ரோஜா மகளுக்கு கிடைத்த விருது-தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளர்


நடிகை ரோஜாவின் மகளுக்கு விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.
ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதாவது, இவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆவார்.
அதோடு இவர் சிறந்த எழுத்தாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது.
ரோஜா மகளுக்கு கிடைத்த விருது
இதனை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் மகளுக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் சஜன் இந்த விருதை ரோஜாவின் மகளுக்கு அளித்து இருந்தார்.இது குறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
இந்த அரிய விருது இளம் வயதிலேயே ரோஜாவின் மகளுக்கு கிடைத்திருப்பதை அடுத்து பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்..