லைப்ஸ்டைல்

நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அத்திப்பழம்!

Quick Share

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பழங்களில் கலோரிகள் குறைந்த பல பழங்கள் உள்ளன. இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பழம் தான் அத்திப்பழம். பார்ப்பதற்கு கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவே இருக்கின்றன.

இதன்படி, அத்திப்பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், தியாமின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே ஆகிய ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

அந்த வகையில், அத்திப்பழம் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம் என்ற கருத்தும் சமூகத்தில் பரவலாக உள்ளது. இந்த கூற்றில் மறைந்திருக்கும் விஞ்ஞான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

1. மெடிக்கல் நியூஸ் டுடேயின் படி, அத்திப்பழத்தை உட்க் கொள்ளும் பொழுது ஆன்டிகார்சினோஜெனிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, கொழுப்பை குறைத்தல் மற்றும் செல்-பாதுகாப்பு உள்ளிட்டவைகளை செய்கிறது.

2. கல்லீரலைப் பாதுகாக்கும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அதுமட்டுமன்றி நீரழிவு நோயாளர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம்.

3. செரிமானத்தில் கோளாறு இருப்பவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் எந்தவிதமான தயக்கமுமின்றி அத்திப்பழத்தை சாப்பிடலாம். இதிலிருக்கும் நார்ச்சத்து, ப்ரீபயாடிக்குகள் இந்த பிரச்சினையை சரிச் செய்கிறது.

4. ஊற வைத்த அத்தி பழங்களில் வைட்டமின் E மற்றும் சிங்க் அதிகமாக இருக்கும் இது சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கி சருமத்தை பளபளப்பாகிறது. எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது.

5. அத்திப்பழத்தில் பெற்றாசியம் சத்து இருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் வேலைச் செய்கிறது. இதனால் இதய நோயுள்ளவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் தரும்.

6. ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலத்தின் இயற்கையாக அத்திப்பழத்தில் இருக்கிறது. இது செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் இரவு தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இரவு வேளைகளிலில் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? – இந்த ஆபத்து நிச்சயம்!

Quick Share

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

புரதப்பவுடர்களை அதிகமா உட்கொள்வதால் புரதச் சத்து அதிகமாகி எலும்பு தாது இழப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புரதத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் மூலம் கழிவுகளை வடிகட்டும் விகிதம் அதிகரிக்கும் . இதனால் உடலில் நோய்கள் அதிகரிப்பதற்கு இந்த புரதப் பவுடர் ஒரு காரணமாக அமைகிறது.

நமது உடலில் புரதம் தேவையாக இருந்தால் முட்டைகள்,லென்டில்கள், ,பீன்ஸ் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புரதச்சத்து அதிகமாக உடலில் இருந்தால் நீர்ச்சத்து குறைவாக காணப்படும்.

உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள்!

Quick Share

உணவு சாப்பிட்ட பிறகு சிலர் ஓய்வெடுக்க விரும்புவார்கள். சிலர் புகைபிடிப்பதையோ அல்லது டீ குடிப்பதையோ விரும்புவார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகு செய்யும் சில செயல்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒவ்வொரு நபரும் உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

ஏனெனில் இது உங்கள் செரிமானத்தை பாதிக்கும் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

உணவுக்குப் பிறகு தூங்குவது என்பது மகிழ்ச்சியான அனுபவமாகத் தோன்றலாம்,ஆனால் இதைச் செய்வது செரிமான செயல்முறையைத் தடுக்கலாம்.

மேலும் உணவு மூலக்கூறுகளை உடைக்க நீண்ட நேரம் ஆகலாம். எனவே, கனமான உணவை சாப்பிட்ட உடனேயே தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

சிலர் உணவு சாப்பிட்ட உடனேயே புகைபிடிப்பதை விரும்புவார்கள். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அமைதியாக பாதிக்கும்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுக்குப் பிறகு 1 சிகரெட்டை புகைபிடிப்பது 10 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.

கனமான உணவை சாப்பிட்ட உடனேயே குளிப்பதை எப்போதும் தவிர்க்கவும், ஏனெனில் இது செரிமான செயல்முறையை தாமதப்படுத்துகிறது.

ஏனென்றால், குளிப்பது வயிற்றைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இது மழையின் போது உடலின் மற்ற பகுதிகளுக்கு பாய்கிறது மற்றும் செரிமானத்தைத் தடுக்கிறது.

பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

உணவு சாப்பிடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சவும் உதவும்.

தேநீர் பொதுவாக அமிலத்தன்மை கொண்டது,

இது காஃபின் இருப்பதால், உணவை ஜீரணிக்க கடினமாக்குகிறது. உண்மையில், சாப்பிட்ட உடனேயே ஒரு கப் தேநீர் உட்கொள்வது உணவு மூலக்கூறுகளை உடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதுடன், அஜீரணத்தை ஏற்படுத்தும்,.

இது உணவில் உள்ள புரத உள்ளடக்கத்தை கடினமாக்குகிறது. உணவுக்குப் பிறகு தேநீர் அருந்துவது இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கும். எனவே, உணவுக்குப் பிறகு குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

Quick Share

கறிவேப்பிலையின் மணமும் அதன் சுவையும் பலரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், தோசை மற்றும் தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஆனால் நீங்கள் கறிவேப்பிலை தண்ணீர் குடித்திருக்கிறீர்களா? அது உடலுக்கு நன்மைய வழங்குமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலை நீரை எடை குறைக்கும் பானமாகவும் பயன்படுத்தலாம், இதன் பயன்பாடு உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும், ஏனெனில் அதில் மலமிளக்கிகள் காணப்படுகின்றன, இது நம் வயிற்றின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும். இதனால் வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

கறிவேப்பிலை தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது, இந்த இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சினைகள் நீங்கும்.

பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், அதன் பின்னணியில் காதல் மற்றும் நட்பில் துரோகம், பணிச்சுமை, பணப் பற்றாக்குறை, நோய் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், கறிவேப்பிலைத் தண்ணீரைக் குடித்தால் இந்த பிரச்சினையும் நீங்கும்.

மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!

Quick Share

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.

நமது மூளையின் நரம்புகள் சிறப்பாக செயல்பட B காம்ப்ளெக்ஸ் அதிகமாக தேவைப்படும். மூளையின் வளர்ச்சிக்கு E, C வைட்டமின்கள் உதவுகின்றன.

இதனால் ந்த சத்துக்கள் உடலுக்கு அப்படியே கிடைக்க சில உணவுகள் உதவுகின்றன. சிவப்பு இறைச்சி வகையயை அதிகமாக சாப்பிட கூடாது.

இதனால் மூளையின் ஞாபக சக்தி மங்கி போக செய்யும். அதேபோல, சோடா, சர்க்கரை சேர்த்த கூல்டிரிங்ஸ்களை அதிகமாக குடித்தாலும் நினைவுத்திறன் குறைபாடு வரும்.

கீரைககைளை அதிகமாக உண்ண வேண்டும். அதிலும் தண்டுக்கீரை, பாலக்கரை, முருங்கைக்கீரையை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

இட்லி, தோசை, பிரெட் போன்வற்றிலிருக்கும் ஈஸ்ட்கள், மூளைக்கு மிகவும் நல்லது. இது பக்கவாதம் வராமலும் பாதுகாக்கிறது. காலிஃப்ளவர், புரக்கோலி போன்றவைகளும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கின்றன.

ரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சை, கேரட், அன்னாசி, காலி ஃபிளவர், புரக்கோலி,

முட்டைக்கோஸ், கொத்துமல்லி, வல்லாரை, கறிவேப்பிலை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ்,

சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு இது போன்ற உணவுகளை சாடபிடுவது மூளைக்கு மிகவும் நன்மை தரும்.

எச்சரிக்கை !!கடுமையான வெயிலில் வெளியே செல்லாதீர்கள்- ஹீட் ஸ்ட்ரோக் மரணத்தை ஏற்படுத்தும்..

Quick Share

நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்த நிலையில், இது குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடல் அதிக வெப்பமடைவதை குறிக்கிறது. வெயிலில் நீண்ட நேரம் இருப்பது அல்லது கடுமையான வெயிலில் உழைப்பதன் விளைவாக இது ஏற்படலாம். பொதுவாக உடல் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும். இது 104 டிகிரி பாரன்ஹீட் (40 டிகிரி செல்சியஸ்) அளவிற்கு உயர்ந்தால் வெப்ப பக்கவாதம் என்கிற ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதனால் தீவிர பாதிப்பும், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.

ஆஸ்துமா பரம்பரையாக வருமா? அதிர்ச்சி தகவல்

Quick Share

ஆஸ்துமா பரம்பரையாக வரும் நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பெற்றோர், மூதாதையார் அல்லது உறவினர்களில் யாருக்கேனும் ஆஸ்துமா தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பரம்பரையின் தாக்கத்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது. ‘இன்ட்ரன்சிக் ஆஸ்துமா’ எனப்படும் இந்த வகை 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் உட்புறகாரணிகள் பரம்பரை மற்றும் மரபணு ஆகும்.

எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?

Quick Share

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.

இந்துக்கள் பொதுவாக விரதம் இருப்பது வழக்கமான ஒரு விஷயமாக வைத்துள்ளனர். இவ்வாறு இருப்பதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துவதற்கு உதவுகிறது.

ஆன்மீகப் பயணத்தில் கவனம் செலுத்துவதற்கும், தெய்வீகத்தோடு ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதற்கும் இது உதவுவதாக நம்பப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு முன்பிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் வழக்கமாக ரம்ஜான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்.

அனைத்து வயது வந்த முஸ்லிம்களும் இந்த விரதம் இருப்பது கட்டாயமாக இஸ்லாமியத்தில் கருதப்படுகிறது.

இப்படி விரதம் இருக்கும் போது இவர்கள் உணவை மட்டும் அல்லாமல் தங்களுக்கு பிடித்த அனைத்து விஷயமும் அதாவது பானம், புகைப்பிடித்தல் மற்றும் தாம்பத்தியம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பார்கள்.

இப்படி விரதம் இருப்பதால் உடலையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது. உணவு, தண்ணீர் அல்லது பிறவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலமாக சுய கட்டுப்பாடு கிடைக்கிறது.

குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?

Quick Share

தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது. முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அதனால் வேலைக்கு சென்றும் நிம்மாதியாக வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். 

வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டியின் பொறுப்பில் விட்டு செல்வதனால் செல்வது மிகவும் சிறந்தது.

அதனால் குழந்தைகளின் அறிவாற்றல் மேம்படுவதாகவும் அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

பொதுவாக தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு ஒரு நூலகம் போன்றது. தாத்ததா பாட்டி அவர்களுடைய சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர்ந்துக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியர்களுடன் இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகள் பற்றிய கவலையின்றி வேலையில் கவனம் செலுத்த முடியும்.

தாத்தா – பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.

தாத்தா பாட்டியிடமட கதை கேட்டு வளரும் குழந்தைகள் மதிப்பு மிகுந்த வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்கின்றார்கள்.அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மேம்படுகின்றது.

தாத்தா பாட்டிகள் எப்பொழுதும் பேரப்பிள்ளைகள் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்துகின்றார்கள் இதுவும் பெற்றோரின் அன்புக்கு நிகரானது தான்.அதனால் குழந்தைகள் அன்பானவர்களாக இருக்கின்றார்கள்.

தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இயல்பாகவே ஏற்பபடுகின்றது. தாத்தா- பாட்டியுடன் வளரும் குழந்தைகள் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தை கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெருகின்றார்கள்.

தாத்தா பாட்டி குழந்தைகளுடன் சடைப்பயிற்சியில் ஈடுப்படுவது , அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பது, பாரம்பரிய உணவுகளை ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற விடயங்களை செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கு துணைப்புரிகின்றது.

குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் மத நெறிகளையும் கலாசார பின்னணியையும் எளிமையாக புரிந்துக்கொள்வதுடன் இலகுவாக பின்பற்றவும் ஆரம்பித்து விடுவார்கள். அத போன்ற பல நன்மைகள் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர்வதால் கிடைக்கின்றது.

மக்களே தெரிஞ்சிக்கோங்க!!மன அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்

Quick Share

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை, அதிகரித்த வேலைபளு மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்கள், ஏமாற்றங்கள் போன்ற காரணங்களினால் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது.

ஒருவர் உடல் ரீதியாக ஒரு பாதிக்கப்படும் போது அதன் தாக்கம் வெளிப்படையாக விளங்கும் ஆனால் மனரீதியாக பாதிக்கப்படும் போது அவ்வாறு பாதிப்புகள் வெளியில் தெரிவதில்லை. 

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க முறையாக மனநல மருத்துவரிடம் ஆலோசணை பெற வேண்டியது அவசியம்.மன அழுத்தத்தில் இருப்பதாக நாமே உணர்ந்தால் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தீர்வை பெற முடியும்.அப்படி மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்

தற்காலத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருமே மன அழுத்ததினால் பாதிக்கப்படுகின்றனர்.மன அழுத்தத்தைக் குறைக்க பெர்ரி பெரிதும் துணைப்புரியும்.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக காணப்படுகின்றது. 

தினசரி உணவில் பெர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் ஹோர்மோன்களை கட்டுப்படுத்த உதவும்.

பாதாமில் ஜிங்க் நிறைந்து காணப்படுகின்றது. எனவே பாதாம் சாப்பிடுவது மன அழுத்தத்தைக் குறைப்பதில் பாரிய பங்கு வகிக்கின்றது. மேலும் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனைகளை தெளிவாக்கவும் உதவுகின்றது.தினமும் பச்சை இலை காய்கறிகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடுவதால் மூளையில் செரோடோனின் அளவு அதிகரிப்பதுடன் மனஅழுத்தம் மற்றும் பதட்ட உணர்வை கட்டுப்படுத்துகின்றது.

மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் ஹோர்மோன்களை குறைக்கப்படுகின்றது. மேலும் ஓட்ஸ் சாப்பிடுவதும் இதற்கு  உடனடி தீர்வை கொடுக்கின்றது. 

சுட்டெரிக்கும் வெயிலுக்கு தர்பூசணி மில்க்‌ஷேக்!

Quick Share

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க்ஷேக் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிடவும், நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணியை மில்க்ஷேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – தேவையான அளவு

பாதாம் பிசின் – 2 ஸ்பூன் சப்ஜா

விதை – 1 ஸ்பூன்

செய்முறை

தண்ணீர் பழத்தினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு பாத்திரம் ஒன்றில் அதனை வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு, அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை சேர்த்து கலக்க வேண்டும்.

பின்பு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளுகுளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு!

Quick Share

பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எந்த விதமான உடற் பயிற்சியும் செய்யாமல் எளிமையான வழியில் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால் அதற்கு சரியான தீர்வு உணவு முறையில் மாற்றத்தை கொண்டுவருவது தான்.

அந்த வகையில் உடல் எடையை இலகுவாக குறைக்க சுரைக்காய் சிறந்த தெரிவாக இருக்கின்றது. உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மற்றும் வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்தும் சுரக்காயை கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கூட்டு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சுரைக்காய் – 1

பாசிப்பருப்பு – 1/2 கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 1 தே.கரண்டி

கடுகு – 1 தே.கரண்டி

காய்ந்த சிகப்பு மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க தேவையானவை

துருவிய தேங்காய் – 3/4 கப்

அரிசி மாவு – 2 தே.கரண்டி

வரமிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

சீரகம் – 1தே.கரண்டி

செய்முறை

முதலில் சுரைக்காயை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி 20 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவைக்க வேண்டும்.

இதற்கிடையே துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் ஒன்றில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அந்த பேஸ்டை வேக வைத்திருக்கும் சுரைக்காயுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் சிறிதளவு காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேண்டும்.

பின்னர் இந்த தாளிப்பை சுரைக்காயில் போட்டு கலந்து இறக்கினால் சுவையான சுரைக்காய் கூட்டு தயார். வாரம் இரண்டு முறை இந்த கூட்டு சாப்பிட்டு வந்தால் உடல் உடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.




You cannot copy content of this Website