தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த 2குழந்தைகள் ..தாய் விபரீத முடிவு !

February 2, 2022 at 10:43 am
pc

தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெபஷைன் (வயது 35). கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜி (27). இவர்களுக்கு 2 வயதான பிரியா மற்றும் பெயரிடப்படாத 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர். ஜெபஷைன் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், அவரது மனைவி விஜியுடன், ஜெபஷைனின் தாயார் ராஜம்மாள் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று ராஜம்மாள் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தனது பேத்திகள் 2 பேரும் பிணமாக மிதந்ததை பார்த்து பதறிதுடித்தார். உடனே அவர் கதறியபடியே வீட்டுக்குள் ஓடிச்சென்றார்.

அங்கு விஜி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் அவர் சத்தம் போட்டு கதறி அழுதார்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு, விஜி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்ய வேறு காரணம் எதுவும் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website