அரசியல்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதியா?

Quick Share

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக போவதாக தகவல் பரவிய நிலையில், அவரே விளக்கம் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அப்போது விழாவில் பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே ஆதரவை பெற்றுள்ளன.

திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முதன்மையானது. நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான்.

அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். எனக்கு எவ்வளவு பொறுப்புகள் வந்தாலும் தனது மனதிற்கு மிக நெருக்கமான ஒரு பொறுப்பு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” என்றார்.

கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி மற்றும் 30 அணிகளை உருவாக்கும் விஜய்!

Quick Share

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது.

அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தனது கட்சியில் சேரும் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு: பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்!

Quick Share

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரவெல்லாம் தூங்க முடியவில்லை” – சீமான் மீது புகார் கொடுத்த பெண் வழக்...

Quick Share

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள்.

எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்? என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார். என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.

முன்னாள் முதலமைச்சரை கருணாநிதியை பற்றி அவதூறாக பாடியதால் கைது செய்துள்ளார்கள். இருக்கிற பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது.

எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் இப்போது பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி குறித்து தவறாக பேசி பாடல் பாடியதாக அவர் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் அமுதா புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமுதா கூறுகையில், “கருணாநிதி பற்றி கேவலமாக பேசி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் பாடியுள்ளார். தரக்குறைவாக பேசிய சீமான் மீது புகார் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கருணாநிதி ஆற்றிய தொண்டு யாராலும் ஈடு செய்ய முடியாது. அப்படிப்பட்ட தலைவரை சீமான் இவ்வாறு பேசுவது புண்படுத்துகிறது.

இரவில் தூங்க முடியவில்லை. ஏதோ பேசிவிட்டதாக கூறி சுப்பிரமணியசாமியை ஏர்போர்ட்டில் இறங்கவிடாமல் விரட்டியடித்தனர். அதேபோல சீமான் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவ்வாறு செய்யாததால் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

கைமாறிய பெரும் தொகை? – ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் இருவர் கைது!

Quick Share

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வழக்கறிஞரான ஹரிஹரன் தரப்பில் இருந்து கொலையாளிகளுக்கு பெரும் தொகை மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மலர்கொடி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மனைவி என்று தெரியவந்துள்ளது. எதற்காக, யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காலாவதியான வித்தைகள் வேலை செய்யுமா? பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

Quick Share

ஜூன் 25 -ம் திகதியை அரசியல் சாசன படுகொலை தினமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்தததை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 -ம் ஆண்டு ஜூன் 25 -ம் திகதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால், இந்த திகதியை அரசியல் சாசன படுகொலை தினமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

இந்த தினத்தில் அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தப்படும் என்று பாஜக அரசு கூறியுள்ளது.

இதனிடையே ராகுல்காந்தி உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசியல் சாசனத்தை மதிக்கவில்லை என்று பாஜக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தப்படியே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதோடு, இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்கும் போதும் கையில் சிறிய ரக அரசியல் சாசன புத்தகத்தை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் அந்த நாளை அரசியல் சாசன படுகொலை தினமாக பாஜக அறிவித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக பாஜக அரசை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அரசியல் சாசன படுகொலை தினம் தொடர்பான ட்வீட்டை குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் ஏக்ஸ் தளத்தில், “இன்று ஜூலை 12 ஆம் திகதி, ஜூன் 25 ஆம் திகதியை நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

இதுபோன்ற காலாவதியான வித்தைகள் உண்மையில் வேலை செய்யுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பாஜகவினரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

‘இந்தியன் 2’ மாதிரி 100 படம் எடுத்தாலும் ஊழல் ஒழியாது: நாம் தமிழர் கட்சியின...

Quick Share

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ’இந்தியன் 2’ படத்தை பார்த்த நிலையில் அவர் படம் பார்த்த பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ’இந்தியன் 2’ படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும், அப்போதுதான் இதே மாதிரி சிறப்பான படைப்புகள் தொடர்ந்து வெளிவரும். இந்த படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஊழல் நிறைந்த அழுக்கு சமூகமாக இருக்கும் சமூகத்தை பழுது பார்க்கும் ஒரு கலையாக பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ’இந்தியன் 2’ மாதிரி 100 படம் எடுத்தாலும், ஊழல் லஞ்சத்தை ஒழிக்க முடியாது. நாம் எல்லோரும் லஞ்சத்துக்கு எதிராக மாறினால் தான் இந்த சமூகம் மாறும். ஊழல் லஞ்சம் இருக்கும் வரை இந்த படத்திற்கான தேவை இருக்கும். நோய் இருக்கும் வரை மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், தாயின் கருவறை முதல் கோவில் கருவறை வரை லஞ்சம் நிறைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகன் கைது: முடிந்தால் என்னை கைது செய்யுங்க என சீமான் சவால்!

Quick Share

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டதற்கு சீமான் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவரது கைது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள். எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்?

என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார். என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.

முன்னாள் முதலமைச்சரை கருணாநிதியை பற்றி அவதூறாக பாடியதால் கைது செய்துள்ளார்கள். இருக்கிற பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது.

எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் இப்போது பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.

திமுக பேசினால் கருத்துரிமை, இதுவே எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா?” என்று காட்டமாக பேசியுள்ளார்.

வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவை ஆவேசமாக விம...

Quick Share

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக திமுக தலைமையிலான தமிழக அரசை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குநர் பா.ரஞ்சித்

அந்தவகையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். 

அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங்கிற்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்? 

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.

திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். 

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? 

உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 

கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.   

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை – இ.பி.எஸ். கண்டனம்!

Quick Share

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருற்றேன். ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?. கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?. காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்குச் சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு எனது கடும் கண்டனம். 

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி அளிக்கிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Quick Share

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தமிழக்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் தலைநகரில் படுகொலை செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மாணவிகளுக்கு வைர காதணி கொடுத்து ஊக்குவித்த தவெக தலைவர் விஜய்..!

Quick Share

தவெக தலைவர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மூன்று மாணவிகளுக்கு வைர காதணி கொடுத்து வாழ்த்தினார் விஜய்.

கடந்த ஆண்டு கல்வி விருது விழா வழங்கும் நிகழ்வில் விஜய் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அதுபோல, இந்த வருடமும் அதிக மதிப்பெண்கள் எடுத்த சென்னை, கொளத்தூர் பிரதிக்‌ஷா, திருப்பூர், பல்லடம் மாணவி மகாலக்‌ஷ்மி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் லக்‌ஷ்மி ஆகிய மூன்று பேருக்கு வைர காதணிகள் கொடுத்து வாழ்த்தினார் விஜய்.

நடிகர் விஜய்

கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த வருடம் இரண்டு கட்டங்களாக நிகழ்வு நடக்கிறது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார் விஜய். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய்

தமிழ் தாய் வாழ்த்து முடிந்து நிகழ்வு தொடங்கியதும் விஜய் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் நல்லது கெட்டதை பகுத்தாய்ந்து வருங்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர், தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பழக்கம் பற்றி குற்றம் சாட்டியவர் மாணவர்கள் அந்த வழியில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.




You cannot copy content of this Website