உதயநிதி மனைவி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

நீலகிரி பள்ளிகளுக்கு வந்த இமெயில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அமைச்சர் உதயநிதியின் மனைவியும், திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி பேரில் போலியாக அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அல் பாதர் என்ற அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மெயிலில், ஜாபர் சாதிக் வழக்கில், கிருத்திகாவை தொடர்புபடுத்தி நடவடிக்கை எடுத்தால் பள்ளியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் இந்த மெயில் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.