விளையாட்டு

புகழ்பெற்ற WWE வீரர் சீனியர் Rey Mysterio காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்

Quick Share

WWE மல்யுத்த வீரர் சீனியர் Rey Misterio தனது 66வது வயதில் காலமானார். 

பிரபல WWE சூப்பர்ஸ்டார் Rey Misterioவின் மாமாவும், புகழ்பெற்ற வீரருமான சீனியர் Rey Misterio 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடியுள்ளார். மெக்சிகோவில் பிறந்த இவர், 1990யில் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் Starrcade போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்திய Rey Misterio காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிப்படுத்தினர். 

Rey Misterioவின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் WWE அபிமானிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     

ஒவ்வொரு விக்கெட்டிலும் எண்ணற்ற நினைவுகள்.., அஸ்வினை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

Quick Share

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி வாழ்த்து 

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2010 -ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார்.

இதுவரை இவர் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சென்னை முதல் உலக அரங்கு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் அஸ்வின்.

ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் எப்போதும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.  

ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை! ரசிகர்கள் வாழ்த்து

Quick Share

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரோகித் சர்மா-ரித்திகா தம்பதிக்கு 2018-ல் சமைரா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ரோகித் சர்மா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும்  நேரத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்

தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் வரும் 22 ஆம் தேதி தொடங்கும் அவுஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை பும்ரா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் #RohitSharma #BabyBoy என்ற ஹேஷ்டேக் உடன் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!

Quick Share

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர். ஆனால், அது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரோ, ரன் மெஷின் விராட் கோலியோ அல்லது மிஸ்டர் கூல் மகேந்திர சிங் தோனியோ இல்லை.

இவர்களைப் போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களையும், வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களையும் விட பணக்கார கிரிக்கெட் வீரர் இருக்கிறார்.

இவர் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் ஆவார். அவர் யார் என்று யோசிக்கிறீர்களா? ஒரு இளம் கிரிக்கெட் வீரர் எப்படி புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார் எனும் சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

ஆனால் அவரது செல்வம் கிரிக்கெட்டில் சம்பாதித்தது அல்ல. அவர் பிறப்பால் ஒரு பணக்கார குழந்தை. 

இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர். அவர் தனது தந்தையிடமிருந்து செல்வத்தை மரபுரிமையாகப் பெற்றார்.

அவரது பெயர் ஆர்யமான் விக்ரம் பிர்லா, இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார்.

ஜூலை 9, 1997-இல் மும்பையில் பிறந்த ஆர்யமான் பிர்லா கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே கிரிக்கெட் பயிற்சியை எடுத்துக்கொண்டு 2017-18 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி அணியில் அறிமுகமானார்.

ஆர்யமான் இடது கை பேட்டர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஆர்யமான் பிர்லா இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 414 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.

2018 IPL ஏலத்தில் ஆர்யமான் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. இருப்பினும், ஆர்யமான் தனிப்பட்ட காரணங்களுக்காக 2019-இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார். தனது சகோதரி அனன்யா பிர்லாவுடன் சேர்ந்து, ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். 

கம்பெனி வேலைகளில் பிஸியாக இருப்பதால் தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.

ஹுருன் வெளியிட்டுள்ள நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் குமார் மங்கலம் பிர்லா இடம் பிடித்துள்ளார். ஆர்யமான் பிர்லாவின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது.

ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி ரூ .11.6 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆறாவது இடத்தில் இருக்கும் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.2.35 லட்சம் கோடி.

ஆர்யமானின் சொத்து மதிப்பு ரூ.70,000 கோடிக்கு மேல் என தகவல்களை தெரிவிக்கின்றன.

புற்றுநோயுடன் போராடிய பிரபல மல்யுத்த வீரர் மரணம்!

Quick Share

பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார். அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63). WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6 முறை உலக சாம்பியனாக இருந்திருக்கிறார். 2001யில் படுகாயமடைந்து அதிலிருந்து மீண்டு வந்த Sid Eudy, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார்.

இந்த நிலையில் Sid Eudy உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் Gunnar தெரிவித்துள்ளார். 

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை Sid Eudy பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் வலிமை, கருணை மற்றும் அன்பு கொண்ட மனிதராக இருந்தார். அவரின் இருப்பை பெரிதும் தவறவிடுவோம்” என பதிவிட்டுள்ளார்.

WWEயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், 2001யில் காலில் காயம் ஏற்படவில்லையென்றால் சிட்டின் வெற்றிகள் WWE வரலாற்றில் சிறந்தவற்றில் அடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

Sid Eudyயின் மறைவுக்கு அவருடன் பணியாற்றியவர்கள், ரசிகர்கள் என பலரும் வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு: 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

Quick Share

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத் இனி என்னிடம் போராடச் சக்தியில்லை என்று மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்த வழக்கு கடந்த 9 ஆம் தேதி மாலை நீதிபதி அனபெல் பெனட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 10ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 13ஆம் தேதிக்கு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் 3வது முறையாகத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி (16.08.2024) இரவு 09.30 மணிக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா:ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய மோசமான சாதனை

Quick Share

இலங்கை – இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டி டையானது. 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். 3 போட்டிகளிலும் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார். மூன்று முறை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலியை எளிதாக அவரது விக்கெட்டை இழக்க விடமாட்டார். ஆனால் இந்த 3 போட்டியிலும் ஈசியாக அவரது விக்கெட்டை இலங்கை வீரர்கள் வீழ்த்தி விட்டனர்.

முதல் இரண்டு போட்டியை விட கடைசி போட்டியில் விராட் கோலியின் பேட்டிற்கும் பந்திற்கும் அதிக இடைவேளி இருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாம்பவான் பேட்டரான அவர் பந்தை கணித்து பேட்டை வைத்தாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கத்தை தட்டிச் சென்ற நீரஜ் சோப்ரா!

Quick Share

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில், மகளிர் 10 ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். மேலும், அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கம் வென்றார். 

அதனை தொடர்ந்து, நேற்று (09-08-24) மாலை ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்திய அணி உலக தர வரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம், இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நான்கு வெண்கலப் பதக்கம் வென்றியிருந்தது.

இந்த நிலையில், இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும் இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச் ஆகியோர் போட்டி போட்டனர். இதில், நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் சுமார் 89.45 மீ தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீ தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதில், இதுவரை ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக இருந்த 90.57 மீ தூரத்தை, அர்ஷத் நதீம் ஈட்டியை எறிந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை, இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் என 5 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா, இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர்கள் பலருக்கு உடல்நல பாதிப்பு!

Quick Share

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்ட பல வீரர் வீரங்கனைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக கனேடிய விளையாட்டு வீரர்கள் அமைப்பு சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், sprint என்னும் குறைதூர ஓட்டப்பந்தய வீராங்கனையான Zoe Sherar, 400 மீற்றர் பந்தயத்தில் கலந்துகொள்ளும் முன் வைரஸ் ஒன்றின் தொற்றால் ஏற்பட்ட வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டார்.

ஆகவே, அவரால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவர் வெள்ளிக்கிழமை 4×400 மீற்றர் ரிலேயில் கலந்துகொள்ளவேண்டியுள்ளது.

விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மட்டுமல்ல, பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 10 முதல் 15 பேர் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளதாக Zoe தெரிவித்துள்ளார்.

அவரைப்போலவே, மூன்று முறை 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் கனடா அளவில் சேம்பியன் பட்டம் பெற்றவரான Michelle Harrisonம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளார்.

Michelle Harrisonம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், sprint என்னும் குறைதூர ஓட்டப்பந்தய வீரரான Aaron Brown, மற்றும் நடைப்போட்டி வீரரான Evan Dunfee ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், கனேடிய சைக்கிள் பந்தய வீரர்கள் அணியும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். 

உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடிய Campylobacter jejuni என்னும் பாக்டீரியாவே பிரச்சினைக்கு காரணம் என கண்டறியப்பட்டாலும், அந்த பாக்டீரியா எப்படி விளையாட்டு வீரர்களை தொற்றியது என்பது தெரியவரவில்லை.

ஒலிம்பிக் – மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டம்: தருஷிக்கு எட்டாவது இடம்

Quick Share

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 08வது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2:07:26 நிமிடங்களில் தருஷி கருணாரத்ன நிறைவு செய்தார்.

இந்த போட்டியின் முதலாம் இடத்தை ஜமைக்காவின் நாடோயா கோலே, 02ஆம் இடத்தை அவுஸ்ரேலியாவின் கிளாடியா ஹோலிங்ஸ்வொர்த், 03 ஆம் இடத்தை கென்யாவைச் சேர்ந்த லிலியன் ஒடிரா பெற்றுக்கொண்டனர்.

ஆரம்ப சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 03 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.

இருப்பினும், Repechage எனும் முறைமைக்கமைய அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவு செய்யப்படாத வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கமைய தருஷி கருணாரத்ன பங்கேற்றும் Repechage சுற்று ஓட்டப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் நடைபெறவுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் மரணம்!!பிரதமர் மோடி இரங்கல்..

Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் தனது 71வது வயதில் காலமாகியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்

PTI அறிக்கையின்படி, புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்திய பயிற்சியாளராகவும், தேசிய தேர்வாளராகவும் பணியாற்றிய கெய்க்வாட், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் ரத்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக ஜூன் மாதம், BCCI கெய்க்வாட்டின் மருத்துவச் செலவுக்காக ரூ.1 கோடியை வழங்கியது. 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினர்.

அன்ஷுமான் கெய்க்வாட் முன்னாள் இந்திய கேப்டன் டி கே கெய்க்வாட்டின் மகன், அவர் 1959 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

கெய்க்வாட் 1975 மற்றும் 1987 க்கு இடையில் 40 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடினார்.

பிரதமர் மோடி இரங்கல்

தனது 71வது வயதில் காலமான இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

15வது திருமண நாளைக் கொண்டாடிய MS தோனி-சாக்ஷி: குவியும் வாழ்த்துக்கள்

Quick Share

MS தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷியும் தங்களின் பதினைந்தாவது திருமண நாளைக் கொண்டாடி கேக் வெட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது 15வது திருமண நாளை தனது மனைவி சாக்ஷியுடன் கொண்டாடியுள்ளார்

இருவரும் ஜூலை 4, 2010 அன்று டேராடூனில் நடைபெற்ற தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி கேக் வெட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தங்கள் நாய் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் போது தம்பதிகள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டுவதை வீடியோவில் காணலாம். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 




You cannot copy content of this Website