ட்விட்டர் நிறுவனத்தின் புதிய Twitter Blue-இந்தியாவில் எப்போது? பதில் கூறிய எலன் மஸ்க்

November 8, 2022 at 12:24 pm
pc

உலகின் முன்னணி சமுக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியுள்ளார். அதை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் மிகமுக்கிய விஷயமாக இனி அனைவரும் ப்ளூ டிக் பெறலாம் என்று கூறி Twitter Blue Tick பெற இனி மாதம் 8 டாலர் செலுத்தவேண்டும் என்று கூறினார்

இதற்கு உலகம் முழுவதும் பலர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆனாலும் விடாத எலன் மஸ்க் அதிக வசதிகளை பெறவேண்டும் என்றால் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார்.

https://twitter.com/elonmusk/status/1589413653190938624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1589413653190938624%7Ctwgr%5Ea85a9870939d42644dee5f98bb74a20ec7451aa3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fsamantha-never-told-us-yashoda-actor-unni-mukundan%2Farticleshow%2F95370470.cms

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் அவரிடம் இந்த புதிய Twitter Blue இந்தியாவில் எப்போது பயன்படுத்தமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எலன் மஸ்க் இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் சுமார் 4 பில்லியன் டாலர் ரூபாய் செலவு செய்துவங்கியுள்ளார். இந்த சமூகவலைத்தளம் உலகில் மிகப்பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டது. இதன் காரணமாகேவே எலன் மஸ்க் இந்த நிறுவனத்தை வாங்க இவ்வளவு முயற்சி செய்து சாதித்துள்ளார்.

https://twitter.com/elonmusk/status/1589414958508691456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1589414958508691456%7Ctwgr%5Ea85a9870939d42644dee5f98bb74a20ec7451aa3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fsamantha-never-told-us-yashoda-actor-unni-mukundan%2Farticleshow%2F95370470.cms

இந்த செயலி கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலையே மாற்றியமைத்தது. இதன் காரணமாகவே அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்னர் ட்விட்டர் செயலியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எலன் மஸ்க் அரசியல் தலையீடுகள் போன்றவற்றை விட மக்களின் கருத்து சுத்தந்திரம் மிகவும் முக்கியம் என்றும் அதனை ட்விட்டர் நிறுவனம் முடக்குகிறது என்று குற்றம் சாட்டினார். 

தற்போது ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிவிட்டதால் இதுவரை அவர் அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தம் வெளிப்பட்டு ட்விட்டர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போர்டு குழு போன்றவற்றை வேலையே விட்டு நீக்கிவிட்டார்.

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 200 பேர் வேலை இழந்தனர். அதில் ட்விட்டரின் முன்னாள் CEO பராக் அகர்வாலும் ஒருவர். இந்த நிலையில் இந்த Twitter Blue இந்தியாவில் எவ்வளவு விலையில் நிர்ணயம் செய்யப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இதன் அறிமுகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இருக்கும் என்று அந்த நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த Twitter Blue பயன்படுத்துபவர்களுக்கு இனி Reply, Mentions, Search போன்றவற்றை செய்வதில் முக்கியத்துவம் தரப்படும் எனவும் இதனால் அவர்கள் தேவையில்லாத Spam/Scam போன்றவற்றில் இருந்து முழு பாதுகாப்பு, நீளமான ஆடியோ மற்றும் வீடியோக்கள் பதிவிடுவது, பாதிக்கும் குறைவான விளம்பரங்கள் போன்றவை கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்காக வேலை செய்யும் Content Creatorகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுளார். அரசியல்வாதி மற்றும் பிரபலன்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக இன்னொரு பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதியும் இதில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website