கரூர்

சேர்ந்து குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் !! அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி…

Quick Share

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (43). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி லோகநாதன் (37). இவர் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் பிரசாதம் ஸ்டால் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். வெகுநாள் கழித்து சந்தித்துக்கொண்ட சந்தோசத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தம்பி லோகநாதன் அருகில் இருந்த தடி ஒன்றை எடுத்து அவனது அண்ணன் ராஜ்மோகன் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டின் வாசலில் அதிகாலையில் ராஜ்மோகன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவரது அண்ணன் புகழேந்தி இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து அண்ணனை கொலை செய்த தம்பி லோகநாதனை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட அண்ணன் ராஜ் மோகனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக்காதலால் கல்லூரி மனைவியை வகுப்பறைக்குள் புகுந்து கட்டையால் அடித்து கொன்ற வாலிபர்

Quick Share

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் சோனாலி (வயது 20). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதிய நேந்தல் பகுதியைச் சேர்ந்த மாணவர் உதயகுமாா் (21) சோனாலியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை சோனாலியிடம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அடித்துக்கொலை

இந்நிலையில் கடந்த 30.8.2016 அன்று உதயகுமார் கல்லூரிக்குள் சென்று சோனாலியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நீதிபதி நசீமாபானு தீர்ப்பு வழங்கினார்.

ஆயுள் தண்டனை

அதில் 5 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. அதன்படி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் குற்றவாளியிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை இறந்த கல்லூரி மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் அவர் கூறியிருந்தார்.

கஞ்சா அடித்து விட்டு போதையில் அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற வாலிபர்..!! அதிர்ச்சி சம்பவம்

Quick Share

கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்தை அதன் டிரைவர் சரவணக்குமார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்று இருக்கிறார்.
உடன் இருந்த கன்ட்ரக்டர் நேரக்கண் காணிப்பாளர் அறைக்கு சென்றிருந்த நிலையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அஜித்குமார் (32) என்ற வாலிபர் பேருந்தில் ஏறி டிரைவர் இல்லாததைப் பார்த்து திடீரென டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்து ஒட்டியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன பார்த்த சரவணக்குமார் கத்திக் கொண்டே பஸ்ஸை துரத்திப் சென்று பிடித்துள்ளார்.

அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அஜித்குமார் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு தான் கஞ்சா அடித்துவிட்டு போதையில் இப்படி செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டுநர் பிடித்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. போதையில் இருந்த அஜித்குமாரைத் தற்போது போக்குவரத்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.




You cannot copy content of this Website