ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்…!!!

July 2, 2020 at 3:10 pm
pc

ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதே நேரத்தில் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மிக கடுமையாக இருக்கிறது. சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 327 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் இறுதிவரை தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.ஆகையால் சென்னையில் காவல் துறையினர் மிக கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோடு வழியே 40 வயதான ஹரி என்பவர் ஆட்டோ ஓட்டி வந்ததாகத் பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த ஹரி வழக்குப்பதிவு செய்த அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் காயமடைந்த அவருக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website