அதிர்ச்சி !! ஐபோன் டெலிவரி கொடுக்க வந்த ஊழியரை கொன்று கால்வாயில் வீசிய வாடிக்கையாளர்!

October 2, 2024 at 10:50 am
pc

ஐபோன் டெலிவரி கொடுக்க வந்த ஊழியரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியுள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோ மாவட்டம் சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். இவர், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார். பின்னர், இந்த ஐபோனை டெலிவரி செய்வதற்காக பரத் சாகு (30) என்பவர் வந்துள்ளார். அப்போது, ஐபோனை கஜனிடம் கொடுத்துவிட்டு பணம் கொடுக்குமாறு ஊழியர் கூறியுள்ளார்.

அதற்கு, கஜனனும் அவரது கூட்டாளியும் சேர்ந்து பரத் சாகுவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்பு, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.

இதையடுத்து, டெலிவரி ஊழியர் பரத் சாகு இரண்டு நாட்களாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, டெலிவரி ஊழியர் பரத் சாகு கடைசியாக கஜனனிடம் பேசியது தெரியவந்தது. பின்னர், கஜனை தேடிய நிலையில் அவரது நண்பர் ஆகாஷ் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியரை கொலை செய்தது அம்பலமானது.

இதனை கேட்ட பொலிஸார் ஆகாஷை கைது செய்து கஜனை தேடி வருகின்றனர். மேலும், கால்வாயில் வீசப்பட்ட ஊழியரின் உடலை தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website