இந்தியா

“மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்” – பிரதமர் மோடி!

Quick Share

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ‘மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 2029இல் சிக்கிக்கொண்டீர்கள், ஆனால் நான் 2047க்கு திட்டமிடுகிறேன். இன்று மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடும் பணி தொடங்கியுள்ளது. முழு உலகமும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்பது நிச்சயம்.

இன்று தேசத்தின் மனநிலை, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பற்றியது. இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் நாடு உள்ளது. இதுபோன்ற மாநாட்டிற்கு நான் வரும்போதெல்லாம், நான் பல தலைப்புச் செய்திகளைத் தருவேன் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும். ஆனால் நான் தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்.” என்றார்.

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Quick Share

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு நுரையீரலுடன் நீண்ட 70 ஆண்டுகள்… விடை பெற்றார் Polio Paul

Quick Share

நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்து வந்த Polio Paul என பரவலாக அறியப்பட்ட பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட இறந்துவிட்டார்

கடந்த 1952ல் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் வசித்து வந்த பால் அலெக்சாண்டர் போலியோவால் தாக்கப்பட்ட நிலையில் முடங்கிப் போனார். தலை, கழுத்து மற்றும் வாயை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது.

அவரை இரும்பு நுரையீரலில் இணைப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்றே கூறப்பட்டது. மருத்துவர்களின் அந்த வித்தியாசமான முடிவால், பால் அலெக்சாண்டார் 70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார். 

ஆனால் திங்களன்று, மார்ச் 11ம் திகதி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளிடப்பட்டுள்ளது. போலியோ தாக்குதலால் முடங்கிப்போன பால் அலெக்சாண்டர் நீண்ட 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் உயிர் வாழ்ந்த நிலையில், திடீரென்று மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கல்லூரி படிப்பை முடித்து சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி, தமது கதையை அவர் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவரது கதை உலகமெங்கும் பரவி பலருக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் நீடிக்கும் நிலை

பிரித்தானியாவில் இதுபோன்ற ஒரு இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த நபர் 2017ல் மரணமடைந்துள்ளார். 6 வயதேயான பால் அலெக்சாண்டர் 1952 ஜூலை மாதம் குடியிருப்புக்கு வெளியே விளையாடிவிட்டு காய்ச்சல் அறிகுறியுடன் வீடு திரும்பியுள்ளார். 

ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த சிறுவனால் பேசவோ, விழுங்கவோ, இருமவோ அல்லது பேனாவைப் பிடிக்கவோ முடியாமல் போனது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு பின்னர் கண் விழித்த பால் அலெக்சாண்டர், தாம் ஒரு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்ததை உணர்ந்தார். அதுவே அவரது ஆயுள் முழுவதும் நீடிக்கும் நிலை ஏற்பட்டது. 

தற்போது தமது 78வது வயதில் பால் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு உலகமெங்கிலும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கணவனை இழந்த பெண்ணை காதலிக்கும் Bill Gates… யார் இந்த Paula Hurd., அவரது சொத்து மத...

Quick Share

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் Bill Gates-உடன் கலந்துகொண்ட அவரது காதலி Paula Hurd யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

Microsot இணை நிறுவனர் பில் கேட்ஸ் இதுவரை பல நிகழ்வுகளில் தனது காதலி Paula Hurd-உடன் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்.

பில் கேட்ஸுடன் ஒன்றாகத் தோன்றும் Paula Hurd யார்?

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், 27 வருட திருமணத்திற்குப் பிறகு 2021-இல் தனது மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை (Melinda French Gates) விவாகரத்து செய்தார்.

அன்றிலிருந்து Paula Hurd பில் கேட்ஸுடன் நெருக்கமாக பழகிவருகிறார்.

அவர்களது உறவை உறுதிப்படுத்தும் முன்பே, இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றினர்.

அந்த சமயத்தில் BBC நிகழ்ச்சி ஒன்றில், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏனெனில் தான் ஒரு ரோபோ அல்ல என்றும் பில் கேட்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து பிப்ரவரி 2023-இல், அவர்களின் உறவு பரவலாக அறிவிக்கப்பட்டது.

அப்படியானால் Paula Hurd யார்?

Paula Hurd மென்பொருள் நிறுவனமான Oracle-ன் தலைமை நிர்வாக அதிகாரி Mark Hurd-ன் மனைவி ஆவார். இருவருக்கும் திருமணமாகி 30-ஆண்டுகள் ஆன நிலையில், அக்டோபர் 2019-இல் மார்க் காலமானார். 

1984-ஆம் ஆண்டு ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பவுலா ஹர்ட், விற்பனைத் துறையில் பணியாற்றினார். என்சிஆர் (National Cash Register) என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கார்ப்பரேட் நிகழ்வு அனுபவங்களின் டெவலப்பர் மற்றும் அமைப்பாளராக பணியாற்றினார்.பவுலா ஹர்டுக்கு அவரது மறைந்த கணவருடன் கேத்ரின் மற்றும் கெல்லி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

பில் கேட்ஸ் மற்றும் Paula Hurdக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா?

ஜூலை 2023-இல், Paula Hurd மோதிரம் ஒன்றை அணிந்திருந்ததால், அவருக்கும் பில் கேட்ஸுக்கும் நிச்சயதார்த்தம் ஆனதாக வதந்திகள் பரவின.

ஆனால் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், மோதிரம் பவுலாவுக்கு சொந்தமானது என்றும், அது பில் கேட்ஸுடனான அவரது நிச்சயதார்த்தத்தை குறிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Paula Hurd-ன் சொத்து மதிப்பு என்ன?

அவரது கணவர் மார்க் ஹர்டு இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு 500 மில்லியன் டொலர்கள் ஆகும்.

அதேநேரம் 61 வயதான ஹர்டின் தனிப்பட்ட சொத்து மதிப்பு குறைந்தது 35 மில்லியன் டொலர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 1075 கோடி ஆகும்.

 

2024-ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியல்!

Quick Share

சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் மு.க. ஸ்டாலின், நீதா அம்பானியை அடுத்து நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சக்தி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான 100 சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நடிகர் 27வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் முதல் 30 தரவரிசையில் உள்ள ஒரே நடிகர் அல்லது திரைப்பட பிரபலம் ஆவார்.

பல தசாப்தங்களாக, King Khan பொழுதுபோக்குத் துறையில் ஆட்சி செய்து வருகிறார், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அவரது கவர்ந்திழுக்கும் தோற்றம் மற்றும் ஒப்பற்ற திறமையால் மயக்குகிறார்.

ஷாருக்கான் கடந்த ஆண்டு வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களின் வெற்றி ஹிந்தித் திரையுலகையும் தனது நட்சத்திர அந்தஸ்துடன் மீட்டெடுத்தார்.

2024-ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் பட்டியலில் 27-வது இடத்தைப் பிடித்திருப்பது ஷாருக்கின் நீண்டகால செல்வாக்கையும், ஈடு இணையற்ற செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு விருதுக்கும், ஷாருக்கான் நாட்டின் மிகவும் போற்றப்படும் நபர்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்துகிறார். அவரது செல்வாக்கும், புகழும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் கவர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நீதா அம்பானி 2024-ஆம் ஆண்டுக்கான 100 சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் 26வது இடத்தைப் பிடித்துள்ளார்.

25-வது இடத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்: கோவா ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

Quick Share

கோவாவைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், காட்டு காளான் வகையிலிருந்து தங்க நானோ துகள்களை (Gold Nanoparticles) தொகுப்பு முறையில் தயாரித்திருப்பதாக அறிவித்துள்ளனர். டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவாவில் காணப்படும் “ரோன் ஓம்லி” காளான்களை முப்பரிமாண வடிவத்தில் வளர்த்து, அதன் மூலம் தங்க நானோ துகள்களைத் தொகுத்தனர்.

இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

தங்க நானோ துகள்கள் மருத்துவம், மின்னணுவியல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் வகை, “ரோன் ஓம்லி” (Roen Olmi) என அழைக்கப்படுகிறது.

இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது. மழைக்காலங்களில் கிடைக்கும் இந்த காளான் வகை, கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.

இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது.

இது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த அம்பானியின் திருமணம்: மார்க் ஜுக்கர்பெர்க் வியந்த ஆடம்பரத்தின் உச்சம்!

Quick Share

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் சமீபத்திய இந்திய தொழில் அதிபர் ஆனந்த் அம்பானியின் கையில் இருந்த அதிசய கடிகாரத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர். 2024ல் ஜூலை 12-ம் திகதி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின்(mukesh ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani), தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும்(Radhika Merchant) திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தின் முந்தைய நிகழ்வாக ஜாம்நகரில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில், உலக பணக்காரர்களான மார்க் ஜுக்கர்பெர்க் – மெட்டா நிறுவனர் (Mark Zuckerberg – Meta), முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S தோனி(M.S Dhoni) வரை கலந்து கொண்டனர்.

இந்த திருமண விழாவின் மத்தியில், இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் மற்றும் மணமகனான ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் வியந்து பார்த்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அத்துடன் அந்த வீடியோவில், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸிலா சான் ஆகியோர் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் உரையாடி கொண்டு இருப்பதும், அப்போது இருவரும் ஆனந்த் அம்பானியின் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை வியந்து பார்த்து விவாதித்ததை பார்க்க முடிகிறது.

ஆனந்த அம்பானி அணிந்து இருந்த இந்த Audemars Piguet Royal Oak Openworked Skeleton கடிகாரம் சுமார் ₹14 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

நீ அம்பானியா அல்லது பிச்சைக்காரனா..!குலுங்கி சிரித்த நீதா-முகேஷ் அம்பானி: ஆனந்த் அம்பான...

Quick Share

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமண விழாவில் மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமணம்

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கடந்த 3 நாட்களாக ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில்  உலகளவில் பிரபலமான பிரபலங்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருமண கொண்டாட்டம் கண்களை பறிக்கும் நிகழ்வாக இருந்தது. 

உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பத்தின் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியது.

கிண்டல் செய்யப்பட்ட ஆனந்த் அம்பானி

மிகப்பெரிய செல்வத்தை காட்சிப்படுத்திய இந்த திருமண கொண்டாட்டத்தில் பேசிய மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பில்லியனரின் மகனாக இருந்தபோதிலும், தனது தந்தைக்கு சொந்தமான துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் (Dhirubhai Ambani International School) படித்த போதிலும், தனக்கு வாரந்திரா பாக்கெட் மணியாக(weekly pocket money) வெறும் ரூ.5 மட்டுமே தன்னுடைய பெற்றோர்கள் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை “பிக்‌காரி”(bikhari) என்று கிண்டல் செய்தனர் என்றும் ஆனந்த அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்காரி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் “பிச்சைக்காரர்” என்று பொருள்.

ஆனந்த அம்பானியின் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட போது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீதா அம்பானி குலுங்கி குலுங்கி சிரித்ததாக கூறப்படுகிறது.

பழைய பேட்டி

பழைய பேட்டி ஒன்றில், ஆனந்த் அம்பானியின் தாய் நீதா அம்பானி இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ஆனந்த, ஈஷா, உட்பட மூன்று குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பை புகட்டுவதற்காக அனைவருக்கும் ரூ.5 என ஒரே மாதிரியான பாக்கெட் மணியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

40 பில்லியன் டொலர் சொத்துக்கு அதிபதி

பிச்சைக்காரன் என்று சிறுவயதில் கிண்டல் செய்யப்பட்டாலும், படிப்பில் சிறந்து விளங்கிய ஆனந்த அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, வேகமாக தொழில் துறையில் சாதித்தார்.

தற்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கியமான பிரிவான ரிலையன்ஸ் New Energy பிரிவை வழிநடத்துகிறார்.

3 நாட்களுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? மகனுக்காக அம்பானி கொட்டிய பணம்

Quick Share

ஆனந்த் அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக முகேஷ் அம்பானி செலவு செய்த பண விவரங்கள் வெளிவந்துள்ளது. 

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இதனால், ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் பெற்றது.

இதனால், ஜாம் நகருக்கு Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee, Rajinikanth உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் வருகை புரிந்தனர்

எவ்வளவு செலவானது?

முதல் நாளான மார்ச் 1 -ம் திகதியில் அமெரிக்க பாப் பாடகியான ரிஹானாவின் (Pop Star Rihanna) இசைக் கச்சேரி நடைபெற்றது. இதற்கு மட்டுமே ரூ.75 கோடியை அம்பானி செலவு செய்துள்ளார்.இரண்டாம் நாளில் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை விருந்தினர்கள் சுற்றி பார்த்தனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அதேபோல மூன்றாம் நாளில் யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.விருந்தினர்களின் உணவுக்காக இந்தியா, தாய்லாந்து, மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. கிட்டத்தட்ட உணவுக்கு மட்டுமே ரூ.130 கோடி செலவிடப்பட்டது.அம்பானி திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்திற்காக கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டுள்ளது.     

“நான் இருக்கும்வரை உங்கள் மீது யாரும் கைவைக்க முடியாது” – பிரதமர் மோட...

Quick Share

தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆளும் திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில் அவர் தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்றும், எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் திமுகவும், காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. அவை இரண்டும் அகற்றப்பட வேண்டிய காட்சிகள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, ‘”தேர்தலுக்கு பின் தேடினாலும் திமுக கிடைக்காது. முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர். 

நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியா 100 மடங்கு முன்னேறினால் தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும். உங்கள் வரியைத்தான் நாங்கள் உங்களுக்கு திட்டங்களாக வழங்குகிறோம். மோடி இருக்கும்வரை யாரும் உங்கள் மீது கைவைக்க முடியாது.

சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எனக்கு தமிழ்மொழி தெரியாது, ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்.

நான் பேசுவதை புரிந்துகொண்டு எனக்காக கூடியிருக்கும் மக்கள் என்னை வாழ்ந்த வேண்டும். பாஜக 400 இடங்களில் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆசீர்வதிக்க வேண்டும். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன்” என கூறினார்.

நீல நிற ஆதார் அட்டை ஏன் தேவை?

Quick Share

இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்த ஆதார் அட்டை ஆவணம் இருந்தால் தான் அரசின் பல நலத்திட்டங்களின் பலன்களை பெற முடியும்.

இந்நிலையில் இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்ற வார்த்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டு உள்ளது, உடனே அய்யோ..! நம்மிடம் அந்த ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) நம்மிடம் இல்லையே என்று பதற வேண்டாம்.

ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.

பொதுவாக ஆதார் அட்டைகள் கைரேகை, கண் கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து வழங்கப்படுகிறது, ஆனால் இந்த நீல நிற ஆதார் அட்டையானது அப்படி இல்லை. இவை குழந்தைகளுக்கான ஆவணம் என்பதால், இதில் குழந்தையின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) பதிவு செய்யப்படாது. இந்த நீல ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், விலாசம், பிறந்த திகதி ஆகியவை மட்டுமே UID எண்(Unique Identification Number) உடன் சேர்த்து வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் முக்கியம்?

குழந்தைகளின் பாதுகாப்பு: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், கடத்தல் மற்றும் வேறு எந்த வகையான துஷ்பிரயோகத்திலிருந்தும் அவர்களை பாதுகாக்க உதவுகிறது.

அரசு நலத்திட்டங்கள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவுகிறது.

கல்வி: பள்ளிகளில் சேர்ப்பதற்கு ப்ளூ ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகும்.

தடுப்பூசிகள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க உதவுகிறது.

பயணம்: விமானம் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த ப்ளூ ஆதார் அட்டை பயன்படுகிறது.

ப்ளூ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை

முகவரிச் சான்று (ரேஷன் அட்டை, மின்சார கட்டண ரசீது போன்றவை)

குழந்தையின் புகைப்படம்

விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.

ப்ளூ ஆதார் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தைப் (Blue Aadhaar card application)பெற்று நிரப்பவும்.

தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் (இருந்தால்) செலுத்தவும்.

படிவத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்

UIDAI இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.

விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் ப்ளூ ஆதார் அட்டை வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு

UIDAI இணையதளத்தை பார்வையிடவும்: https://uidai.gov.in/

UIDAI ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்: 1947

பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தலாகும் இந்திய உணவுகள்!

Quick Share

இந்திய உணவுகளான இட்லி, தோசை, ராஜ்மா போன்றவை பல்லுயிர் பெருக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இட்லி, ராஜ்மா (kidney beans curry) மற்றும் சென்னா மசாலா ஆகியவை ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் உணவுகளாக இருக்கும். ஆனால் அவை பல்லுயிர் பெருக்கத்திற்கு உணரப்பட்டதை விட குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று ஒரு புதிய ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லூயிஸ் ரோமன் கராஸ்கோ தலைமையிலான ஆய்வு, உலகம் முழுவதும் உள்ள 151 பிரபலமான உணவுகளின் விளைவுகளை ஆய்வு செய்தது. இதில் இட்லி 6வது இடத்திலும், தோசை 103வது இடத்திலும் உள்ளது.

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் விளைநிலங்களில் உள்ள உயிரினங்களின் மீதான பொருட்களின் சாத்தியமான தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு பல்லுயிர் தடயத்தை குழு ஒதுக்கியது.

மாட்டிறைச்சி அதிக சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர, பல பருப்பு வகை உணவுகள் உயர் பல்லுயிர் தடயத்தைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் பருப்பு மற்றும் அரிசியின் பெரும் தாக்கம் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது’ என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் இணைப் பேராசிரியர் லூயிஸ் ரோமன் கராஸ்கோ கூறினார்.

சமீப காலங்களில், கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட அசைவ உணவின் எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

நெல் மற்றும் பருப்பு வகைகளின் பாரிய பல்லுயிர் தாக்கம் பெரும்பாலும் விவசாயத்திற்காக நிலத்தை மாற்றுவதால் ஏற்படுகிறது.

இந்தியா பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது மற்றும் பல வகையான பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது, இது ஏழு முதல் எட்டு சதவீத உயிரினங்களைக் கொண்டுள்ளது. பல்லுயிர் வளம் மிகுந்த பல பகுதிகளில் பருப்புகளும் அரிசியும் பயிரிடப்படுகின்றன.

French Fries, baguettes, tomato sauce மற்றும் popcorn ஆகியவை குறைந்த பல்லுயிர் கால்தடங்களைக் கொண்ட பிற உணவுகளில் அடங்கும். ஆய்வின் படி, ஆலு பராத்தா 96-வது, தோசை 103-வது, போண்டா (chickpea paste-coated bonda) 109-வது இடத்திலும் உள்ளன.

“இந்தியர்கள் அதிக இறைச்சி நுகர்வு மற்றும் உற்பத்திக்கு மாறினால், பல்லுயிர் மீதான தாக்கம் மேலும் அதிகரிக்கும்” என்று ஆய்வுக் குழு விளக்குகிறது.




You cannot copy content of this Website