லைப்ஸ்டைல்

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் முருங்கைக்காய்!

Quick Share

பொதுவாகவே காய்கறிகளுள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது தான் முருங்கைக் காய். இதை சாப்பிடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் சுவைக்கு பலரும் அடிமை தான், சுவையில் மட்டுமல்லாமல் முருங்கைக்காய் ஊட்டச்த்து விடயத்திலும் கொஞ்சமும் சளைத்தது அல்ல. முருங்கைக்காயில் ஆரஞ்சி பழத்தில் உள்ளதை போன்று 7 மடங்கு வைட்டமின் -சி நிறைந்து காணப்படுகின்றது. பாலில் காணப்படும் கால்சியத்தை விடவும் முருங்கைக் காயில் 4 மடங்கு அதிகமாக கணப்படுகின்றது.

அத்துடன் வைட்டமின்-ஏ பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. கீரையில் காணப்படும் இரும்புச்சத்தை ஒப்பிடும் போது இதைவிட 75 சதவீதம் அதிமாக முருங்கைக் காயில் காணப்படுகின்றது.

முருங்கைக்காயை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை கொடுக்கின்றது.

அதில் அடங்கியுள்ள அதிகப்படியான வைட்டமின் -சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

ஆஸ்துமா மற்றும் கல்லீரல் மற்றும் கணையம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளியை போக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக் காய் உதவுகின்றது. தாய்ப்பால் சுரப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக் காயில் இதிகளவில் இரும்புச் சத்து காணப்படுவதால் எலும்பை வலுப்படுத்துவதுடன் இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

மேலும் முருங்கைக்காய் ஆண்மை குறைபாடு தொடர்பான பிரச்சிகைகளை சரிசெய்து ஆண்மையை அதிகரிக்க செய்யும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முருங்கைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மைதாவில் தயாரிக்கும் உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோய் உடனே வந்துவிடுமாம்.. ஜாக்கிரதை

Quick Share

மைதாவில் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆபத்தை கொடுக்கும் மைதா உணவுகள்

பொதுவாக ஏதேனும் ஆராய்ச்சி என்றால் அதனை எலிகளுக்கு கொடுத்தே சோதனை செய்வார்கள். சர்க்கரை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இதற்காக அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்திய நிலையில், மறுநாள் சர்க்கரை நோய் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இதற்காக அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்திய நிலையில், மறுநாள் சர்க்கரை நோய் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த அலாக்சாம் ஊசி தயாரிப்பதற்கு பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலும் உணவகங்களில் பரோட்டா உணவுகள் அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு இவைகள் ஏற்படும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனஅழுத்தத்தை குறைக்கும் வெதுவெதுப்பான தண்ணீர்..!மக்களே தெரிஞ்சிக்கோங்க

Quick Share

இன்றைய காலத்தில் அதிக எடை பிரச்சினையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சரியான உணவு பழக்கங்கள், உடற்பயற்சி, சிறந்த வாழ்க்கை முறை இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் மாத்திரமே ஆரோக்கியமாக வாழ முடியும். எடை அதிகரிப்பு பிரச்சினையில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பை தடுக்க வேண்டும் என்றால் தினமும் சாதாரண தண்ணீருக்கு பதிலாக சூடான நீரை பருக வேண்டும்.

இது கொழுப்பு செரிமானத்தை சீர்ப்படுத்தி கொலஸ்ட்ரால் தேக்கத்தை இல்லாமலாக்குகின்றது.

அந்த வகையில் சுடுநீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

1. சுடுநீர் பருகுவதால் சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.

2. சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். இதனால் மூக்கிலிருந்து இரத்தம் வழிவது குறையும்.

3. வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்த சுடுநீர் உதவுகின்றது.

4. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் சுடுநீர் குடிப்பது நன்று. ஏனெனின் இது குடல் இயக்கத்தை சீராக்கும்.

5. மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும்.

ஆஸ்துமா இருக்கா?அலட்சியம் வேண்டாம்…தொடர்ந்து தலைமுறைகளை தாக்கும்…

Quick Share

இன்றைய இயந்திரமயமான உலகில் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது, அதிலும் குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவனிக்கும் தன்மையும் பெற்றோர் மத்தியில் அருகியே வருகின்றது என்றால் மிகையாகாது.

சூழல் மாசு காரணமாகவும் துரித உணவுகளை பெற்றுக்கொள்வோரின் வீதம் அதிகரித்தமை காரணமாகவும் நோய் அபாயமும் தற்போது அதிகரித்துவிட்டது. அவ்வாறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிலும் பாகுபாடு இன்றி மனித குலத்துக்கே சவலாக விளங்கும் நோய்களில் ‘க்ரொனிக் ‘ (chronic )எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை.

பொதுவாக மூன்று மாதங்களுக்கு மேலாக தொடரும் பிரச்சினையை தான் க்ரொனிக் என கூறுகின்றோம். இந்தவகை நோய்களுக்கு முக்கியமான உதாரணமாக ஆஸ்துமா குறிப்பிடப்படுகின்றது.

இது சுவாச கோளாறுடன் தொடர்புடைய நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும் கட்டுப்படுத்த முடியும்.

ஆஸ்துமா பாதிப்புக்கான காரணிகள்  

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம் மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்று, துரித உணவுகள், குடும்ப பின்னணி போன்றவை தான் ஆஸ்துமாவிற்கான பிரதான காரணிகளாகும். இது மூச்சு குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்சினை என்பதால் நேரடியாக அவற்றுக்கு மட்டும் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.

எனவேதான் ஆஸ்துமாவை பொறுத்தவரை மாத்திரைகளுக்கு பதிலாக இன்ஹலர் மூலம் மருந்து உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும் போலவே சில பக்க விளைவுகள் இருக்கின்றன.

மாத்திரை வடிவில் இந்த மருந்துக்களை உட்கொள்ளும் போது அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹலர் வழியாக உறிஞ்சும் போதும் மருந்து நேரடியாக நுரையீரலை சென்றடையும் என்பதால் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சு திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு இருக்கிறது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, குடும்ப பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா பிரச்சினை இருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

ஆஸ்துமா அறிகுறிகள் 

தொடர்ந்து எந்தெந்த சூழலில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கிறது என பார்க்கப்படும் உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிக புகையை சுவாசிக்கும் போதோ செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போதோ, அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போதோ, மூச்சு திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த கட்டமாக நுரையீரல் செயற்திறன் பரிசோதனை (lung function test) செய்யப்பட்டு குறிப்பாக பல்மனரி செயற்திறன் பரிசோதனை ( pulmonary function test) ஸ்பைரோமெட்ரி ( spirometry) இயந்திர பரிசோதனை பீக்ஃப்ளோ போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டும் மூச்சுக் குழாயின் சுவாச பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹலர் அளிக்கக்கப்படுகிறது.

மேலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவும் எனவே அந்த கால கட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படாது.

பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்

தினமும் சரியான அளவு மருந்துகளை உற்கொள்ள வேண்டும் அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்த கூடாது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து காலத்திற்க்கு ஏற்ப மருந்தின் அளவும் மாறுபடும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆஸ்துமா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்

ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் தங்களுக்கு எத்தகைய சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதை தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும்.

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம் எனவே ஆஸ்துமா அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 

சிறுவயது முதல் இறுதிக் காலம் வரை தொடரும் இந்த பிரச்சினையை முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். நு

நவீன மயப்படுத்தப்பட்ட மருத்துவம்

ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிப்பது, அதிகமாக சிரித்தாலோ பேசினாலோ இருமல் வருவது, அடிக்கடி தும்மல் வருவது, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் ஏற்படுவது போன்றவை ஆஸ்துமாவுக்கான முக்கிய முதல் நிலை அறிகுறிகள் ஆகும்.

இப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால் தொடர்ச்சியாக ஒவ்வாமை காரணமாக மூச்சுக்குழாயின் தசைகள் தளர்வடைந்து சுருங்கிவிடும் மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் அதிகரிப்பது, மூச்சு திணறல், நெஞ்சில் இறுக்கம் போன்றவை தெரியத் தொடங்கும்.

ஆஸ்துமா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாள் முதல் நோயாளிகள் இரண்டு வகையான மருந்துகளை கையில் வைத்திருக்க வேண்டும் ஒன்று கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ( controlled medicine ) மற்றொன்று நிவாரண மருந்து (Reliever medicine )கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை மருத்துவர்கள் சொல்லும் விகிதத்தில் தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஆஸ்துமா ஒரு வாழ்நாள் பிரச்சினை என்றாலும் அதை கண்டு பயப்பட வேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் அதற்கான மருத்துவம் தற்போது இன்னும் நவீன மயப்படுத்தப்பட்டு விட்டது. 

எனவே இது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை, இருப்பினும் எம்மால் இயன்றளவு நோய் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்ப்பதும் ஆஸ்துமா அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பதும் எமது ஆரோகியத்தை பாதுகாக்கும்.

நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு: எவ்வாறு கண்டுபிடிப்பது?

Quick Share

இன்று பலருக்கும் சாதாரண நெஞ்சுவலிக்கும், மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலிக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. தற்போது எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாரடைப்பு என்பது தற்போது இளம்வயதினரிடையே அதிகமாக வருகின்றது. ஆனால் சாதாரண நெஞ்சுவலிக்கும் மாரடைப்பிற்கும் ஏறக்குறைய ஒரே அறிகுறிகள் காணப்படுவதால் சில தருணத்தில் குழப்பம் ஏற்படுகின்றது.

பொதுவாக அறிகுறிகள்

நெஞ்சு வலி, மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை மற்றும் படபடப்பு சில சமயங்களில் இவை இரண்டும் சேர்ந்தாற் போல் வரும்.

இரண்டிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்​ : நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, தூங்கும் போது சாதாரண நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் மாரடைப்பு என்பது நீங்கள் அதிகப்படியான உழைப்பை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஏற்படும்.

நெஞ்சுப் பகுதியில் மட்டுமின்றி உடல் முழுவதும் வலி இருக்கும். பெரும்பாலானோருக்கு கைப்பகுதி, கழுத்து அல்லது தாடைப் பகுதியில் வலி இருக்கும்.

இதுவே சாதாரண நெஞ்சுவலி என்றால், கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும். ஆனால் மாரடைப்பில் வலி குறையாது என்கின்றனர் மருத்துவர்கள்.

சாதாரண நெஞ்சுவலியை எப்படி சமாளிப்பது?

ஒருவேளை உங்களுக்கு சாதாரண நெஞ்சுவலி ஏற்பட்டால், பதட்டம் அடையாமல் நன்றாக மூச்சை இழுத்துவிடுவதுடன், உங்களது கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். உங்களுக்கு பிடித்தமான, உங்களுக்கு உத்வேகம் தரக்கூடிய 3 நேர்மறையான விஷயங்கள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு போன் செய்து அழைக்கவும். ஆஸ்ப்ரின் மாத்திரையை உடனடியாக மென்று விழுங்கினால் ரத்தம் உறைவதை தடுக்கும்.

மாரடைப்பின் போது இந்த மாத்திரை சாப்பிடுவதால் உங்கள் இதயம் மேலும் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

ஆனால் உங்களுக்கு குறித்த மாத்திரை ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகாமல் குறித்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைய கொய்யாப்பழம் போதும்!

Quick Share

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு எதிராக அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வயதாகியவுடன் ஒருவருடைய முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதை எப்படி தவிரப்பது என்று தெரியாது. ஆகவே ஒரு கொய்யா பழத்தை வைத்து எப்படி முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கொய்யா சுவையாக இருப்பதைத் தவிர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் தருகின்றது. கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இது தவிர ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சுருக்கத்தை எப்படி தடுக்கும்?

கொய்யா வைட்டமின் சி மற்றும் லைகோபீன் இருப்பதால் இது இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது. இது சருமத்தின் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  

கொய்யாப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கும். ஆகவே தினமும் ஒரு கொய்யப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

மேலும் இது தவிர என்ன செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ரோஸ் வாட்டர் – 5

  • தேன் – 1 ஸ்பூன் அளவு

  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன் அளவு 

  • பூ வாழைப்பழம் – 1

  • எலுமிச்சை சாறு – 1/2 பழம்

  • ஒலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன் அளவு 

செய்முறை

  • ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை முகத்தில் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

  • பிறகு, ஒரு பூ வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

  • எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.

உணவருந்திய பின்பு செய்யக்கூடாத செயல்கள்!

Quick Share

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு என்பது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உணவை உட்கொண்ட பின்பு நாம் செய்யக்கூடாத கெட்டப்பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் சாப்பிட்ட பின்பு நீங்கள் செய்யும் கெட்ட செயல்கள் உங்களது எடையை அதிகரிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உணவு உண்டவுடன் ஒரு கோப்பை தேநீர் அல்லது காபி அருந்த விரும்புவவது இயற்கை. ஆனால் இது தவறான செயலாகும். ஆம் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு பின்பே தேநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுகின்றது.

இதே போன்று தண்ணீரும் சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வயிற்றின் அமிலத்தன்மை நீர்த்து போகச் செய்வதுடன், செரிமான பிரச்சினையும் ஏற்படும்.

சாப்பிட உடன் கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது. ஏனெனில் உங்கள் உடல் செரிமான உறுப்புகளுக்குப் பதிலாக உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது வயிற்று அசௌகரியம், பிடிப்புகள் மற்றும் சோம்பலை ஏற்படுத்துகிறது.

சாப்பிட்ட உடன் படுப்பது கூடாது. இவ்வாறு செய்வது நெஞ்செரிச்சல் மற்றும் அமில தன்மையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட மூன்று மணி நேரம் கழித்து படுக்கைக்கு செல்லவும்.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Quick Share

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலில் பல தீமைகளைக் கொண்டு வரும். நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது. வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.

காலையில் எழுந்த பின்னர் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது கிடையாது. வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை அளவு நமக்கு சக்தி அளித்தாலும் அது சில மணிநேரத்தில் உறிஞ்சி விடும்.

மேலும் இது காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழமாக இருந்தாலும், அதனை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வாழைப்பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை குடல் இயக்கம் பாதிக்கப்பட்டு சக்கரையும் அமிலமும் இணைந்து குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் காலையில் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல பிற பழங்கள் உண்ணும்போது சேர்த்து கலவையாக இதனை உண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பட்சத்தில் அதிலிருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தத்தில் சமநிலையின்மை ஏற்பட்டு அதன் தாக்கம் இதயத்தில் ஏற்படும்.

இதனால் இதய ஆரோக்கியம் பாதிப்படையும். எனவே காலையில் எழுந்ததும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் மற்ற பழங்களுடன் சேர்த்து உண்ணுங்கள்.

மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி இலை தோசை!

Quick Share

பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. 

இதில் செய்யப்படும் தோசை உடல் சூட்டை குறைந்து, வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். 

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி இலை தோசை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். 

செய்முறை

முதலில் அரிசி மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவிய பின், தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.

3-4 நேரம் கழித்து, சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி இலைகளுடன் ஊற வைத்த அரிசி வெந்தைய கலவையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

இந்த மாவை குறைந்தது 6-8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்க வேண்டும்.

மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்த பிறகு சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். 

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள்… தினமும் ஒரு கரண்டி நெய் சாப்பிடுவதால் இவ...

Quick Share

பொதுவாகவே பால் பொருட்கள் உடலில் பல நன்மைகளைக் கொடுக்ககூடியது. அந்தவகையில் நெய்யில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் நெய்யில் உள்ள ஆன்டி பயோடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவ குணம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். இப்படி பல நன்மைகளைக் கொண்ட நெய்யை தினமும் ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

1. நெய் உட்கொள்வது உங்கள் உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவும், மேலும் இது அடைபட்ட மூக்கை குணப்படுத்தவும் உதவுகிறது.

2. நெய்யில் பியூட்ரிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். இது கொழுப்பு அமிலம் வீக்கத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. பல நோய்களை எதிர்த்துப் போராடும் டி-செல்களை உற்பத்தி செய்வதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

3. பால் மற்றும் நெய் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு கப் சூடான பாலில் இரண்டு டீஸ்பூன் நெய்யை கலந்து படுக்கைக்கு முன் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

4. நெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது மற்றும் சரும செல்களுக்கு நீரேற்றத்தையும் வழங்குகிறது.

5. நெய்யில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தில் நிறைந்துள்ளது. இது உங்கள் உச்சந்தலையை மென்மையாகவும் எரிச்சல் குறைவாகவும் உணர உதவுகிறது.

6. நெய் உட்கொள்வதால் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியும் தடுக்கப்படுகிறது.

உடலை வலுவூட்டும் கேப்பை களி!

Quick Share

பொதுவாக பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. இந்த உணவு தற்போது இருப்பவர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பஞ்சம், சிறைச்சாலை என உணவுக்கு தட்டுபாடான காலங்களில் இந்த களி தான் பலரின் வயிற்றிற்கு கைக் கொடுத்துள்ளது. களியில் சேர்க்கப்பட்டும் பொருட்களுக்கேற்ப களியின் வகைகளும் வேறுபடுகின்றது.

அந்த வகையில், ராகி களி, கேழ்வரகுக் களி, கேப்பைக் களி என பலவகைப்பட்ட களிகள் இருக்கின்றன.

இதன்படி, கேப்பை களி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

கொதிநீர் ஆற ஆற ராகியை களி போன்று உருண்டையாக பிடித்து இறக்கவும்.

1. கேழ்வரகு களி சாப்பிட்டால் பசி வருவது குறைவாக இருக்கும்.

2. உடல் வெப்பத்தை குறைக்க முடியாமல் தடுமாறும் பெண்கள் களி சிறந்ததாக இருக்கும். இது ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

3. சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி மிகவும் நல்லது.

4. ராகி களியில் இருக்கும் கால்சியம், எலும்பு மற்றும் பற்களை வலுவாக்கும்.

5. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க கேப்பைக் களி உதவுகிறது.

இனிப்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இத்தனை ஆபத்துக்களா?

Quick Share

பொதுவாகவே இனிப்பு என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். ஆனால் இனிப்புகளையும், இனிப்பு உணவுகளையும் அதிகம் சாப்பிட்டால் சக்கரை நோய் வரும் என பயந்து சிலர் அவற்றை ஒதுக்குவதும் உண்டு.

ஆனால் ஒரு சிலர் இனிப்புக்களையும் இனிப்பு உணவுகளையும் அதிகம் சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிப்பார்கள் இந்தப் பழக்கம் நல்லதா? கெட்டதா? என்றுக் கேட்டால் ஆபத்து என்றுதான் சொல்லலாம். அப்படி என்னென்ன ஆபத்து வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இனிப்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று சொன்னாலும் இதனால் நம் உடலில் அதிக அளவு இரத்த சர்க்கரை ஏற்படும் மேலும், டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதனால் இனிப்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்றது.

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் அது கூடுதலாக அதிக தண்ணீரை சேமித்து வைப்பதன் விளைவாக தற்செயலாக எடை அதிகரிக்கும்.

அதனால் நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்கள் உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸை அகற்ற உதவும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்ணும்போதும், நிறைய தண்ணீர் அருந்தும்போதும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்து எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.




You cannot copy content of this Website