இந்தியா

மூடநம்பிக்கையால் வந்த விளைவு.. பெண்ணின் தலையில் 77 ஊசிகளை ஏற்றிய சாமியார்! அதிர்ச்சியி...

Quick Share

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் சாமியார் ஒருவர் பெண்ணின் தலையில் டஜன் கணக்கான ஊசிகளை ஏற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ந்து போன மருத்துவர்கள்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 வயது ரேஷ்மா என்ற பெண்ணின் தலையில் சாமியார் ஒருவர் 77 ஊசிகளை ஏற்றியுள்ளார்.

தாயின் மறைவுக்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட ரேஷ்மா, இது தொடர்பாக சாமியாரை நாடிய போது, அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இதனால் கடுமையான தலைவலியை அனுபவித்த ரேஷ்மா இறுதியில் மருத்துவமனையை நாடியுள்ளார். அப்போது அவரது தலையில் 77 ஊசிகள் ஏற்றப்பட்டு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மை தெரியவந்ததை தொடர்ந்து, பொலிஸார் அந்த சாமியாரை கைது செய்து இருப்பதுடன், வேறு யாரேனும் இதுப்போன்று பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

இந்தியாவின் பணக்கார நகை வியாபாரி! கல்யாண் ஜுவல்லர்ஸ் கல்யாணராமனின் சொத்து மதிப்பு தெரிய...

Quick Share

இந்தியாவின் பணக்கார நகை வியாபாரியான கல்யாண் ஜுவல்லர்ஸின் உரிமையாளரான கல்யாணராமனின் வளர்ச்சி அனைவராலும் இன்று வரையில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Kalyan Jewellers கல்யாணராமன்

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் T.S.கல்யாணமாறன் நாட்டின் பணக்கார நகை வியாபாரி ஆவார்.

கல்யாணமாறன் தனது முதல் கடையை 1993 ஆம் ஆண்டில் கேரளாவில் தலைநகரான திருச்சூரில் ஆரம்பித்தார்.

கல்யாணராமன் தனது 12 வயதில் தனது தந்தையிடமிருந்து வணிகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இப்போது, ​​அவர் இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடைகளில் ஒன்றின் உரிமையாளர் என்ற பெருமைக்குரியவர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலும் மொத்தம் 30 கிளைகள் உள்ளன.

T.S.குள்ளிவன்மன் தனது 12வது வயதில் தந்தையுடன் கடையில் உட்கார ஆரம்பித்தார். அவர் தனது தந்தைக்கு கடை மற்றும் வணிகத்திற்கு உதவினார்.

அவர் வேறு இடத்தில் வேலை செய்து 25 லட்சத்தை சேமித்து, நகைக்கடை திறக்கும் நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் அவரது கனவை நிறைவேற்ற, அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டது.

எனவே, வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்க முடிவு செய்தார். அதையடுத்து பல முயற்சியின் பிறகு நகை கடையை நிறுவினார். 

கேரளாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்த கல்யாணராமன், தற்போது ரூ.17,000 கோடிக்கு மேல் தனது தொழிலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். 

நண்பர்களுடன் பிராங்க்- விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: 3 -வது மாடியில் இருந்து தவறி வி...

Quick Share

நண்பர்களுடன் பிராங்க் செய்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் 3 -வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டடத்தில் பெண் ஒருவர் நண்பர்களுடன் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அப்போது அவரது நண்பர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மருமகளின் வருகை… 10 நாட்களில் ரூ 25,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி

Quick Share

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தமது இளைய மகனுக்கு ஆடம்பரத்தின் உச்சமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

சொத்து மதிப்பு குறையவில்லை

அதே வேளை அவரது சொத்து மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்தாலும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறையவில்லை என்றே கூறுகின்றனர்.

ஆஜ் தக் ஊடகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்குப் பிறகு வெறும் 10 நாட்களுக்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ 25,000 கோடி (சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. 

ஜூலை 5ம் திகதி வெளியான ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு என்பது 118 பில்லியன் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 12ம் திகதி வெளியான தரவுகளில் அது 121 பில்லியன் டொலர் என பதிவாகியுள்ளது.

புதிய மருமகளின் வருகை

இதனால் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார். 

ஆனந்த் அம்பானியின் திருமண நாள் அன்று ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சராசரி 6.65 சதவிகிதம் உயர்வை சந்தித்துள்ளது.

திருமணம் விழாவிற்கு பின்னர் ரிலையன்ஸ் பங்குகளின் விலை ரூ 3,159 என விற்கப்பட்டுள்ளது. புதிய மருமகளின் வருகை, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சுமார் 3 பில்லியன் டொலர் அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளது என்றே கூறுகின்றனர்.

வாய்ப்பிளக்கவைக்கும் ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள்!

Quick Share

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் காணப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டினை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுடைய திருமணம் தான் தற்போது அனைவரது பேச்சாகவும் இருந்து வருகிறது.

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குறித்த திருமணமானது பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமணம் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது.

இதற்கு பல தரப்பில் இருந்து பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி போன்ற பல பிரபலங்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.

இதற்கு முன்னர் முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் நடைபெற்றது. அதில் ரிஹானாவின் (Rihanna) தனிப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. 

ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை – ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் | Most Expensive Things At Anant Ambani Wedding

இரண்டாம் கட்ட கொண்டாட்டம் சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் கோடிக் கணக்கில் செலவிழித்து வந்தனர்.

அந்தவகையில் அனைவரது வாயையும் பிழக்க வைத்த அம்பானி வீட்டு திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அம்பானி திருமணத்திற்கான செலவு இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் செலவை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுக்கு மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது.

ஜஸ்டின் பீபர் மற்றும் ரிஹானா ஆகிய இரு வெளிநாட்டு கலைஞர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து நிகழ்ச்சிகளை வழங்கினர்.

அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் நகைகளை புறக்கணிப்பது கடினம்.

500 கோடி மதிப்பிலான மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் நீதா அம்பானி அணிந்திருந்தார். இந்த நெக்லஸ் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆனந்த் அம்பானி ரூ.67.5 கோடி மதிப்பிலான Patek Philippe கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார்.

அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகளை அணிந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் விருந்தினர்களுக்கும் விலையுயர்ந்த பொருட்களை வழங்கியுள்ளனர். 

2 கோடி மதிப்பிலான கடிகாரத்தை, விக்கி கவுஷல் (Vicky Kaushal), ரன்வீர் சிங் (Ranveer Singh), ஷாருக்கான் (Shah Rukh Khan) உள்ளிட்ட திரையுலகில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஆனந்த் அம்பானி வழங்கியுள்ளார்.

தங்கச் சங்கிலிகள், வடிவமைக்கப்பட்ட காலணிகள் மற்றும் Louis Vuitton purses பலரால் வாங்கப்பட்டன. விருந்தினர்களை வரவழைப்பதற்காக தனியாக விமானங்கள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவில் முடித்தது மாத்திரமின்றி லண்டனில் செய்யவும் திட்டமிட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் 5000 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தாலும் அம்பானி குடும்பத்தினர் இன்னும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த நடிகர்களுக்கு 2 கோடி ரூபாய் வாட்ச்சி பரிசு கொடுத்து ...

Quick Share

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வு கடந்த சில தினங்களாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் தொடங்கி ஹாலிவுட் பிரபலங்கள், உலக நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல விவிஐபிகள் வந்தனர்.

ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு வந்து உடன் இருந்த நண்பர்கள் ரன்வீர், ஷாருக் கான் உள்ளிட்ட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த வாட்ச் பரிசாக கொடுத்து இருக்கிறார்.

Audemars Piguet வாட்ச்சின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்பதால் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். அந்த வாட்ச் அணிந்து இருக்கும் பிரபலங்களின் வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அம்பானி வீட்டு திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி!

Quick Share

ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை வாழ்த்தினார். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் (29) திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் உள்ளூர் பிரபலங்கள் முதல் உலகளவில் பிரபலமானவர்கள் வரை பலர் கலந்துகொண்டனர். திருமணத்தைத் தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண நிகழ்வில் நடனமாடிய வீடியோ வைரலானது. 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மணமக்கள் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட்டை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அம்பானி வீட்டு திருமணத்தில் ஜான் சீனா..!ஜான் சீனாவின் வைரல் பதிவு..

Quick Share

உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ஜான் சீனா. WWE மூலமாக பிரபலம் ஆகி அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான் சீனா கடந்த வருடம் ஆஸ்கார் விழாவில் நிர்வாணமாக தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஜான் சீனா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

ஜான் சீனா நேற்று மும்பையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார். அவர் இந்திய உடையில் வந்திருந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.

அங்கு ஹிந்தி நடிகர் ஷாருக் கான் உடன் எடுத்த போட்டோவை X தளத்தில் பதிவிட்டு இருக்கும் ஜான் சீனா அவரிடம் பேசியது மறக்க முடியாத ஒன்று என கூறி இருக்கிறார்.

அவரால் என் வாழ்க்கையில் பாசிட்டிவான விளைவுகள் இருந்தது என அவரிடமே சொன்னேன் எனவும் ஜான் சீனா கூறி இருக்கிறார்.

மனைவி பிறந்த நாளுக்காக 60 லட்சம் செலவு செய்த கணவர்… மனைவியின் வைரல் பதிவு!

Quick Share

துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால் 26 வயதான தனது மனைவி சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில்  ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுதாக சவுதி அல் நடக் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் தனது கணவரிடம் இருந்து பெற்ற ஆடம்பரமான பரிசுகளை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாளில் மியு மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ.12 லட்சம் செலவழித்ததாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

பின்னர் ஹெர்ம்ஸ் பிராண்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் ரூ.29 லட்சம் விலை கொண்ட பரிசை வாங்கி கொடுத்துள்ளார்.

இதுதவிர அழகு சிகிச்சைகளுக்காகவும் நிறைய பணம் செலவழித்ததாகவும் மொத்தத்தில் அந்த ஒரு நாள் மட்டும் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 120 தனக்காக கணவர் செலவழித்துள்ளதாக சவுதி அல் நடக் இந்த காணொளியில் பதிவிட்டுள்ளார்.

குறித்த  காணொளி தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் பலரும் பணத்தை வீணடிப்பதாக கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

வாய் பிளக்கவைக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு…எத்தனை தலைமுறைகள் எடுத்தாலு...

Quick Share

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.25 லட்சம் கோடியாகும். இந்நிலையில், முகேஷ் அம்பானி ஒவ்வொரு நாளும் எந்த வேலையும் செய்யாமல் தன்னிடம் உள்ள பணத்தில் ரூ.3 கோடி அளவிற்கு செலவு செய்யும் பட்சத்தில் அவரது மொத்த சொத்தையும் செலவழிக்க சுமார் 932 ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அம்பானியின் 12 தலைமுறைகள் எந்த வேலையும் செய்யாமல் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி செலவு செய்யும் பணம் இப்போது அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டமாக நடந்த அம்பானி வீட்டு திருமணம்..மணமக்களை வாழ்த்த வருகிறார் பிரதமர் மோடி!

Quick Share

அம்பானி வீட்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இந்திய பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அம்பானி வீட்டு திருமணம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற ‘சங்கீத்’ விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் நேற்று (ஜூலை 12 -ம் திகதி) ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. 

இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

மேலும், அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்களுக்கும் திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்காத மோடி இன்று கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.29,500 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த நரேந்திர மோடி இன்று மும்பை செல்கிறார். இந்த பயணத்தின் போது மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.   

3 ஜெட் விமானங்கள், 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள்: அம்பானி வீட்டு திருமணத்திற்கு...

Quick Share

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 3 ஜெட் விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது. இவர்களின் ‘சங்கீத்’ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளதால், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உலகம் முழுவதும் இருந்து வரும் விருந்தினர்களை அழைத்து வருவதற்காக 3 பால்கன் ஜெட் (Falcon-2000 jets) விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், இந்த பிரம்மாண்டமான திருமணத்திற்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




You cannot copy content of this Website