தமிழகம்

மக்களே உஷார்! அம்மா உணவக சாம்பாரில் கிடந்த அரணை…

Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று அதை பார்த்தபோது, அதில் அரணை என்ற விஷ ஜந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் வாந்தி எடுத்ததால் மீண்டும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே எச்சரிக்கை ! தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Quick Share

கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் சென்னை உள்பட சில இடங்களில் மழை பெய்தது. அதிலும் சென்னையில் ஓரிரு இடங்களில் ஐஸ் கட்டி மழை பெய்ததாகவும் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் 20-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், ஊத்துக்கோட்டை 6 செ.மீ., பொன்னேரி 5 செ.மீ., கத்திவாக்கம் 4 செ.மீ., பந்தலூர் தாலுகா அலுவலகம், கும்மிடிப்பூண்டி, அரிமளம், மேட்டூர், சின்னக்கல்லார், தாமரைப்பாக்கம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

தலை இல்லாமல் காவலுக்கு இருந்த காவலாளி: அதிர்ந்துபோன இணையதளம்!

Quick Share

கடை ஒன்றில் காவலாளியாக இருந்த மனிதர் தலையில்லாமல் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தியுள்ளது. இன்று இணையத்தில பல நம்பமுடியாத சம்பவங்களை அவதானித்து வருகின்றோம். வினோதங்கள் அடங்கிய இந்த இணையத்தில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம் தற்போது பெரும் வைரலாகி வரும் நிலையில், பார்வையாளர்கள் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

ஆம் குறித்த புகைப்படத்தில் தலை இல்லாமல் காவலாளி ஒருவர் கடை வாசலில் அமர்ந்து காவல் காக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

காவலாளி அணியும் சீருடையை அணிந்திருக்கும் இவர் தலை இல்லாமல் இருப்பது எப்படி என்ற கேள்வி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த புகைப்படம் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் rajsinghmedia_123 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பார்வையாளர்கள் மட்டுமின்றி கருத்துக்களும் குவிந்து வருகின்றது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த நபர், ‘இது குழப்பத்தை ஏற்படுத்தும் படம்.’ என எழுதியுள்ளார். ‘இது ஏதோ மேஜிக் போல தெரிகிறது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார்.

மற்றொருவர் போட்டோவை தொழில்நுட்பம் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Quick Share

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘மக்களுடன் ஸ்டாலின்’புதியஎன்ற செயலி( APP) நாளை வெளியீடு

Quick Share

‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.வேலூரில் நாளை தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது.இந்த விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றியவிரிவான தகவல்கள் , அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

6வது முறையாக கருத்தரித்த பெண்..வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய் -சேய் மரணம்!

Quick Share

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் தாய் மற்றும் சேய் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய்,சேய் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் 6வது முறையாக கருத்தரித்திருந்தார். இவருக்கு பிரசவம் வீட்டிலேயே நடைபெற்றது. இதில் இவருக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. 

அதிக ரத்தப்போக்கு ஏற்படவே அருகில் இருந்தவர்கள் இவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வசந்தி அங்கு உயிரிழந்தார்.

சிசு இறப்பு  

இந்நிலையில் கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு சிசுவின் சடலம் வாளியில் வைக்கப்பட்டிருந்தது. எனவே பிரேத பரிசோதனைக்குப் பின்னரே இறப்புக்கான காரணம் என்ன என்று கூறமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அரசு ஊர்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் செவிலியர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உள்ள வீடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனையில்தான் பிரசவம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும், இதுபோல் ஒரு சில பெண்கள் அஜாக்கிரதையாக இருந்து தங்கள் உயிருக்கும், குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Quick Share

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வருகிற 8-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 11-ந்தேதி வரை மழை மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக வருகிற 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

6-ந்தேதி (இன்று) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலான நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை இருக்கும். 8-ந்தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும், 9-ந்தேதி வரையிலும் வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 

எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா பகுதிகளில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி! அயோத்தி துறவி சர்ச்சை அறிவிப்பு

Quick Share

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.

வழக்குகளை சந்திக்க தயார்

தமிழக அமைச்சர் உதயநிதி,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி

இந்நிலையில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதற்குமுன், கடந்த 2007 ஆம் ஆண்டு ராமர் பாலம் குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கத்தை அயோத்தியில் உள்ள துறவிகள் வழங்குவார்கள் என்று ராம்விலாஸ் வேதாந்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் உதயநிதியை பற்றி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உப்பு சத்து அதிகமாக இருந்தால் இது நடக்கும்! Google தகவலை நம்பி இளைஞர் மரணம்

Quick Share

தமிழக மாவட்டம் மதுரையில், உப்பு சத்து அதிகமாக இருந்தால் இறக்க நேரிடும் என்ற கூகுளின் தகவலை நம்பி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலில் இளைஞர்

மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு, கடந்த 30 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உப்புச்சத்து அதிகமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

பின்னர், விஜயகுமார் இது பற்றி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகுமாரின் பெற்றோர் அவரை அடிக்கடி சமாதானபடுத்தியுள்ளனர். 

கூகுளில் தேடிய பின் தற்கொலை

இதனையடுத்து, உப்புசத்து அதிகமாக இருந்தால் என்ன ஆகும் என்று விஜயகுமார் கூகுளில் தேடியுள்ளார். அப்போது, அதில் உப்புச்சத்து அதிகமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும் என்று சில கருத்துக்கள் இருந்துள்ளது. அதை பார்த்த விஜயகுமார், மனவேதனையிலும், பயத்திலும் இருந்துள்ளார்.

இதனால், அவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயகுமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன மழை எச்சரிக்கை!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்கபோகும் மழை !

Quick Share

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், சென்னை உட்பட பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது

இந்த நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, குமரி, தென்காசி, நெல்லை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலுர், ராணிப்பேடை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள்! ஏரியில் மூழ்கி பலியான சோகம்

Quick Share

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவிருக்கும் நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை, போருர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரிஷிகேஷ். விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர். அங்கு ஏரியின் 4 -வது மதகின் கீழே இறங்கி கால்களை நனைத்து விளையாடியுள்ளனர். அப்போது, திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.

அதை பார்த்த அவர்களது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் மீட்க முடியாமல் போனது. பின்னர், தகவலிருந்த பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏரியில் இருந்து இரு மாணவர்களின் உடலை மீட்டனர்.

கல்லூரியில் சேர காத்திருப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தது தெரியவந்துள்ளது.

தற்போது, ஏரியை நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி பார்க்க வந்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருட வந்த வீட்டில் டீ போட்டுக் குடித்து கூலாக சென்ற திருடர்கள்!

Quick Share

தமிழகத்தில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், திருடிய வீட்டில் டீ போட்டுக் குடித்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 பவுன் நகை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் அசோகன் மற்றும் சித்ரா. 

இவர்கள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளனர் திருமணத்தை முடித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைந்திருந்தது.

பின்பு, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருள்கள் உடைந்து, சிதறி கிடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பீரோவில் இருந்த 17 பவுன் நகை காணாமல் போயுள்ளது. 

இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் திருவண்ணாமலை மாவட்ட தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

டீ போட்டுக் குடித்து சென்ற திருடர்கள்

பின்னர், தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்த போது, வீட்டில் திருட வந்த திருடர்கள் டீ போட்டுக் குடித்துச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அண்மையில், இந்த பகுதிக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து குத்து விளக்கு, ஸ்பீக்கர் திருடு போனது குறிப்பிடத்தக்கது.  




You cannot copy content of this Website