விளையாட்டு

3 ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு 4.40 லட்சம் பீஸ் காட்டுகிறார் M .S தோணி..!வைரலாகும் ஸ்...

Quick Share

 3ஆம் வகுப்பில் படிக்கும் தோனியின் மகளுக்கு தோனி இவ்வளவு பீஸ் கட்டுகிறாரா என்று ஒரு விடயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்து பெருமைப்படுத்தியவர்.

இப்படி கிரிக்கெட் உலகில் ஜாம்பவாக இருக்கும் தோனி ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. தோனி 2010ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி சாக்‌ஷி என்றப் பெண்ணை திருமணம் செய்தார். இநத தம்பதிகளுக்கு ஷிவா என்ற பெண் குழந்தையும் உள்ளார்.

மகளின் ஸ்கூல் பீஸ் 

இந்நிலையில் தோனி பற்றிய ஒரு செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது தோனி தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு கட்டுகிறார் என்ற தகவல் தான் அது.

அதாவது தோனியின் மகள் தற்போது தான் 3ஆவது படித்து வருகிறார்.  அவர் படிக்கும் பள்ளியில் ஆண்டு கட்டணமாக 2.75 இலட்சம் ரூபா பீஸாக கட்டுகிறாராம். இது ஒரு மாதத்திற்கு 23 ஆயிரம் ரூபாவாம். 

மேலும், அந்தப் பள்ளியில் போர்டிங் வசதியும் இருக்கிறதாம் அதில் தோனியின் மகள் சேர்த்திருந்தால் மொத்தமாக 4.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்நிலையில் தற்போது தோனி மகளின் ஸ்கூல் பீஸ் விபரம் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

விராட் கோலியின் அண்ணன் யார் தெரியுமா? பெரிய தொழிலதிபர்.. கோடிகளில் கொட்டும் வருமானம்

Quick Share

விராட் கோலியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து பெரும் சம்பளம், விளம்பரத்தில் நடிக்கும் தொகை, ஆன்லைன் போஸ்ட்களுக்கு பெரும் தொகை போக அவர் தனியாக ஒன்8 (One8) என்ற பிராண்ட் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். 

இந்த பிராண்டில் துணிகள், காலணிகள், உணவகங்கள் மற்றும் பார் போன்றனவும் அடங்கும். இதில் ஒன்8 கம்யூன் என்று பிரத்யேகமாக டெல்லியில் இயங்கும் உணவகமும் அடங்கும்.

இந்த லாபகரமான தொழிலில் விராட் கோலியும் அவரது சகோதரரான விகாஸ் கோலியும் பல வருடங்களாக பார்ட்னர்களாக உள்ளனர். 

இவர்தான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். விராட் கோலியின் ஜெர்சி எண்ணான 18ஐ பிரதிபலிக்கும் விதமாகவே இந்த நிறுவனத்திற்கு ஒன்8 என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் நடத்தும் உணவகங்கள் மற்றும் பார்களில் மட்டும் இந்த ஆண்டு 112 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

தொழில் கூட்டாளியாக மட்டும் இல்லாமல் விகாஸ் கோலி தொடர்ந்து விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்துள்ளார். 

இளம்வயதில் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மோசமாக விளையாடும் நேரத்தில் வழிகாட்டுவது மற்றும் அவரை உற்சாகப்படுத்துவது என விராட் கோலியுடனே பயணித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் குறுகிராமில் வசிக்கும் இவருக்கும் சேத்னா என்ற துணைவியாரும், ஆரவ் கோலி என்ற மகனும் உள்ளனர்.

விலையுயர்ந்த கடிகாரங்களை சேகரிப்பது இவரது பொழுதுபோக்காக உள்ளது. இதுபோக கிரிக்கெட்டிலும் மிகுந்த ஆர்வமுள்ள இவரை அடிக்கடி ஆர்.சி.பி வீரர்களுடன் பார்ட்டியிழும் சிலசமயம் தோனியுடனும் காணமுடியும். 

எம்எஸ் தோனிக்கு சாக்லேட் கொடுத்த விமான பணிப்பெண் – வைரலாகும் வீடியோ!

Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும்.

அதுபோன்ற ஒன்று தற்போதும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் தோனி ஒரு விமானத்தில் பயணம் செய்கிறார். பயண நேரத்தை கழிப்பதற்காக அவர் தனது டேப்பில் கேண்டி கிரஸ் கேமை விளையாடி கொண்டு இருக்கிறார். 

அப்போது பணிப்பெண் ஒருவர் ஒரு தட்டு முழுவதும் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்குகிறார். இதைப்பார்த்து மகிழ்ந்த தோனி அன்புக்காக ஒரு சாக்லேட்டை மட்டும் எடுத்துக்கொண்டார். 

அப்போது அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஏதோ எழுதியிருந்தது. அதைப்படித்துப் பார்த்த தோனி பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீதமுள்ள சாக்லேட்டுகளை திருப்பி கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

தந்தை இறப்பு… 17 வயது விராட் கோலி ஆடிய ஆட்டம் குறித்து ஆச்சர்யப்பட்ட சக வீரர்!

Quick Share

இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி, இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். ஆனால் 17 வயதில் போட்டிக்கு முன்பு தந்தையின் இறப்பு செய்தி கேட்டுவிட்டு விராட் கோலி களம் இறங்கியது குறித்து அவருடைய நண்பரும் சக வீரருமான இஷாந்த் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் அண்டர் 17 கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விராட் கோலியுடன் ஒன்றாக விளையாடியும் நண்பராகவும் இருந்துவரும் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த இஷாந்த் சர்மா கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவரை 105 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் அதேபோல தோனி தலைமை, விராட் கோலி தலைமை என்று மூத்த வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர்.

தற்போது 34 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக டெல்லி அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் விராட் கோலியைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நாங்கள் 17 அண்டர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தோம். அப்போது ஒருநாள் கோலி சோகமாக தனித்து இருந்தார். ஏனென்று கேட்டேன். அருகில் இருந்தவர் அவரது தந்தை இறந்த தகவலைக் கூறினார். இதைக் கேட்டவுடன் எப்படி அந்த நேரத்தை எதிர்கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

ஆனால் தந்தை இறப்பின்போதும் விராட் கோலி களத்தில் இறங்கி டெல்லி அணிக்காக, கர்நாடக அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடினார். 80 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்றே தெரியவில்லை. நானாக இருந்தால் களத்திற்கே சென்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஃபிட்னஸ் விஷயத்தில் விராட் கோலி அதிக அக்கறை கொண்டவர். கிரிக்கெட் வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். அவருடைய தலைமையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டினர் என்றும் தற்போது ஆன்மிக விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்றும் விராட் கோலி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17 வயதில் தந்தையின் இறப்பு செய்தி கேட்ட பிறகும் போட்டிக் களத்தில் இறங்கி விளையாடிய விராட் கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

சிஎஸ்கே வெற்றி; இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படத்தை மாற்றிய ஜடேஜா…!

Quick Share

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. மழை குக்றுக்கீடு காரணமாக சென்னை அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 எடுத்து திரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது அப்போது ஸ்டிரைக்கில் இருந்த ஜடேஜா சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்பத்தை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது முகப்பு புகைப்படத்தில் வைத்துள்ளார்.

ஐபிஎல் இறுதி போட்டியில் வென்ற சென்னை அணி! ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய தோனி

Quick Share

அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய சென்னை அணியின் கேப்டன், தோனி ஓய்வு குறித்து பேசியுள்ளார். 

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 

ஐபிஎல் இறுதி போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

மழையின் காரணமாக சிறிது தாமதமாக பேட்டிங்கை துவங்கிய சென்னை அணி, 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை எதிர்கொண்டு ஆடி, சாம்பியன் பட்டம் வென்றது. 

ஓய்வு குறித்து தோனி உருக்கம் 

இதனை தொடர்ந்து ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இது குறித்து பேசிய தோனி 

‘மிகவும் உணர்வுப்பூர்வமான இறுதி போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். என் கண்களில் கண்ணீர் மிதந்தது, என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம், ஆனால் எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், அடுத்த 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. அது என்னிடம் இருந்து கிடைக்கும் பரிசாக இருக்கும், அதற்காக நான் உடலை தயார் செய்ய வேண்டும்.

ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதங்கள் இருக்கிறது. சென்னை அணி ரசிகர்கள் தங்கள் அன்பையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய விதத்திற்காக, இது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று’ என தோனி கூறியுள்ளார்.  

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி – வைரலாகும் வீடியோ

Quick Share

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தோனியிடம் கையெழுத்து வாங்கிய வீரர்கள்

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால், போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்..

இதனையடுத்து, தோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் தோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். 

தோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் தோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர். 

சமீபத்தில் தோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் ‘இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை’ என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

பிரபல கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் பாதிப்பு

Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது ஸ்கிரீனிங் சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது மார்பில் இருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கின்றனர். சிகிச்சை எடுத்துக்கொண்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும், தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார். மேலும் வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்று அவர் சக கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக சாம் பில்லிங்ஸ் மூன்று டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார், மெஸ்ஸி!

Quick Share

ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை மற்றும் அணிக்கு Laureus விருது வழங்கப்பட்டு வருகிறது. 2000-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அதனால் ஆண்டின் சிறந்த அணிக்கான விருதை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் தனிநபர் மற்றும் அணி என இரண்டு விருதினை மெஸ்ஸி இந்த முறை வென்றுள்ளார். கடந்த 2020-ல் லூயிஸ் ஹாமில்டனுடன் இணைந்து சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை மெஸ்ஸி பெற்றிருந்தார்.

ஜமைக்காவின் தடகள வீராங்கனை ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார். டென்மார்க்கின் கால்பந்தாட்ட வீரர் எரிக்சன் களத்தில் கம்பேக் கொடுத்தமைக்காக ‘கம்பேக் ஆப் தி இயர்’ விருதை வென்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் ‘பிரேக் த்ரூ ஆப் தி இயர்’ விருதை வென்றார்.

WWE முன்னாள் வீராங்கனை மரணம்…

Quick Share

அமெரிக்காவின் பிரபல நட்சத்திர மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்தவர் சாரா லீ(30). இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மர்மமான நிலையில், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாரா லீ-இன் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-ன் “Tough Enough” நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் சாரா லீ வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாரா லீக்கு வெஸ்லி பிளேக் என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தோனி ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்…!12 ம் தேதி வெளியாகும் தோனி படம்…!

Quick Share

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி சென்னை அணி விளையாடும் மற்ற மைதானங்களில் கூட சென்னை அணியின் ரசிகர்கள் சூழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பு என்னவென்றால் எம்.எஸ். தோனி படம் வருகிற 12ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான M.S. Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில், ஐபிஎல்லில் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வரும் சூழலில், படத்தை வரும் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு மகிழ்ந்துள்ளது.

லியோனல் மெஸ்ஸிக்கு தற்காலிக தடை

Quick Share

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி அதிர்ச்சி அளித்துள்ளது. மெஸ்ஸிக்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவுக்கு அனுமதியின்றி சென்றதற்காக மெஸ்சி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த இரண்டு வாரங்களுக்கு அணியுடன் விளையாடவும், பயிற்சியில் பங்கேற்கவும் தடை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது எந்த கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது. சவுதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராகப் பணிபுரியும் மெஸ்ஸி, ட்ராய்ஸ் மற்றும் அஜாசியோவுக்கு எதிரான லீக் 1 போட்டிகளில் பங்கேற்க முடியாது.




You cannot copy content of this Website