சினிமா

டி.ராஜேந்தர் அவர்களின் தாடிக்கு பின்னால் இப்படியொரு வேதனையா?- யாருக்கும் தெரியாத தகவல்!

Quick Share

கோலிவுட்டில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் டி.ராஜேந்தர். இன்று அவர் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜானரிலும் கலக்கினார்.

இவரது மகன் சிம்புவும் சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார், சினிமாவில் பல துறைகளில் இவரும் சாதித்துள்ளார்.

டி.ராஜேந்தர் என நாம் நினைக்கும் போதே முதலில் நியாபகத்தில் வருவது அவரது தாடி தான். இந்த தாடிக்கு பின்னால் ஒரு கதை ஒன்று உள்ளது.

அது என்னவென்றால், கல்லூரிக்கு சேரும்போது தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள முடிவெடுத்தாராம்.

ஆனால் அவரது உறவினர் ஒருவர், இவர் மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா, சும்மா இருந்தா காசும், பிளேடும் மிஞ்சும் என்று சொன்னாராம். இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்தர் வாழ்க்கையில் வென்ற பிறகே தாடி எடுக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.

பிறகு சினிமாவில் சாதித்த பிறகு, வெற்றிக்கண்ட போது தாடி இருந்ததே இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டாராம்.

மறைந்த பின்பும் கேப்டனுக்கு கிடைத்த கௌரவம்!

Quick Share

கேப்டன் விஜயகாந்த் தான் மட்டுமல்லாமல் பிறரையும் வாழ வைத்து மகிழக்கூடியவர். சினிமாவில் அவருடைய பங்களிப்பு அளப்பறியாதது. கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த சூழலில் நடிகர் சங்கத்திலும் கேப்டனாக சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கினார். அதன்பிறகு உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உயிர் இழந்தார். தேதிமுக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்போதும் அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்து செல்கின்றனர். சினிமா மற்றும் அரசியலில் பயணித்த விஜயகாந்திற்கு கடந்த மாதம் நடைபெற்ற பத்ம விருதுகள் விழாவில் விருது வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதை அடுத்து இரண்டாம் கட்ட நிகழ்வில் கேப்டனுக்கு விருது வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி மே ஒன்பதாம் தேதியான இன்று டெல்லியில் பத்மபூஷன் விருது கேப்டன் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்டுள்ளது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் பெற்றார்.

மேலும் பிரேமலதா விருது வாங்கிய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மறைந்த பின்பும் விஜயகாந்துக்கு கௌரவம் கிடைக்காத அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.

மேலும் பிரேமலதா விருது வாங்கும் போது அவரது மூத்த மகன் விஜய பிரபாகரனும் அருகில் இருந்தார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்த்து போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சந்திப்போம்! 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்

Quick Share

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

அதேபோல இன்று தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

விஜய் பாராட்டு

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் நடிகர் விஜய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.  

நடிகர் கிங்காங் மகள் பிளஸ் 2வில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..!

Quick Share

நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்தில் தேர்வு முடிவுகளை பார்த்து வந்தனர் என்பதும் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை ஒரு சில திரை உலக நட்சத்திரங்களின் மகன்கள் மகள்களும் எழுதி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது காமெடி நடிகர் கிங்காங் மகள் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான கிங்காங் கடந்த 1988 முதல் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான ’காசேதான் கடவுளடா’’கிக்’ படங்களில் கூட அவர் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கிங்காங்கிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களில் கிங்காங் மகள் சக்தி பிரியா என்பவர் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் 404 மதிப்பெண் பெற்றுள்ளதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் கிங்காங் மகள் இன்னும் பெரிய படிப்பு படித்து வாழ்க்கையில் முன்னேற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Quick Share

ஒரு பக்கம் கோலிவுட் மறுபக்கம் பாலிவுட் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 -ல் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். “இப்படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தேன். ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது” என்று தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தது குறித்து பகிர்ந்திருந்தார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார.

தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். சிலர் நெகடிவ் விமர்சனம் கொடுத்தாலும், குடும்ப ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்காக தமன்னாவுக்கு ரூபாய் 4 – 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியன் 2 ரிலீசுக்கு வந்த சிக்கல்!

Quick Share

கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி சில வருடங்கள் கடந்து விட்டது. அதனாலேயே இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த ரிலீஸ் தள்ளிப் போகும் நிலையில் இருக்கிறதாம். ஏனென்றால் தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதெல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆக இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஏற்படுமாம். அதனால் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 15 புஷ்பா 2 வெளியாகிறது. தற்போது அதற்கு தெலுங்கு போல் மற்றும் மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் கூட இதை வைத்து லாபம் பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதனால் இந்தியன் 2 படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்ற குழப்பத்தில் லைக்கா இருக்கிறது.

இப்படம் வெளியாகி வரும் லாபத்தை வைத்து தான் அவர்கள் விடாமுயற்சியை ஆரம்பிக்க வேண்டும். இப்படி பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் ஜூலை மாதம் படம் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷின் மகன் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா?

Quick Share

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவின் மகன் யாத்ரா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் விபரம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு பிரிந்த இந்த தம்பதிகள் தற்போது தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மகன்களும், இரண்டு பேரின் வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் தனுஷின் மகன் யாத்ராவின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதன்படி மொழிப்பாடத்தில் நூறுக்கு 98 மதிப்பெண் எடுத்துள்ள யாத்ரா, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்ணும் பெற்றும் மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவை கொண்டாடும் ஹாலிவுட் ரசிகர்கள்…வைரலாகும் மாநாடு போஸ்டர்!

Quick Share

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்தது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிம்பு நடிப்பில் பெரிய ஹிட் ஆன அந்த படம் டைம் லூப் கதை அடிப்படையில் உருவாகி இருந்தது.

மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த செய்திக்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கும் வெங்கட் பிரபு, மாநாடு பட போஸ்டர் டிசைன் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு அவரை பாராட்டி இருக்கிறார்.

சுந்தர்.சி பட நடிகை மரணம்!

Quick Share

இயக்குனர் சுந்தர்.சியின் இருட்டு என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை கனகலதா. அவர் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நிலையில் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். பிரஷாந்த் நடித்த உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

கனகலதா கடந்த சில மாதங்களாக பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.

திருமணமாகி கணவரை பிரிந்துவிட்ட காரணத்தால் அவர் தனியாக தான் வாழ்ந்து வந்தார். அதன் பின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்

இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டிலேயே உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு மலையாள சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவின் மகள் தியா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்..மகிழ்ச்சியில்...

Quick Share

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதியினர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களின் மகளான தியா தற்போது நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒவரான சூர்யா, ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டனர். உயிரிலே கலந்தது,காக்க காக்க, பேரழகன், மாயாவி,சில்லுனு ஒரு காதல் என 7 படத்திற்கு மேல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் கடந்த 2006ம் ஆண்டு மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரைத்துறை பிரபலங்கள் முன்னணி நடிகை, நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தியா,தேவ்: சூர்யா ஜோதிகா நட்சத்திர தம்பதியினருக்கு 17 வயதில் தியா என்கிற பெண் குழந்தையும், 15 வயதில் தேவ் என்கிற மகனும் உள்ளனர். குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் தலை காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சகோதரி தியாவைப் போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சூர்யாவின் மகள் தியா: இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியான நிலையில், தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதில்,தமிழில் 100க்கு 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரின் மொத்த மதிப்பு 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியா இவ்வளவு மதிப்பெண்களை குவித்துள்ளதை எண்ணி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதிக மதிப்பெண்: தியா பத்தாம் வகுப்பு பொது தேர்விலும், 500க்கு 487 மதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால், சூர்யா குழந்தைகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அண்மையில் சூர்யாவின் மகன் தேவ் தனது பள்ளியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வாங்கி இருந்தார். அப்படி இருக்க குழந்தைகள் இருவரும் சென்னையில் தான் படித்து வருகிறார்களா என்றும், ஜோதிகா மட்டும் இந்தி படத்திற்காக மும்பையில் இருக்கிறாரா என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்

நடிகர் சூர்யா அகரம் தொண்டு நிறுவனம் வாயிலாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார். மருத்துவம், பொறியியல், வக்கீல் என குழந்தைகள் விரும்பும் பல படிப்புகளையும் படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பணக்கார நடிகைக்கு இணையான இடத்தை பிடித்த நடிகை திரிஷா

Quick Share

20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருபவர் திரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடிக்கிறார். மேலும் பாலிவுட்பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 40 வயதாகியும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் திரிஷா விஜய்யின் Goat திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸியான நடிகையாக மாறியுள்ள திரிஷாதற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கி நடிகை திரிஷா தான் என கூறுகின்றனர்.

இந்த நிலையில், சம்பள விஷயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை திரிஷா மிஞ்சிவிட்டார் என தகவல் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ரூ. 776 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், இந்தியாவின் பணக்கார நடிகை என அழைக்கப்படுகிறார். ஆனால், சம்பள விஷயத்தில் அவருக்கு இணையாக தற்போது திரிஷா வந்துவிட்டார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஒரே படத்தால் பெயரை கெடுத்து கொண்ட கௌதம் மேனன்!

Quick Share

கௌதம் மேனன் மிகவும் ஸ்டைலிசான இயக்குனர். காதல் படங்களை எடுப்பதில் தனக்கென ஒரு தனி ஃபார்முலாவை இன்று வரை கடைபிடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை விளக்கும்.

அப்படிப்பட்ட பெயர்களை வாங்கிய இயக்குனர் இன்று தான் எடுத்த ஒரு படத்தால் மொத்த பெயரையும் இழந்துள்ளார். இவரின் அடுத்த படங்களுக்கும் இவர் எடுத்து வைத்திருக்கும் படங்களுக்கும் அந்த படம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

கௌதமேனன் கடைசியாக எடுத்த படம் “ஜோஸ்வா” இந்த படத்தை தயாரித்தவர் ஐசரி கணேஷ். இதனால் இவருக்கு கிட்டத்தட்ட 15 கோடிகள் வரை நஷ்டமாகியுள்ளது. இதனை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார். இந்த படத்தை எடுத்ததன் மூலம் தான் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பெயரையும் இழந்துவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன்.

“ஜோஸ்வா” இந்த படத்தின் ஹீரோ வருண். வனமகன், எல் கே ஜி, கோமாளி, சீறு போன்ற படங்களில் நடித்தவர். இவர் தயாரிப்பாளர் ஐசரி கணேசின் மருமகன். இவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெறலாம் என்று எண்ணியவருக்கு பெரும் அடியாக அமைந்தது ஜோஸ்வா படம்.

இந்த படம் தான் இப்பொழுது கௌதம் வாசுதேவனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. கௌதமிடம் சரக்கு தீர்ந்து விட்டது, இல்லை என்றால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டார் என்றும் கூறி வருகின்றனர். இந்தப் படத்தை மதிப்பில் எடுத்து விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படமும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறது.




You cannot copy content of this Website