கள்ள காதலனுக்காக கணவனை மது ஊற்றி கொன்ற மனைவி, ஆதரவில்லாமல் தவிக்கும் 2 பெண் குழந்தைகள் !!

July 19, 2020 at 9:02 pm
pc

கள்ளகாதலனுக்காக ஓன்று சேர்ந்து கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (30) – புஷ்பா(27) தம்பதியர். இவர்களுக்கு 8 மற்றும் 5 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் இந்நிலையில் புஷ்பா மற்றும் தேவராஜ் கர்நாடக மாநிலம், மைசூரில் இருக்கும் மிளகு தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கணவனும் மனைவியும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

தேவராஜின் மனைவி புஷ்பாவிற்கும், மிளகு தோட்டத்தில் அவருடன் பணிபுரிந்த கல்வராயன்மலை, கீரகடை கிராமத்தைச் சேர்ந்த மணி (23) என்பருக்கும் தகாத கள்ளஉறவு ஏற்பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு திரும்பி வந்த பின்னும் அவர்களின் உறவை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி போனில் பேசுவதை கவனித்த தேவராஜ் ஒரு கட்டத்தில் மனைவி வேறொருவருடன் உறவில் உள்ளார் என்பதை அறிந்து அவரை கண்டித்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தேவராஜை புஷ்பாவும் மணியும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் கடந்த, 2-ம் தேதி, தேவராஜை, புஷ்பா அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து சுயநினைவை மறக்கடிக்க செய்துள்ளார். அதைத்தொடர்ந்து தன் கள்ளக்காதலன் மணிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறும் கூறியுள்ளார். மணி தனது மைத்துனர் சுரேஷுடன் வந்து தேவராஜின் வாயில் துணி வைத்து அடைத்து கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தபின் உடலை இருவரும் பைக்கில் தூக்கி கல்வராயன்மலை வனப்பகுதியில் வீசியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை கொலை செய்த புஷ்பா மற்றும் அவரின் கள்ளக்காதலன் மணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவி புரிந்த சுரேஷை போலீசாரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

கடந்த 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜ்ஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வழக்குபதிவு செய்த கரியாலுார் போலீசார் இவை அனைத்தையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website