாதி வெந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கிளரவும்.

தொடர்ந்து இவை அனைத்தையும், உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிடித்த உணவுடன் சாப்பிடலாம்.

எந்த விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும் தெரியுமா?

Quick Share

ஜோதிட சாஸ்திரத்தில், மோதிரங்கள் அணிவது நமது பாரம்பரியத்தின் இன்றியமையாத பகுதியாகும். முக்கியமாக எந்த ஒரு நபர் தங்க மோதிரத்தை விரல்களில் அணிந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

உங்கள் உடலின் வெப்பநிலையை பராமரிப்பதோடு, இது பல கிரகங்களுடன் தொடர்புடையது. தங்கம், குறிப்பாக, சூரியனுடன் தொடர்புடையது மற்றும் வேத ஜோதிடத்தில் மகத்தான மதிப்பையும் சக்தியையும் கொண்டுள்ளது, இது கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது.

நீங்கள் தங்க மோதிரத்தை அணியும் விரல் உங்கள் ஆரோக்கியம், பணம் மற்றும் உறவுகள் உட்பட உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.

இருப்பினும், ஜோதிடத்தில் சில சிறப்பு விதிகள் உள்ளன, அவை பின்பற்றப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த விதிகளில் ஒன்று தங்க மோதிரத்தை வலது விரலில் அணிய வேண்டும். எந்த விரலில் அணிந்தால் தீமைகள் ஏற்படும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

எந்த விரலில் அணியக் கூடாது?

வேத ஜோதிடத்தின் படி, தங்கம் சூரியன் கிரகத்துடன் தொடர்புடையது. சூரியன் சக்தி, அதிகாரம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.

தங்கம் அணிவது ஜாதகத்தில் சூரியனின் நேர்மறையான செல்வாக்கை பலப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.

இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வெற்றியையும் செல்வத்தையும் ஈர்க்கும்.

இருப்பினும், சரியாக அணியவில்லை என்றால், தங்கம் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

கட்டை விரலில் தங்க மோதிரம் அணிவது சரியா?

கட்டைவிரலில் தங்க மோதிரத்தை அணிவது ஒரு பொதுவான நடைமுறை அல்ல, ஆனால் சில கலாச்சாரங்களில் இது ஆதிக்கத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உங்கள் கட்டை விரலில் தங்க மோதிரம் அணிந்திருந்தால், அதை கவனமாக செய்ய வேண்டும்.

ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது சரியா?

ஆள்காட்டி விரல் வியாழன், நுண்ணறிவு, அறிவு மற்றும் தலைமைத்துவத்தின் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த விரலில் தங்க மோதிரத்தை அணிவது பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது வியாழனின் நேர்மறையான விளைவுகளை மேம்படுத்தும்.

நடுவிரலில் தங்க மோதிரம் அணிவது சரியா?

நடுவிரல் சனியைக் குறிக்கிறது, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் கர்மாவின் கிரகம். இந்த விரலில் தங்க மோதிரத்தை அணிவது பொருத்தமாக கருதப்படுவதில்லை, ஏனென்றால் தங்கம் சூரியனின் உலோகமாக கருதப்படுகிறது மற்றும் சூரியனுக்கு சனியுடன் பகை உள்ளது.

மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது சரியா?

மோதிர விரல் சூரியன் மற்றும் வீனஸுடன் தொடர்புடையது, அவை காதல், அழகு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த விரல் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆற்றல்களுடன் நன்கு பொருந்துவதால் தங்க மோதிரம் அணிய மிகவும் பொருத்தமான விரலாக கருதப்படுகிறது.

புற்றுநோயை தடுக்கும் கோவைக்காய் வறுவல்!

Quick Share

பொதுவாகவே காய்கறிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கோவைக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.மேலும் பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவைக் இருந்து தயாரிக்கப்படுகிறது.

காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை வைத்து அசத்தல் சுவையில் கோவைக்காய் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

கோவைக்காய் – 1/4 கிலோ (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

சோம்பு – 1/2 தே.கரண்டி

வெங்காயம் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு தேவையானவை 

எண்ணெய் – 1 தே.கரண்டி

சீரகம் – 1தே.கரண்டி

மிளகு – 1 தே.கரண்டி

வெந்தயம் – சிறிதளவு

வரமிளகாய் – 4

உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு – 1 தே.கரண்டி

பெருங்காயத் தூள் – சிறிது

பொட்டுக்கடலை – 1/4 தே.கரண்டி

மல்லி – 1 1/2 தே.கரண்டி

தேங்காய் – 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

செய்முறை

முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், பொட்டுக்கடலை, மல்லி ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

பின்பு அதனுடன் தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகம் வரையில் நன்றாக வதக்கி இறக்கி குளிர விட்டு, அதனை மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அடுத்ததாக கோவைக்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.

கோவைக்காய் நன்றாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒர் இரு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி இறக்கினால், அட்டகாசமான சுவையான ஆரோக்கியம் நிறைந்த கோவைக்காய் தேங்காய் வறுவல் தயார்.

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள்!

Quick Share

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அழகு சாதனப் பொருள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அது இல்லாமல் கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா? கற்றாழையில் எவ்வாறான மருத்துவ குணங்கள் இருக்கின்றது என நாம் இங்கு பார்போம்.

கற்றாழை ஜெல்லில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.

கண்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு உடல் சூடு தான் காரணமாக இருக்கிறது. அதை சரிசெய்வதிலும் கற்றாழைக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு துண்டு கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் இயற்கையாகவே மலச்சிக்கலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறோ அல்லது ஜெலலோ சாப்பிட்டு வர மலச்சிகக்ல் பிரச்சினையே வராது.

கற்றாழை ஜெல்லை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்வதால் கிடைக்கும் பயன்களை விட உள்ளுக்குள் சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கும். குடலை சுத்தமாக்கும். சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்தும். நோயெதிர்பபு மண்டலத்தை பின்பற்றுவது ஆகியவற்றால் சருமம் ஹைட்ரேட்டிங்காகவும் பொலிவாகவும் இருக்கும்.

கருஞ்சீரகம் புற்றுநோய்க்கு தீ்ர்வு கொடுக்குமா?

Quick Share

பொதுவாகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் முறையான உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதும் அவசியமாகின்றது. ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு, அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகளின் பெருக்கம், சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களினால் புற்றுநோய், நீதிரிழிவு, மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்களின் தாக்கமும் அதிகதித்து வருகின்றது.

அந்த வகையில் இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய கருஞ்சீரகத்தின் நன்மைகள் குறித்தும் உயிர் கொல்லி நேயான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

வேறு எந்த தாவரத்திலும் இல்லாத தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் காணப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.

இதில் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. சுவாசப்பிரச்சனைகள், இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கருஞ்சீரகத்தில் நிறைந்து காணப்படுகின்றது. 

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்ற பெரிதும் துணைப்புரியும். 

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை வெளியேற்ற ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டால் அழுக்குகள் முழுமையாக வெளியேறும். 

கருஞ்சீரகத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் செய்து கொள்வதால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். மேலும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது உதவுகின்றது.

சாதம் சமைக்கும் போது சிறிதளவு கருஞ்சீரகத்தை ஒரு துணியில் கட்டி சாதத்ததுடன் சேர்த்து வேக வைத்து அதன் சாறு சாதத்துடன் கலந்ததும் பின்னர் இதனை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வது உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றது.

தினமும் காலை 5 மணிக்கு எழுந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

Quick Share

தினமும் காலை 5 மணிக்கு எழுந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இரவு சீக்கிரமாகவே தூங்கி விட்டு, அதிகாலையில் சீக்கிரமாக எழ வேண்டும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டிருப்போம். நாம் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதால் சில மாற்றங்கள் நமது உடம்பில் நடக்கும். அது என்னென்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

காலை 5 மணிக்கு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் சிறப்பாக அமைவதுடன், காலையில் செய்யும் உடற்பயிற்சியானது உடல் எடையைக் குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகின்றது.

காலையில் 5 மணிக்கு எழுந்தால் தனிப்பட்ட வளர்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியுமாம். அதாவது பாடங்களை படிப்பது செய்தித்தாள் படிப்பது இவற்றின் மூலம் புத்தியும் கூர்மையாவதுடன், வாசிப்பு திறனும் மேம்படும்.

ஐந்து மணிக்கு தினமும் எழுந்துவிட்டால் 7 மணி முதல் 8 மணிக்கும் காலை உணவை சாப்பிட முடியும். காலையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.

முக்கியமாக இரவில் தூங்கும் முன்பு டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போதுமான தூக்கம் கிடைத்து ஆரோக்கியமாகவும் இருக்கமுடியும்.

இரவில் தாமதமாக தூங்குவதால் காலையிலும் தாமதமாக எழும்புவார்கள். இதனால் உணவையும் தாமதமாகவே சாப்பிடுவார்கள்… இதனால் உடல் பலவீனமாக மாறுமாம்.

சைக்கிள் ஓட்டுதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்…தெரிஞ்சிக்கோங்க…

Quick Share

சைக்கிள் ஓட்டுவதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலன்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது மன அழுத்தத்தை போக்குகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும். சைக்கிள் ஓட்டுதல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது தசை வலிமையை அதிகரிக்கிறது. வயது தொடர்பான நோய்களைக் குறைக்கிறது. சைக்கிள் ஓட்டுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் 1 மணி நேரமாவது சைக்கிள் ஓட்டுவது நல்லது.

புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Quick Share

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

1. கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்

கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய Bisphenol A என்ற வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

2. கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள்

கார்பனேடட் செய்யப்பட்ட குளிர்பானங்களில், அதிகளவில் சர்க்கரை இருக்கம். இதனால் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

3. ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்

உணவுகளின் வாழ்நாளை நீடிக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்கள் ஃப்ரி ராடிக்கல்களை வெளியிடுகிறது. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

4. மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்ன்

மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ஃப்ளூரோக்டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்ககூடியது.

5. ரீஃபைண்ட் சர்க்கரை

ரீஃபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை இன்சுலீன் அளவை அதிகரிக்கக் கூடியவை, இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

6. ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி

பேக்கான், சாசேஜ் போன்ற ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி வகைகளில் பிரசர்வேட்டிவ்கள் மற்றும் நைட்ரேட்கள் உள்ளது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகின்றன.

7. சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி அதிகம் எடுத்துக்கொள்வது குடல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

8. ஊறுகாய்கள்

ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளதால் ஊறுகாய் அதிகளவு சாப்பிடுவது வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

9. ஸ்மோக்ட் உணவுகள்

புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளது. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

10. உப்பு மீன்

கருவாட்டில் நைட்ரோசாமைகள் உள்ளது. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.     




You cannot copy content of this Website