தங்கம், வெள்ளி வளையல் அணிவதால் இத்தனை நன்மைகளா?

July 1, 2024 at 7:47 pm
pc

பொதுவாகவே இந்து மற்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்படும் ஒவ்வொரு விடயங்களுக்கு பின்னாலும் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது. அதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் அறிவியல் ரீதியிலும் தற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கையில் வெள்ளி மற்றும் தங்கத்தில் வளையல் அணிவதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. 

வெள்ளியில் வளையல் அணிவதால் கிருமி தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் பதற்றம் மனஅழுத்தம் போன்ற பிரச்சிரனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் வெள்ளிக்கு காணப்படுகின்றது. இது போன்ற நன்மைகளை வெள்ளியில் வளையல் அணிவதன் மூலம் பெற முடியும்.

சாஸ்திரங்களின் அடிப்படையில் வெள்ளி அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. அதனை கைகளில் அணிந்துக்கொண்டால் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது. மேலும் மகா லட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும். 

தங்கத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காணப்படுகின்றது. சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுவதோடு பல அழகுசாதனப் பொருட்களிலும் மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

தங்கம் நேர்மறை ஆற்றல்களை அதிகமாக ஈர்க்கும் தன்மையை கொண்டிருப்பதால் தங்கத்தை கைகளில் அணிந்துக்கொள்வதால் பல்வேறு நல்ல சக்திகள் நம்மை நோக்கி ஈர்க்கப்படும்.

தங்கம் இயற்கையிலேயே வசீகரிக்கும் பண்புகளுடன் காணப்படுகின்றது. இதைனை அணிந்துக்கொள்வதனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website