பொம்மையை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளம்பெண்!நீங்களே பாருங்க…

பிரேசிலை சேர்ந்த மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (37) என்ற பெண் சரியான துணை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணின் தாய் தனது வீட்டில் இருந்த பழைய துணிகளை தைத்து பொம்மை ஒன்றை உருவாக்கி அதை தனது மகளிடம் கொடுத்துள்ளார்.
அந்த பொம்மைக்கு மார்செலோ என பெயரிட்டு அதோடு அதிக நேரத்தை கழித்த ரோச்சா, அதனை காதலிக்க தொடங்கினார். பின்னர் உறவினர் முன்னிலையில் பொம்மையை திருமணம் செய்து ஹனிமூனுக்கும் சென்றார்.
இது குறித்து கூறிய ரோச்சா மோரேஸ், “இந்த பொம்மை என்னோடு வாக்குவாதம் செய்யாது, சண்டைபோடாது, என்னைப் புரிந்து கொள்ளும். இப்படி ஒரு கணவர்தான் எனக்கு வேண்டும் என்பதால் இதை திருமணம் செய்தேன்” என்றார். தற்போது அவர் ஒரு குழந்தையையும் தத்தெடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தையும் ஒரு பொம்மைதான்.