சினிமா

விஜய் ஆண்டனியின் மகளை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்!

Quick Share

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பதினாறு வயதே நிரம்பிய மீரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் மீராவின் இறுதி அஞ்சலிக்கு வந்த பலர் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பல அறிவுரைகள் கூறியிருந்தார்கள். இந்நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீராவை பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அதுவும் பாத்திமா ஆரம்பத்தில் தொகுப்பாளராக சன் டிவியில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது என்னையும் பேட்டி எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி, பாத்திமா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பொதுவாக சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் போன்றவர்களுக்கு இரண்டு மகள்கள் தான்.

அதேபோல் விஜய் ஆண்டனிக்கும் இரண்டு மகள்கள். ஆனால் மீரா என்பது சுத்த தமிழ் பெயர். ஆனால் விஜய் ஆண்டனி கிறிஸ்டின் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி தான் பெயர் வைப்பார்கள். ஆனால் அவரது மகளுக்கு ஏன் மீரா என்று பெயர் வைத்தார் என தெரியவில்லை. மேலும் கடந்த ஒரு வருடங்கள் ஆகவே மீரா மன உளைச்சலில் இருந்ததால் அவரது வீட்டில் அருகில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்திருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் தூங்க சென்றிருக்கிறார். தற்கொலை என்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து போகும் விஷயம்தான். அதை நாம் கடந்து விட்டால் அதன் பிறகு வெற்றி தான். ஆனால் மீராவால் அதை எதிர்கொள்ள முடியவில்லை என பயில்வான் கூறியிருக்கிறார்.

தற்கொலை செய்யும் அளவிற்கு இந்த வயதில் மீராவுக்கு என்ன மன அழுத்தம் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்று கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தான் மிகப்பெரிய விபத்திலிருந்து விஜய் ஆண்டனி மீண்டும் வந்தார். இப்போது அவரது மகள் இழப்பு அவருக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மகளும் இதே முடிவை எடுத்துக் கொண்டிருப்பதால் ஜெனிடிக் பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பயில்வான் எழுப்பி இருக்கிறார்.

பொறி பறக்கும் லியோ படத்தின் புது போஸ்டர்!

Quick Share

விஜய் நடித்து இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் படத்தின் டீஸர் ட்ரைலர் உள்ளிட்டவை எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ரசிகர்களுக்காக ஒரு புது போஸ்ட்டரை இன்று மாலை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

சரியாக 6 மணிக்கு லியோ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

தீப்பொறி பறக்கும் அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விபரம்!

Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சி 7ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

ரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். இதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல ரிவி பிக்பாஸ் சீசன் 7ன் தொடக்க தேதியை அறிவித்து ப்ரொமோ வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிரபல ரிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.பிக் பாஸ் 7 தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப தேதியை ஆகஸ்ட் 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த்ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சீசனின் பரிசுத்தொகையினை பிரபல ரிவி இன்றும் அறிவிக்கப்படவில்லை… ஆனாலும் சுமார் 60 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய நடிகை எமி ஜாக்சன்…

Quick Share

மதராசபட்டினம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பெரிய அளவில் பாப்புலர் ஆகி, இந்தியாவில் பல மொழி படங்களில் நடித்தார்.

தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எமி ஜாக்சன் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அவர் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அவர் பிரபல நடிகர் Cillian Murphy போன்றே இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தாராளமாக கவர்ச்சியை காட்டினாலும் ..வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்ட நடிகைகள்!

Quick Share

ஆரம்பத்தில் பவ்வியமாக நடிக்க வந்த பல நடிகைகள் போகப்போக வாய்ப்புக்காக கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து வந்திருக்கிறார்கள். இது எல்லா நடிகைகளுக்கும் கைகொடுக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இருக்காது. இதில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இன்னும் சில நடிகைகளின் கேரியர் மொத்தமாக முடிந்து விடும் நிலைமைக்கு காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

மோனிகா: இவர் நடிகை மோனிகா என்ற சொல்வதை விட குழந்தை நட்சத்திர ஆர்டிஸ்ட் என்று சொன்னால் தான் பலருக்கும் இவரை தெரியும். அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திர கேரக்டரில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்பு எதிர்பார்த்த மார்க்கெட் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவருடைய கவர்ச்சியை ஆயுதமாக காட்டி பட வாய்ப்பு பெற்று விடலாம் என்று ஒரு யுத்தியை பயன்படுத்தினார். அதன் மூலம் சிலந்தி என்ற படத்தில் கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டி நடித்தார். அப்படி இருந்தும் இவருக்கு சொல்லும் படியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

கஸ்தூரி: ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர் தற்போது சமூகப் பிரச்சினைகளுக்கு மிகவும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். அப்படி இருந்தும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது சில பாடலுக்கு கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் இவருக்கு செட்டாகாத அளவிற்கு வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

மஞ்சுளா: அந்தக் காலத்தில் கிளாமர் பாடலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த நடிகையே மஞ்சுளா தான் என்று சொல்லலாம். அந்த வகையில் நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன் இன்னும் போன்ற பல படங்களில் கவர்ச்சியை தாராளமாக காட்டி ரசிகர்கள் மற்றும் நடிகர்களின் கவனத்தை திருப்பியவர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும். அதனாலேயே இவருக்கு பல பட வாய்ப்புகள் இவரை தேடிக் கொண்டு வந்தது. இதனால் எக்கச்சக்கமான பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டார்.

அமலா பால்: இவர் நடித்த முதல் படமே மிக மோசமான கேரக்டரை வைத்து பார்க்கவே கண் கூசும் காட்சிகளில் தான் சிந்து சமவெளி என்கிற படத்தில் நடித்தார். அதன் மூலம் டாப் நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. அடுத்து கொஞ்ச நாளிலேயே திருமண வாழ்க்கைக்கு போன இவரால் சினிமாவை விட்டு இருக்க முடியவில்லை. அதனால் கல்யாண வாழ்க்கையும் வேண்டாம், புருசனும் வேண்டாம் என்று இவருக்கான வாழ்க்கையை தேடி கொண்டார். அதன் பின் பல சர்ச்சை கூறிய படங்களில் ஆடையே இல்லாமலும்,லிப் லாக் காட்சிகளிலும் நடித்து இவருடைய கேரியரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார்.

விந்தியா: ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக சங்கமம் படத்தில் பவ்வியமாக நடித்துவிட்டு போகப் போக காசுக்காகவும், வாய்ப்புக்காகவும் இவருடைய ஆடையை குறைத்துக் கொண்டு கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்தார். அப்படி இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதனால் சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கி மேடைப் பேச்சுகளில் விவாதத்தை வைத்துக்கொண்டு வருகிறார். ஆக மொத்தத்தில் இந்த நடிகைகள் அனைவரும் கவர்ச்சியை காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்று சினிமாவிற்கு குட் பாய் சொன்னவர்கள்.

அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி…கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள்!வைரல் புகைப்படம்...

Quick Share

தொழிலதிபரான அம்பானியின் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி 

பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு மும்பையில் ‘அன்டிலியா இல்லம்’ என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான வீடு உள்ளது. 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் நீச்சல் குளம் முதல் ஹெலிகாப்டர் வரை பல ஆடம்பர வசதிகள் உள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர். 

பிரபலங்கள் 

அதில் “ஷாரூக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமமாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா, உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் அட்லி – ப்ரியா, விக்னேஷ் சிவன் – நயன்தாரா உள்ளிட்டவர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகள் அணிந்து வந்திருந்தனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைகை புயல் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Quick Share

நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவையாளராக இருந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு.

கோலிவுட்டில் இதுவரையில் வடிவேல் அளவிற்கு நகைச்சுவை செய்வதற்கு யாரும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே வடிவேலு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவரது மகள் கார்த்திகாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இத்தனை ஆண்டுகால பயணத்தில் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று தெரிவிக்கின்றனர்.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இது தான். 

திர்ஷாவிற்கு மலையாள தயாரிப்பாளருடம் திருமணம்! விரைவில் டும் டும் டும்…

Quick Share

பிரபல தயாரிப்பாளரை நடிகை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணம்

திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை இவர் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

முன்னதாக, தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.      

மனைவி பேச்சுக்கு அடிபணிந்து போகும் சூர்யா!

Quick Share

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு சூர்யாவுக்கு நிக்க கூட நேரம் இல்லாத நிலையில் படங்களில் புக் ஆகி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதாவது சூர்யாவை குடும்பத்துடன் பிரித்து தனது சொந்த ஊரான மும்பைக்கு ஜோதிகா அழைத்து சென்று விட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக மற்றும் தொழில் நிமித்தமாக தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜோதிகா மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் தான் நடித்த வருகிறார் என்றால் இப்போது சூர்யாவும் பாலிவுட் இயக்குனர் உடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டது என கூறப்படுகிறது.

மகாபாரத கதையில் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்படுகிறது. மேலும் பான் இந்திய படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் மட்டும் நிச்சயம் ஹிட் ஆகிவிட்டால் பான் இந்தியா ஸ்டாராக சூர்யா மாறிவிடுவார். அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் கதாநாயகனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை ஜோதிகா தன் பக்கம் இழுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இயக்குனரின் அறிமுகமும் ஜோதிகாவால் தான் கிடைத்திருக்கிறதாம். ஆகையால் முழுசாக மும்பை வாசியாகவே சூர்யா மாறிவிடுவாரா என்ற அச்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வித்தியாசமான மற்றும் நல்ல கதைகளை சூர்யா இப்போது தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் பேச்சால் தடம் மாறி பாலிவுட் பக்கம் மொத்தமாக போய்விடுவாரோ என்ற எண்ணம் தான் இப்போது சூர்யா ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்- கொண்டாட்டத்தில் நயன்..வைரல் வீடியோ !

Quick Share

விக்கி பிறந்தநாள்

நடிகை நயன்தாரா தனது காதல் கணவரின் பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடியுள்ளார். 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட வெளியிட்டு இருந்தார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் என பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கொண்டாட்டத்தில் நயன்

கேக் வெட்டி தனது கணவருக்கு நயன்தாரா முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்த பாடல் பாடி மகிழ்ந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..

ரூ.900 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’!படக்குழு கொண்டாட்டம்..

Quick Share

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி ‘ஜவான்’ திரைப்படம், வெளியான 12 நாட்களில் ரூ.883.68 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் – வெளிநாட்டு ஹெல்மெட் பயன்படுத்தியதாக ...

Quick Share

பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் டிடிஎப் வாசன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிடிஎப் வாசனின் நண்பர் அஜீஸ் இந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அஜீஸ் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை உரிய அனுமதி பெறாமல் எவ்வாறு கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத இந்த ஹெல்மெட்டின் விலை ரூ.1.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அனுமதி சான்று பெறாத காரணத்தினால் அந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த முடியாது.




You cannot copy content of this Website