சினிமா

அஜித்தின் குட் பேட் அக்லி டீம் திடீரென சென்னைக்கு திரும்பியது ஏன்?

Quick Share

அஜித் நடித்துவந்த விடாமுயற்சி படம் பல்வேறு சிக்கல்களால் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது.

இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது படக்குழு சென்னைக்கு திரும்பி இருக்கிறது. சண்டை காட்சி தான் படமாக்கப்பட்டதாகவும், ஷூட்டிங் முடிந்துவிட்டதால் தான் படக்குழு திரும்பி வந்திருக்கிறாதாம்.

அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு என்பது பற்றி விரைவில் தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய்யின் கோட் இசை வெளியீட்டு விழா!

Quick Share

அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டரில் விஜய் நடிக்க படு மாஸாக தயாராகி வரும் படம் தான் கோட், Greatest Of All Time. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு படப்பிடிப்புகளை சரியான திட்டமிடுதலுடன் நடத்தி வருகிறார். படத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார், சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

விஜய்யை தாண்டி பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடிக்கிறார்கள்.

விஜய்யின் 68வது படமான கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது, படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் டைம் டிராவலை மையமாக வைத்து இப்பட கதை உருவாகி வருவதா சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மாஸாக தயாராகி வரும் கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது, தகவலை கேட்டதும் செம தூள் மாஸாக இருக்குமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அசத்தல் நடிப்பு …கவின் வேற லெவல்!! “ஸ்டார்” திரைவிமர்சனம்

Quick Share

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஸ்டார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள ஸ்டார் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் 

கதைக்களம்

சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் கலை (கவின்). அவருடைய தந்தையின் ஆசையும் அதுவே. பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் நடிப்பின் மீது மட்டுமே ஆர்வமாக இருக்கிறார். 

பல இடங்களில் முயற்சி செய்தும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் பணம் கொடுத்தால் வாய்ப்பு என கூறிவிடுகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் கவின் மும்பைக்கு செல்கிறார்.

அங்குள்ள பிரபலமான நடிப்பு பட்டறையில் சேர வேண்டும் என நினைக்கும் கவினுக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் கஷ்டப்படும் கவின், தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் அங்கு இணைகிறார். பின் அவருக்கு ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்லும் வழியில் விபத்து ஏற்பட, கவினின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக அதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி.

படத்தை பற்றிய அலசல் 

ஹீரோ கவின் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு பட்டையை கிளப்புகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசத்திவிட்டார்.  

கவினின் தந்தையாக நடித்துள்ள லால் மற்றும் அம்மாவாக நடித்த நடிகை கீதாவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதை தொடுகிறார்கள். மகனுக்கு ஒரு தந்தையாக இல்லாமல் தோளோடு தோள் நின்று நண்பனாக லால் நடித்தது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்

ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி பொஹங்கர் இருவருக்கும் படத்தில் நல்ல ஸ்கோப். முதல் பாதியில் வரும் நடிகை ப்ரீத்தி மற்றும் இரண்டாம் பாதியில் வரும் அதிதி இருவரும் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. 

இயக்குனர் இளன் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அருமையாக திரைக்கதையில் வடிவமைத்துள்ளார். சில இடங்கள் ஸ்லோ ஆனாலும், அது படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. சினிமா என்றால் புகழின் உச்சத்தை அடைவது மட்டுமே அல்ல, அதிலிருக்கும் கஷ்டங்கள், தலைகீழாக மாறும் வாழ்க்கை குறித்தும் அழகாக எடுத்து காட்டியுள்ளார்.

ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான வாழ்க்கையை அழகாகவும், வலியுடனும், கண்ணீருடனும் எடுத்துக் காட்டியுள்ளார். அதற்கு இயக்குனர் இளனுக்கு பாராட்டுக்கள். துவண்ட இருக்கும் பல கலைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைத்திருந்த வசனங்கள் சூப்பர். ஆனால் இந்த கதை அனைவரையும் கவருமா என்பது கேள்விக்குறி தான்.

படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசையிலும், பாடல்களிலும் பட்டையை கிளப்பி விட்டார். குறிப்பாக மும்பையில் Survival-காக கவின் போராடும் போது வரும் பாடல் திரையரங்கை அதிர வைத்து விட்டது.

ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காலகட்டத்திலும் நகரம் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. பிரதீப் எடிட்டிங் பக்கா. 

பிளஸ் பாயிண்ட் 

கவின் நடிப்பு.

லால் நடிப்பு.

இளன் இயக்கம், திரைக்கதை.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.

மைனஸ் பாயிண்ட் 

இந்த கதை அனைவரையும் கவருமா என்பது கேள்விக்குறி. இதை தவிர படத்தில் குறை என்று எதுவும் பெரிதாக இல்லை.

மொத்தத்தில் ’ஸ்டார்’ 2024ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் ’சூப்பர் ஸ்டார்’..

உச்சகட்ட கவர்ச்சியில் திவ்யா பாரதி!

Quick Share

சுடிதார் அணிந்த சொர்க்கமாய் தற்போது இணையங்களில் பேச்சுலர் நாயகி திவ்யா பாரதி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் உள்ளது. இந்த புகைப்படத்தில் திகட்ட, திகட்ட கவர்ச்சியை காட்டி திக்கு முக்காட வைத்திருக்கும் திவ்யபாரதி இளசுகளின் ரத்தத்தை சூடேற்ற வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இவர் தமிழ் திரையுலகில் பேச்சுலர் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இன்று திரைப்படங்களில் நடிக்க ஓவராக வாய்ப்பை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சோஷியல் மீடியாவில் பேமஸ் ஆனாலே திரைப்பட வாய்ப்புகள் அவர்களை தேடி வந்து சேரும்.

அந்த வகையில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சோசியல் மீடியா என்று பல திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதற்கு ஏற்றது போலத் தான் நடிகை திவ்யா பாரதி வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் இருக்கும் என்று சொல்லலாம்.

இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் பேமஸ் ஆனதை அடுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் கோலிவுட்டில் முதல் முதலில் நடித்த படம் பேச்சுலர். இந்த படத்தை செல்வகுமார் இயக்க திவ்யா பாரதி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் நடித்த இவர் தனது திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் மதில் மேல் காதல் என்ற படத்தை நடித்த இவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னரான முகென் ராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சேரன் இயக்கத்தில் வெப் சீரியல்களில் நடித்து வரும் திவ்யா பாரதி ஆசை என்கின்ற படத்திலும் நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

மேலும் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து வெண்ணிற ஆடையில் முன்னழகை எடுப்பாக காட்டி உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்து விட்டது.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு கூடுதல் அழகில் முன் அழகு, இடை அழகு, பின் அழகு என்று எதையும் விட்டுவிடாமல் அப்படியே கடை போட்டுக் காட்டி இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் எத்தனை முறை கண்ட்ரோல் செய்தாலும் பார்வை அந்தப் பக்கத்தை நோக்கித்தான் செல்லும். அந்த அளவு உச்சகட்ட க்ளாமரில் கதி கலங்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் ஜொள்ளு விடாமல் இருக்க மாட்டார்கள். அத்தோடு புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வரக்கூடிய வகையில் நச்சென்று அனைவரையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான லைக்குகளை அள்ளித் தந்து திவ்யா பாரதியை சந்தோஷத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.

வெள்ளை தேவதையாய் ரசிகர்களின் மனதில் நுழைந்து விட்ட இவருக்கு இனி யோகம் தான் என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் ஒவ்வொரு வரும் கவிஞர்களாக மாறி இவரது மேனி அழகை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

விஜயகாந்த் இதைத்தான் சொன்னார்.. வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே நிமிடத்தில் கூறிய செல்வராகவ...

Quick Share

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியதை அடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த உலகத்தில் நிறைய பேரு பார்த்திருக்கேன், நான் எதுவும் சாதிக்கலையே, நான் எதுவும் சாதிக்கலையே, அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டு சாதிச்சவங்களோட கம்பேர் பண்ணி ராத்திரி பகலா நொந்து நூலாகி ரொம்ப கஷ்டப்படுறாங்க.

ஆனா நாம ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்கணும், இது என் தாழ்மையான வேண்டுகோள், நம்ம இந்த உலகத்துக்கு நிஜமாகவே வந்தது பெருசா சாதனைகள் புரியவோ, இல்ல சொத்துக்கள் ஏராளமாக சேர்த்து வைக்கவோ இல்ல. கட்டு கட்டா பணம் பதுக்கி வைக்கவும் இல்லை, எதையாவது பெருசா சாதிக்கவும் இல்லைங்க.

இந்த உலகத்துக்கு நம்ம வந்த உண்மையான காரணம் என்னன்னா, இந்த உலகத்தில் நம்ம பிறவி ஒரு பஸ் ஸ்டாப் மாதிரி. நாம் சந்தோஷமாக கிடைக்கிற பஸ் ஸ்டாண்ட்ல, இருக்குற ஊர்ல இறங்கி, அந்த ஊர்ல என்ன இருக்குன்னு சுத்தி பார்க்க முடியுமோ பார்த்துட்டு ஒரு டிராவலர் மாதிரி எல்லாத்தையும் பாத்துட்டு சந்தோஷமா இருங்க.. பூக்களை பாருங்க, மரத்தை பாருங்க, ஒவ்வொரு செகண்டும் சந்தோஷப்பட்டு அனுபவித்து கொள்ளுங்கள்.

இந்த ஆண்டவன் படைப்பின் அற்புதத்தை நம்ம என்ஜாய் பண்ணுங்க. நாம் இந்த உலகத்துக்கு வந்த ஒரே காரணம் இதுதான். மத்தபடி எதுக்கும் கவலைப்படாதீங்க, காசு இல்ல, பணம் இல்லன்னு வருத்தப்படாதீங்க. உலகத்த ரசிக்கிறதுக்கு காசு பணம் எதுவும் தேவையில்லை.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சொன்னது மாதிரி நம்ம செத்துப் போகும்போது ‘அருணாக்கயிறு கூட அத்துட்டுதாங்க நம்மள தூக்கி நெருப்புல போடுவாங்க’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியுள்ளார்.

சூர்யா குடும்பத்தால் அமீருக்கு ஏற்பட்ட அதிருப்தி!

Quick Share

அமீரின் திரைப்படம் தொடங்கியதே பருத்திவீரன் படத்தில் தான். இந்தப் படத்தில் பல பிரச்சனைகளை அமீர் சந்தித்தார். சமீபத்தில் கூட இது மிகப்பெரிய பூதாகரமாக வெடித்திருந்தது. ஞானவேல் ஆரம்பித்து வைத்த இந்த பிரச்சனையை அவரே மன்னிப்பு கேட்டு முடித்து வைத்தார்.

இந்நிலையில் இன்று அமீரின் உயிர் தமிழுக்கு படம் வெளியாகி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தன்னுடைய முதல் படத்தில் நான் தோற்று விட்டேன்.

பருத்திவீரன் படத்திற்காக புதிய நடிகரை உருவாக்கி, படத்தை எடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முதலீட்டையும் நானே செய்தேன். ஆனால் தயாரிப்பு சங்கத்தில் என்னை குற்றவாளி போல் நிற்க வைத்தார்கள். 60 நாட்கள் அங்கு கைகட்டி தான் நின்றேன்.

பருத்திவீரன் படத்திற்கு சம்பந்தம் இல்லாத பலர் என்னை கேள்வி கேட்டனர். தயாரிப்பு சங்கத்தில் வைத்து தன்னை அவமானப்படுத்திய போது யாரும் வந்து எதுவுமே கேட்கவில்லை. பருத்திவீரனாக ஹீரோவை உருவாக்கியதுக்கு குற்றவாளி பட்டமா? அவரிடம் நாம் தானே வாய்ப்பு கேட்டோம் என்று கூட யோசிக்கவில்லை.

அப்போது நான் தனி ஆளாக தான் நின்றேன் என்று சூர்யா குடும்பத்தை பற்றி அமீர் பேசி இருந்தார். அதாவது பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யா குடும்பம் அமீர் பக்கம் ஒரு கருத்தையும் வைக்காதது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தற்போது நடந்த பிரச்சனையில் கூட ஞானவேலுக்கு எதிர்ப்புகள் கிளம்பவே அவர் மன்னிப்பு கேட்டார்.

மேலும் சமீபத்தில் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் தயாரிப்பில் அமீர் நடித்துள்ளார். இவர்கள் பல வருடங்களாக நட்புடன் பழகி வருவதால் அமீர் மீதும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய அமீர் இப்போதும் இதனால் 70 நாட்கள் குற்றவாளியாக நிற்கிறேன், கண்டிப்பாக இதிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிப்பேன் என்று அமீர் கூறுகிறார்.

விஜய்யின் அரசியல் என்டரிக்கு லாரன்ஸ் கூறிய கருத்து!

Quick Share

ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் என்பதையும் தாண்டி மக்களுக்கு ஒரு நல்ல மனிதராகவும் பல நல்லதுகளை செய்து வருகிறார். முக்கியமாக மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அதை முன்னுக்கு கொண்டு வரும் வகையில் லாரன்ஸ் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அத்துடன் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார். இப்படி இவருடைய நல்ல விஷயங்களை பாராட்டிக் கொண்டே போகலாம் எக்கச்சக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் பலரும் வியந்து பார்க்கும் வகையில் தற்போது விவசாயிகளுக்கு 10 டிராக்டர் வாங்கி கிராமங்களில் ஏழ்மையில் வாடும் விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கூட்டும் வகையில் உதவி கரம் நீட்டி வருகிறார். அது மட்டும் இல்லாமல் முதியவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் ரகசியத்தை அப்பட்டமாக கூறிய லாரன்ஸ் இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் துவக்கப்பட்ட “மாற்றம்” என்ற ஒரு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இவருடன் இணைந்து பொதுமக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். இவருடைய இந்த மனசுக்கு ரஜினி பாராட்டு மழை பொழிந்து இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவரை பத்திரிகையாளர்கள் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு விஜய் சார் எதையும் யோசிக்காமல் ஆரம்பிக்க மாட்டார். அவர் எது செஞ்சாலும் அதற்குப் பின்னணியில் மக்களின் நலனுக்காக தான் இருக்கும். அந்த வகையில் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் எந்த ஒரு விஷயம் பண்ணாலும் அதில் பெர்ஃபெக்ஷன் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அந்த வகையில் அரசியலுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல நல்ல விஷயங்களை செய்து அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்று கூறி இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் அரசியலில் நுழைந்த பொழுது பல பிரபலங்கள் கூறியது கிட்டத்தட்ட 250 கோடி சம்பளமாக வாங்கும் ஒரு ஹீரோ அனைத்தையும் உதறிவிட்டு அரசியலுக்குள் நுழைகிறார் என்றால் கண்டிப்பாக மக்களின் நலனுக்காக தான் இருக்கும். அந்த வகையில் அவருடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் என்று பல பிரபலங்கள் கூறியிருக்கிறார்.

இப்படி ஒவ்வொருவரும் விஜய்ன் அரசியலின் வருகைக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எடுத்து சொல்லி அவருக்கு ஒரு ஊக்குவிப்பை கொடுத்து வருகிறார்கள். இது கண்டிப்பாக விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய கைகளுடன் மோத தயாரான சூரி!

Quick Share

சூரி இப்போது காமெடியை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக கமிட்டாகி வருகிறார். அதில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருக்கும் கருடன் இப்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. அதன் போஸ்டரை சூரி தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி கருடன் மே மாதத்தை குறி வைத்து வெளியாக இருக்கிறது. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் மூலம் சூரியும் இந்த மே மாத ரேசில் களம் இறங்கியுள்ளார்.

மேலும் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் மே மாதம் தொடங்கி வெளியான அரண்மனை 4 வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போட்டது.

அதையடுத்து இன்று வெளியான ஸ்டார் படமும் நல்லா விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி மே மாதம் ராசியான மாதமாக மாறி உள்ளது.

அந்த வரிசையில் வெளியாகும் கருடன் வெற்றி வாய்ப்பை தட்டி தூக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த வாரம் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்காது.

சிம்பு நடிக்க கூடாது’ – ஐசரி கணேஷ் புகார்

Quick Share

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக சமீபத்தில் புரோமோ வீடியோ வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். “நான் தயாரிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்தை சிம்பு நடித்து முடித்து கொடுக்கவில்லை. கொரோனா குமார் படத்தை முடிக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா!

Quick Share

இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. கடைசியாக அனிமல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்து இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த நிலையில், அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட் சினிமாவில் 58 வயதாகும் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

பாலிவுட்டில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸின் திரைப்படம் சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இடமிருந்து பிரிக்க முடியாத 2 விஷயங்கள்!

Quick Share

கமர்சியல் படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில் கில்லாடியாக செயல்படுவார் சுந்தர் சி. இவரின் அரண்மனை சீரிஸ் 4 பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அரண்மனை நான்காம் பாகம் வெளியாகி சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

சுந்தர் சி, இவரிடம் இருந்து சினிமாவில் பிரிக்க முடியாத இரண்டு விஷயங்கள் ஒன்று காமெடி மற்றொன்று கிளாமர். இவரின் படைப்புகளில் இந்த இரண்டும் இல்லாத படங்களை பார்ப்பது மிகவும் கடினம். கைப்புள்ள, நாய் சேகர், வீரபாகு போன்ற காமெடி கதாபாத்திரங்களும் இவரின் படைப்பு தான்.

அரண்மனை நான்காம் பாகத்தில் குடும்பத்தோடு சேர்ந்து வந்து ரசிக்கும்படி அமைத்து விட்டார். இதுவே இந்த படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இன்று வரை ஃபேமிலி ஆடியன்ஸ் தான் தியேட்டரில் அதிகமாக வந்து பார்க்கின்றனர்.

எப்பொழுதுமே சுந்தர் சி படங்கள் என்றால் இந்த நான்கு நடிகர்களையும் எல்லா படங்களிலும் பார்க்கலாம். பூனம்பஜ்வா, ராய் லட்சுமி, விச்சு விஸ்வநாத், மனோபாலா இவர்களை சுந்தர் சி விட்டுக் கொடுக்க மாட்டார். அதுவும் அரண்மனை போன்ற பேய் படங்களில் இவர்கள் நிச்சயமாக நடிப்பார்கள்.

இப்பொழுது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அரண்மனை 4ல் பழைய நான்கு நடிகர்களை சேர்க்காமல் புதுவிதமான ஒரு முயற்சியில் கலக்கி விட்டார். வி டிவி கணேஷ், சிங்கம்புலி, நமோ நாராயணன், மொட்ட ராஜேந்தர் என பழைய பாகத்தில் நடிக்காத ஆட்களை போட்டு மாஸ் ஹிட் கொடுத்து விட்டார்.

கோட் படத்தில் தளபதியுடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்…!

Quick Share

விஜய்யின் கோட் படத்தில் பிரபலம் ஒருவர் நடிப்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெங்கட் பிரபு படம் என்றாலே எக்கச்சக்க பட்டாளம் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மைக் மோகன், அஜ்மல், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என பலர் சங்கமித்து உள்ளனர். விஜய் பிறந்தநாள் அன்று கோட் படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கோட் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார். அதாவது வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார். அதற்கான கண்டிப்பாக கூட இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் கோட் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இருந்ததால் கண்டிப்பாக ஒரு சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெங்கட் பிரபுவை சிவகார்த்திகேயன் சந்திக்க வேண்டும் என்றால் அவரது வீடு அல்லது வேறு இடத்தில் சந்தித்து இருக்கலாம்.

ஆனால் கோட் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார் என்றால் கண்டிப்பாக நடித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பெரிதும் ஆசைப்பட்ட நிலையில் சில காரணங்களினால் அது முடியாமல் போனது.

இப்போது விஜய்யுடன் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். மேலும் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் உருவாகி வருகிறது.




You cannot copy content of this Website