கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த மனைவி !

February 17, 2022 at 10:57 am
pc

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் சராமரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

  கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சசிகலாவுடன் உள்ளனர்.

 இந்நிலையில் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நரேஷ்குமார், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அங்கு சசிகலாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். இதற்கு  சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கடைசியில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி ஆத்திரம் வீட்டில் இருந்த ஆயுதத்தைக் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.   

 இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதனையடுத்து, சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, மருத்துவமனையில் இருந்த சசிகலா தலைமறைவாகிவிட்டதால் அவரை பொலிசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website