செங்கல்பட்டு

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்: கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற மக்கள்!

Quick Share

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்துக்கொண்டு ஏராளமான பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர்.அதனில் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து ரயில்வே பொலிஸ் மற்றும் செங்கல்பட்டு நகர பொலிஸாருக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்திருக்கிறது.ரயில்வே மற்றும் நகர பொலிஸாருக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ரயில் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியம் …வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்சுகள்… குழந்தை இறந்ததால் அத...

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி (36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33) இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவர் பிரசவ தேதி கொடுத்திருந்த நிலையில், வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் மதியம் பிற்பகலில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றனர். 

அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்தனர். இதனால், மருத்துவர் வீடியோ காலில் ஆலோசனை கூறியுள்ளார். அப்போதும் குழந்தையின் தலை வராததால் மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பாலு என்பவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசுப்பேருந்து மோதி தனியார் கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி!

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் என்பவரது மகன் கபிலன் (22). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் M.A முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் எப்போதும் கல்லூரிக்கு காலையில் அவரது காரில் செல்வது வழக்கம். அதேபோல இன்று காலையும் அவரது காரில் வழக்கம்போல் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார்.

அதேசமயம் சென்னையிலிருந்து கல்பாக்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்துள்ளது. சரியாக கீரப்பாக்கம் பகுதியில் அந்தப் பேருந்து கபிலன் ஓட்டிவந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

அரசுப் பேருந்து கார் மீது மோதியதில் கார் முழுமையாக சேதமடைந்து அப்பளம் போல நொறுங்கி கிடந்தது. அந்த காரை ஓட்டி வந்த கபிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து அவர்களது உதவியுடன் அந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

தற்போது கபிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கபிலன் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் தமிழ்மணியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிக்கு சென்ற இளைஞர் அரசு பேருந்து மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தரக்குறைவாக பேசிய மாமியாரை அடி ஆள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள்! அதிர்ச்...

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா  இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மூன்றாவது மகன் மற்றும் நான்காவது மகன் திருக்கழுக்குன்றம் பகுதியில் தங்கி தந்தையுடன் அடகு கடையில் பணியாற்றி வருகின்றனர். மூன்றாவது மகன் பிண்டு குமார் (44). இவரது மனைவி சுஜாதா வயது 27.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மாமியார் பிரேமா மருமகள் சுஜாதாவை ஒருமையில் பேசுவதாகவும், உணவைத் தட்டில் போட்டு தள்ளி விடுவதாகவும், மருமகளை தரக்குறைவாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரேமா  ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் சுஜாதா பிகாரி என்பதால் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மாமியார் பிரேமா சடலமாகக் கிடந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த மகன் ரன்பாத்லால் அதிர்ச்சியடைந்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் மருமகள் சுஜாதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.அவரைத் தேடியபோது காலில் காயமடைந்து நொண்டியபடி மருத்தவமனைக்கு சென்று கொண்டிருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. தொடர்ந்து துன்புறுத்தி வந்த மாமியாரை கொலை செய்யத் திட்டமிட்ட சுஜாதா, பீகாரிலிருந்து தனது உறவினர்களான சுமித், தீபன் ஆகியோரை வரவழைத்துள்ளார். இரவில் வீட்டில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாடியில் படுக்க வைத்த சுஜாதா, உறவினர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.அவர்கள் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை கத்தியால் கழுத்தில் குத்தி படு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்த ஸ்மித் மற்றும் தீபன் ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக குதித்து மலையின் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

நில மோசடி வழக்கு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி 2-வது முறையாக ஆஜர்..

Quick Share

பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். சென்னையை அடுத்த சிறுசேரியில், நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்து விட்டதாக முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் மீது அந்த புகார் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் கொடவாலா, நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை ஆவார். ரமேஷ்கொடவாலா தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடிகர் சூரியின் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் நேரடியாக விசாரித்து வருகிறார்கள்.

சூரியிடம் 2-வது முறையாக விசாரணை

நடிகர் சூரியிடம் கடந்த மாதம் துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் நடிகர் சூரியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 100 கேள்விகள் கேட்டு அதிரடி விசாரணை நடந்தது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று போலீசார், சூரியிடம் தெரிவித்து உள்ளனர்.

நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி தருவதாக சொன்ன குறிப்பிட்ட நிலம் உள்ள சிறுசேரி பகுதிக்கும் நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதே போல புகார் கூறப்பட்ட, முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோரிடமும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலியான ஜி.எஸ்.டி. கணக்கு காட்டி ரூ.37½ லட்சம் மோசடி செய்த பெண் அதிகாரி!!

Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சாந்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் சாந்தி. இவரது மனைவி சைனி இவாஞ்சலின் (வயது 24). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கீழ் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இவர் அலுவலக ஜி.எஸ்.டி. கணக்குகளை கையாளும் போது ரூ.37½ லட்சத்தை கையாடல் செய்துள்ளார். அதற்கு பதில் போலியான ரசீதுகள் வைத்து ஜி.எஸ்.டி.யில் கணக்கு காண்பித்துள்ளார். இந்த நிலையில் அலுவகத்தின் உயர் அதிகாரிகள் அலுவலக கணக்குகளை சரிபார்த்த போது, போலியான ரசீதுகளை வைத்து பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தனியார் கம்பெனியின் மேலாளர் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகாரி சைனி இவாஞ்சிலினை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

எல்லை மீறும் மாணவிகள்! ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் அட்டகாசம் ..

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரசு பஸ்சில் அரசு பள்ளி சீருடையுடன் ஒரு பீரை 3 மாணவிகள் மாறி, மாறி குடிப்பது போன்ற ஒரு வீடியோ  சமூக வளைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர்.
இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க அந்தந்த ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்த்தால் ஊருக்கு பயந்தும், சக உறவினர்களுக்கு பயந்தும் மாணவ, மாணவியர் ஒழுங்காக படிப்பார்கள் என்றும், அரசின் இலவச பஸ் பாஸ் தான் இருக்கே என்ற ஒரு காரணத்தால் ஊரு விட்டு ஊரு வந்து படிப்பதால் தம்மை யாரும் கண்டுக்கொள்ளமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், பள்ளி கல்வி துறையில் சில கடுமையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

Quick Share

செங்கல்பட்டு அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு அடுத்த பாலூர் ஊராட்சி, நந்தமேடு, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் முருகன் (வயது 25). இவர் கண்டிகையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

மேலும் இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமலும், சரியான வேலை கிடைக்காததாலும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் முருகன் தனது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்

உங்கள் மானத்தை வாங்குவோம் !! மெசேஜ் வெளியே சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (27) என்ற ரங்கநாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
விவேக தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக. தனியார் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி உள்ளார்.

ஆன்லைன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஆனால் இந்த கடனை செலுத்த காலதாமதம் ஆகி இருக்கிறது. கடன் கொடுத்த அந்த நிறுவனம் கஸ்டமர் கேர் மூலம் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களை பற்றி அவதூறாக குறுஞ்செய்தியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மானத்தை வாங்கி விடுவோம் என எச்சரித்துள்ளார்கள்.

இந்த ஆன்லைன் நிறுவனம் குறுஞ்செய்தியை இவருடைய நண்பர்களுக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர் இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்கிற்கு போன் செய்து விசாரித்துள்ளனர் இதனால் மனமுடைந்த விவேக் பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவமானம் தாங்கமுடியாமல் இளைஞர் தற்கொலையோ செய்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

3 சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம்..,

Quick Share

செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் 2 மகள்கள் ராகினி (6வயது) ரம்யா (4 வயது) மற்றும் விஜயகுமார் என்பவரின் மகள் சாதனா (5 வயது) ஆகிய மூன்று சிறுமிகளும் புதன்கிழமை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்து விளையாடச் சென்றுள்ளனர்.

சமீபத்தில் பெய்த கனமழையால் குளம் நிரம்பி காணப் பட்டதால் ஆழமும் பள்ளமும் தெரியாமல் போய் சிக்கியுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது குலத்தின் ஆழம் அதிகம் இருக்கும் பகுதி என தெரியாமல் சென்றுள்ளனர். சிறுமிகளுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கும்
போது அலறி உள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள கிராம பொதுமக்கள் இளைஞர்கள் குளத்தில் இறங்கி தேடி குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.”
தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சிறுமிகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.




You cannot copy content of this Website