நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். வடிவேலுவிற்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த பட பாணியில் விஜய்யை வைத்து புலி என்ற படத்தை இயக்கியிருந்தார் சிம்புதேவன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது இவர் யோகி பாபுவை வைத்து போட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
போட் பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிம்புதேவன் பேசும்போது, புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்தேன், ஆனால் அந்த சமயத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் வெளியானதும் கடும் விமர்சனங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.
இம்சை அரசன் படம் போலவே அனைவருக்குமான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவில் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக சிம்புதேவன் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இப்படத்தை நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் என்னவென்றால் இப்பாடலை தளபதி விஜய் தான் வெளியிடவுள்ளாராம். வருகிற 24ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா தான் இதற்கான கான்சப்ட் செய்துள்ளார்.
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இப்பாடலுக்கு choreography செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டாப் ஸ்டார் பிரஷாந்துக்காக விஜய், விஜய் சேதுபதி, பிரபு தேவா மற்றும் அனிருத் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் மூலம் நம்மை வியந்து பார்க்க வைத்தார். ஆர்.ஆர்.ஆர் படம் உலகளவில் பிரபலமாகி அப்படத்தின் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. அப்போது LA சென்றிருந்த இயக்குனர் ராஜமௌலி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அங்கு சந்தித்து பேசினார்.
இருவரும் உரையாடிய வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேசியுள்ளார்.
இதில் “திரையுலகில் இயக்குனர் ராஜமௌலியால் எதை வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செய்ய முடியும். அதற்கான மரியாதை அவரிடம் உண்டு”. என கூறியுள்ளார்.
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ’Modern Masters : ராஜமௌலி’ என்கிற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், ராம் சரண் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.
அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். அவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். ராசு மதுரவன் கடந்த 2013ல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் மனைவி பவானி வறுமையில் தத்தளிப்பதாக சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.
ராசு மதுரவன் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்காத சிவகார்த்திகேயன் அவரது மனைவி பேட்டியை பார்த்துவிட்டு உடனே உதவி செய்து இருக்கிறார். ராசு மதுரவன் மகள்கள் இருவரது ஸ்கூல் பீஸ் 97 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தி இருக்கிறார்.
இதற்காக அவரது மனைவி நெகிழ்ச்சியாக நன்றி கூறி இருக்கிறார். அவர் இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்டுகொள்ளாத நிலையில் சிவகார்த்திகேயன் செய்த உதவி மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பல ரிஸ்க் ஆன காட்சிகளை படக்குழு எடுத்துமுடித்து இருக்கிறது. அங்கு schedule முடிந்தபிறகு படக்குழு மொத்தமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அஜித் மற்றும் மற்ற நடிகர்கள் உடன் அர்ஜுன் செல்பி எடுத்து இருக்கும் புது போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆரவ் தான் இந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா தயாரித்திருந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதே போல் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்டோரையும் பார்க்க முடிந்தது.
மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் சற்று குறைய துவங்கியுள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இந்தியன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 9 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் இந்தியன் 2 வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் பிரஷாந்த். இவரை ரசிகர்கள் டாப் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்தகன், GOAT என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரஷாந்த், GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் பிரஷாந்த். இவரை ரசிகர்கள் டாப் ஸ்டார் என கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்தகன், GOAT என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரஷாந்த், GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தில் பிரமாண்டமாக இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நடிகர் விஜய் வீடு வாங்கியுள்ள விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் மட்டுமின்றி திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் துல்கர் சல்மான், ஆர்யா, சாய் பல்லவி, நிக்கி கல்ராணி மற்றும் ரம்பா உள்ளிட்டோரும் அங்கே வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் பிரபல நடிகை ரம்பாவையும், அவர் குடும்பத்தினரையும் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களுடைய சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் கேட்டு வந்தனர்.
விஜய் வாங்கியுள்ள அதே இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு போர்ஷனை நடிகை ரம்பா வாங்கி குடி வந்திருக்கிறார். அப்போது தான் அவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதுதான் அந்த போட்டோவின் பின்னணி என கூறப்படுகிறது.
அப்படி சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பிரியா ஜெர்சன். கேரளாவை சேர்ந்த அவர் சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டிருந்தார். டைட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருந்தது.
தற்போது பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கேரளவை சேர்ந்த சார்லி ஜாய் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.
சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜூலை 17ம் தேதி அவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்ட பிறகு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.
கண்பார்வை பறிபோய் எதுவுமே பார்க்க முடியாத நிலையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் உதவி செய்தார்களாம்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் டாக்டரிடம் சென்று சோதித்த போது அவருக்கு corneal damage ஏற்பட்டு இருக்கிறது என சொல்லி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுவிட்டார்கள்.
தற்போது மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போது கண்பார்வை சரியாகி வருகிறது என ஜாஸ்மின் பாஸின் பதிவிட்டு இருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், கொலை வழக்கில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் 11 பேரைக் கைது செய்தனர் போலீஸார். பின்பு சில நாட்கள் கழித்து போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஓடியதாகக் கூறி திருவேங்கடம் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் காவல் துறையினர். இதையடுத்து இதுவரை கைது செய்த 16 பேரரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே பா.ரஞ்சித்தின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அங்கிருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையவுள்ளது. இதில் பா.ரஞ்சித்துடன், மன்சூர் அலிகான், நடிகர் தினேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
பேரணியை நிறைவு செய்த பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது, “பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் பி-டீம் என்று சொல்கின்றனர். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தின் அடிப்படையில் ஒரு நாள் என் மக்கள் என அனைவரும் ஒன்று திரள்வார்கள். சமூகத்தில் நோய் இருக்கிறது என்று சொன்னால் இவன் நோயைப் பரப்புகிறான் என்று கூறுகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமாக உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாவிட்டால் காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம். நம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பா.ஜ.கவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் நாங்கள்” எனப் பேசினார்.
தமிழ் சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகி கொண்டிருப்பதால் தொடர்ந்து மற்ற நடிகைகள் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமாகி வருகிறது. இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வந்து பல வருடங்கள் ஆகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். முக்கியமாக வாரிசு நடிகைகள் அவர்களது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்று கூற வேண்டும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் இன்னும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சாக்ஷி அகர்வால் இப்போது வரை கதாநாயகியாக மட்டும் வாய்ப்பு பெறாமலே இருந்து வருகிறார்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார் ஆனால் அவருக்கு திரை துறையின் மீது அப்போதிலிருந்தே ஆர்வம் இருந்து வந்தது. இந்த நிலையில் விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதனை தொடர்ந்து மாடலிங் துறைக்குள் நுழைந்தார் சாக்ஷி அகர்வால் இந்த நிலையில் 2013ல் முதன்முதலாக இயக்குனர் அட்லீ இயக்கி ராஜா ராணி திரைப்படம் திரைக்கு வந்தது. அட்லீயின் முதல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னட சினிமா, மலையாள சினிமாவிலும் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
அதனை தொடர்ந்து திருட்டு விசிடி, அரண்மனை 3 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நடித்தார் சாக்ஷி அகர்வால். ஆனால் எல்லாவற்றிலுமே பிறகு துணை கதாபாத்திரம்தான் கிடைத்தது. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார் சாக்ஷி அகர்வால்.
இதுவரை திரைப்படங்களில் நடித்ததை விட அதிகமான வரவேற்பு சமூக வலைதளங்கள் மூலமாக சாக்ஷி அகர்வாலுக்கு கிடைத்தது இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு கதாபாத்திரம் இவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. டு பீஸ் உடையில் கடற்கரை ஓரத்தில் நின்று இவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் இப்போது பேசப்பட்டு வருகின்றன.