சினிமா

10 வருட காதல்: ரகசிய திருமணம் செய்துகொண்ட டாப்ஸி!

Quick Share

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை டாப்ஸி. இதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி சமீபத்தில் தான் ஷாருக்கான் உடன் இணைந்து டங்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை டாப்ஸிக்கு அவருடைய 10 வருட காதலருடன் திருமணம் என தகவல் வெளிவந்தது.

டென்மார்க் நாட்டை இருந்த பேட்மிட்டன் பயிற்சியாளர் மதியாஸ் போ என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் நடிகை டாப்ஸி. இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

மார்ச் மாதம் இறுதியில் இருவருக்கும் திருமணம் என கூறப்பட்ட நிலையில், கடந்த 23ஆம் தேதி டாப்ஸி – மதியாஸ் போ இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்களாம். டாப்ஸிக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ஒரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், மறுபக்கம் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

வனிதா 4வது திருமணம்: காரி துப்பும் தங்கச்சி!

Quick Share

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிய இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து வெளியிட்டு வருவதோடு அடிக்கடி பேட்டியைத் தந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவரை அடுத்து இவரது மகளை பிக் பாஸ் சீசன் 7-ல் களம் இறக்கிய இவர் தற்போது தன்னுடைய சினிமா கனவை மகள் மீது திணித்து அவளை ஹீரோயினியாக பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது குடும்பத்தோடு ஒட்டாமல் தனித்து தன் மகளோடு வாழ்ந்து வரக்கூடிய வனிதாவை பார்த்து அவர் தங்கை பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதிலும் நீயெல்லாம் பொம்பளையாடி என்ற கேட்ட கேள்வி ஹைலைட்டாக மாறி இணையங்களில் தீயாய் பரவுகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு அந்த திருமண வாழ்க்கைகள் நிலைத்து நிற்காத காரணத்தால் விவாகரத்து செய்தவர்.

இந்த நிலையில் இவர் அண்மையில் நான்காவது திருமணம் குறித்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தன்னுடைய நான்காவது திருமணம் விரைவில் நடக்கும் என்பதை இலை மறைவு காய் மறைவாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் நான்காவது திருமணத்தை செய்து கொள்வாரா? அல்லது ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்த தன்னுடைய கணவருடன் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

இதனை சமூக ஊடகங்களின் பார்த்து தெரிந்து கொண்ட அவரது தங்கை ப்ரீத்தா கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்ற விஷயம் இணைய பக்கங்களில் வெளியாகி வருகிறது.

மேலும் இவர் வனிதா விஜயகுமார் பற்றி பேசுகையில் கூட பிறந்த பாவத்திற்காக நீ செய்யும் செயல்களுக்கு எங்களுடைய பெயரும் சேர்ந்து கெடுகிறது. நீ எல்லாம் பொம்பளையாடி என்ற கேட்கக் கூடிய வகையில் உச்சகட்ட கடுப்பில் ப்ரீத்தா இருக்கிறார். இந்த விஷயமானது இணைய பக்கங்களில் தகவலாக வெளி வந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் ப்ரீத்தா விஜயகுமாரின் கோபத்தில் நியாயம் உள்ளதாகவும் அவர் பேசிய பேசு சரி தான் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் தற்போது இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தை தெறிக்க விட்டார்கள்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Quick Share

மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அதற்கு முன்பு கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குனராக இருந்து வந்தார். அதன்பின் பாய்ஸ், உதயம் NH4, 180, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

செழியனை சரமாரி கேள்வி கேட்ட ஜெனி, விழுந்த பளார் அடி- கடைசியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் செழியனை சரமாரி கேள்வி கேட்ட ஜெனி, விழுந்த பளார் அடி- கடைசியில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் அதிதி ராவ்.

தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் குறித்த ஸ்பெஷல் தகவல் தான் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் கடந்த சில நாட்களாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் குறித்து பேச்சுகள் எழுந்த நிலையில் சூப்பர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதாவது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர். அதிதி ஸ்பெஷல் போட்டோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா!

Quick Share

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு ‘புறநானூறு’ என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. 

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. 

யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“ரஜினி 171” – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்!

Quick Share

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார்.

விஜய் இடத்தை பிடிக்க முழு வீச்சில் இறங்கிய சூர்யா!

Quick Share

தமிழ்நாட்டுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி பெருசா இருந்துச்சு. இப்போ அடுத்த தளபதி யார் என்று தான் அதிக அளவில் பேசப்படுகிறது. இன்னைக்கு வந்த நண்டு, சிண்டு பெயர் எல்லாம் இதில் அடிபடுது. ஆனா உச்சத்தில் இருக்கும் சூர்யாவின் பெயர் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படாதது தான். இப்போதைக்கு சூர்யாவின் பெரிய நம்பிக்கையே கங்குவா படம் தான்.

இந்த படத்தின் போஸ்டர்களும் ஓரளவுக்கு சூர்யா ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. சூர்யா பாலிவுட்டில் கர்ணன் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் இடையில் வெளியாகி இருந்தது. இது என்ன கொடுமை சூர்யா இந்தி திரையுலகிற்கு போய்விடுவாரோ என்று அவருடைய ரசிகர்கள் பயந்தார்கள்.

இதற்கு இடையில் சூரரைப் போற்று கூட்டணி மீண்டும் இணைந்து புறநானூறு படத்தில் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் அப்டேட்டை கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் நச்சரித்து வந்தார்கள். இதற்கு முடிவு கட்டும் விதமாக பட குழு படப்பிடிப்பு வேலையில் தாமதம் அதிகமாக இருக்கிறது என சொல்லிவிட்டது.

இந்தி திணிப்பு போராட்ட த்தை இந்த படத்தின் திரைக்கதை உருவாகி வருவதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுமே வெளியாகாத நிலையில் அவருடைய 44 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

சூர்யா 44 என்ற ஹாஷ் டாக்குடன் வெளியாகி இருக்கும் இந்த அப்டேட்சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சூர்யா தன்னுடைய 44 ஆவது படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைய இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவர். அது மட்டும் இல்லாமல் அவருடைய இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வணிக ரீதியாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

இதற்கிடையில் நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் சூர்யாவுடன் இணைந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2d தயாரிப்பு நிறுவனம், கார்த்திக் சுப்புராஜ் உடைய ஸ்டோன் பெஞ்ச் உடன் இணைந்து தயாரிக்கிறது. இப்போதைக்கு இந்த படத்தை லவ், லாப்டர், வார் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவேளை விஜய்க்கு சொன்ன கதையில் தான் இப்ப சூர்யா நடிக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் கிளப்பி இருக்கிறார்கள்.

வெற்றி!! கதறி அழவைக்கும் ஆடுஜீவிதம்!! ரத்தமும், சதையுமாய் உருவாகியுள்ள ஆடுஜீவிதம்: முழ...

Quick Share

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

பிருத்விராஜின் அசத்தலான நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பார்த்து திரையரங்குகளில் கண்ணீர் விடாத ரசிகர்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாய் உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

குடும்பத்திற்காக வெளிநாடு செல்லும் ஒரு இளைஞன் தவறுதலான ஒரு வேலையில் சிக்கிக் கொண்டு படும் பாடு தான் ஆடுஜீவிதம் படத்தின் ஒன்லயன் ஸ்டோரி. நஜீப் முகமது ஆக பிருத்விராஜ் அவரது காதலியாக அமலா பால் நடித்துள்ளனர்.

நஜீத் முகமது தன்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு நண்பரின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். கடைசியில் அங்கு சென்று போது தான் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

அங்கு கொத்தடிமையாக நஜீத் அணு அணுவாய் சித்திரவதை அனுபவிக்கிறார். அந்த கும்பல் இடமிருந்து அவர் மீண்டும் வந்தாரா என்பதுதான் ஆடுஜீவிதம். படத்திற்கு பிளஸ் என்றால் இயக்கம், கதாபாத்திரங்களின் நடிப்பு திறமை தான். குறிப்பாக பிருத்விராஜுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.

அந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொண்டு உழைப்பை போட்டு இருக்கிறார். ஏஆர் ரகுமானின் இசை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. மேலும் ஆடுஜீவிதம் படத்தில் சில காட்சிகள் மிகுந்த பாரத்தை ஏற்படுத்துகிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் அற்புதமாக இருக்கிறது. மன திடகாத்திரமாக இருந்தால் தான் இந்த படத்தை பார்க்க முடியும்.

சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு!

Quick Share

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி பாடல் மற்றும் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் முதலில் பங்குபெற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுக்கவில்லை.

அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பக்கம் வந்தவர் மக்களை தனது காமெடிகள் மூலம் கவர்ந்துவிட்டார். சில சீசன்களில் கோமாளியாக இருந்தவர் கடைசி சீசனில் குக்காக மாறி நிறைய வித்தியாசமான சமையலை சமைத்து அசத்தினார்.

இப்போது நிறைய இசைக் கச்சேரிகள், வெளிநாடு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.

அண்மையில் சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக்கொள்வது குறித்து பதிவு ஒன்று போட ரசிகர்கள் நிறைய கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அவர் தனது Threads பக்கத்தில், சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம், நிச்சயம் முடிந்தது, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன், அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் தங்களுக்கு தோன்றிய பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

நயன்தாராவை ஓரங்கட்டிய த்ரிஷா!

Quick Share

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே ஹீரோயின்களுக்கு நடுவிலும் போட்டி இருந்து வருகிறது. குறிப்பாக சம்பளம் விஷயத்தில் யார் முன்னணி என்கிற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நயன்தாரா தான் 10 கோடி ருபாய் வரை சம்பளம் பெற்று முன்னணியில் இருந்து வந்தார்.

பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பிறகு மீண்டும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார் த்ரிஷா. அஜித் உடன் விடாமுயற்சி, கமல் உடன் தக் லைப், சிரஞ்சீவி ஜோடியாக Vishwambhara ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ருபாய் சம்பளம் பெருகிறாராம். இதன் மூலமாக அவர் தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராவை ஓரங்கட்டி டாப் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்து இருக்கிறார்.

விமர்சனங்களை தாண்டி பாலா செய்யப்போகும் விஷயம்!

Quick Share

விஜய் டிவியில் KPY உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. அவர் அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மேலும் சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.

பாலா படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதுவும் அவர் எல்லா பணத்தையும் இப்படியே உதவியாக செய்து கொண்டிருந்தால் வருங்காலத்தில் பிச்சை தான் எடுப்ப என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அது ஒருபுறம் இருக்க நடிகர் லாரன்ஸ் உடன் சேர்ந்து வறுமையில் இருக்கும் பெண்ணுக்கு ஆட்டோவை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அந்த வீடியோ நேற்று வைரல் ஆனது.

இந்நிலையில் KPY பாலா தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் எல்லோருக்கும் இலவச சிகிச்சை தர போவதாக அறிவித்து இருக்கிறார்.

தான் உதவி செய்வதை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உதவி செய்து வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அடுத்தடுத்து சோகம்: நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

Quick Share

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டேனியல் பாலாஜியின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

என் தலையை வெட்டிட்டு, ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸா? நியாயம் கேட்கும் ‘விக்ரம்’ ந...

Quick Share

ஸ்ருதிஹாசனின் ’இனிமேல்’ என்ற ஆல்பம் வரும் 25ஆம் தேதி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தளத்தில் வெளியாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே நேற்று பார்த்தோம். மேலும் நேற்று வெளியான டீசரில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது மற்றும் சோபா படுக்கையில் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள் இருந்ததை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பதோடு இந்த ஆல்பத்தின் பாடலையும் அவர்தான் எழுதியுள்ளார் என்பதும் இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் இந்த ஆல்பத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்று வெளியான டீசர் வீடியோவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் கிளாமர், லோகேஷ் கனகராஜின் ரொமான்ஸ் பார்த்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ’விக்ரம்’ நடிகை காயத்ரி ’உங்கள் படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு, நீங்கள் மட்டும் என்ன எப்படி ரொமான்ஸ் பண்ணுகிறீர்கள்? என்று ஜாலியாக கேள்வி எழுப்பி உள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது தலை வெட்டப்படும் காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் படத்தில் மற்றவர்கள் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டிவிட்டு நீங்கள் மட்டும் செம்மையாக ரொமான்ஸ் செய்து வருகிறீர்களே என்ற ரீதியில் காயத்ரி கேட்ட கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவளித்து வருகின்றனர்.




You cannot copy content of this Website