குழந்தைகளுக்கு பிடித்த டேஸ்டியான பன்னீர் 65 செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
- பன்னீர் – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் - மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
மாவிற்கு…
- மைதா – 3 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- சமையல் சோடா – 1 சிட்டிகை
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள சில பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.
குறிப்பு:
- பன்னீர் துண்டுகளானது மசாலாவில் நன்கு ஊறி இருக்க வேண்டும்.
- அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.
- உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சமையல் சோடா சேர்க்க தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அது தான் நல்ல அமைப்பைத் தரும். சமையல் சோடா சேர்க்காமல் செய்தால், பன்னீர் 65 சற்று கடினமாக இருக்கும்.