மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்! சிக்கன் பிரியாணி என்ற பெயரில் பூனை பிரியாணி..

Quick Share

சென்னை எழும்பூரை சேர்ந்த ஜோஷ்வா என்ற விலங்கு நல ஆர்வலர் பகீர் குற்றசாட்டு ஒன்றை கூறியுள்ளார். ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வரும் இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்றதாக கூறியுள்ளார். மேலும் அவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது 100 ரூபாய் கொடுத்தால் பூனையை தருகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் அவர் ஒருவர் மட்டும் சாப்பிடுவார் என்றல் ஒரு பூனை போதும் எதற்கு இத்தனை பூனையை பிடிக்க வேண்டும்? இதனை உணவகங்களில் விற்று பணம் சம்பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வணக்கம் சென்னை.. கேலோ இந்தியா விழாவில் மோடி

Quick Share

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகைபுரிந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர் சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்தது போலவே இருக்கிறது என மேடையில் பேசியுள்ளார். மேலும் விளையாட்டு துறையில் சம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என கூறியுள்ளார். விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் எனவும் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.

நீரில் தத்தளித்த மாணவி: காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Quick Share

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மேனகா. இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோருடன் கண்மாயில் குளிக்க சென்றார்.

அங்கு மேனகா குளிக்கும்போது நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து பெண்கள் இருவரும் மேனகாவை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அத்துடன் கலைச்செல்வியும் அவருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஒருவழியாக கனிச்செல்வியை காப்பற்றினர். மேலும் பொலிஸார் தகவல் அளித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியை காப்பாற்றும் முயற்சியில் பெண்ணொருவர் அவருடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swiggy Instamart -ல் ஒரே நாளில் அதிக பொருட்களை வாங்கி குவித்த சென்னை நபர்

Quick Share

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) சென்னையை சேர்ந்தவர் ஒரே நாளில் அதிகபட்சமான பொருட்களை வாங்கியுள்ளார். 

ஒன்லைன் ஆர்டர்

தற்போதைய காலங்களில் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கி வருகிறோம். ஒருவரின் கையில் மொபைல் இருந்தாலே போதும். தங்களுக்கு தேவையான பொருள்களில் ஒன்லைன் தளங்கள் மூலமாக ஆர்டர் செய்கிறோம்.உணவு முதல் ஐபோன் வரை ஒரே இடத்தில் இருந்தபடியே பெறுகிறோம். குறிப்பாக உணவு செயலிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்வது இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

அந்தவகையில், ஒன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, 2023 -ம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ரூ.31748 -க்கு வாங்கி குவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் ஆகிய பொருட்கள் அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளது.   

சென்னை உட்பட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

Quick Share

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மாலத்தீவுப் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும்.இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

சென்னையின் அவலநிலை- 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை..

Quick Share

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீரால் சூழ்ந்துள்ளன. குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மினி லாரிகளில் சென்று சிலர் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, 25 லிட்டர் கேன் ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்கின்றனர். வீடுகளில் இருந்து காலி கேன்களை கொண்டு வருபவர்களுக்கு, ரூ.150-க்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

Quick Share

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்துள்ளது.மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டதால், சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களின் மழை பொழிவு குறைய தொடங்கியுள்ளது.

அதே சமயம் அரசும், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டு வருகிறது.

டேவிட் வார்னர் ஆறுதல்

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மேடான பகுதிக்கு செல்லுங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என அறிவுரையும் வழங்கியுள்ளார்.அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் உங்கள் முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பெரும் அவதியில் சென்னை மக்கள்!! மிக்ஜாம் புயல்: மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம்

Quick Share

மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.

மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.

இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.

இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.

சென்னை மக்களே ஜாக்கிரதை!! தீவிர புயலாக வலுப்பெறுகிறது மிக்ஜாம்! அரசின் முக்கிய எச்சரிக்கை

Quick Share

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.

மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் பத்திரமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு மாநில அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1070, வாட்ஸ் அப் எண் 94458 69848, மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மைய எண் -1077 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மிக்ஜாம் புயல்: சென்னையை புரட்டியெடுக்கும் கனமழை!

Quick Share

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் தற்போது 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று மாலை 5 மணியளவில் இந்த மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தின் அருகே புயல் மையம் கொண்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி வரை மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

130 கி.மீ அப்பால் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்: சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

Quick Share

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று மாலை 5 மணியளவில் இந்த மிக்ஜாம் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகத்தின் அருகே புயல் மையம் கொண்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாலை 4 மணி வரை மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் சாலையை கடந்த பெரிய முதலை: விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் அவதி

Quick Share

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை

சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

சாலையை கடந்த முதலை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி வரும் நிலையில், பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில் சென்னையில் பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.




You cannot copy content of this Website