சஜித்துடன் இணைந்த தயா ரத்நாயக்க – சரத் பொன்சேகா காட்டம்!

January 31, 2024 at 7:57 pm
pc

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டமைக்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தான் சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவுக்கு தொடர்பு இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.ரத்நாயக்கவை இணைத்துக் கொள்வதன் மூலம், ஐக்கிய மக்கள் சக்தி தனது அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்வதைக் குறிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்த தயா ரத்நாயக்க, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website