இனிமேல் எனக்காக செலவு இருக்காது! 16 வயது மாணவி தற்கொலை… கடைசியாக எழுதிய கடிதம்

January 11, 2023 at 4:55 pm
pc

தமிழகத்தில் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண் அறுவை சிகிச்சை

சேலம் மாவட்டத்தின் சித்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மெய்யப்பன் – மைதிலி. இவர்கள் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது. கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த பெற்றோர்களால் மூத்த மகள் திவ்யாக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர 

இயலவில்லை என்று கூறப்படுகிறது.

உருக்கமான கடிதம்

இந்த நிலையில் திவ்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் திவ்யா எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம் வேறு யாரும் காரணம் இல்லை. என்னால் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆகும் செலவையாவது குறைக்கவே இந்த முடிவு. இனிமேல் எனக்காக செலவு இருக்காது, அதனால் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website