தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை!

November 11, 2022 at 10:05 am
pc

தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தினமும் 30 நிமிடங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை தனியார் சேனல்கள் ஒளிப்பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல், தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website