ரஜினி இப்படி ஒரு தவறை செய்யலாமா? – ரசிகர்கள் கேள்வி!

June 16, 2022 at 11:57 am
pc

சூப்பர் ஸ்டார் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. அதற்காக பெரும் பொருட் செலவில் மிகப் பெரிய செட் எல்லாம் போடப்பட்டு வேலை வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் தான் தற்போது ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது படக்குழு இந்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டேடியத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.

இதேபோன்று விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 மற்றும் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தான் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த பெப்சி அமைப்பினர் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர்.

அதாவது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நம் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் இங்கிருக்கும் சினிமா தொழிலாளர்கள் பிழைப்பை நடத்த முடியும். இங்கு சூட்டிங் நடத்துவதற்கு ஏகப்பட்ட இடங்கள் இருக்கும்போது, எதற்காக வெளிமாநிலத்தில் சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ஆர்கே செல்வமணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இதற்கு திரையுலகில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் முன்னணி நடிகர்களும் இனி படப்பிடிப்பை இங்கேயே நடத்துவோம் என்று வாக்கு கொடுத்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் படம் ஹைதராபாத்தில் ஆரம்பிக்க போவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் ரஜினி இப்படி ஒரு தவறை செய்யலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படக்குழுவின் இந்த முடிவுக்கு ரஜினி எப்படி சம்மதம் தெரிவித்தார் என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website