காப்- 25 மாநாட்டிற்கு எதிர்ப்பு !! ஸ்பெயினில் 100க்கு மேற்பட்டோர் போராட்டம் !!!

December 3, 2019 at 3:46 pm
pc

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் நகரில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை  எடுக்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

1990 களில் ஐ.நா புவிவெப்பமடைவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரித்தது . புவிவெப்பமயமாவதால் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் , இதனால் வெள்ளம் போன்ற இயற்க்கை பேரிடர்கள் வரும் இது பற்றி விளக்கியது ஐ.நா . இதனை கேட்டு விழித்துக்கொண்ட உலக நாடுகள் உலக வெப்பமயமாவதை தடுக்க திட்டங்களை வகுக்க முடிவெடுத்தன. இதனால் 1994ம் ஆண்டு ஐ.நாவின் சர்வதேச சுற்றுசூழல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது .1995 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்த சுற்று சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலக நாடுகள் மாநாடு ஒன்றை நடத்திவந்தன . இதற்கு காப் மாநாடு என பெயர்.  உலகளாவிய வெப்பமயமாதலை தடுத்து 1.5 டிகிரி செல்சியக்கு குறைக்கும் வழிமுறைகளை  இந்த மாநாட்டில் முடிவெடுப்பார்கள் ஆனால் இன்றுவரை அதற்கான திட்டங்கள் வகுக்க உலக நாடுகளிடையே ஒற்றுமையில்லாத நிலையுள்ளது.

இதனை தொடர்ந்து சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு காப் -25 இன்று  நடைபெறுகிறது  .இதற்கு எதிராக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காப் -25 மாநாடு நடக்கும் இடத்தில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்கள் அமேரிக்கா ,உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கோஷமிட்டனர் .  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website