கணவனின் உச்சகட்ட கொடுமை..! மனைவியின் கைகளை கட்டிப்போட்டு அடித்து தலைமுடியை அறுக்கும் கணவன்! பகீர் வீடியோ!

May 24, 2022 at 12:03 pm
pc

பெண்ணின் கைகளை பின்னால் கட்டி தாக்கி தலைமுடியை அறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தாக்கி தலைமுடியை அறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் இருக்கும் நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக திட்டி எட்டி உதைக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் தலைமுடியை கத்திரிக்கோலால் அறுக்க முயல்கிறார். சரியாக அறுக்கமுடியாததால் அரிவாள்மனையை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் பேசியபடியே தலைமுடியை அறுக்கிறார். 

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது தொடர்பாக நடத்திய விசாரணையில், கைகள் கட்டப்பட்டு கிடக்கும் பெண் பானு என்பதும், முடியை அறுக்கும் நபர் கார்த்தி என்பதும் தெரியவந்தது. இரண்டு பேரும் இரண்டாவது முறை திருமணம் ஆனவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் பானு தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுவை தேடி கண்டுபிடித்து கார்த்திக் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை வெட்டுவதும் தெரியவந்தது. மேலும் பானுவை கம்பியால் தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சில மாதங்களாக வடபழனியில் வசித்து வந்த இவர்கள் தற்போது வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website