துடிக்க துடிக்க கொலை செய்யப் பட்ட இளம் பெண்..! அழுகிய நிலையில் சடலம்.! அதிர்ச்சியில் பெற்றோர்…!!

July 3, 2020 at 11:11 am
pc

அழகு நிலையம் நடத்தி வந்த டிக் டாக் பிரபலம் ஷிவானி கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவை சேர்ந்த ஷிவானி தனது நண்பர் நீராஜ் உடன் சேர்ந்து அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த்துள்ளார். அடிக்கடி டிக் டாக்கில் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். இவரது டிக் டாக் வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்த நிலையில் ஷிவானி திடீரென காணாமல் பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் நேற்றைய தினம் நீராஜ் தங்கள் அழகு நிலையத்தை திறந்துள்ளார். அதன் போது துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதன் போது ஷிவானியின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்த நீராஜ் உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் ஷிவானியின் சடலத்தை மீட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுபியுள்ளனர். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணை யில் ஷிவானியின் கழுத்து நெரித்த அடையாளம் இருப்பதுடன் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஷிவானியின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் கூறுகையில் ஷிவானியை ஆரிப் என்ற இளைஞன் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்தார்.

ஷிவானியை காதலிக்கும் படி வற்புறுத்தினார். ஆனால் ஷிவானி ஆரிப்பின் காதலை நிராகரித்தார். இதனால் இவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருந்தது, இது பற்றி பொலீஸிலும் புகார் கொடுத்தோம், அவர்கள் எச்சரித்து அனுபினார்கள், இருப்பினும் ஆரிப் பின் தொடர்வதையும் தொல்லை செய்வதையும் நிறுத்தவில்லை ஆரிப் தான் எங்கள் மகளை கொலை செய்திருப்பான் என தெரிவித்துள்ளனர்..!!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website