திருவண்ணாமலை

10-ம் வகுப்பு மாணவியை 12-ம் வகுப்பு மாணவன்!அதிர்ச்சியில் பெற்றோர் …

Quick Share

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக 12-ம் வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 7 மாத கர்ப்பம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதி பள்ளியில் 17 வயதான மாணவர் 12-ம் வகுப்பு படிக்கிறார்.

உறவினர்களான இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் உடலில் திடீரென மாற்றம் தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவன் மீது வழக்கு இதைடுத்து மாணவிக்கு பரிசோதனை செய்ய திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதைத்தொடர்ந்து அங்கு மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் அவர் சிறுமியாக இருப்பதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவி அளித்த புகாரின் பேரில் 12-ம் வகுப்பு மாணவன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அது குறித்து மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணமான கள்ள காதலிக்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்…!!

Quick Share

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்மு (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த அம்மு கடந்த சில மாதங்களாக பரணிதரனுடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அம்முவை பரணிதரன் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால், இதற்கு அம்மு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த பணிதரன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரணிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு ….தூக்கில் தொங்கிய தாய் ..!

Quick Share

ஆரணி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அமரேசன். இவர் அதே பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இவருக்கும் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஆரணி பாளையம் கே.சி.கே நகரில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோசித்த மருத்துவர்கள் சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சரண்யாவின் தந்தை ராஜா என்பவர் ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி வாலி...

Quick Share

சமூக வலைதளங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக பேசியும் பல லட்சக்கணக்கில் பணம் பறித்த பயாசிடம் ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். அதற்கு பணம் தேவை வருகிறது எனக் கூறி பணம் பறித்துள்ளார்.

சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார். அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். மேலும் சில பெண்கள் மெசேஜ் அனுப்பினர்.
இளம் பெண்களிடம் போலீசார் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினர்.
அப்போது சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு வேண்டும் என கூறியுள்ளனர். இளம் பெண் ஒருவர் பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளனர் .
போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவருக்கு ஆதரவாக பேசி இளம்பெண்கள் அடம் பிடித்துள்ளனர். 

அன்னபூரணி ஆசிரமம்..! புதிதாக ஆசிரமம் தொடங்கிய சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி!!

Quick Share

ஆன்மீக பயிற்சி வழங்கி அனைவருக்கும் முக்தி வழங்க ஆசிரமம் தொடங்கியுள்ளார் பெண் சாமியார் அன்னபூரணி. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி கலந்து கொண்டார். 

பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு பெரு நகரங்களை விடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க காரணம் என்னவென்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும் இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் போதித்து அவர்களுக்கு முக்தி அடைய பயிற்சி தருவதாக தெரிவித்தார். 

ஆன்மிகம் என்றால் அதற்கான தனி ஆடை அணிய தேவையில்லை, உணவு பழக்க வழக்கங்கள் எதுவும் தேவை இல்லை, ஆன்மீகமும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுதான் என்பதை புரியவைக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்னபூரணி அரசு என்ற பெண் சாமியார் பல்வேறு சம்பவங்களில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது புதியதாக திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குடி போதையில் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை ..!

Quick Share

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

Quick Share

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கீழ்நீர்குன்றம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி வேணுகோபால் (வயது 31). இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிகளுக்கு சுஷ்மிதா (3) என்ற குழந்தை உள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் சுஷ்மிதா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார். குழந்தை வீட்டின் முன்தானே நிற்கின்றாள் என்று தாய் புனிதாவு வீட்டில் வேலையை கவனித்து உள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தை அருகே உள்ள  குழாய் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். அப்போது குழந்தையை காணவில்லை என்று தாய் புனிதான தேடி உள்ளார். அங்கு உள்ள குழாய் தொட்டியில் குழந்தை முழ்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர் உடனடியாக குழந்தையை வெளியே கொண்டு வந்து சிகிச்சைக்காக மானாமதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  
இதுகுறித்து குழந்தையின் தந்தை வேணுகோபால்  அளித்த புகாரின் அடிப்படையில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடூரமாக பெற்ற மகளுக்கு சூடு வைத்த இரக்கமற்ற தாய் -கைது, நெஞ்சை பதறவைக்கும் புகைப்படம் .

Quick Share

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 35), இவரது மனைவி மேரி (28). இவர்களுக்கு கார்த்தி (12), பிரவீன்(11) என்ற 2 மகன்களும், துளசி (9), ஜூலி (4) என்ற 2 மகள்களும் உள்ளனர். பழனி சோபா தைக்கும் தொழிலுக்காக சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.

கீழ்பென்னாத்தூர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும், பின்னர் சென்னைக்கு சென்று விடுவது பழனி வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மகள் ஜூலி தவிர மற்றவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். 
அப்போது மேரி குடும்ப பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு தனது மகள் என்றும் பாராமல் 4 வயது சிறுமி ஜூலியை வீட்டில் உள்ள கத்தியை எடுத்து நெருப்பில் சூடேற்றி அடிக்கடி தொடை, கை, கால் ஆகிய இடங்களில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல உதவி அலுவலத்திற்கு போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், குழந்தைகள் நல உதவி மாவட்ட  திட்ட  ஒருங்கிணைப்பாளர் அசோக், அணி உறுப்பினர் பாலையா ஆகியோர் கீழ்பென்னாத்தூர் போலீசார் உதவியுடன் சிறுமி ஜூலி வீட்டிற்கு சென்றனர்.
அங்கு ஜூலியன் தந்தை சென்னையில் இருப்பதாகவும், தாய் மேரியிடம் குழந்தைகள் நல  அதிகாரிகள் மற்றும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இது போன்று நடந்து விட்டதாக தாய் மேரி அவர்களிடம் ஒப்புக்கொண்டார். 
மேலும் சிறுமி ஜூலியின் உடலில் தீக்காயங்கள் இருப்பதை கண்ட சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் போலீசார் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல உதவி அளித்த  புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து சிறுமி ஜூலியின் தாய் மேரியை கைது செய்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

நண்பனின் மனைவியை கூட்டுப்பலாத்காரம் செய்த வாலிபர்கள்;

Quick Share

ஆரணியில் நண்பனின் மனைவியை கூட்டுப்பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி (வயது 26), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வரும்போது, இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

டிரைவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தை பிரிந்து விட்டார். இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு டிரைவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்கள் 2 மாதங்களாக ஆரணியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் டிரைவரின் நண்பரான இலுப்பகுணத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்ராஜ் (22) பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதற்காக டிரைவரிடம் வீடு ஒன்றை வாடகைக்கு தரும்படி கேட்டுள்ளார்.

டிரைவர் தான் வசித்து வரும் வீட்டின் அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அங்கு கோகுல்ராஜ் காதல் மனைவியுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், டிரைவர் நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக செஞ்சிவரை சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.இதனை அறிந்த கோகுல் ராஜ், அவருடைய நண்பரான டிரைவர் ஜெயசூர்யா (22) என்பவரை போனில் தொடர்பு கொண்டு ஆரணிக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, டிரைவர் வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் நண்பன் இல்லையா என கேட்டுள்ளனர். அதற்கு இளம்பெண் அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியபடி தனது கணவரின் நண்பர்கள் தான் என்பதால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கோகுல் ராஜ், ஜெயசூர்யா இருவரும் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டனர்.

வீட்டில் இருந்த குழந்தைகளை பக்கத்து அறையில் தள்ளி சத்தம் போடாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்தனர். உடனே இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்று கை கால்களைக் கட்டி இருவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கட்டுகளை அவிழ்த்து இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என இளம்பெண்ணை மிரட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜ், ஜெய்சூர்யா 2 பேரையும் கைது செய்தார்.

இது தொடர்பாக கோகுல்ராஜிடம் விசாரணை நடத்தியதில் எனது காதல் மனைவியை இளம்பெண் அடிக்கடி திட்டி வந்தார். இதனால் அவளை பழிவாங்க நண்பனின் மனைவி என்று கூடபார்க்காமல் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கல்யாணமாகி 10 நாளில் தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் ஓட்டம்!

Quick Share

செய்யாறு அருகே திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் வீட்டை விட்டு வெளிேயறினார். அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பெண்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சீம்மளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் யுவராஜ் (வயது 33). இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி தாலுகா அரண்வாயில் பகுதியைச் சேர்ந்த ஜெயராமனின் மகள் ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி மேல்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று புதுமாப்பிள்ளை யுவராஜ் வேலைக்குச் சென்று விட்டார். அவர் சென்ற சில மணி நேரத்தில் யுவராஜியை இவருடைய அண்ணன் லோகநாதன் செல்போனில் தொடர்பு கொண்டு, உனது மனைவி ஜெயஸ்ரீயை காணவில்லை, எங்ேகயோ மாயமாகி விட்டார், எனத் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்

உடனே யுவராஜ் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டில் ஜெயஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதி வைத்து தாலிைய வீட்டில் கழற்றி விட்டு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்ட கணவர் ..

Quick Share

திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் அருகே உள்ள செல்வபுரம் கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49) விவசாயி. இவருக்கு 2 மனைவிகள்.
இதில் 2-வது மனைவி சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்த ஹாஜிபாஷா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்ததும் சுதாவை சின்னதுரை கண்டித்து உள்ளார். ஆனால் சுதா கள்ளக்காதலை கைவிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாலியப்பட்டு கிராமம் அருகே சுதாவும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷாவும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் சின்னதுரைக்கு தெரியவரவே அவர் ஆத்திரம் அடைந்தார். இதனை தொடர்ந்து வேடியப்பனூரை சேர்ந்த அவரது நண்பர் மணி (44) என்பவரிடம் நாட்டு துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நண்பர் சத்யமூர்த்தியுடன் கள்ளக்காதலர்கள் இருந்த இடத்துக்கு சின்னதுரை சென்றார்.
அங்கு பேசிக்கொண்டிருந்த சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷா ஆகியோரை பார்த்து அவர் கடும் கோபம் அடைந்தார். உடனே சின்னதுரை தான் எடுத்து வந்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹாஜிபாஷாவை நோக்கி ‘டுமீல்’, ‘டுமீல்’ என சுட்டு உள்ளார். இதில் அவர் முழங்கை, இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அலறினார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தத்தையும் ஹாஜிபாஷா அலறும் சத்தத்தையும் கேட்ட அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்ததும் சின்னதுரையும், சத்யமூர்த்தியும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ஹாஜிபாஷாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஹாஜிபாஷா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய சின்னதுரை, சத்யமூர்த்தி ஆகியோரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நாட்டு துப்பாக்கியை கொடுத்த மணியும் கைது செய்யப்பட்டார்.
நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் கொடியேற்றம்!

Quick Share

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் 3-ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறது. இந்த விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்து கோயில் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

திருவண்ணாமகை அண்னாமலையார் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

அந்த வகையில் வருகிற 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படும்.இவ்வாறு கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.




You cannot copy content of this Website