இந்தியா

சந்திரயான் 3 திட்ட பொறியாளரின் அவலநிலை!18 மாதம் சம்பளம் கொடுக்கல..இட்லி வியாபாரம்!

Quick Share

சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பளம் கொடுக்கவில்லை

சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூலம் நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், திட்டத்திற்கு பணியாற்றிய பொறியாளர் ஒருவர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுவது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து பணியாற்றியது.

இந்த நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில், மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் பணியாற்றி வந்தார். இவர், இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்காக மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தீபக் குமார் பணியாற்றிய ஹெச்.இ.சி நிறுவனம் தங்களுடைய 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. 

இட்லி வியாபாரம்

இதனால், தீபக் குமார் தன்னுடைய மகள்களுக்கு பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். எனவே, செலவே சமாளிக்க முடியாத காரணத்தினால் ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டடத்திற்கு எதிரே சாலையில் ஒரு சிறிய உணவகத்தை அமைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவை பார்த்து வருகிறார். அதாவது, காலையில் ஹெச்.இ.சி நிறுவனத்திற்கு சென்று பணியாற்றிவிட்டு, மாலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பலி!

Quick Share

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானது சோகத்தையை ஏற்படுத்தியது.

இடிந்து விழுந்த மேற்கூரை 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் ஆனந்த் நகர் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்திரா (40). இவர் தனது மனைவி தேவி (35), மகன்கள் ஹர்ஷித் (13), அன்ஸ் (5) மற்றும் ஹர்ஷிதா (10) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். 

அதிகாலை 5 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

ஆனால், இதுகுறித்து காலை 8 மணியளவில் தான் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

அனைவரும் உயிரிழப்பு 

தூய்மை பணியாளர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய சதீஷ் சந்திரா குடும்பத்தினரை மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடரும் இளவயது மாரடைப்பு! 12 வயது மாணவன் மாரடைப்பால் மரணம் ..

Quick Share

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

35 வயதில் 41 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறவிருக்கும் இளைஞர்… யார் அவர்: தெரிந்துகொள்...

Quick Share

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவரும் நிலையில், தமது 35 வயதில் ஓய்வை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

35 வயதில் ஓய்வு

கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருக்கும் Ethan Nguonly என்ற 22 வயது கூகுள் மென்பொருள் பொறியாளரே, 5 மில்லியன் டொலர் சேமிப்புடன், தமது 35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமது எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ரியல் எஸ்டேட் சந்தையில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறார். ஈதன் ங்குன்லி தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்ததும் நிதி சுதந்திரத்திற்கான தனது முயற்சியில் இறங்கியுள்ளார். 

மே 2021ல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது கணினி அறிவியல் பட்டப்படிப்பை ஈதன் ங்குன்லி முடித்துள்ளார். ஆகஸ்ட் 2022ல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

ஆனால் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது தமது கனவு என தெரிவித்திருந்த ங்குன்லி டிசம்பர் 2021ல் கூகிள் நிறுவனத்தில் இணைந்து தமது கனவை நிறைவேற்றினார்.

சேமிக்கவும் முதலீடு செய்யவும்

தற்போதைய அவரது ஆண்டு சம்பளம் என்பது சுமார் 1.60 கோடி என்றே கூறப்படுகிறது. மேலும், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் பெற்றோருடன் தொடர்ந்து வாழ்ந்தார். இது அவர் தனது வருமானத்தில் முடிந்தவரை சேமிக்கவும் முதலீடு செய்யவும் முடிந்தது என்றார்.

அதாவது வர்ஜீனியாவில் தனது பெற்றோர் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள அவரது உறவினர் ஆகியோருடன் தங்கிய அந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60,000 டொலர் அளவுக்கு சேமிக்க முடிந்தது என்று அவர் மதிப்பிடுகிறார். 

2022 தொடக்கத்தில் தமது முதல் குடியிருப்பை ஈதன் ங்குன்லி வாங்கியுள்ளார். ஆனால் அதை வாடகைக்கு விட்டு, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அதில் இருந்து சம்பாதிக்கிறார்.

நிதி குறித்து மிகுந்த திட்டமிடல் இருந்தும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் ஊடாக 2021ல் சுமார் 80,000 டொலர் தொகையை இழந்துள்ளார். இதனையடுத்து தமது மொத்த கவனத்தையும் ரியல் எஸ்டேட் சந்தையில் திருப்பியுள்ளார். 

தற்போது தமது 35வது வயதில் 5 மில்லியன் டொலர், தோராயமாக 41 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறும் முடிவில் உள்ளார்.

சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு ரூ.10 ஆயிரம் கோடி லாபம்; அரசு நிறுவனம் சாதனை

Quick Share

சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு அரசு நிறுவனமொன்று சுமார் ரூ.10,000 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் சந்திரயான் 3 பணியின் போது பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் என்ற பெயரைக் கேள்விப்பட்டோம். இந்த பணியை வெற்றியடையச் செய்வதற்கு BHEL நிறுவனமும் நிறைய பங்களித்தது. இந்த வெற்றிகரமான பணிக்குப் பிறகு, நிறுவனத்தின் மதிப்பு மாறியது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 26 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. இந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, நிறுவனம் பெரும் ஆர்டர்களைப் பெறத் தொடங்கியது. இதன் தாக்கம் நிறுவனத்தின் பங்குகளில் தெளிவாகத் தெரிகிறது.

இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 12 சதவீதம் உயர்ந்துள்ளன..!

வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், BHEL நிறுவனத்தின் பங்குகள் 12.20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.14.80 உயர்ந்து ரூ.136.10-ல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ரூ.137ஐ தொட்டது.

இந்நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று ரூ.122.25ல் துவங்கி ரூ.136.10ல் முடிவடைந்தது, பிஎஸ்இ தரவுகளின்படி ரூ.12.20 உயர்ந்துள்ளது. ஆனால், வியாழன் அன்று இந்நிறுவனப் பங்குகள் ரூ.121.30 ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

வாரத்தில் 26 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வு

பிஎஸ்இ தரவுகளின்படி, சந்திராயலன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நாளில், நிறுவனத்தின் பங்குகள் மறுநாள் ரூ.107.60 ஆக சரிந்தன. அதன் பிறகு அந்நிறுவனப் பங்குகளில் அதிகரிப்பு காணப்பட்டு, அந்நிறுவனப் பங்குகள் ரூ.136.10-ல் முடிவடைந்தது. அதாவது, சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகள் 26.50 சதவீதம் அதிகரித்தது.

நிபுணர்களின் கூற்றுப்படி, BHEL நிறுவனத்தின் பங்குகள் வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.150ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

10 ஆயிரம் கோடி லாபம்..!

ஆகஸ்ட் 24 முதல் தற்போது வரை சந்தையில் சுமார் ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பிஎஸ்இ தரவுகளின்படி, ஆகஸ்ட் 24 அன்று பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.37,466.99 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் 1ம் திகதி நிலவரப்படி ரூ.47,390.88 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9,923.89 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் பங்குகள் ஏன் உயர்ந்தன?

உண்மையில், BHEL பங்குகள் உயர்வுக்கு மிகப்பெரிய காரணம், இந்த வாரம் NTPC யிடமிருந்து 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை நிறுவனம் பெற்றுள்ளது. NTPC Lara Stage-II (2 x 800 MW) supercritical thermal Project நடப்பு நிதியாண்டில் BHEL-க்கு ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. 2023 நிதியாண்டில், நிறுவனம் ரூ. 23,500 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.  

திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த மருத்துவர்! நடந்தது என்ன?

Quick Share

மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று மயங்கி விழுந்து பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மருத்துவர்

இந்தியாவில் கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியையாகவும், மருத்துவ கண்காணிப்பாளராகவும், பணியாற்றி வந்த 57 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண் மருத்துவருக்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இவர் பணியாற்றும் மருத்துவமனை அருகிலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு M.B.B.S முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்துள்ளது.

அந்த நேரத்தில் மாணவர்களும் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை அங்கிருந்த வைத்தியர்கள் பரிசோதித்துள்ளனர்.

பரிசோதித்த வைத்தியர்கள் கூறிய காரணம்

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக நரம்பு மண்டலம் வெடித்து, உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த மருத்துவ ஆசிரியரின் விருப்பப்படி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, அஞ்சலிக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டு, பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த “ஆதித்யா எல்1”!

Quick Share

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது

ஆதித்யா எல்1 விண்கலம் மூன்று படிநிலைகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது குறித்து இன்னும் ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமார் 125 நாட்கள் பயணத்தின் முடிவில் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா எல் 1 விண்கலமானது ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்னும் பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் கதிர்வீச்சு, காந்தப்புலம், வெளிப்புற பகுதியின் வெப்ப நிலை ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய உள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனுக்கான இந்தியாவின் முதல் விண்கலமாகும், இஸ்ரோ மற்றும் விஞ்ஞானி குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் சுமார் 1,476 கிலோ எடை கொண்டது.

இதில் இமேஜிங் டெலஸ்கோப், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், பிளாஸ்மா அனலைசர், சோலார் அல்ட்ரா வைலட் உள்ளிட்ட 7 வகையான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி: குவியும் பாராட்டுகள்

Quick Share

இந்திய மாநிலம், பஞ்சாபை சேர்ந்த சிறுமி ஒருவர் இளம்வயதில் தொடர்ந்து மலை ஏறி சாதனை படைத்து வருகிறார்.

யார் இவர்?

பல விளையாட்டுகளுக்கு மத்தியில் சிலர் மட்டுமே மற்ற செயல்கள் மூலம் தனித்துவம் பெறுவார்கள். அந்தவகையில், மலையேறுவதில் தனித்துவம் பெற்றவர் தான் இந்த சிறுமி.

பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் சூத். இவரது மகள், சான்வி என்ற சிறுமி தான் மலை ஏறுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

சாதனைகள் 

சமீபத்தில், ரஷியாவில் 5,642 மீட்டர் உயரத்தில் உள்ள எல்பரஸ் சிகரத்தில் சிறுமி சான்வி ஏறினார். இதனால், இளம் வயதில் எல்பரஸ் சிகரத்தை ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார். 

இதற்கு முன்பு, எவரெஸ்ட் மலை சிகரத்திலும் ஏறி இந்தியக் கொடியை அசைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறிய சிறுமி என்ற சாதனையும் படைத்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் உள்ள 5,895 மீட்டர் உயரத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்திலும், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியூஸ்கோ சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சான்விக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சான்வியின் சிறந்த பங்களிப்பிற்காக சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்கி கவுரவித்தார். 

இந்திய மாநிலத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை!

Quick Share

அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 1 லிட்டர் கொள்ளளவுக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், அசாம் அரசு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 1 லிட்டருக்கும் குறைவான பாலிஎதிலின் டெரிப்தாலேட்டால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இந்த தடை சட்டத்தை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அதன்படி 1 லிட்டர் கொள்ளளவுக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துதல், உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், இருப்பு வைப்பது, விநியோகம் செய்தல், விற்பனை செய்வது போன்றவற்றை தடை செய்து அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் மாசுபடுத்தும் திறன் பெரிய அளவிலான கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்களை விட அதிகமாக உள்ளது அதனால் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-3 வெற்றிக்கு உறுதுணை! வறுமையிலும் சாதித்த இளைஞரின் கதை

Quick Share

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு உறுதுணையாக இருந்த இளைஞரின் கதையை தான் பார்க்க போகிறோம். 

யார் இந்த இளைஞர்

இந்திய மாநிலம், சதீஷ்கரைச் சேர்ந்த பாரத்குமார் என்ற இளைஞர் சந்திரயான் 3 திட்டத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சதீஷ்கர் மாநிலம், துர் மாவட்டத்தில் உள்ள சரௌடா நகரத்தைச் சேர்ந்த சந்திரமௌலீஸ்வரர் மற்றும் வனஜா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் பாரத்குமார். இவருக்கு லாவண்யா என்ற சகோதரியும் உள்ளார்.

இவரின் பெற்றோர்கள் முதலில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.அப்போது பாரத்குமார் ஹோட்டலில் உள்ள வேலைகளை முடித்த பின்னரே படிக்கும் நிலை இருந்துள்ளது. பின்பு, ஹோட்டலில் வருமானம் இல்லாததால் பாரத்குமாரின் தந்தை வங்கி காவலுக்கான பணியில் சேர்ந்தார்.

படிப்பிற்கு உதவிய தொழிலதிபர்கள்

வறுமையில் இருந்த பாரத்குமாரின் படிப்பிற்கு பள்ளி நிர்வாகமே உதவி செய்தது. இதனால், நன்றாக படித்த பாரத்குமார் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பின்னர் இவர், உயர்கல்வி படிக்க தன்பாத் ஐஐடியில் உள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதும், இவரை வறுமை வாட்ட கல்லூரி படிப்பை நிறுத்தும் நிலைமை வந்தது.

ஆனால், அப்போது இவரை பற்றிய செய்தி ஊடகங்களில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, ராய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராம்தாஸ் ஜோக்லேகர், அருண் பாக் மற்றும் ராய்கரைச் சேர்ந்த சாந்த் ராம் ஆகியோர் பாரத்குமாரின் படிப்பு செலவை ஏற்பதாக கூறினர். அதை சிறிதும் வீணாக்காத பாரத்குமார் 7 செமஸ்டர் தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு

பின்னர், கல்லூரி நேர்முகத்தேர்வின் மூலம் பாரத்குமாருக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 

அங்கு, சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்து தனது குழுவினருடன் கடுமையாக உழைத்தார். தற்போது இவர், கல்வியில் பின்தங்கிய மாநிலமான சத்தீஷ்கரின் ஹீரோவாக இவர் இருக்கிறார்.    

உலகக்கோப்பை செஸ் போட்டியில் கடுமையாக நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா! சாம்பியன் பட்டம் வ...

Quick Share

உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். 

இளம் தமிழக வீரர் 

அஜர்பைஜானில் நடந்து வந்த உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டி, நேற்றைய 2வது சுற்று டிரா ஆனது. 

அதனைத் தொடர்ந்து, தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், கார்ல்சனும் 1-1 என சமநிலையில் இருந்ததால் வெற்றியாளரை தெரிவு செய்ய இன்று டை பிரேக்கர் சுற்று நடந்தது.

முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்ததால் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. 

அதிரடி நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி

பின்னர் தொடங்கிய 2வது சுற்றில் கார்ல்சன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் பிரக்ஞானந்தா கடுமையாக போராடினார். 

இருப்பினும் அதிரடியாக காய்களை நகர்த்திய கார்ல்சன் 6வது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

சாம்பியன் வீரருக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.      

வெற்றி பாதையில் இந்தியாவின் சந்திரயான் 3: நிலவில் கால்பதித்த பிரக்யான் ரோவர்

Quick Share

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

சாதனை படைத்த சந்திரயான் 3

  இந்தியாவின் சந்திரயான் 3விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தனது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

நிலவில் தடம் பதித்த பிரக்யான் ரோவர்

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் எழுந்த தூசி துகள்கள் அடங்கிய பிறகே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தரையிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமான நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது. 




You cannot copy content of this Website