நீ இப்படி பட்ட ஆளா – நித்தியானந்தா உண்மையில் எப்படிப்பட்டவர் தெரியுமா? வெளிவந்த ரகசியம்!

பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில், இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமடைந்ததாகவும், பின்னர் உடல் நிலை தேறி மீண்டு வருவேன் எனகூறியதும் வைரலாகி வந்தது.
மேலும், நித்தி உடல் நிலை மோசமானதால் கோமாவுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் சிகிச்சைக்காக இந்தியா திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
பின், தான் நலமாக உள்ளதாகவும், கோமாவுக்கு செல்லவில்லை வதந்திகளை நம்பவேண்டாம் என இறுதியாக கூறியிருந்தார்.
நித்தியானந்தா உண்மையில் எப்படிப்பட்டவர் தெரியுமா? பிரபல சேனல் வெளியிட்ட ஆவணப்படம்; உலகளவில் ட்ரெண்டிங்
நித்தியின் வாழ்க்கை படம்
இந்த நிலையில், நித்தியானந்தா குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரபல நிறுவனமான டிஸ்கவரி பிளஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் My Daughter Joined a Cult என்ற பெயரில் நித்யானந்தா குறித்த வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில் நித்தியானந்தாவின் கடந்த கால வாழ்க்கை, சாதாரண மனிதராக இருந்து எப்படி சாமியாராக உருவாகினார் என்பதை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா உண்மையில் எப்படிப்பட்டவர் தெரியுமா? பிரபல சேனல் வெளியிட்ட ஆவணப்படம்; உலகளவில் ட்ரெண்டிங்
என்னென்ன செய்தார்
இதுமட்டுமின்றி, தன்னிடம் வந்த பக்தர்களை வசப்படுத்தியது எப்படி? அவர் எந்த மாதிரி அவர்களை துன்புறுத்தினார் உலகமெங்கும் பல பகுதிகளில் ஆசிரமத்தை அமைத்தது எப்படி எனவும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆவணப்படத்தில் சாமியார் நித்தியானந்தாவை குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது, இந்த ஆவணப் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் நித்தியானந்தா மில்லியன் கணக்கானவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.