சிறுமி பாலியல் வன்கொடுமை -26 பேர் குற்றவாளிகள்!! 8 பேருக்கு ஆயுள்…

September 26, 2022 at 3:35 pm
pc

கடந்த 2020 ஆம் ஆண்டு, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில், மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். ஒருவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டார். ஆதலால் 21 பேர் குற்றாவளிகள் என போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் இன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், காவல் உதவி ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை உதவி பொறியாளர், பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் என நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website