சினிமா

தமிழகத்திற்கு அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி: ராதிகா சரத்குமார் புகழாரம்!

Quick Share

தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராதிகா, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கான சிறப்பான ஊழல் இல்லாத ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார். அவரை நாம் மீண்டும் பிரதமராக்கி அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

விருதுநகர் மக்களுக்கும், இந்திய அரசுக்கும் பாலமாக நான் இருப்பேன். தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. அதனை சிறப்பாக வழிநடத்தி செல்பவர் அண்ணாமலை.

திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் திறக்கப்படும். சிவகாசியில் கொண்டு வரப்பட்ட சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டு பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!

Quick Share

அரசியல் பேச்சாளரும், சின்னத்திரை நடிகருமான அருள்மணி திடீரெனெ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘அழகி’, ‘தென்றல்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் அருள்மணி. இவர், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

இவர், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சுக்களை பேசியும் வந்தார்.

இவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதோடு, அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த 10 நாட்களாக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி அதிமுகவினரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்” – ஜான்வி கபூர் வெளிப்படை!

Quick Share

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருமணத்திருற்கு தயாராகி வந்த நிலையில் இவர் ஷிகர் பஷிர் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் என்பது தெரியவந்தது. இந்த ஜோடி திருப்பத்துக்குக் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் புத்தாண்டு, பிறந்தநாள் மிகவும் முக்கியம்யான நாட்களில் தவறாமல் தரிசம் செய்வார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் ஜான்வியும் ஷிகர் பஷிரும் காதலிப்பத்த போனி கபூருர் சம்பத்தில் உருதி செய்திருந்தார்.

இதை தொடந்து திருமணம் எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த குறித்து ஜான்வி பேட்டில் திருமணம் எப்படி நடக்க வேண்டும்? எங்கு நடக்க வேண்டும்? என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

என்னக்கு கூடம் அதிகமாக இருக்க கூடாது. திருமணம் கொண்டாட்டங்கள் என்னக்கு புடிக்கும் தான், ஆனால் எனக்கு பயம் அந்த இடத்தில் எல்லாரும் எண்ணத்தை கவனிப்பார்கள் என்று.

அதுனால் என் குடும்பத்தார்கள் மற்றும் நண்பரிகள் மட்டும் அங்கு இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் அவர் திருமணம் தமிழ் திருமணம் போல் நடக்க வேண்டும். திருமணத்தில் காஞ்சிபுரம் புடைவை அணிந்து தலை நிறைய மல்லி பூ வைக்கவேண்டும் மற்றும் என் கணவர் வேஷ்டியில் இருக்க வேண்டும்.

பிறகு திருமந்திக்கு வந்த விருந்தினர்க்குக் விருந்து வாழை இலையில் வைக்க வேண்டும். இப்படி தமிழ் திருமணமாக இருக்க வேண்டும் என்று ஜான்வி கபூர் கூறியுள்ளாராம்.

28 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் நடிகை!

Quick Share

கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஆனால் வருகிற படம் சாதனை படைக்கும் அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று இந்தியன் 2 படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார்.

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படம் வருகிற ஜூன் மாதம் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். ஆனாலும் இன்னும் வரை படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாமல் தான் இருக்கிறது.

இதில் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், விவேக், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா போன்ற நடிப்பு அரக்கர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து இன்னும் முக்கிய ஒரு கதாபாத்திரத்தை நடிக்க வைப்பதற்கு ஷங்கர் மும்பையில் ரகசியமாக ஒரு மீட்டிங்கே போட்டிருக்கிறார்.

அதாவது ஷங்கரின் மூத்த மகள் கல்யாணத்திற்காக மும்பையில் இருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வருகிறார். அப்படி போற போக்குல பழைய விஷயங்களில் ஆர்வம் காட்டி அதையும் அடுத்த கட்ட வாய்ப்புக்கு பயன்படுத்தி கொள்கிறார்.

அப்படித்தான் 28 வருடங்களுக்கு முன் கமலுடன் இணைந்து நடித்த ஹீரோயினை பார்த்து மறுபடியும் இந்தியன் 2 படத்திற்கு நடிக்க கமிட் பண்ணி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சங்கர் இயக்கத்தில் நடித்து ஹிட் கொடுத்த மனிஷா கொய்ராலா தான்.

தற்போது இவரையும் இந்தியன் 2 படத்திலே இணைப்பதற்காக சில முக்கியமான காட்சிகள் இடம் பெறப் போகிறது. அத்துடன் சங்கர் கேட்டதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மனிஷாவும் அவருடைய கால்ஷீட் கொடுத்து விட்டார். இவர்களுடைய காம்போவில் வந்த முதல்வன் மற்றும் இந்தியன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படமும் சாதனை படமாக வெற்றி பெற்றுவிடும்.

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது!

Quick Share

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை கிஃட் ஆக கொடுத்தது மட்டுமின்றி ஒரு பெரிய தொகையையும் செக் ஆக கொடுத்தது.

அந்த அளவுக்கு ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் நெல்சன் இறங்கி இருக்கிறார்.

ஜெயிலர் 2 படத்திற்கு ஹுகும் என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Hukum பாடல் ஜெயிலர் படத்தில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதையே தற்போது இரண்டாம் பாகத்திற்கு டைட்டிலாக வைக்க இருக்கிறார் நெல்சன். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படம் முடித்தபிறகு தான் ஜெயிலர் 2 படத்தின் பணிகள் தொடங்க இருக்கிறது.

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

Quick Share

விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 வெளியாகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் கோட் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கோட் படத்திற்கு போட்டியாக மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரேசில் இருந்து அஜித், சூர்யா போன்றோர் விலகி இருக்கின்றனர். அதாவது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் படப்பிடிப்பு இடையில் தாமதமானது.

மேலும் மீண்டும் படப்பிடிப்பு ஏப்ரலுக்குப் பிறகு தொடங்க உள்ளது. ஆகையால் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படம் வெளியாக வாய்ப்பே இல்லை. அடுத்ததாக சூர்யா நடிக்க உள்ள குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சூர்யா கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்த படமும் இப்போது செப்டம்பர் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது. ஆனால் விஜய்க்கு போட்டியாக மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் இறங்குகிறார்.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படம் தான் கோட் படத்துடன் மோத இருக்கிறது. ஆகையால் இந்த ரேசில் தளபதியா அல்லது சிவகார்த்திகேயனா என்பது படம் வெளியாகி வசூல் பொருத்து தெரியவரும்.

“தம்பி விஜய் அரசியலுக்கு வந்திருந்தாலும்…” – நடிகர் கார்த்திக் ...

Quick Share

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் தொடர்ச்சியாக நடிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் தனது கட்சியினை அறிவித்த நடிகர் விஜய், அதற்கான பிரத்யேக செயலியையும் பின்னர் அறிமுகப்படுத்தினார்.

தமது கட்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புவோர் அந்த செயலி மூலம் இணையலாம் என அவர் கூறியதும் லட்சக்கணக்கானவர் செயலியை பதிவிறக்கம் செய்தனர். 

விஜய்யின் அரசியல் வருகையை பலரும் வரவேற்றாலும், அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இந்த நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்கிடம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், ‘தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்..நன்றாக வரட்டும். அவர் சரியான வயதில் வருகிறார். இது ஆரோக்கிமான விடயம். Peakயில் இருக்கும்போதே வருகிறார் என்றால் அது ரொம்ப பெரிய விடயம். ஒரு அண்ணனா என்னோட ஆசை அவர் அதுவரை நடிக்கணும். ஏனென்றால் அது தேவைப்படும். சில விடயங்கள் திரையில் சொல்லும்போது இன்னும் ரீச் ஆகும்’ என்றார்.

பொது மேடையில் பிரியாமணியின் இடுப்பை தடவிய போனிகபூர்!!விளாசும் நெட்டிசன்கள்

Quick Share

மைதான் பட விழாவில் கலந்து கொண்ட பிரியாமணியிடம் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்க வைத்துள்ளது.

மைதான் படவிழா

நடிகர் அஜய் தேவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைதான்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பிரியாணி கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த ஃபுட்பால் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடித்த நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியாணி, தயாரிப்பாளர் போனி கபூர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முகம் சுழிக்க வைக்கும் விதமாக போனிகபூர் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம் புகைப்படம் எடுக்கும் போது பிரியா மணியுடன் நெரு்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். அவரைத் அநாயகரியமாக தொட்டு சங்கதடத்தை ஏற்படுத்தி எடுத்துள்ள புகைப்படம் வைரலாக வருகின்றது. 

68 வயதில் இதெல்லாம் தேவையா என நேரடியாகவே நெட்டிசன்கள் சிலர் போனி கபூரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.    

சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்!

Quick Share

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.

மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நச்சுக்கிருமிகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமடைகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடல் உறுப்புகளில் எலும்புகளை பலப்படுத்தும் அளவுக்கு நிறைவான கால்சியம் சுண்டைக்காயில் காணப்படுகின்றது.

சுண்டைக்காய் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. பசியின்மை பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் சிறந்த தீர்வு கொடுக்கின்றது. 

சுண்டைக்காயில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்புகளை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. 

நாள்பட்ட சளியை போக்க உதவும் சுண்டைக்காயில் நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றலும் நிறைந்து காணப்படுகின்றது. 

வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை குழம்பு செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ,உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகள் விரைவில் குணமாகும். 

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு சுண்டைக்காய் வரபிரசாதம் என்றே கூற வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

“கண்டிப்பாக இதை விட பெருசு தான்” – ரசிகரின் கேள்விக்கு ஷாலு ஷம்மு பதி...

Quick Share

நிச்சயமாக எல்லா நடிகைகளிடம் இதுபோன்ற மோசமான, அநாகரிமான கேள்விகளை ரசிகர்கள் கேட்டுவிடுவது இல்லை. ஆனால் சில நடிகைகளை பார்த்தவுடன் மிக அருவறுக்கத்தக்க கேள்விகளை கேட்க சில ரசிகர்கள் தயங்குவதே இல்லை. அதுமட்டுமின்றி அப்படிப்பட்ட அசிங்கமான கேள்விகளை தூண்டும் விதமாக, சினிமாவில் மிக ஆபாசமாக நடித்து, தன்னை பற்றிய அபிமானங்களை குறைத்துக் கொள்வதும் அந்த நடிகைகள்தான்.

சினிமாவில் நடிப்பதும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பதும் நடிகைகளில் இலக்காக இருப்பது தவறு இல்லை. ஆனால் எந்த மாதிரியாக நடித்தாலும் பரவாயில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும் என்று கருதி, பணத்துக்காக நடிக்க வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் குலுக்கல் நடிகைகளாக மாறி விடுகின்றனர்.

முன்னழகை, பின்னழகை தூக்கலாக காட்டி காட்டியே ரசிகர்களை வாய்பிளக்க வைக்கின்றனர். பிறகு பொது இடங்களில் அந்த குறிப்பிட்ட நடிகையை பார்க்கும் ரசிகர்கள், சிவ பெருமானின் மனைவியாக நடித்த பார்வதியாக நினைத்து கை எடுத்து கும்பிட மாட்டார்கள். இதுபோன்று அசிங்கமான அநாகரிகமான கேள்விகள்தான் அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கவர்ச்சியை மட்டுமே பிரதானமாக காட்டி நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக முன்னழகு குலுக்கல் கவர்ச்சி நாயகியாக தான் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

அதுமட்டுமின்றி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து தனது குலுக்கல் நடன வீடியோக்களை, முன்னழகின் முக்கால் பாகங்கள் வெளியே தெரியும்படி புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்தும், ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார் ஷாலு ஷம்மு.

நடிகை ஷாலு ஷம்மு சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கங்களில் கலந்துரையாடினார். அப்போது உங்களுடைய மார்பின் அளவு என்ன..? என்று ஒரு ரசிகர் கோக்குமாக்கான கேள்வி எழுப்பினார்.

அந்த ரசிகருக்கு பதில் சொன்ன ஷாலு ஷம்மு, கண்டிப்பாக உன்னுடைய உறுப்பை விட என்னோடது பெருசு தான் என்று கூலாக பதில் கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கண்டிப்பாக என்னோட மார்பகங்கள் உன் உறுப்பை விட பெருசு தான் என நடிகை ஷாலு ஷம்மு ஒரே போடாக போட்டு, ஆண்களையே வாயை பொத்திக் கொள்ளும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார்.

ஆஸ்கர் 2025 விருது விழா விவரம்!

Quick Share

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு இந்தியாவிலிருந்து மலையாளப் படமான ‘2018’ படம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் இப்படமும் விருது பெறவில்லை.

இவ்விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்று பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி (இந்தியாவில் மார்ச் 3 ) நடக்கும் என அறிவித்துள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

ராஜ்கிரணை கட்டிப் பிடித்து கதறி அழுத வடிவேலு -ஏன் தெரியுமா ? வைரல் போட்டோஸ்!!

Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக காமெடியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடி காமெடியை ரசிக்காத அவர்களே இருக்க முடியாது அவரின் பாடலாங்குவேஜ் , பேச்சு என வடிவேலுவை கொண்டாடவே ஒரு கூட்டம் இன்றளவும் உள்ளது.

இப்படி தமிழ் சினிமாவில் கோலோச்சி  வந்த வடிவேலு கடந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக வடிவேலு சரமாரியாக தாக்கி பேசினார்.  சென்ற இடமெல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக வடிவேலு பேசியது அவருக்கே வில்லங்கமாக முடிந்தது. இதையடுத்து வடிவேலுக்கு படவாய்ப்புகளே இல்லாமல் போனது.

இதுவொருபுறமிருக்க  வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று ராஜ்கிரண் அடிக்கடி சொல்லியது திரை வட்டாரத்தில் இருந்த பலருக்கும் தெரிந்தது தான். வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப்படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார்.  இருப்பினும் தனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக வடிவேலு கண்டுகொள்ளவில்லை என்ற புகாரும் உள்ளது. சமீபத்தில் நடந்த கலைஞர் 100 நிகழ்ச்சியில் கூட வடிவேலு ராஜ்கிரணுடன் பேட்டரி காரில் வர மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் கலைஞர் 100 விழாவில் ராஜ்கிரணை கட்டிப் பிடித்து வடிவேலு  கதறி அழுத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் வடிவேலு – ராஜ்கிரண் இடையே உரசல் என்ற பிம்பத்தை உடைத்துள்ளது. 




You cannot copy content of this Website