பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு.., கருக்கலைப்பு மாத்திரையால் விபரீதம்

September 3, 2024 at 1:40 pm
pc

கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

பெண்ணின் வயிற்றுக்குள் எலும்புக்கூடு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதான இளம்பெண்.

இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அப்பெண் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது. 

இதனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த இளம்பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றியுள்ளனர்.

தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.          

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website