சிவகங்கையில் வீட்டை காலி செய்ய சொல்லி உரிமையாளர் நெருக்கடி – விரக்தியடைந்த தாய்2 குழந்தைகளுடன் தற்கொலை…!!!

July 17, 2020 at 5:46 pm
pc

சிவகங்கையில் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் நெருக்கடி கொடுத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் அபிஷேக், மகள் மங்கையர் திலகம் ஆகியோரை படிக்க வைப்பதற்காக சிவகங்கை குறிஞ்சி நகரில் ஒத்திகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

அங்கு தனது குழந்தைகளுடன் வசித்து வந்த காளிஸ்வரியிடம் ஒத்திகைக்கு எடுத்த காலம் முடிவதற்கு முன்பே வீட்டின் உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த காளிஸ்வரி 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றதோடு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட காளிஸ்வரி, தங்களது சாவிற்கு, வீட்டின் உரிமையாளர்தான் காரணம் என்று வீட்டின் சுவற்றில் எழுதி வைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை போலீசார், 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர. மேலும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் மிரட்டியதால் குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website