கணவன் வீடிற்கு குடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை …

ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (வயது 24). என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
லோகநாதன் சித்தோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை மனைவி சுவிதா கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வழக்கம்போல் லோகநாதன் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுவிதா மனமுடைந்து காணப்பட்டார். இரவில் லோகநாதன் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது சுவிதா வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுவிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.