யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் இப்படி செய்யக்கூடாது..,
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் கோவை மாவட்டம்ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார்.
தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடைசெய்த பிறகும் விளையாட்டைத் தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் திருப்பூர் வந்து திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடையாளம் தெரியாத நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட இவரை ரயில்வே காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் இவரது புகைப்படமும் ஒத்து போனதால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் பணத்தை இழந்து எல்வின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனைப்போல யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழக்கக் கூடாது என அவரது தந்தை உருக்கமாகக் கூறியிருக்கிறார்.