சினிமா

“திருமணமே வேண்டாம்” – விஜய் டிவி நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன ...

Quick Share

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி. அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது பவித்ரா ஜனனிக்கு 32 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் சேடுத்க்கொள்ளாமல் தான் இருக்கிறார். வீட்டில் அம்மா திருமணம் பற்றி பேசினால் முடியவே முடியாது என கூறி வருகிறாராம். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற மைண்ட்செட் எனக்கு இல்லை.

“திருமணம் தான் எல்லாத்துக்கும் தீர்வு என சொல்லாதீங்க என வீட்டிலும் சொல்வேன். ஏன் திருமணம் செய்யாமல் உலகத்தில் யாருமே வாழ்வது இல்லையா” என பவித்ரா ஜனனி பேசி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த சிக்கல்!

Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் பண்ணும் படம் தான் அமரன். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படுகிறது.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க வருகிறார். ஆரம்பத்தில் இப்படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் ஆகஸ்ட் 15 வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஏனென்றால் சுதந்திர தினமாக இருப்பதால் ராணுவ வீரரின் படம் வெளியானால் சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால் இப்போது விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிட உள்ளனர். ஏனென்றால் சிவகார்த்திகேயன் படங்கள் எப்போதுமே பண்டிகையை குறி வைத்து தான் வெளியாகும். ஆகையால் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் நல்ல வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதிலும் பிரச்சனை இருக்கிறது. அதாவது அமரன் ராணுவ வீரர் பற்றிய படம் என்பதால் முந்தைய காலகட்டத்தில் வெளியான படங்களின் சாயலில் டீசர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகையால் வெளிநாடுகளில் இந்த படத்தை வாங்க யோசனை செய்கிறார்களாம். பொதுவாகவே விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஓவர்சீஸ் ரைட்ஸ் அதிகம் கிடைக்கும். ஆனால் இப்போது அமரன் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒவ்வொரு படம் ரிலீஸ் செய்யும் போதும் சிவகார்த்திகேயன் பிரச்சனையை சந்தித்து வருகிறார். மேலும் டாக்டர், டான் படங்களுக்கு பிறகு 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்த்தார். இப்போது ஓவர்சீஸ் பிரச்சனையால் எதிர்பார்த்த வசூலை பெறுவது கஷ்டம் தான்.

“விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” – சமுத்திரக்கனி திட்டவட்டம்!

Quick Share

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம். 

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

நடிகர் மணிவண்ணனின் மகனும் நடிகரா?

Quick Share

நடிகர் மணிவண்ணன் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.

நடிகர் சத்யராஜும், மணிவண்ணனும் கல்லூரி நண்பர்கள். சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

1983ஆம் ஆண்டு வெளியான ஜோதி என்ற படம்தான் மணிவண்ணன் இயக்கிய முதல் திரைப்படம். இவர் இயக்கிய அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நடிகர் மணிவண்ணனுக்கு மனைவி பெயர் செங்கமலம். இவருக்கு ரகுவரண்ணன் மற்றும் ஜோதி என இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

மணிவண்ணனின் மகனான ரகுவரண்ணன் தமிழில் வெளிவந்த கோரிப்பாளையம், தொடக்கம், நகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மணிவண்ணன் தனது மகள் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சிவகார்த்திகேயன்!

Quick Share

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23வது படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிய சிவா.

தற்போது எஸ்கே 23 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அமரன் படப்பிடிப்பில் இணையவுள்ளார். 30 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின் மீண்டும் எஸ்கே 23ல் இணைவார் என கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒருதலை காதல் குறித்து பேசியிருந்தார்.

இதில் “கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆனால் நான் காதலித்து பெண் வேறொரு நபருடன் கமிட் ஆகிவிட்டார். அதனால் அந்த காதல் அப்படியே போய்விட்டது”.

“நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு, அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறொரு நபர் ஒருவர் வந்திருந்தார். ஆனா கூட வந்திருந்தது அந்த பெண் காதலித்த பண்ண பையன் இல்ல” என கலகலப்பாக பேசியிருந்தார்.

கமலுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

Quick Share

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளருடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவர் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார். இதனால் நடிகர் கமலுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்துகொண்டுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ்.

இவர் நடித்த ஒரு படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்போது நீ என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் நாம் இறந்துவிடுவேன் என கூறி நடிகை சாந்தியை திருமணம் செய்துகொண்டுள்ளார் வில்லியம்ஸ். அப்போது நடிகை சாந்திக்கு 19 வயது, வில்லியம்ஸுக்கு 46 வயது.

திருமணத்திற்கு பின் கணவர் வில்லியம்ஸ் இடம் இருந்து பல துன்புறுத்தல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார். மேலும் கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய விஷயங்கள் குறித்தும் பேசினார்.

ஆரம்பகால கட்டத்தில் கமல் ஹாசனிடம் தான் நடனம் கற்றுக்கொண்டாராம் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இதன்பின் இருவரும் இணைந்து படங்களில் நடனமாடியுள்ளனர். ஆகையால் தனது நடன குருவாக கமல் ஹாசனை பார்க்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

மேலும் கமல் என்றாலே சாந்தி வில்லியம்ஸுக்கு எப்போதுமே பயம் தானாம். தன்னை எங்கு பார்த்தாலும், ஏய் என்னடி எப்படி இருக்க என்று தான் கமல் கேட்பாராம். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் பாபநாசம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சாந்தி வில்லியம்ஸ் நடித்துள்ளார்.

அப்போது அந்த படப்பிடிப்பில் “வணக்கம் மாஸ்டர் ஜி என்று பயந்தபடியே சொன்னேன். அதற்கு கமல்ஹாசன் நீ என்னடி இப்பவும் பயப்படுற.. உனக்கும் வயசு ஆயிடுச்சு, எனக்கும் வயசாயிடுச்சு ஏன் இன்னும் என்னை பார்த்து பயப்படுற என்று கிண்டல் செய்தாராம். அதோடு நீ இந்த மாஸ்டர் ஜினு கூப்பிடுறத விட மாட்டியான்னு” என்றும் கேட்டுள்ளார் கமல். இந்த விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் மாயா!

Quick Share

இன்று சின்னத்திரையில் அதிகளவு ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவாக திகழக்கூடிய பிக் பாஸ் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை 7 ஆண்டுகள் நடந்து ஏழு சீசன்களாக நடந்துள்ளது என்று கூறப்படும் வேளையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலகநாயகன் கமலஹாசன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்கள் ஏதோ ஒரு வகையில் திரையில் பிரபலமாக கூடிய சூழ்நிலை நிலவுவதால் இதை ஒரு பிளாட்பார்ம் ஆக திரையில் ஜொலிக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள் பார்க்கிறார்கள்.

இந்த பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்ட மாயா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் பற்றி பல்வேறு வகையான நெகடிவ் விமர்சனங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது எழுந்துள்ளது.

எனினும் அவற்றை எல்லாம் துச்சமாக மதித்த இவர் தற்போது ஹீரோயினியாக மாறி இருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே கமலுடன் விக்ரம் படத்தில் விஜயுடன் லியோ படத்திலும் நடித்திருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் பிக் பாஸ் மாயா விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். மேலும் பிக் பாஸ் 7-ல் கலந்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

அது மட்டுமல்லாமல் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வகையான கனவுகளை ஏற்படுத்தியிருக்கும் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் மாயா நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய உள்ள மாயா தெலுங்கில் உருவாகி வரும் பைட்டர் ராஜா எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க இவரோடு இணைந்து ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த படத்தை கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்குவதோடு பாடத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளி வந்து மாயாவின் ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிட்டது.

100 கோடியை தாண்டி ஹிட் அடித்த 5 மலையாள படங்கள்!

Quick Share

சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை செய்து வந்த நிலையில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படங்கள் அசால்ட்டாக 100 கோடியை தாண்டி கெத்து காட்டி வருகிறது. அவ்வாறு உலக அளவில் 100 கோடியை தாண்டி சாதனை படைத்த 5 மலையாள திரைப்படங்களை காணலாம்.

2018 Everyone is a Hero: பேரிடர் காலங்களில் மனிதனுக்கு இயல்பாக தோன்றும் மனிதத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தது இத்திரைப்படம். மலையாள திரைப்படங்களிலேயே 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்தது.

பெருமழையானது ஜாதி, மதத்தை தூளாக்கி வாழ்வியல் சூழலை புரட்டிப்போட்டு, பணக்காரனை மண்டியிட செய்து, அவனது ஆணவத்தை கட்டறுக்கும் கதையை வெகு இயல்பாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர் ஜுட் ஆன்டனி ஜோசப்.

லூசிஃபர்: நடிகர் பிருத்திவிராஜ் இப்படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமானார். சூடு பிடிக்கும் அரசியல் களத்தில் அரசியல் சாணக்கியனாக, பல்வேறு சூழ்ச்சிகளை அவிழ்க்கும் ஸ்டீபன் நெடும்பள்ளியாக கலக்கினார் மோகன்லால். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் 128 கோடியை தாண்டியது. 

புலிமுருகன்: 2016 ல் மோகன்லால், கமலினி முகர்ஜி நடிப்பில் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே புலி முருகன். மலைவாழ் மக்களின் எதார்த்த சூழலை காட்சிப்படுத்தி மனிதர்களை விட மிருகங்களை கையாள்வது எளிது என்பதை நிரூபித்து வசூலில் 144 கோடி கடந்து சாதனை செய்தது இந்த புலி முருகன். 

மலையாள சினிமாவை தெறிக்க விட்ட மஞ்சுமல் பாய்ஸ் மஞ்சுமல் பாய்ஸ்: 20 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சிதம்பரம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இன்று வரை 173 கோடியை தாண்டி சாதனை செய்து வரும் இத்திரைப்படம் 200 கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

பிரேமலு: காதலை முன்னிறுத்தும் இயக்குனர் க்ரிஷின் பிரேமலு திரைப்படத்தில் மமிதா பைஜூ மற்றும் நஸ்லேன் நடித்திருந்தனர். 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் வசூலில் 100 கோடியை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

கமல் தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்!

Quick Share

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, ‘தி ஐ’ (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

இதைத் தவிர்த்து பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் முதலில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் அதிவி சேஷ் நடிக்கும் டகோயிட் (Dacoit) படத்தில் நடிக்கிறார். ஷேன்யில் டியோ இயக்கும் இப்படத்தை சுப்ரியா யர்லகடா தயாரிக்க பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வேலு நாச்சியார் பையோ பிக் உருவாகுவதாகவும் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது . அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. 

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பற்றிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் இசையமைக்க கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் இதில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டருக்கு முன்பே டிவியில் வரும் படம்: கொந்தளித்த பிரபல நடிகர்!

Quick Share

பொதுவாக அனைத்து படங்களும் தியேட்டரில் முதலில் ரிலீஸ் ஆகி, அதன் பின் ஓடிடியில் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் டிவியில் ஒளிபரப்பாகும். கொரோனா காலத்தில் தான் நேரடி ஓடிடி ரிலீஸ், நேரடி டிவி ரிலீஸ் என சில படங்கள் மட்டும் வெளியாகின. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டபோதிலும் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிவியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் படம் வர இருக்கிறது.

பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்து இருக்கும் நடிகர் வசந்த் ரவி தற்போது இது பற்றி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடித்து இருக்கின்றனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் போன்ற பெரிய நிறுவனமே இப்படி செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது என வசந்த் ரவி கூறி இருக்கிறார்.

இந்த படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். படக்குழுவில் யாருக்குமே தெரியப்படுத்தவில்லை.

“தயாரிப்பாளரிடம் படம் சென்ற பிறகு கமர்சியல் விஷயங்களில் கலைஞர்கள் தலையிட முடியாது தான். ஆனால் இந்த விஷயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். மீடியாவை பார்த்து தான் தெரிந்துகொண்டோம்” என வசந்த் ரவி கோபமாக பேசி இருக்கிறார்.

ரஜினி, கமல் என முக்கிய நடிகர் படங்களை நிராகரித்த நடிகை: யார் தெரியுமா?

Quick Share

ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகின்றனர். அவர்கள் நடிக்கும் படத்தில் ஒரு சின்ன ரோல் கிடைத்தாலும் போதும் என இருப்பவர்கள் பலர். ஆனால் அந்த ஆசையே பலரும் நடப்பதில்லை.

ரஜினி, கமல் என எந்த ஹீரோ அழைத்தாலும் நடிக்க வரமாட்டேன் என கண்டிப்பாக ஒரு நடிகை கூறி இருக்கிறார்.

நடிகை வைஜெயந்தி மாலா தான் அது. மாப்பிள்ளை என்ற படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என அணுகி இருக்கின்றனர்.

ஆனால் முடியாது என மறுத்துவிட்டாராம் அவர். அதன் பின் கமல் விஸ்வரூபம் 2 படத்தில் நடிக்க அவரது வீட்டிற்கே சென்று பேசி இருக்கிறார். ஆனால் முடியவே முடியாது என கூறிவிட்டாராம்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவரை நடிக்க வைக்க முடியாது என ரஜினியே என்னை பற்றி கூறுவார், அந்த அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருப்பவர் நான் என வைஜெயந்தி மாலா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் புரொஜக்ட்.

Quick Share

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் மியூசிக் ஆல்பம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பணிபுரிய இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த ஆல்பத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சற்றுமுன் வெளியாகியுள்ள மியூசிக் ஆல்பத்தின் போஸ்டரில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் மியூசிக் ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் உருவாக்குவதாகவும், லோகேஷ் இந்த ஆல்பத்தில் முக்கீய பணி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

’இனிமேல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் பாடலை கமல்ஹாசன் எழுத, ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்து உருவாக்கும் நிலையில் துவார்கேஷ் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புவன் கவுடா ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த ஆல்பம் உருவாகி வருகிறது. பல்லவி சிங் காஸ்ட்யூமில் செளந்தர் நல்லசாமியின் கலை இயக்கத்தில் ஸ்ரீராம் ஐயங்காரின் புரடொக்சன்ஸ் டிசைனில் இந்த பாடல் உருவாகி வருகிறது.




You cannot copy content of this Website