சினிமா

சன் டிவிக்கு சென்ற வெங்கடேஷ் பட்.. குக் வித் கோமாளி பற்றி கோபமாக போட்ட பதிவு

Quick Share

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5ம் சீசன் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. முந்தைய சீசன்களில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் இதில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவராக வந்திருக்கிறார். மேலும் தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்டு இருப்பதால் புது செட் உட்பட பல விஷயங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். அதன் ப்ரோமோ இன்று இரவு 8 மணிக்கு வர இருக்கிறது.

குக் வித் கோமாளியில் உங்களை பற்றி யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என ரசிகர்க ஒருவர் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோவில் கமெண்ட் செய்து இருக்கிறார். அதற்கு அவர் “உண்மை ஒருநாள் வெல்லும்” என பதில் அளித்து இருக்கிறார்.  

கமல்ஹாசன் கொடுத்த பெரிய ஆஃபர்.. ஆனாலும் ‘பிரேமலு’ இயக்குனரின் அதிரடி முடிவு..!

Quick Share

உலக நாயகன் கமல்ஹாசன் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை ‘பிரேமலு’ இயக்குனருக்கு கொடுத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பிரேமலு’ என்ற வெற்றி படத்தை இயக்கிய கிரிஷ் என்ற இயக்குனருக்கு தமிழ் திரை உலகில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க கூட ஒரு சில தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கி தருமாறு ‘பிரேமலு’ இயக்குனரிடம் கேட்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகில் வாய்ப்பு ஏற்றுக் கொள்ளாமல் அவர் மீண்டும் ‘பிரேமலு’ தயாரிப்பாளருக்கு ஒரு படத்தை இயக்கி தர முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ் திரையுலகினர் கொடுப்பதாக கூறிய சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளத்தையே அவர் ’பிரேமலு’ தயாரிப்பாளரிடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘பிரேமலு’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த புதிய படத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் `I AM காதலன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு தமிழ் பக்கம் இயக்குனர் கிரிஷ் வரமாட்டார் என்றாலும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அவர் தமிழ் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல முன்னணி பாடகர் வேல்முருகன் கைது…என்ன நடந்தது ?

Quick Share

பிரபல பாடகரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர் வேல்முருகன் என்பதும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 28 நாட்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மட்டும் இன்றி ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ’பிபி ஜோடிகள்’ உள்பட விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் சிக்னல் அருகே ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பேரிகார்டு போடப்பட்டு இருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றார். இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு என்பவர் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் வேல்முருகன் உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேல்முருகனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்தான பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறிய விஜய் டிவி பிரபலம் டிடி-கமெண்ட்டில...

Quick Share

விவாகரத்தான பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை என விஜய் டிவி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி கூறியுள்ள நிலையில் இது அந்த நடிகருக்கு தெரியுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி பிரபலமான டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பாக ’காப்பி வித் டிடி’ என்ற நிகழ்ச்சியில் அவர் நயன்தாரா உள்பட பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 3 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்த டிடி இன்னும் மறுமணம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய டிடி, ‘தனக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது கிரஷ் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த கேள்விக்கு பலர் ’நீங்கள் ஹிருத்திக் ரோஷன் திருமணம் செய்ய ஆசைப்படுவது அவருக்கு தெரியுமா? என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா!

Quick Share

சோலியான் குடுமி சும்மா ஆடாதுன்னு பழமொழி இருக்கு. அது நடிகர் அஜித்குமார் விஷயத்தில் தான் சரியாக பொருந்தி இருக்கிறது. அஜித் இப்படித்தான் என்று ஒரு குறிப்பிட்ட காலமாகவே நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. அதை மீறி அவர் ஒரு சில விஷயம் செய்யும் போது இவரு இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே என ஒரு நிமிடம் நம் மனசுக்குள் ஒரு சந்தேகம் வந்துட்டு போகும். அஜித் தரப்பிலிருந்து அவரை சுற்றி என்ன நடக்குதுன்னு வெளியே தெரிய வாய்ப்பில்லை.

ஏதாவது ஒரு சினிமா பிரபலங்கள் மூலம் தெரிந்தால் தான் உண்டு. அப்படி வலைப்பேச்சு பிஸ்மி மூலம் நமக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அஜித் எப்பவுமே ஒரு படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அடுத்த படத்தை பற்றி யோசிக்க மாட்டார்.

ஆனால் விடாமுயற்சி படம் பாதி கட்டத்தில் இருக்கும் போது அடுத்த படத்துக்கு கமிட் ஆகி அப்டேட் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்போம் சத்தம் இல்லாமல் ஹைதராபாத்தில் ஆரம்பித்துவிட்டது.

அப்போ விடாமுயற்சி படத்தோட சூட்டிங் என்ன ஆச்சுன்னு ஒரு சந்தேகமும் இருக்கு. துணிவு பணத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் ஆரம்பிப்பது ஒரு பெரிய இடியாப்ப சிக்கலாய் இருந்தது. இது எல்லாத்துக்குமே காரணம் லைக்காதான்.

அஜித்தின் விடாமுயற்சி படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட வேண்டிய நேரத்தில் லைக்கா நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்தது. இதனால் அவர்களுடைய பணப்புழக்கம் அப்படியே சரிந்து விட்டது. அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் அவர்களுக்கு அதிகமாக இருந்தது.

அதனால் விடாமுயற்சி படத்தை தயாரிப்பதாக ஒத்துக் கொண்டார்கள். அஜித் இந்த படத்தின் படபிடிப்பை முழுக்க அஜர்பைஜான் நாட்டில் தான் நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அஜித் சொல்படி கேட்டு அஜர்பைஜானில் படபிடிப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இந்தியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் என லைக்கா பெரிய ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறது என்ற பெயர் மட்டும் பெரிதாக இருந்தது. உண்மையில் லைக்கா பணத்தட்டுப்பாடு நிலைமையில் இருக்கிறது.

நடிகர் அஜித் இடம் உங்களால் தான் நாங்கள் அஜர்பை ஜான் நாட்டில் படபிடிப்பு நடத்தினோம். அதனால் இப்போது பட்ஜெட் அதிகமாகி விட்டது. உங்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என பேசி இருக்கிறார்கள். இது அஜித்துக்கு பயங்கர காண்டாக இருந்திருக்கிறது.

என்னமோ பண்ணிட்டு போங்க என்று தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். அதுவும் குட் பேட் அக்லி படத்திற்காக 150 கோடிக்கு மேல் சம்பளமும் வாங்க இருக்கிறார். தன்னுடைய ஸ்டேட்டஸ் தெரியாமல் பேரம் பேசிய லைக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தான் இந்த படத்தின் வேலைகள் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் கமலும் லைக்காவின் இந்த போக்கு பிடிக்காமல் தான் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு டிம்மி கொடுத்துவிட்டு தக்லைப் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். விடாமுயற்சியின் வேலைகள் பாதியிலேயே இருக்கும் போது அஜித் புதிய படத்தின் வேலையை ஆரம்பிப்பதற்கு லைகா நிறுவனம் பேசிய பேரம் தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது.

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அஜித்!

Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குக் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தவர் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மாஸ்டர் திரைப்படம் பார்த்துவிட்டு அஜித் சார் கால் பண்ணி, நல்ல பண்ணிருக்கீங்கனு சொன்னார்’ என அர்ஜுன் தாஸ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அஜித் பற்றி அர்ஜுன் தாஸ் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கார் விபத்தில் சிக்கி சீரியல் நடிகை பவித்ரா மரணம்!

Quick Share

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் என்பவர் இன்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த நடிகை பவித்ரா ஜெயராம் தற்போது தெலுங்கில் Trinayani என்ற தொடரில் நடித்து வருகிறார். தமிழில் வரும் மாரி என்ற தொடரின் தெலுங்கு ரீமேக் தான் அது.

ஆந்திராவில் இன்று காரில் குடும்பத்துடன் பவித்ரா சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த பஸ் போதியத்தில் கார் நொறுங்கியது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் மரணம் அடைந்தார். உடன் காரில் இருந்த மூவர் காயங்கள் உடன் மருத்துவமனையில் இருக்கின்றனர். பவித்ரா ஜெயராம் மரணம் தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

Quick Share

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்பெற்றவர் யாஷிகா ஆனந்த். படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் அவர் கொடுத்த போஸ் இதோ…

2 முறை அந்த வெற்றி இயக்குனரை ரகசியமாக சந்தித்த ரஜினி!

Quick Share

ரஜினி இப்போது வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் போட்டோக்கள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எப்போது இந்த ஷூட்டிங் தொடங்கும், அடுத்த அப்டேட் என்ன என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் தன்னுடைய அடுத்த பட இயக்குனரையும் உறுதி செய்து இருக்கிறார். அந்த இயக்குனரை வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் அவர் இரண்டு முறை சந்தித்திருக்கும் செய்தியும் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி மலையாளத்தில் வெளிவந்து ஹிட் ஆன RDX படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் தான் அந்த அதிர்ஷ்டக்கார இயக்குனர். இவர் ரஜினியிடம் ஒரு ஒன் லைன் கதையை சொல்லி இருக்கிறாராம்.

அது ரொம்பவும் பிடித்துப் போனதால் தலைவரும் அடுத்த படத்தில் இணையலாம் என கூறியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் தலைவர் ரெஸ்ட் என்பது இல்லாமல் ஓடி ஓடி நடிக்க தயாராகி விட்டார். வேட்டையன் அக்டோபர் மாதத்தை குறி வைத்து வரும் நிலையில் கூலி, தலைவர் 172 என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஆச்சரியங்களும் வரிசை கட்டுகிறது.

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? கொந்தளித்து பதிவிட்ட நடிகை ராதிகா சரத்குமார்

Quick Share

திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடைப்பேச்சு வீடியோவை குறிப்பிட்டு, நடிகை ராதிகா சரத்குமார் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். 

மேடைப்பேச்சுகளில் அநாகரீகமாக பேசியதாக கைது செய்யப்பட்டு விடுதலையானவர் திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. 

இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசிய வீடியோவை பிஜேபியைச் சேர்ந்த ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோரை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். 

அதனை குறிப்பிட்டு தற்போது ராதிகா சரத்குமார் ஆவேசமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரின் பதிவில், ”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்” என முதல்வர், திமுக, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். 

மனஅமைதி தேவை -11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ் – சைந்தவ...

Quick Share

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான GV பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி திருமணமான 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்ததாக நேற்று அறிவித்துள்ளனர்.

மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.GV பிரகாஷும் சைந்தவியும் அவர்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கைகளை பதிவேற்றி அறிவித்திருந்தார்கள்.

நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த GV பிரகாஷ் – சைந்தவி இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

இவருடைய இசையில் ‘எள்ளுவய பூக்கலையே’, ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ போன்ற பல பாடல்களையும் சைந்தவி பாடியிருந்தார்.

இந்நிலையில் இவர்களின் அறிவிப்பு பல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் படத்திற்கு கவின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Quick Share

நடிகர் கவின் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார். அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆன அவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படம் கவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோரும் கவின் நடிப்பை தான் பாராட்டி வருகின்றனர் இந்த படத்திற்காக கவின் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் 35 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அவர் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கியுள்ளார். ஒரு நடிகரின் மார்க்கெட் தான் சம்பளத்தை நிர்ணயிக்கிறது என கவின் இதுபற்றி கூறி இருக்கிறார்.




You cannot copy content of this Website