காஞ்சிபுரத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்!

July 29, 2020 at 7:31 pm
pc

படைப்பை அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (21). இவர் அதே பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணிக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையிலிருந்து தொழிற்சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அஜய்யை வழிமறித்து கத்தியால் வெட்ட தொடங்கியதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த ஓட்டலில் நுழைந்தார்.

இதனைப் பயன்படுத்தி அஜய்யை ஓட்டலின் உள்ளேயே வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் பைக்கில் ஏறி தப்பி சென்றது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அஜய் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website