எனக்கு தங்க இடம் வேண்டும் – இலங்கையில் அடைக்கலம் கோரும் நித்தி!

September 4, 2022 at 9:24 am
pc

இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு அந்நாட்டு ஜனாதிபதி ரணிலுக்கு நித்யானந்தா சாமியார் கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா கைலாசம் என்ற தமது ராஜ்ஜியத்தில் வாழ்ந்து வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி இலங்கை ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சைக்கான செலவையும் அனைத்து மருந்துகளுக்கான செலவையும் கைலாசா ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website