விளையாட்டு

CSK கேப்டன் தோனியின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு

Quick Share

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி.

உடற்பயிற்சி பிரியரான தோனி இந்தியா முழுக்கவே பல்வேறு உடற்பயிற்சி கூடத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். 

அந்த வகையில் Sports Fit World என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனிதான் என்று கூறப்படுகிறது. 

மேலும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர் சென்னை FC அணி உரிமையாளர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்று IPL போட்டிகளுக்காக Chennai Super Kings அணிக்காக விளையாடிவரும் இவருக்கு அந்த அணி ரூ.12 கோடி ஊதியத்தைக் கொடுக்கிறது.

மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.

ராஞ்சியில் உள்ள அவரது பண் வீடு 7 ஏக்கரிலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.

இதில் விளையும் பொருட்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலமாக தோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

மேலும், தோனிக்கு மும்பை மற்றும் பூனே பகுதிகளில் பிரம்மாண்ட பங்களா வீடுகள் இருக்கின்றன.

மேலும் பூனே கடற்கரையை ஒட்டி தோனி புதிய வீட்டை கட்டி வருவதாக அவருடைய மனைவி சாக்ஷி தோனி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். மேலும் இந்த நிறுவனம் விளம்பரப்படங்களைத் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

பைக் பிரியரான தோனி அவர் சேகரிப்பில் பழமையான பைக் முதல் சமீபத்தில் மார்கெட்டில் வந்திருக்கும் பைக்குகள் வரை விலைமதிப்பற்ற பல பைக்குகள் இருக்கின்றன.

மேலும் விலைமதிப்பற்ற பல கார்களையும் அவர் தன்னுடைய சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

இப்படி பல அவதாரங்களை கொண்டிருக்கும் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி எனக் கூறப்படுகிறது.   

சானியா மிர்சாவுடன் விவாகரத்து? இளம் நடிகையை மூன்றாவது திருமணம் செய்தார் சோயப் மாலிக்

Quick Share

சானியா மிர்சாவிடம் இருந்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து பெற்றுவிட்டார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.

சோயப் மாலிக் & சானியா மிர்சா 

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், நடிகை சனா ஜாவத்தும் காதலித்து வந்தததாக கூறிய நிலையில், கணவர் சோயப் மாலிக்கை விட்டு முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதன் பின்னர், சோயப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

நடிகையை மணந்த கிரிக்கெட் வீரர்

இந்நிலையில், 41 வயதான சோயப் மாலிக், 30 வயதான நடிகை சனா ஜாவத்தை கரம் பிடித்துள்ளார். திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2002 -ம் ஆண்டு, ஆயிஷா சித்திக் என்பவரை சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 8 ஆண்டுகள் கழித்து 2010 -ம் ஆண்டு இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து, இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்த நிலையில் ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது என்று கூறப்பட்ட நிலையில் சோயப் மாலிக் நடிகை சனா ஜாவத்தை கரம் பிடித்துள்ளார்.இதனிடையே, கடந்த 2020 -ம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்ற பாடகரை திருமணம் செய்த சனா ஜவாத் அவரை பிரிந்து சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். 

கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை நெருங்கிய விராட் கோலி

Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடர் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனை (53 இன்னிங்சில் 2,535 ரன்கள்) இந்த தொடரின் மூலம் முறியடிக்கப்படும். இந்த நிலையில், இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேன் ஜோரூட் (45 இன்னிங்சில் 2,526 ரன்), டீம் இந்தியாவின் பேட்ஸ்மேன் விராட் கோலி (1991 ரன் 50 இன்னிங்ஸ்) ஆகியோர் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ரூட் 10 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.

பாகிஸ்தான் வீரரை உருவ கேலி செய்த நியூசிலாந்து டிஜே.., கொந்தளிக்கும் ரசிகர்கள்

Quick Share

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் வந்த போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

நியூசிலாந்து Vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜன.17) நடைபெற்ற போட்டியிலும் தோல்வி அடைந்தது.நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

WWE மல்யுத்த வீரரின் என்ட்ரி மியூசிக்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தார். அப்போது, யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது.

நாடு திரும்பும் விராட் கோலி: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ருதுராஜ்

Quick Share

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர் விராட் கோலி  நாடு திரும்பியுள்ளார்.

டெஸ்ட் போட்டி

இந்தியா- தென்னாப்பிரிக்க இடையிலான டி20 தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஸ்ரீகர் பரத், ஜடேஜா, அஸ்வின்,  பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

நாடு திரும்பும் விராட் கோலி

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். காரணம் தெளிவாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் டிசம்பர் 26ம் திகதி மீண்டும் தென்னாப்பிரிக்கா வந்து இறங்குவார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க தொடரில் மூன்று பார்மெட் போட்டிகளிலும் களமிறங்கிய ருதுராஜ் தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, மேலும் அவருக்கான மாற்று வீரரை நாளை பிசிசிஐ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

Quick Share

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்துள்ளது.மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டதால், சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களின் மழை பொழிவு குறைய தொடங்கியுள்ளது.

அதே சமயம் அரசும், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டு வருகிறது.

டேவிட் வார்னர் ஆறுதல்

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மேடான பகுதிக்கு செல்லுங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என அறிவுரையும் வழங்கியுள்ளார்.அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் உங்கள் முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

டைசன் பஞ்ச்க்கு ரூ.3.6 கோடி

Quick Share

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் கடந்தாண்டு, விமானத்தில் சென்றபோது, விமானத்தில் சென்ற பயணி ஒருவரை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், தாக்கப்பட்ட அந்த நபர், டைசன் தனக்கு 350000 பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.6 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் மன அழுத்தம், வெர்டிகோ. ஞாபக மறதி போன்ற பல பிரச்னைகளால் அவதிப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” 10 மில்லியன் டொலருக்கு ஏலம்!

Quick Share

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.

அதில், பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். இந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்ததுடன் அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒரு தொகை சாண்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையால் நடத்தப்படும் யுனிகாஸ் திட்டத்தின் மூலம் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஏலம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நியூயோர்க் கிளையில் நடைடைபெறும்.அதேவேளை 2022 ஆம் ஆண்டு டியாகோ மரடோனா 1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபோது அவர் அந்தப் போட்டியில் அணிந்திருந்த ஜேர்சி 9.3 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.இது குறிப்பாக கால்பந்து விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஏல விற்பனையில் அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டு பொருளாக சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் “உலகக்கிண்ண கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது, இது மெஸ்ஸியின் வீரம் நிறைந்த பயணத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதுமற்றும் சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை உறுதியாக நிலைநிறுத்துகிறது. இந்த ஆறு ஜேர்சிகளின் விற்பனை ஏல வரலாற்றில் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும். ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு மெஸ்ஸியின் முடிசூட்டு சாதனைக்கான தொடர்பை வழங்குகிறோம்” என்று சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நவீன சேகரிப்புகளின் தலைவர் பிராம் வாச்சர் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய பிரதமர்!

Quick Share

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.    
இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.இதனை தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் திறமையும், உறுதியும் சிறப்பானதாக இருந்தது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கைமாறும்?

Quick Share

விளையாட்டுத் துறை அமைச்சு பதவியில், ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததை அடுத்து அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.விளையாட்டுத்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ரொஷான் ரணசிங்க, அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டு எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் என பல முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

220 இலட்சம் மக்களின் விளையாட்டு உரிமையை மீறும் செயல்!

Quick Share

இலங்கை கிரிக்கெட் சபையினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இம்மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தவறானவையாகும்.

தவறான காரணிகளைக் குறிப்பிட்டு இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 220 இலட்சம் மக்களினதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கட் சபையினால் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட காணொளியூடான அறிவிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்நாட்டு மக்களுக்கு புதிய விடயங்களை தெரியப்படுத்தியிருக்கின்றேன்.இலங்கை கிரிக்கட் நிறுவனம் கடந்த 6,7 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கடிதங்களை சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதங்களை வாசிக்கும் போது இலங்கையில் கிரிக்கட் எவ்வாறு தடை செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.நவம்பர் 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தில் இடைக்காலக் குழுவை விமர்சித்துள்ளதுடன், அரசியல் ரீதியான தலையீடுகள் இடம்பெறுவதாகவும்,அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதத்தின் மூலம் இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாகவும், இது சர்வதேச கிரிக்கட் பேரவையின் சட்டத்திற்கு முரணானது என்றும் இடைக்கால குழுவொன்றை நியமித்தால் கிரிக்கட்டை தடை செய்ய நேரிடும் என்று கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் 2024, ஐ.சி.சி சர்வதேச மாநாடு, டி20 போட்டி போன்றவற்றை பிற நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. 3 ஆவது கடிதத்தின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியாலையே பாராளுமன்ற விவாதம் நடந்ததாகவும், கிரிக்கட் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு அதன் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கிரிக்கட் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ,இது ஐ.சி.சி. சட்டத்துக்கு முரணானது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 20 வீதத்தை விளையாட்டுத்துறை அமைச்சு கேட்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கடிதங்களில் உள்ள உள்ளடக்க தகவல்கள் தவறானவையாகும். இதில் அரசியல் ரீதியான தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை. அதே நேரம் இது நட்புவட்டார விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது 220 இலட்சம் மக்களதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்றார்.

2027 உலகக்கோப்பையில் இவர்கள் விளையாட வாய்ப்பில்லை!

Quick Share

2023 உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான் சில கிரிக்கெட் வீரர்களுக்கு கடைசி என தெரிகிறது. அதன்படி, ரோஹித், முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா, கோலி (ஃபிட் இல்லை என்றால்) 2027 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் வில்லியம்சன், சவுத்தி மற்றும் சிலர் அடுத்த உலகக்கோப்பையின் போது 40 வயதை எட்டுவார்கள்.




You cannot copy content of this Website