குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

August 7, 2024 at 2:01 pm
pc

சென்னை ஆவடியில் குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை பரவலாக மழைக்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, வடபழனி, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் குளிர்சாதன பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நந்தவனம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரது குழந்தை ரூபாவதி (5 வயது) குளிர்சாதன பெட்டியைத் திறந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website