விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை..நிறைமாத கர்ப்பிணியான மனைவியின் உடலும் சடலமாக மீட்பு…!!!
விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த ராணவ வீரர் புருசோத்தமன் ஜம்மு-காஷ்மிரில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க வந்த புருஷாத்தமன் மருத்துவமனை அருகிலே தன் மனைவியுடன் அறையெடுத்து தங்கினார்.
இந்த நிலையில், காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும், கட்டிலில் மனைவி அமுலும் சடமாக கிடந்தனர். இதில் அமுல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் அறிந்து வந்த போலீசார் அவர்கள் உடலை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தந்தையை பார்க்கவந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.