ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு: பிரபலத்தின் அறிவிப்பால் சர்ச்சை!

September 17, 2024 at 12:23 pm
pc

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என்று எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் பேசுகையில், “இந்திய நாடானது அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும்.

90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்காத நாட்டில் இருக்க எனக்கு விருப்பமில்லை” என்றார். இவரின் பேச்சுக்கு பாஜக கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார். இவரின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், “மகாராஷ்டிரா மாநிலத்திலும், இந்தியாவிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொய்யான தகவலை பேசிய ராகுல் காந்தி தற்போது இட ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார்” என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website