பெற்ற தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு 2 மகன்கள் தப்பியோட்டம் -வலைவீசி தேடி வரும் போலீசார்!

July 31, 2020 at 6:59 pm
pc

ஆத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாத தந்தையை அடித்துக் கொன்ற மகன்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆத்தூர் அருகே செல்லிபாளையத்தில் உள்ள லட்சுமண சமுத்திரம் பகுதியில் வசிப்பவர் கெங்கு. இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய இரண்டு மகன்களும் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு மகன்கள் சக்திவேல், வெங்கடேஷ் ,இரண்டு பேரும் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றனர்.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் அருகில் உள்ள உறவினர்களிடம் சென்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். இதனால் நீ அருகில் உள்ள வீட்டில் ஏன் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிடுகிறாய் என்று இரண்டு பேரும் இன்று மாலை தன் அப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு இரண்டு மகன்களும் சேர்ந்து தந்தை கீழே தள்ளி விட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சம்பவ இடத்திலேயே தந்தை இறந்துவிடுகிறார்.

உடனாடியாக அருகில் உள்ள உறவினர்கள் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தின் பேரில் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கெங்குவை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான இரண்டு மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website