தமிழகம்

அரசு மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்!

Quick Share

மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் பல தடைகளை தாண்டி மருத்துவராகி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் 72% உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷ் பாரையாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால், இவரின் உயரத்தை பார்த்து மருத்துவராக முடியும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்பார்க்கவில்லை.

இவரால், அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை காரணம் காட்டி 2018 -ம் ஆண்டு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கையை மறுத்துள்ளனர்.

இந்த விடயத்தில் கணேஷின் பள்ளி முதல்வர் அவருக்கு உறுதுணையாக இருந்தார். உயரம் குறைவாக இருப்பபவர் மருத்துவராக முடியாதா என்று கூறி சட்ட போராட்டத்தை கையில் எடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கணேஷை சேர்க்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

இதன்பின்னர், 2019 -ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த கணேஷ் MBBS படிப்பையும் முடித்தார். தற்போது, பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

நாற்காலியில் நின்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இவரை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைகின்றனர்.

புதிய சட்டம் !!தண்ணீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்

Quick Share

கோடையில் தண்ணீர் வீணாவதை தடுக்க பெங்களூருவில் உள்ள வீட்டு வசதி சங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள் யாராவது அதிக தண்ணீர் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வைட்ஃபீல்டில் உள்ள பாம் மெடோஸ் ஹவுசிங் சொசைட்டி அதன் அறிவிப்புகளில், பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிப்பார்கள் என்று கூறியது.

‘அடுத்தடுத்து குண்டு வெடிக்கும்’ – மின்னஞ்சல் மிரட்டலால் பரபரப்பு!

Quick Share

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்தந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“பேய்களின் சமையலறை” – கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!

Quick Share

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.

இந்த குகையானது 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளமையால் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட இடமென்றே கூறலாம்.

இக்குகை ‘பேய்களின் சமையல் அறை’ என்று அழைக்கப்படதற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது.

அதாவது இந்த பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

1821 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி.எஸ்.வார்டு என்பவராவ் இந்த இடமானது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுப்பிடிக்கப்பட்ட காலத்தில் பிரபலமடையாமல் இருந்தாலும், கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

ஏனென்றால் 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா என்ற படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடலில் காட்டப்படும் குகை இது தான்.

குணா படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் இக்குகையின் பெயரும் குணா என்றே வைக்கப்பட்டது.

இதற்கு பின் குகையை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

குகையின் பள்ளத்தில் தவறி விழுந்து பலரும் உயிரிழந்துள்ளார்கள். எனவே வனத்துறையின் ஆலோசனையின் பெயரில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது.

பின் சுற்றுலா தளமாக மாறியதனால் வனத்துறையால் மரப்பாலம் அமைக்கப்பட்டது. அதனுடாக பாதுகாப்பாக சுற்றுலா பயணிகள் குகையை கண்டு ரசித்தனர். 

பின்னடைவில் மரப்பாலமும் சிதைந்து விட்டதால் குணா குகைக்கு அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் குணா குகை முக்கிய இடமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களே தெரிஞ்சிக்கோங்க!! தாய் பால் ATM வந்தாச்சு.. மகிழ்ச்சி செய்தி

Quick Share

வளர்ந்து வரும் நவீன உலகில் பின்பற்றப்படும் உணவு பழக்கத்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இந்த நிலையிலே குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இது எந்த நேரமும் கிடைப்பதில்லை. எனவே 24 மணி நேரமும் தாய்ப்பால் கிடைக்கும்படி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 24*7 ஏடி.எம்.மில் 24 மணி நேரமும் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்படும் பாலானது பரிசோதனைக்கு பிறகு விநியோகிக்கப்படுகிறது.

கலைஞர் நினைவிடம் இன்று திறப்பு!

Quick Share

கலைஞரின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக தொண்டர்களும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களே உஷார்!! 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை!

Quick Share

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு அருகில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17 ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. 

அதனால், அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!

Quick Share

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.

நாய்களுக்கு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கத்தையும் மக்கள் வைத்துள்ளனர். அவை இறந்தால் நினைவுநாளில் கொண்டாடுவது என்று பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் செல்லப்பிராணிகள் மீது சொத்தை கூட எழுதி வைக்கின்றனர்.

ஆனால், இங்கு ஒரு தம்பதியினர் நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர்.

தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நாராயணன் மற்றும் ராதா. இவர்கள் தங்களுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நாய் கர்ப்பமானதை அறிந்த தம்பதியினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். பின்னர், வளர்ப்பு நாய்க்கு வளையல், புத்தாடை, பூ, பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டுப் பாடி வளைகாப்பு நடத்தினர்.

இந்த விழாவிற்கு வந்த கிராம மக்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு தான் டாப் – அமெரிக்க நாளிதழ் பாராட்டு!

Quick Share

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழ், தமிழ்நாடு தொழில்துறையில் முன்னிலை வைத்து வருவதாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையில், ‘எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியை, இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்க ஆரம்பித்தது. இதனால் நொய்டா உள்ளிட்ட சில இடங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஆனால், தமிழ்நாட்டிலோ மின்னணு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு சலுகைகள் காரணமாக அமையவில்லை.

போக்குவரத்து வசதி, ஏராளமான பட்டதாரிகள், சிறந்த கல்வி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளதால் அங்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில்கள் ஈர்த்துள்ளன. நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், ஐபோன் தயாரிப்பு மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது.

18,720 தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட இரும்பு பிரம்மாண்ட குடியிருப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு வருகின்றன. சீனாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வந்த ஷெஞ்ஜென், ஜென்ஜவ் நகரங்களை போன்று ஸ்ரீபெரும்புதூர் காணப்படுகிறது. மொத்த ஐபோன் உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலையில் 75% தமிழ்நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டே இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில், 43% பேர் தமிழ்நாட்டு மட்டுமே உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 5%ஐ கொண்ட தமிழ்நாட்டில், நாட்டின் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் 43% பேர் உள்ளனர். கார், உதிரிபாக ஆலைகள், ஃபவுண்டரி, பம்ப்செட் தயாரிப்பி, பின்னலாடை தயாரிப்பில் ஏற்கனவே தமிழ்நாடு தான் முன்னணி வைத்து வருகிறது. இந்தியாவின் தீப்பெட்டி தயாரிப்பில் தமிழ்நாட்டின் சிவகாசி முன்னணியில் உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செழித்து வளர்ந்துள்ளதே தொழில்துறையில் தமிழ்நாடு வெற்றி பெற காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இளைஞரின் உயிரை பறித்த பப்ஜி மோகம்!

Quick Share

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சோகம்: கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி!

Quick Share

கட்டுமான பணியின்போது அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை லவ்டேல் பகுதி தேயிலை எஸ்டேட்டில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் அருகே பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் ஒன்று இருந்தது.

இந்நிலையில், தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு மண் சரிந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர்.

இதில், இறந்தவர்கள் அனைவரும் உதகை காந்திநகரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!

Quick Share

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.

நாய்களுக்கு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கத்தையும் மக்கள் வைத்துள்ளனர். அவை இறந்தால் நினைவுநாளில் கொண்டாடுவது என்று பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் செல்லப்பிராணிகள் மீது சொத்தை கூட எழுதி வைக்கின்றனர்.

ஆனால், இங்கு ஒரு தம்பதியினர் நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர்.

தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நாராயணன் மற்றும் ராதா. இவர்கள் தங்களுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நாய் கர்ப்பமானதை அறிந்த தம்பதியினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். பின்னர், வளர்ப்பு நாய்க்கு வளையல், புத்தாடை, பூ, பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டுப் பாடி வளைகாப்பு நடத்தினர்.

இந்த விழாவிற்கு வந்த கிராம மக்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website