அரசியல்

பெரியார் ஏன் இரண்டாம் திருமணம் செய்தார் தெரியுமா?

Quick Share

பெரியார் இறந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கலந்துவிட்டன. சமூகத்திற்காக அவர் எண்ணற்ற சேவைகள் செய்திருப்பினும், விவாதம் என்று வரும் பொழுது, இன்றளவிலும் பெரியார் மற்றும் 

உண்மையில் பெரியாருக்கும் மணியம்மைக்கும் இருந்த உறவு தான் என்ன? நிஜமாகவே மணியம்மை பெரியாரின் தத்து மகளா? வெறுமனே துணைக்காக மட்டுமா மூப்படைந்த வயதில் பெரியார் மணியம்மையை மணந்தார்?

பெரியார் மணியம்மையை ஏன் மணந்தார் என்பதற்கான உண்மையான காரணங்கள் பலமுறை, பலவிதமான ஊடகங்களில் எடுத்து உரைக்கப் பட்டிருந்தாலும், இன்றும் இந்த டிஜிட்டல் யுகத்தில்… உண்மை காரணத்தை மறைக்கும் அளவிற்கு, போலி காரணங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதற்காகவே, மீண்டும் ஒருமுறை, பெரியார் – மணியம்மை திருமணத்தின் உண்மையை காரணத்தை எடுத்துரைக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இன்றளவிலும் சமுக ஊடகங்களில், முக்கியமாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பெரியாரை எதிர்ப்பவர்கள் தங்களது வாதத்தை துவங்கும் போது, ‘பெண்ணுரிமைக்காக போராடியவர் செய்யும் காரியமா இது?’, ‘எப்படி ஒருவரால் தனது தத்து மகளை திருமணம் செய்துகொள்ள முடித்தது’, என தொடங்கி, இன்னும் சிலர் மிக கீழ்த்தரமாக கூட பதிவிடுவது உண்டு.

​கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பெரியார் – மணியம்மை திருமணம்:

ஜூலை 9ம் நாள் 1949ல் தனது 70 வயதில் பெரியார் தனது வீட்டில், தனக்கு உதவியாளராக, பராமரிப்பாளராக இருந்த 32 வயது மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். பெரியாரின் இந்த திருமணம் பொது மக்கள் மட்டுமின்றி, அவரது கட்சியில் இருந்தோர் இடையேயும் பல எதிர்மறை கருத்துகள் எழ காரணமானது. பெரியாரை தலைவராக ஏற்ற அண்ணாதுரை அவர்கள் கூட, பெரியாரின் இந்த செயலை ஏற்கமுடியா நிலையில் இருந்தார்.

பெரியாரின் நீதிக்கட்சியில் இருந்த கனகசபாபதி என்பவற்றின் மகள் தான் மணியம்மை. (நீதிக்கட்சி பின்னாளில் திராவிட கழகமாக மாறியது.) பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு திராவிட கழகத்தில் தன்னை இணைந்துக் கொண்டவர் மணியம்மை.

மணியம்மையின் 20களில் கனகசபாபதி மரணம் அடைந்தார். திருமணத்தில் ஈர்ப்பில்லாத மணியம்மை, இயக்கத்தில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட துவங்கினார். தனது செயற்பாடுகளால் பெரியாரின் நம்பகத்தன்மையை பெற்ற தொண்டர்களுள் ஒருவராக உருவானார் மணியம்மை.


வயது மூப்பு காரணமாக, ஓயாத சுற்றுப்பயணங்கள், பல்வேறு ஊர்களில் மேடை நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்த காரணங்களால் பெரியாருக்கு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அச்சமயத்தில் பெரியாரின் பராமரிப்பாளராக இருந்து பணிகள் செய்து வந்தார் மணியம்மை.

பிற்காலத்தில் பெரியாரின் அரசியல் வாரிசாகவும் உருவெடுத்தார். அச்சமயத்தில், பிறரை காட்டிலும் தனது சமூக பணிகளை பின்தொடரவும், சொத்துகளை சரியாக அறக்கட்டளை சமூகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த முறையான நபராக மணியம்மை இருப்பார் என நம்பினார் பெரியார்.

சட்டசிக்கல்களை எதிர்கொள்ள பெரியார் எடுத்த முடிவு தான், இரண்டாம் திருமணம்:

1949ல் மணியம்மையை பெரியார் திருமணம் செய்ததற்கு ஒரே காரணம், (அன்றைய சட்டத்திற்கு ஏற்ப) தனது லீகலான சட்ட வாரிசாக மணியம்மையை நியமிப்பதற்காக மட்டுமே. பெரியார் நினைத்ததன் படியே, அவரது மறைவிற்கு (1973) பிறகு, மணியம்மை அவர்கள் திராவிட கழகத்தின் தலைவராக 4 ஆண்டுகள் பொறுப்பு ஏற்று செயற்பட்டு வந்தார்.

‘நான் மணியம்மையை மணந்ததற்கு காரணம், சட்டப்படி என் சொத்திற்கு ஒரு சரியான வாரிசாக மணியம்மையை நியாப்பதற்காக மட்டுமே’ என பெரியாரே விளக்கம் அளித்திருந்தார். மேலும், வாரிசாக ஒருவரை நியமிக்க அன்றிருந்த சட்ட சிக்கல்களும் பெரியார் மணியம்மையை திருமணம் செய்து சட்ட பூர்வமான வாரிசாக நியமிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

​மணியம்மை, அன்னை மணியம்மை ஆனது எப்படி? எப்போது?

பெரியார் மறைவிற்கு பிறகு திராவிட கழகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. அப்போதும் மணியம்மை பெண்களுக்கான சமூக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டே இருந்தார். பிரபல தமிழ் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தன்னை விட மணியம்மை 25 வயது இளையவராக இருப்பினும், ‘அன்னை’ என அழைத்து பெருமை சேர்த்தார். அதன் பிறகு, மணியம்மை அவர்களை அன்னை மணியம்மை என பரவலாக அனைவரும் அழைக்க துவங்கினர்.

பெரியார் இரண்டாவதுதாக திருமணம் செய்து கொண்டார் என்றே ஒரே காரணத்தினால் மணியம்மை-க்கு முழுமையாக சேர வேண்டிய பெயரும் புகழும் இருட்டடிக்க பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஆங்கிலத்தில் பரவலாக கூறப்படும் ‘Underrated’ என்பதை இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும். தமிழக பெண் தலைவர்களுள் மணியம்மை 

அந்த திருமணம் பெரியார் – மணியம்மை இருவரின் சம்மதத்துடன் நடந்த நிகழ்வு. பெரியாரை திருமணம் செய்து கொண்ட போது மணியம்மை சிறு பிள்ளை அல்ல. 32 வயது நிரம்பிய மணியம்மைக்கு போதிய அறிவும், முதிர்ச்சியும், அரசியல் மற்றும் சமூக போராட்ட அனுபவமும் நிறைந்திருந்தார் என்பது யாராலும் மறுக்க முடியாது.

ஆக, பெரியார் – மணியம்மையின் திருமணத்தின் இந்த உண்மையான பின்னணி காரணம் அறிந்தும் சில அமைப்புகள், சில So Called தலைவர்கள் பெரியார் பெயரை இழிவுப்படுத்த மணியம்மை உடனான திருமணத்தை உபயோகிப்பது, அவர்களின் அரசியல் அறிவின்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.


மனைவியுடன் நேரில் ஆஜரான சீமான்:நடந்தது என்ன?

Quick Share

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது மனைவியுடன் நேரில் ஆஜரானார்.

பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த மாதம் 28ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார்.

அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், 7 முறை கர்ப்பமான நிலையில் கருச்சிதைவு செய்தார் என்றும் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சீமான் இன்று விசாரணைக்கு வருவார் என கூறப்பட்டது, இதன்படி இன்று தன்னுடைய மனைவியுடன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இவருடன் வழக்கறிஞர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் சீமான் இன்று மதியம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.

2 பெண்கள் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டேன்.

பெண் வன்கொடுமையை பேசுகிறவர்கள் ஆண்களுக்கு நிகழும் வன்கொடுமையையும் பேசுங்கள்.

வழக்கறிஞர் என்ற முறையில் என் மனைவி என்னுடன் வந்தார், அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள்: விஜயலட்சுமி

Quick Share

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள் என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். 

புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் 

சீமான் விவகாரம் தொடர்பாக பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீதுள்ள புகாரை நான் நிரூபிப்பேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் போட்டார்கள். பால சுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை சாட்டை துரைமுருகன் அனுப்பி வைத்தார். புகாரை வாபஸ் வாங்கிவிட்டு அக்காவுடன் போக சொன்னார்கள்.

சாட்டை துரைமுருகனிடன் பேசிய உரையாடல்களை பார்த்தால் சீமான் என்னுடன் பேசியது தெரியவரும். இதில் நான் பொய் சொல்வதாக சீமான் என்னை சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கு வராது” எனக் கூறினார்.

சீமான் – விஜயலட்சுமி வழக்கு விவகாரம்

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், அவர், என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சீமான் தன்னை போல 6 பேர் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறினார். இந்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் அவரது வழக்கறிஞரும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

மேலும், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது விஜயலட்சுமி எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார். 

உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான் அறிவிப்பு

Quick Share

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மன்னார்குடி வாலிபர் சிறுமியை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இது சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் வாலிபரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் முகப்பேர் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் வைத்து சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் அந்த வாலிபருடன் சண்டை போட்டு உள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அவர், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்று சொன்ன சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல, கசாப்புக்கடைக்காரர்கள்” என்றார்.

சனாதனத்தை எதிர்க்கிறேன்

தொடர்ந்து பேசிய சீமான், “மனித பிறப்பில் பாகுபாடு பார்ப்பவர்களை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில், சனாதனத்தை எதிர்க்கிறேன். டெங்கு நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.   

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!

Quick Share

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்பட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதினர்.

அதில் அவர்கள், “கடந்த 2022 ஆம் ஆண்டு ஜாகிர் அப்துல்லா வசந்த் யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் சமுதாயத்தில் ஒருவர் பிரிவினையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறார் என்றால் சம்பந்தப்பட்ட அரசு புகார் அளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்காமல், அந்த நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

அதனால், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், அரசும் காவல்துறையும் உதயநிதிக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.

இதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுங்க! உதயநிதியை வழிமறித்த பெண்கள்

Quick Share

தமிழக மாவட்டம் தென்காசியில் மகளிர் உரிமைத் தொகை கொடுங்க முதல்வர் மகனே என்று கையில் பதாகைகளை ஏந்தியபடி அமைச்சர் உதயநிதியை வழிமறித்து பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

பின்பு, யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உதயநிதியை வழிமறித்த பெண்கள்

இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அவர், தென்காசி அருகே வந்து கொண்டிருந்த போது 10 -வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் தலைமையில் 50க்கும் அதிகமான பெண்கள் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.

அப்போது, அவர்களை பார்த்து காரை நிறுத்திய அமைச்சரிடம், “முதல்வர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் முறையான விசாரணை எங்களுக்கு வரவில்லை. நாங்கள் அதற்கு தகுதியானவர்கள். எங்களுக்கும் உரிமைத் தொகை ரூ.1,000 தர வேண்டும்” என்று அங்கிருந்த பெண்கள் கூறினர்.

பின்பு, பெண்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய விசாரணை மேற்கொள்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்தார்.       

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஒரு சிக்கல்!

Quick Share

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை முடித்து செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அவரை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை எனவும் கூறியது.

மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை எனவும், செந்தில் பாலாஜியை கைது செய்த பின்பு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டது.

பின்பு, செந்திபாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி GROUP 4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம்! அண்ணாமலை கிண்டல்

Quick Share

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

உதயநிதிக்கு அண்ணாமலை சவால் 

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், பாஜக கட்சி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது,”என் மண், என் மக்கள் பாதயாத்திரை எழுச்சியாக இருக்கிறது. அரசு திட்டங்களில் திமுக அரசு கொள்கைகளை திணிக்கிறது. நீட் தேர்வு விடயத்தில் திமுக சிக்கலில் மாட்டியுள்ளது.

ஆளுநர் பதவி பற்றி பேசும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பதவியை துறந்துவிட்டு குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம். வரும் தேர்தலில் திமுகவையும், பாஜகவையும் மக்கள் தராசு தட்டில் வைத்து வாக்களிப்பார்கள்” என்றார்.

ரஜினி செய்தது தவறில்லை

மேலும் பேசிய அவர்,”உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது ஒன்றும் தவறில்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழகத்தில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்” என்றார்.

அண்ணாமலை கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்கிய முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு பெற்ற நிலையில், 2-வது கட்டமாக வருகிற 3 ஆம் திகதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.  

யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததற்கு பின்னணி காரணம்!

Quick Share

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சர்ச்சையை கிளப்பியது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கிருந்து உத்தரபிரதேசம் சென்றவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார், அப்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

தன்னை விட வயதில் சிறியவர் காலில் விழலாமா? எதற்காக ரஜினிகாந்த் இப்படி செய்தார்? என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.

பிரதமர் மோடி காலில் கூட ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில்லை, ரஜினிக்கும் யோகி குறித்து அப்படி தோன்றியிருக்கலாம்.

இல்லையென்றால் ரஜினிகாந்த் இப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே என விமர்சித்துள்ளார்.

“பற்றி எரியும் மணிப்பூர், பார்த்து சிரிக்கும் மோடி” – ராகுல்காந்தி கு...

Quick Share

மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியது குறித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- மணிப்பூர் தற்போது இரு மாநிலங்களாக பிரிந்து நிற்கிறது. மணிப்பூரில் கலவரம் ஏன் நடக்கிறது என்பது தான் விஷயம். அதற்கு மாறாக பிரதமர் கிண்டல் செய்திருக்கக் கூடாது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரும், மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள்.

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை மறந்தது போல் பிரதமர் மோடி பேசினார். மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக நான் கூறியதை திரித்துக்கூறுகிறார். மணிப்பூருக்கு ராணுவத்தை அனுப்பி இருக்க வேண்டும். இந்திய ராணுவத்தை மணிப்பூரில் அனுமதித்து இருந்தால் 2 நாளில் அமைதி கிடைத்திருக்கும். மணிப்பூர் விவகாரம் பற்றி மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசியதில் நகைச்சுவை தான் இருந்தது. 

மணிப்பூர் நிலவரம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தான் தற்போதைய சூழல். ராணுவம் மீது நம்பிக்கை இல்லாததால் மணிப்பூருக்கு அனுப்பாமல் உள்ளார் பிரதமர் மோடி. தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளனரா என்பது தெரியவில்லை. மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது இருந்த பிரதமர்கள், பா.ஜ.க.வின் வாஜ்பாய் மற்றும் மற்ற பிரதமர்களான தேவகவுடா உள்ளிட்டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததே கிடையாது. என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன். அதைத் தான் நாடாளுமன்றத்திலும் பேசினேன். 

பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும். பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திரமோடிக்கு தெரியவில்லை. நான் மீண்டும் கூறுகிறேன் மணிப்பூர் மாநிலத்தில், இந்தியாவின் அடிப்படை கருத்தியலை பா.ஜ.க. கொலை செய்துவிட்டது. மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை நிறுத்துவது தான் எங்களது லட்சியம். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்றார்.

சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான்

Quick Share

கிறித்துவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்தார்.

சீமான் கேள்வி 

மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் இல்லை, அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி விட்டனர் என சீமான் கூறியது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை பெற்ற நிலையில் ‘அநீதிக்கு எதிராக என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் போராடியிருக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பிய சீமான், நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு வாக்களிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

சாத்தானின் குழந்தைகள்

இந்நிலையில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள சீமான், ‘குர் ஆன் அநீதி செய்பவர்களை சாத்தான் என்று கூறுகிறது. ஆட்சியாளர்கள் அநீதி இழைப்பதால் அவர்கள் சாத்தான்கள், ஆகவே அவர்களை ஆதரிப்பவர்களும் சாத்தான்கள்.

குர் ஆன் அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை சாத்தனின் நண்பர்கள் என்கிறது. நான் அவர்களை சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன்.

அதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். நீங்கள் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? மதத்தை வைத்து உலகில் மனித கூட்டத்தை கணக்கிட்டதில்லை. ஆக மதத்தை விட, சாதியை விட மொழி தான் அடையாளம்.

இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழர்கள். பெரும்பான்மையான தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பை கழட்டி அடித்து விடுவேன். மதம் மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறாதது’ என பேசினார்.    

தமிழக முதலமைச்சர் பாவயாத்திரை செய்து பாவங்களை போக்க வேண்டும்! அண்ணாமலை தாக்கு

Quick Share

தமிழக முதலமைச்சர் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாத யாத்திரையை விமர்சித்து முதலமைச்சர் பேச்சு

இந்திய மாநிலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து பேசினார்.

அப்போது அவர்,”அமித் ஷா நேற்று தமிழகத்திற்கு வந்தார். அவர் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வரவில்லை. ஏதோ பாத யாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க நடத்தும் பாவ யாத்திரை” என்று அண்ணாமலையின் பாதயாத்திரையை விமர்சித்து பேசியிருந்தார்.

முதலமைச்சரை விமர்சித்து அண்ணாமலை ட்வீட்

இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்வீட்டில்,”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதலமைச்சர், தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் மு.க.ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என விமர்சித்து கூறியுள்ளார். 




You cannot copy content of this Website