விளையாட்டு

15வது திருமண நாளைக் கொண்டாடிய MS தோனி-சாக்ஷி: குவியும் வாழ்த்துக்கள்

Quick Share

MS தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷியும் தங்களின் பதினைந்தாவது திருமண நாளைக் கொண்டாடி கேக் வெட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது 15வது திருமண நாளை தனது மனைவி சாக்ஷியுடன் கொண்டாடியுள்ளார்

இருவரும் ஜூலை 4, 2010 அன்று டேராடூனில் நடைபெற்ற தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி கேக் வெட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தங்கள் நாய் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் போது தம்பதிகள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டுவதை வீடியோவில் காணலாம். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

T20 உலக கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Quick Share

T20 உலக கோப்பை தொடரின்  2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மழை குறுக்கீடு

T20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.

பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கியது, தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விராட் கோலி 9 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 4 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை  இந்திய அணி குவித்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டம்

மீண்டும் போட்டி தொடங்கிய போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ்  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஓட்டங்களை சீராக உயர்த்தினர்.

கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து இருந்த போது அடில் ரஷித் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து பின்னர் வந்த பாண்டியா அதிரடியாக 13 பந்துகளில், 23 ஓட்டமும், ஜடேஜா 9 பந்தில் 17 ஓட்டமும் சேர்த்து இந்திய அணியின் ஓட்டத்தை அதிகரித்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்துள்ளது.

172 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி குவித்தால் 2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி தகுதி பெறும். 

 அசத்திய இந்திய பந்துவீச்சாளர்

இதனை தொடர்ந்து 172 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சால்ட் முதன்மை ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Bairstow is gone for a duck! #AxarPatel‘s classic skidder sends the dangerous #JonnyBairstow to the pavilion 🔥#SemiFinal2 👉 #INDvsENG | LIVE NOW | #T20WorldCupOnStar (only available in India) pic.twitter.com/YbRq3qf5bl— Star Sports (@StarSportsIndia) June 27, 2024

கேப்டன் ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 23 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் அக்சர் படேல் வீசிய 4 ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சால்ட் பும்ரா வீசிய  4 ஓவர் 4வது பந்தில் வெறும் 5 ஓட்டங்கள் சேர்த்து இருந்த போது போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த மொயின் அலி(8) ஜானி பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2), லியாம் லிவிங்ஸ்டன்(11) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் தள்ளினர்.

அதிகபட்சமாக ஹரி ப்ருக் மட்டும் (25) ஓட்டங்கள் குவித்து குல்தீப் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அரையிறுதியில்  இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது

அதே சமயம் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் T20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. .

முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா! ஆப்கானை 56 ரன்னுக்...

Quick Share

டி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 

முதல் அரையிறுதிப் போட்டி

டிரினிடாட்டின் பிரைன் லாரா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியமுதல் டி20 உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி நடந்தது. 

நாணய சுழற்சியில் வென்று ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஜென்சென் பந்துவீச்சில் குர்பாஸ் ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து, குல்பதின் நைப் 9 ஓட்டங்களில் அவரது ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். ரபாடாவின் மிரட்டல் பந்துவீச்சில் இப்ராஹிம் ஜட்ரான் போல்டு ஆகி வெளியேற, அதே ஓவரில் நபி டக்அவுட் ஆனார். 

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா 

அதன் பின்னர் ஷம்ஸியின் மாயாஜால சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ச்சி அடைய, ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதன்மூலம் முதல் முறையாக டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. 

கோலி, ரோஹித் சர்மாவுக்கு இதுவே இறுதி வாய்ப்பு! முன்னாள் வீரர் எச்சரிக்கை

Quick Share

டி20 உலகக்கோப்பை தான் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் சூன் 2ஆம் திகதி தொடங்குகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் களம் காண உள்ளது. அதில் விராட் கோலியும் இருப்பதால், 2019யில் தவறவிட்ட உலகக் கிண்ணத்தை இந்திய அணி இம்முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் இந்த உலகக்கிண்ணம் தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு எனது தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், ”ரோஹித் சர்மாவுக்கு அவர் நீண்ட காலம் விளையாடப் போவதில்லை என்பது தெரியும். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் தான். விராட் கோலியும் அதேபோல் தான். எனவே இருவருக்கும் இதுவே கடைசி வாய்ப்பு. அகமதாபாத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர். 

கிண்ணத்தை அவர்களிடம் இருந்து பறித்தது போல் விளையாடினர். இதயங்கள் உடைந்தன மற்றும் ரசிகர்கள் மனம் உடைந்தனர். இம்முறை லீக் சுற்றில் இந்தியாவிற்கு பெரிதளவில் போட்டியில்லை. 

அரையிறுதி மற்றும் இறுதி ஆகிய 2 போட்டிகள் மட்டுமே இந்தியாவிற்கு கடினமாக இருக்கும். நீங்கள் அந்த 2 நாட்களுக்கு தயாராக இருக்கிறீர்களா? இதுவே ரோகித் சர்மாவுக்கு பாரிய சோதனை ஆகும்” என தெரிவித்துள்ளார். 

CSKக்கு எதிராக சதம் விளாசிய கில், சுதர்சன்! மைதானத்தை அதிர வைத்த ஆட்டம் (வீடியோ)

Quick Share

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 232 ஓட்டங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ருத்ர தாண்டவம்

அகமதாபாத் மைதானத்தில் CSK மற்றும் Gujarat Titans அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். சென்னை அணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களை தெறிக்கவிட்ட இருவரும் அதிரடி சதம் விளாசினர். 

210 பார்ட்னர்ஷிப் 

இவர்களின் பார்ட்னர்ஷிப் 210 ஓட்டங்களை அணிக்கு சேர்த்தது. சாய் சுதர்சன் 51 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து தேஷ் பாண்டேவின் அதே ஓவரில் சுப்மன் கில்லும் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 55 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். 

பின்னர் வந்த மில்லர் 11 பந்தில் 16 ஓட்டங்கள் எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 231 ஓட்டங்கள் சேர்த்தது. தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா நம்பர் 1

Quick Share

ஐசிசி தரவரிசையில் இந்திய அணி மீண்டும் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஆனால், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் நம்பர் ஒன் இடம் சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா (120) இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பேட்டிங்கை தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ்

Quick Share

சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நட்சத்திர கலை விழாக்களுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக ருதுராஜ் கேப்டனாகவும், ப்ளெசிஸ் ஆர் சி பி அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நீண்ட வருடங்களுக்குப் பின்பு கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CSK கேப்டன் தோனியின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

Quick Share

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி.

உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். 

அந்த வகையில் Sports Fit World என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனிதான் என்று கூறப்படுகிறது. 

மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் சென்னை FC அணி உரிமையாளர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்று IPL போட்டிகளுக்காக Chennai Super Kings அணிக்காக விளையாடிவரும் இவருக்கு அந்த அணி ரூ.12 கோடி ஊதியத்தைக் கொடுக்கிறது.

மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.

ராஞ்சியில் உள்ள அவரது பண் வீடு 7 ஏக்கரிலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

இதில் விளையும் பொருட்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலமாக தோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

மேலும், தோனிக்கு மும்பை மற்றும் பூனே பகுதிகளில் பிரம்மாண்ட பங்களா வீடுகள் இருக்கின்றன.

மேலும் பூனே கடற்கரையை ஒட்டி தோனி புதிய வீட்டை கட்டி வருவதாக அவருடைய மனைவி சாக்ஷி தோனி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். மேலும் இந்த நிறுவனம் விளம்பரப்படங்களைத் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பைக் பிரியரான தோனி அவர் சேகரிப்பில் பழமையான பைக் முதல் சமீபத்தில் மார்கெட்டில் வந்திருக்கும் பைக்குகள் வரை விலைமதிப்பற்ற பல பைக்குகள் இருக்கின்றன.

மேலும் விலைமதிப்பற்ற பல கார்களையும் அவர் தன்னுடைய சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

இப்படி பல அவதாரங்களை கொண்டிருக்கும் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி எனக் கூறப்படுகிறது.   

சானியா மிர்சாவுடன் விவாகரத்து? இளம் நடிகையை மூன்றாவது திருமணம் செய்தார் சோயப் மாலிக்

Quick Share

சானியா மிர்சாவிடம் இருந்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து பெற்றுவிட்டார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.

சோயப் மாலிக் & சானியா மிர்சா 

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், நடிகை சனா ஜாவத்தும் காதலித்து வந்தததாக கூறிய நிலையில், கணவர் சோயப் மாலிக்கை விட்டு முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதன் பின்னர், சோயப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்

இந்நிலையில், 41 வயதான சோயப் மாலிக், 30 வயதான நடிகை சனா ஜாவத்தை கரம் பிடித்துள்ளார். திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2002 -ம் ஆண்டு, ஆயிஷா சித்திக் என்பவரை சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 8 ஆண்டுகள் கழித்து 2010 -ம் ஆண்டு இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து, இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்த நிலையில் ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது என்று கூறப்பட்ட நிலையில் சோயப் மாலிக் நடிகை சனா ஜாவத்தை கரம் பிடித்துள்ளார்.இதனிடையே, கடந்த 2020 -ம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்ற பாடகரை திருமணம் செய்த சனா ஜவாத் அவரை பிரிந்து சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். 

கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை நெருங்கிய விராட் கோலி

Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடர் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனை (53 இன்னிங்சில் 2,535 ரன்கள்) இந்த தொடரின் மூலம் முறியடிக்கப்படும். இந்த நிலையில், இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேன் ஜோரூட் (45 இன்னிங்சில் 2,526 ரன்), டீம் இந்தியாவின் பேட்ஸ்மேன் விராட் கோலி (1991 ரன் 50 இன்னிங்ஸ்) ஆகியோர் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ரூட் 10 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.

பாகிஸ்தான் வீரரை உருவ கேலி செய்த நியூசிலாந்து டிஜே.., கொந்தளிக்கும் ரசிகர்கள்

Quick Share

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் வந்த போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

நியூசிலாந்து Vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜன.17) நடைபெற்ற போட்டியிலும் தோல்வி அடைந்தது.நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

WWE மல்யுத்த வீரரின் என்ட்ரி மியூசிக்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தார். அப்போது, யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது.

நாடு திரும்பும் விராட் கோலி: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ருதுராஜ்

Quick Share

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர் விராட் கோலி  நாடு திரும்பியுள்ளார்.

டெஸ்ட் போட்டி

இந்தியா- தென்னாப்பிரிக்க இடையிலான டி20 தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஸ்ரீகர் பரத், ஜடேஜா, அஸ்வின்,  பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

நாடு திரும்பும் விராட் கோலி

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். காரணம் தெளிவாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் டிசம்பர் 26ம் திகதி மீண்டும் தென்னாப்பிரிக்கா வந்து இறங்குவார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க தொடரில் மூன்று பார்மெட் போட்டிகளிலும் களமிறங்கிய ருதுராஜ் தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மேலும் அவருக்கான மாற்று வீரரை நாளை பிசிசிஐ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 




You cannot copy content of this Website