தங்கம் போல் மின்னிடும் சருமத்திற்கு பீட்ரூட் ஃபேஸ் பேக்.. இத வீட்டிலேயே செய்யலாம் வாங்க …!!

June 17, 2022 at 3:13 pm
pc

பல பெண்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றுவதே கிடையாது. இதனால்தான் முகம், கால், கைகளில் கரடுமுரடான சருமம் தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்றாலும் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதை போக்க வீட்டிலேயே ஒரு அற்புதமான பீட்ரூட் ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதில் எந்த வித கெமிக்கலும் சேர்க்கப்படுவதில்லை இதனால் பயமின்றி தாராளமாக பயன்படுத்தலாம். உங்களுக்கு அழகான, மிருதுவான சருமம் வேண்டும் என்றால் இதை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.

  • தயிர் – 1 ஸ்பூன்
  • கடலை மாவு – 2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  • பீட்ரூட் சாறு – 2 ஸ்பூன்

முதலில் ஒரு பவுலில் கடலை மாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தயிர், மற்றும் பீட்ரூட் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக கலந்துக் கொள்ளவும்.

முகத்தை வெறும் தண்ணீரில் சோப்பு பயன்படுத்தாமல் கழுவிக் கொண்டு, அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளைச் செய்யவும்.

இதை 20 நிமிட அப்படியே விட்டு, நன்றாக காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.

வாரத்தில் ஒரு முறை இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகத்தில் இரத்த ஓட்டத்தை சீர் செய்து, முகத்தை பளபளப்பாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.

இதில் பீட்ரூட் ஜூஸிற்கு பதிலாக பீட்ரூட் பவுடரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பேக்கை நீங்கள் கை மற்றும் கால்களுக்கும் பயன்படுத்தலாம்.

இதனால், கை மற்றும் கால்களில் இருக்கும் இறந்த செல்களும் நீங்கி மினுமினுப்பாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website