சினிமா

பயில்வான் மகளின் அந்தரங்கத்தை போட்டு உடைத்த ஷகிலா!

Quick Share

பத்திரிக்கையாளராக இருந்தாலும் யூடியூப் தான் பயில்வான் ரங்கநாதனை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை புட்டு புட்டு வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். இதனால் இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அவ்வளவு ஏன் நடுரோட்டில் இவரிடம் மல்லுக்கு நின்ற நடிகைகளும் உண்டு. ஆனாலும் இவர் நான் சினிமாவை சுத்தப்படுத்துகிறேன் என்று தன் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரை தலைகுனிய வைக்கும் விதமாக ஷகிலா நறுக்கென்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதில் ஷகிலா பயில்வானை சரமாரியாக வறுத்தெடுத்துள்ளார். அவர் சொன்ன ஒரு விஷயம் தான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது பயில்வானுடைய கடைசி பெண் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்பதுதான்.

இதை ஷகிலா பகிரங்கமாக கேட்ட நிலையில் பயில்வான் உங்கள் நாக்கு அழுகிடும் என கடும் கோபத்தோடு பதிலளித்தார். ஆனால் அவரோ இதற்கு ஆதாரம் இருக்கிறது. இதை நேரில் பார்த்த என்னுடைய நண்பர் தான் கூறினார் என தெரிவித்தார்.

ஆனாலும் பயில்வான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இதை பார்த்தால் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னி கதையாக தான் இருக்கிறது.

அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி பேசும் போது வராத கோபம் தன்னுடைய பெண் என்றதும் வந்துவிட்டது. இதைத்தான் ஷகிலா நறுக்குன்னு கேட்டு பயில்வான் மூக்கை உடைத்தார்.

மகள் திருமணத்திற்கு பல கோடி செலவு செய்த ரோபோ ஷங்கர்!

Quick Share

நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் ஆனவர். சின்ன வயதில் பாடி பில்டிங் செய்து வந்த அவர், காமெடி ட்ராக்கில் குதித்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ரோபோ ஷங்கர் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவருக்கு என்று ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அதற்காக ரோபோ ஷங்கர் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

அவ்வளவு செலவு செய்தது ஏன் என சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.

எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த ஒரே ஆள் நான் தான். அந்த அளவுக்கு சிம்பிளாக என் திருமணம் சென்னை வடபழனியில் நடந்தது.

அதனால் மகள் திருமணத்தையாவது பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி செலவு செய்தேன் என ரோபோ ஷங்கர் பேசி இருக்கிறார்.

திடீரென ட்ரெண்டாகும் மஞ்சும்மல் பாய்ஸ்! குணா குகையை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்..

Quick Share

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த படத்தில் ஸ்ரீநாத் பாசி, ஷாகீர் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கொடைக்கானலில் சுற்றுலாவுக்காக நண்பர்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக குணா குகையில் ஒருவர் மாட்டிக் கொள்ள அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். மோலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றது.

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இரண்டு மாதங்கள் கழித்து இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. மீண்டும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற சுவாரசியமான காட்சிகளை வீடியோக்களாக ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற ஹேர் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

மலையாள சினிமாவில் வெளியான இந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். அதோடு இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு எக்கச்சக்கமானோர் குணா குகையை பார்க்க அதிகம் படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் வீடியோ பதிவு..யாருக்காக இந்த வீடியோ ?

Quick Share

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

மறைந்த நடிகர் குமரிமுத்து அளித்திருந்த பேட்டியில் நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார். அந்த பாடல் பின்வருமாறு;

பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்

இந்த பாடலில் ’யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம், நீங்கள் படித்தவர்கள்தான், இல்லை என்று சொல்லவில்லை, சில நூல்களை மட்டுமே கற்றவர், பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள். பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள், ஒரு பெரிய சூரியனின் ஒளியில் இருந்து காப்பது சிறு குடை தான்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு என்ன சொல்ல வருகிறது? யாரை குறிப்பிடுகிறது என்பது உங்களுக்கு புரிந்தால் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

இந்த படத்தை 50 முறை பார்த்தேன்.. ரீமேக் செய்யப்பட்ட ரஜினி படம் குறித்து செல்வராகவன்..!

Quick Share

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தை சுமார் 50 முறை பார்த்து உள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா, சுரேஷ்கோபி, நெடுமுடி வேணு நடித்த ’மணிசித்திரதாழ்’ என்ற திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே இந்த படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தான் கன்னடத்தில் ’ஆப்தமித்ரா’ தமிழில் ’சந்திரமுகி’ ஹிந்தியில் ’Bhool Bhulaiyaa’, பெங்காலியில் ‘Rajmohol’ என ரீமேக் வெளியானது என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் சென்னையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் பாசில் இயக்கத்தில் உருவான ’மணிசித்திரதாழ்’ என்ற திரைப்படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருப்பேன் என்றும் பாசில் அவர்களுடைய கிளாசிக் திரைப்படம் என்றும் ஷோபனா சூப்பராக நடித்திருப்பார் என்பது மட்டுமின்றி அவர் தேசிய விருதையும் வாங்கினார் என்றும் மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்தை 50 முறைக்கு மேல் பார்த்துள்ளதாக செல்வராகவன் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான பேருக்கு அசால்டாக சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்…

Quick Share

தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய சமையல்காரர் மற்றும் நடிகர் ஆவார்.திரில்லர் படமான பெண்குயின் படத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கராஜன் என்னதான் பொறியியல் துறையை படித்தாலும் முழுக்க முழுக்க சமையலில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார்.மேலும் அனிமேஷன் செய்ய விரும்பினார்.1999இல் குடும்பத்தில் தனது சகோதரனருடன் இனைந்து வணிகங்களை எடுத்து கொண்டார்.பிறகு பெங்களூக்கு சென்று மெஸ் உணவகம் ஒன்றை தொடங்கினார்.பின் மாதம்பட்டிக்கு திரும்பியதும் சிறு சிறு நிகழ்ச்சியில் சமைக்க ஆரம்பித்தார் .

பிறகு ரங்கராஜன் அவர்கள் திரைப்பட குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தபோது அவர்களுக்கு தனியாக உணவு அளித்தார்.நடிகர் கார்த்தியின் திருமணம் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட திருமணத்தில் உணவு வழங்கியுள்ளார்.ரங்கராஜ் பச்சை கொய்யா சட்னிக்கான செய்முறையை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

மெஹந்தி சர்க்க்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன்.ஒரு சிறந்த சமையல்காரராக பிரபலம் அடைந்தார்.இன்று பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.இன்னும் வாழ்வில் பல வெற்றிகளை காண மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்!ரசிகர்கள் கொண்டாட்டம்..

Quick Share

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என எக்கசக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க உள்ளனர்.

இந்த நிலையில் CSK வீரர்கள் கோட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த காட்சியில் வெங்கட் பிரபுவும் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை, பொறுத்து இருந்து பார்ப்போம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் மோதலில் இளையராஜா- உக்ரத்தோடு காத்திருக்கும் சன் பிக்சர்ஸ்!

Quick Share

இளையராஜா, வைரமுத்து பிரச்சனை ஒரு பக்கம் கூலி டீசர் சர்ச்சை ஒரு பக்கம் என பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் சன் பிக்சர்ஸ் என்ன செய்யப் போகிறது என்பதை தான் பலரும் கவனித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாரிடம் கூட இன்று பத்திரிகையாளர்கள் இளையராஜா விவகாரத்தை பற்றி கேட்டனர். அதற்கு அவர் இது ப்ரொடியூஸருக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை என ஒதுங்கி விட்டார்.

அதிலிருந்தே நிச்சயம் ஏதோ சம்பவம் இருக்கு என பேசப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் இளையராஜா தேன் கூட்டில் கை வைத்தது போல் சன் நிறுவனத்திடம் சிக்கிவிட்டார் என பகீர் கிளப்பியுள்ளார்.

அதாவது சன் நெட்வொர்க் மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்கள். அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை தருவதற்கு ஒரு குழுவே இருக்கிறது.

அப்படி இருப்பவர்கள் இது போன்ற ராயல்ட்டி விஷயத்தை எல்லாம் கவனிக்காமலா இருந்திருப்பார்கள். நிச்சயம் இதற்கு சன் பிக்சர்ஸ் பதிலடி கொடுக்க காத்திருப்பார்கள்.

அதேபோல் இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வந்தால் இளையராஜாவுக்கு தான் அவமானம் ஏற்படும். எப்படி லதா ரஜினிகாந்தை கோர்ட் எச்சரித்து அனுப்பியதோ இசைஞானிக்கும் அதுதான் பரிசாக கிடைக்கும்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இவர் தேவையில்லாமல் பிரச்சனை செய்திருக்கிறார். அதன் பலனை இளையராஜா கட்டாயம் அனுப்பவிப்பார் என பாண்டியன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி தொடங்கிய புதிய ஓடிடி!

Quick Share

இப்போது தியேட்டரை காட்டிலும் ஓடிடி தான் ரசிகர்களின் பிரியமான தளமாக இருந்து வருகிறது. ஏனென்றால் தியேட்டருக்கு செல்வதான நேரம் மற்றும் டிக்கெட் செலவு ஆகியவற்றை ஒப்பிடும்போது ஓடிடி மிகவும் குறைவாக உள்ளது.

அதிலும் விடுமுறை நாட்களில் வீட்டுக்குள்ளேயே தங்களது அறையிலேயே புதிய படத்தை பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் வாரம் வாரம் நிறைய படங்களை வெளியிட்டு வருகிறது.

இப்போது அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியோருக்கு ஆட்டம் காட்ட போகிறார் விஜய் சேதுபதி. அதாவது பெரிய நடிகர்கள் விரைவில் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி வருகிறார்கள்.

ஆனால் இப்போது ட்ரெண்டிங்கில் ஓடிடி தளங்கள் இருப்பதால் விஜய் சேதுபதி ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது சமீபத்தில் விஜய் சேதுபதி பட இயக்குனர் சீனு ராமசாமி ஒன் பிளஸ் என்ற ஒடிடி தளத்தை தொடங்கினார்.

மாதம் வெறும் 29 ரூபாயில் 800க்கும் மேற்பட்ட படங்களை இதில் கண்டு களிக்கலாம். மற்ற ஓடிடி நிறுவனங்கள் மாதத்திற்கு 200 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஆகையால் இதில் மிகவும் குறைந்த தொகையை வைத்தால் கண்டிப்பாக மக்கள் பார்ப்பார்கள் என்ற சூட்சமத்தை செயல்படுத்தியுள்ளனர்.

சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் மாமனிதன், தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர்களுக்குள் நட்பை தாண்டி ஒரு நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இதனால் சீனு ராமசாமி முன்னிலைபடுத்தி விஜய் சேதுபதி தான் இந்த ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நடிகர்கள் வேறு ஒருவரின் பெயரில் சைலன்ட் பார்ட்னர் ஆக இருப்பார்கள். அதேபோல் தான் பின்னால் இருந்து இந்த நிறுவனத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி.. நடமாடும் கர்ணனாக மாறிய கேபிஒய...

Quick Share

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அவ்வப்போது பொதுமக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சென்னையில் வெள்ளம் வந்தபோது பல வீடுகளுக்கு அவரே சென்று பணம் கொடுத்தார் என்பதும் தெரிந்தது.

அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கம்ப்யூட்டர் லேப்டாப் உள்ளிட்டவையும் அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது போன்ற செய்திகள் வீடியோ மூலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாலாவுக்கு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது கிடைத்த நிலையில் அந்த விருது கிடைத்த மகிழ்ச்சியில் அவர் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் தன்னுடைய மகனின் படிப்புக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பதாகவும் கூறினார்.

அவர் கூறியதை கவனமுடன் கேட்ட பாலா உடனே தனது பாக்கெட்டில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து அவருடைய கையில் கொடுத்து படிப்புக்காக ஃபீஸ் கட்டிக் கொள்ளுங்கள் என்று கொடுத்து விட்டு சென்று விட்டார். விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் தற்செயலாக அவர் சந்தித்த ஒரு பெண்ணின் பையன் படிப்புக்கு உதவி செய்ததை அடுத்து அவர் நடமாடும் கர்ணனாக வாழ்ந்து வருகிறார் என்று இந்த வீடியோவுக்கு பலர் கமண்ட் அளித்து வருகின்றனர்.

கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை.. ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Quick Share

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை படிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயல்வெளியில் கட்டாந்தரையில் பாரதியார் புத்தகத்தை உட்கார்ந்து கொண்டு படிப்பது, பாரதியார் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது மற்றும் படுத்துக் கொண்டே அந்த கவிதையை நினைத்து ரசிப்பது போன்று போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த பதிவுக்கு ’பாரதி கண்ட புதுமைப்பெண் இவளோ’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. மேலும் ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த பதிவில் ரம்யா பாண்டியன் பாரதியாரின் சில வரிகளை குறிப்பிட்டுள்ளார். அந்த வரிகள் இதோ:

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோம்என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.

கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நயன்தாரா..!மாஸ் நடிகருக்கு தங்கையாக களமிறங்கியிருக...

Quick Share

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் யாஷ் என்பதும் இவர் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ ஆகிய இரு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது யாஷ், ’ராமாயணம்’ என்ற படத்தில் ராவணன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

’டாக்ஸிக்’ படத்தில் யாஷ் சகோதரியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கால்சீட் காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இதனை அடுத்து அந்த கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா, சகோதரி வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த கேரக்டரில் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதால் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.நடிகை நயன்தாரா ஏற்கனவே மாதவன் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website